Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
நடிகர் ஷம்மி கபூர் மரணம்
4 posters
Page 1 of 1
நடிகர் ஷம்மி கபூர் மரணம்
மும்பை : பாலிவுட் பிரபல நடிகர் ஷம்மி கபூர் இன்று காலை காலாமானார். உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நடிகர் ஷம்மி கபூர் மரணம்
இந்திப் படஉலகில் முடி சூடா மன்னர்களாக கொடி கட்டிப்பறந்தவர்கள்
ராஜ்கபூர், ஷம்மிகபூர், சசிகபூர் சகோதரர்கள். இந்திய சினிமாவின்
முன்னோடியான பிருதிவிராஜ் கபூரின் மகன்கள் ஆவார்கள். ராஜ்கபூர் சில
வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
ஷம்மிகபூர்
திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு விளம்பர படங்களில் நடித்து
வந்தார். 79 வயதாகும் ஷம்மிகபூருக்கு சிலநாட்களுக்கு முன் சிறுநீரக
கோளாறுஏற்பட்டது. உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் கடந்த வாரம் மும்பை பிரீச்
கேண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர
சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் கவனித்து வந்தனர். மூச்சு திணறல்
ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையும்
அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவ கருவிகள் உதவியுடன் அவரது உடல் உறுப்புகள்
இயங்கியது. என்றாலும் உடல்நிலை தேறவில்லை.
இன்று
அதிகாலை ஷம்மி கபூர் அபாயகட்டத்தை அடைந்தார். டாக்டர்கள் அவரது உயிரை
காப்பாற்ற போராடினார்கள். என்றாலும் சிகிச்சை பலனின்றி அதிகாலை 5.15
மணிக்கு மரணம் அடைந்தார்.
ஷம்மிகபூர் மரணம் அடைந்த
தகவல் கேட்டு இந்திபட உலகினர் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் அமிதாப்பச்சன்
இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். ஷம்மி கபூர் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து
வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு திரை உலகினர்
கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஷம்மிகபூர்
1931-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி மும்பையில் பிறந்தார். இவரது குடும்பம்
பஞ்சாபி கட்டாரி இனத்தைச் சேர்ந்த பாரம்பரியமிக்கது. இந்திய சினிமாவின் தலை
நகராக கொல்கத்தா விளங்கிய போது தந்தை பிருதிவி ராஜ்கபூர் கொல்கத்தாவில்
தியேட்டர்களையும், ஸ்டூடியோக்களையும் நிறுவி இந்தி சினிமா படங்களில்
நடித்து வந்தார். இதனால் ஷம்மி கபூர் இளம் வயதில் கொல்கத்தாவில்
வளர்ந்தார். அங்குள்ள கிண்டர் கார்டன் பள்ளியில் படித்தார். பின்னர் கபூர்
குடும்பம் மும்பைக்கு வந்தது.
மும்பை வடலாவில்
ஜோசப் கான்வென்ட்டிலும், டான்பாஸ்கோ பள்ளியிலும் ஆரம்ப கல்வி பயின்றார்.
பின்னர் தந்தை சகோதரர் வழியில் சினிமாவில் நுழைந்தார். 1953-ம் ஆண்டு ஜீவன்
ஜோதி இந்திப்படத்தில் முதன் முதலாக நடித்தார். தும்சா நகின் தேக்கா, தில்
தேகே தேகா, கங்ரீ, தில் தேரா திவானா, புரபசர், சைனா டவுன், ராஜ்குமார்,
காஷ்மீர் கி காளி, ஜன்வார், தீஸ்ரி மஞ்சில், ஆன் ஈவினிங் இன் பாரீஸ்,
பிரம்மச்சாரி, அன்தாங், விதாதா போன்ற படங்கள் ஷம்மிகபூர் நடித்த காலத்தால்
அழிக்க முடியாத காவியங்கள் ஆகும்.
1968-ம் ஆண்டு
பிரம்மச் சாரி படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
பெற்றார். 1982-ம் ஆண்டு வதாதா படத்துக்காக சிறந்த குணச்சித்திர
நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். 1955-ம் ஆண்டு ரங்கீன் ராதேன்
படப்பிடிப்பில் நடிகை கீதாபாலியை ஷிம் மிகபூர் சந்தித்தார். அப்போது
இருவருக்கும் காதல் ஏற்பட்டு மும்பை கோவிலில் ரகசிய திருமணம் செய்தார்.
திருமணத்துக்கு
சாட்சியாக இருந்த ஹரி வாலியா என்பவர் இவர்களது ரகசிய திருமணத்தை
பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்களது சம்மதத்தை பெற்றுக் கொடுத்தார்.
ஷம்மி கபூரும், கீதாபாலியும் தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு
ஆதித்யா ராஜ்கபூர் என்ற மகனும், காஞ்சன் என்ற மகளும் உள்ளனர்.
1965-ம்
ஆண்டு கீதாபாலி சின்னம்மை நோய் தாக்கி இறந்தார். அதன் பிறகு 1969-ம் ஆண்டு
குஜராத் பவ நகரைச் சேர்ந்த பெரும் செல் வந்தரின் மகளான நீலா தேவியை 2-வது
திருமணம் செய்தார். அவரை மணந்த பின்பு இந்திப்படங்களில் ஷம்மி கபூர்
ரொமான்டிக் ஹீரோவாக கொடி கட்டிப் பறந்தார். ஷம்மி கபூர் இறந்த போது
ஆஸ்பத்திரியில் அவரது உடல் அருகே இருந்த மனைவி நீலாதேவியும், மகன்-மகளும்
கதறி அழுதனர்
ராஜ்கபூர், ஷம்மிகபூர், சசிகபூர் சகோதரர்கள். இந்திய சினிமாவின்
முன்னோடியான பிருதிவிராஜ் கபூரின் மகன்கள் ஆவார்கள். ராஜ்கபூர் சில
வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
ஷம்மிகபூர்
திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு விளம்பர படங்களில் நடித்து
வந்தார். 79 வயதாகும் ஷம்மிகபூருக்கு சிலநாட்களுக்கு முன் சிறுநீரக
கோளாறுஏற்பட்டது. உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் கடந்த வாரம் மும்பை பிரீச்
கேண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர
சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் கவனித்து வந்தனர். மூச்சு திணறல்
ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையும்
அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவ கருவிகள் உதவியுடன் அவரது உடல் உறுப்புகள்
இயங்கியது. என்றாலும் உடல்நிலை தேறவில்லை.
இன்று
அதிகாலை ஷம்மி கபூர் அபாயகட்டத்தை அடைந்தார். டாக்டர்கள் அவரது உயிரை
காப்பாற்ற போராடினார்கள். என்றாலும் சிகிச்சை பலனின்றி அதிகாலை 5.15
மணிக்கு மரணம் அடைந்தார்.
ஷம்மிகபூர் மரணம் அடைந்த
தகவல் கேட்டு இந்திபட உலகினர் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் அமிதாப்பச்சன்
இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். ஷம்மி கபூர் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து
வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு திரை உலகினர்
கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஷம்மிகபூர்
1931-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி மும்பையில் பிறந்தார். இவரது குடும்பம்
பஞ்சாபி கட்டாரி இனத்தைச் சேர்ந்த பாரம்பரியமிக்கது. இந்திய சினிமாவின் தலை
நகராக கொல்கத்தா விளங்கிய போது தந்தை பிருதிவி ராஜ்கபூர் கொல்கத்தாவில்
தியேட்டர்களையும், ஸ்டூடியோக்களையும் நிறுவி இந்தி சினிமா படங்களில்
நடித்து வந்தார். இதனால் ஷம்மி கபூர் இளம் வயதில் கொல்கத்தாவில்
வளர்ந்தார். அங்குள்ள கிண்டர் கார்டன் பள்ளியில் படித்தார். பின்னர் கபூர்
குடும்பம் மும்பைக்கு வந்தது.
மும்பை வடலாவில்
ஜோசப் கான்வென்ட்டிலும், டான்பாஸ்கோ பள்ளியிலும் ஆரம்ப கல்வி பயின்றார்.
பின்னர் தந்தை சகோதரர் வழியில் சினிமாவில் நுழைந்தார். 1953-ம் ஆண்டு ஜீவன்
ஜோதி இந்திப்படத்தில் முதன் முதலாக நடித்தார். தும்சா நகின் தேக்கா, தில்
தேகே தேகா, கங்ரீ, தில் தேரா திவானா, புரபசர், சைனா டவுன், ராஜ்குமார்,
காஷ்மீர் கி காளி, ஜன்வார், தீஸ்ரி மஞ்சில், ஆன் ஈவினிங் இன் பாரீஸ்,
பிரம்மச்சாரி, அன்தாங், விதாதா போன்ற படங்கள் ஷம்மிகபூர் நடித்த காலத்தால்
அழிக்க முடியாத காவியங்கள் ஆகும்.
1968-ம் ஆண்டு
பிரம்மச் சாரி படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
பெற்றார். 1982-ம் ஆண்டு வதாதா படத்துக்காக சிறந்த குணச்சித்திர
நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். 1955-ம் ஆண்டு ரங்கீன் ராதேன்
படப்பிடிப்பில் நடிகை கீதாபாலியை ஷிம் மிகபூர் சந்தித்தார். அப்போது
இருவருக்கும் காதல் ஏற்பட்டு மும்பை கோவிலில் ரகசிய திருமணம் செய்தார்.
திருமணத்துக்கு
சாட்சியாக இருந்த ஹரி வாலியா என்பவர் இவர்களது ரகசிய திருமணத்தை
பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்களது சம்மதத்தை பெற்றுக் கொடுத்தார்.
ஷம்மி கபூரும், கீதாபாலியும் தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு
ஆதித்யா ராஜ்கபூர் என்ற மகனும், காஞ்சன் என்ற மகளும் உள்ளனர்.
1965-ம்
ஆண்டு கீதாபாலி சின்னம்மை நோய் தாக்கி இறந்தார். அதன் பிறகு 1969-ம் ஆண்டு
குஜராத் பவ நகரைச் சேர்ந்த பெரும் செல் வந்தரின் மகளான நீலா தேவியை 2-வது
திருமணம் செய்தார். அவரை மணந்த பின்பு இந்திப்படங்களில் ஷம்மி கபூர்
ரொமான்டிக் ஹீரோவாக கொடி கட்டிப் பறந்தார். ஷம்மி கபூர் இறந்த போது
ஆஸ்பத்திரியில் அவரது உடல் அருகே இருந்த மனைவி நீலாதேவியும், மகன்-மகளும்
கதறி அழுதனர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகர் ஷம்மி கபூர் மரணம்
சினிமா குடும்பத்தில் பெரிய இழப்புதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|