சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

'இப்தார்' சிறந்த செயல் Khan11

'இப்தார்' சிறந்த செயல்

3 posters

Go down

'இப்தார்' சிறந்த செயல் Empty 'இப்தார்' சிறந்த செயல்

Post by பாயிஸ் Tue 16 Aug 2011 - 17:58

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உற்றார் உறவினர்களையும், அயலவர்களையும், ஏழை எளியவர்களையும், ஸஹாபாத் தோழர்களையும் தம் கூட அமர்த்தி "இப்தார்" நோன்பு துறக்கப்பண்ணுவார்கள். இதனை முன் மாதிரியாக வைத்து நபிகளாரின் உமத்துக்களும் அன்று முதல் இன்று வரை நோன்பு துறக்கச் செய்து வருகின்றார்கள். உண்மையில், இது ஓர் அருமையான நல்ல சிறந்த பழக்கமாகும்.

முன்னைய காலங்களில் இந் நிகழ்வு, முஸ்லிம்கள் மத்தியில் குறைந்தளவு இருந்து வந்த போதிலும், அண்மைக் காலம் முதல் பாமர மக்கள் மட்டுமின்றி, இயக்கங்கள், அமைப்புகள், ஜமா அத்துக்கள் என பல்வேறுபட்ட இடங்களில் 'இப்தார்' நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. இன்று பெண்கள் கூட ஒருவரையொருவர் அழைத்து, "இப்தார்" நிகழ்வுகளைச் செய்து இதனைக் கண்ணியப்படுத்தி வருகின்றனர். சமுதாயத்தின் கீழ் மட்டத்திலுள்ள வசதி குறைந்த ஏழை எளிய மக்களை மாத்திரம் அழைத்து, பிச்சைபோடுவது போல் செய்விப்பது அல்ல இப்தார். உறவினர்கள், அயலவர்கள் என சமுதாயத்தில் வசதி படைத்த செல்வந்தவர்களையும் "இப்தார்" வைபவங்களில் தாராளமாகக் கலந்து கொள்ளச் செய்யலாம். அப்போது தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், செல்வந்தர்களுக்கும் நெருக்கமான - இறுக்கமான உறவுகள் இதன் மூலம் ஏற்படும்.

துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்

புனித ரமழான் காலத்தில் இரவு பகலாக தொழுகை, திக்ரு, ஸலவாத்து, பயான், அல்குர்ஆன் ஓதுதல், துஆ மற்றும் தெளபா (பாவமன்னிப்பு) கேட்டல் என்பன போன்ற சிறந்த அமல்களுடன் "தராவீஹ், தஸ்பீஹ், வித்ர், கியா முல்லைல்" போன்ற நல்லமல்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றபோதிலும், "இப்தார்" எனும் நோன்பு துறக்கும் வேளையில் ஒரு அடியான் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவனாகச் செல்கின்றான். இந்த வேளையில், தனியாகவோ கூட்டாகவோ தியானத்தில் அல்லது பிராத்த்தனையில் ஈடுபடலாம். இப்தாருடைய நேரம் ஒரு அடியானுடைய துஆக்கள், அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படும் வேளை.

எனவே, எல்லா ஊர்களிலும், தனிப்பட்ட வீடுகளிலும் அவரவர் தகுதிக்கும் வசதிக்கும் ஏற்ப, "இப்தார்" நோன்பு துறக்கும் நிகழ்வுகளைத் தாராளமாக ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால், நமக்கு ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக, அல்லாஹ் "இப்தார்" நோன்பு திறக்கச் செய்யும் நிகழ்வின் மூலமாக நமக்கு மேலான அருட் பாக்கியங்களை அள்ளி வழங்குவதற்காகக் காத்ருக்கின்றான். அத்துடன், நமது வாழ்விலும், உணவிலும், செலவிலும் என்றுமே குறைவில்லாத மேலான அபிவிருத்திகளைத் தருவதாகவும் அவன் வாக்களித்திருக்கின்றான்.

* "இப்தாரை" எளிய முறையில் செய்யலாம்

இப்தார் நோன்பு துறக்கச் செய்யும் நிகழ்வு, பெரிய விருந்துகளாக அல்லது மிதமிஞ்சிய செலவுகளில் அல்லது மேல் மட்டத்தில் அமைய வேண்டும் என்றில்லை. சாதாரணமாக, மிகமிகச் சிறியதாக, எந்தெந்த ஊருக்கு என்னென்ன உணவு வகைகள் பொருந்துமோ, அந்தந்த வகையில், இடத்துக்கு ஏற்றவாறு எளிய முறையிலும் சிறிய மட்டத்திலும் செய்யலாம். இதனை நாமும் அல்லாஹ்வுக்காக வேண்டி புனித நோன்பு காலத்தில், நமது கைச் செலவுக்கு தகுந்தபடி செய்யலாம். ஒரு பேரீச்சம்பழம், ஒருமிடக்கு தண்ணீர் போன்றவற்றை கொண்டு அடுத்தவருக்கு "இப்தார்" நோன்பு துறக்கச் செய்ய முடியும். இது, நம் மத்தியில் ஒரு சிறிய ஏற்பாடாகி இருந்தாலும் கூட, அல்லாஹ்விடத்தில் நாளை மறுமையுடைய நாளில் ஒரு பெரிய ஏற்பாடாக மதிப்பளிக்கப்பட்டு கணிக்கப்படும். அந்தளவுக்கு இப்தாருடைய மகிமையும், மாண்பும் அல்லாஹ்விடத்தில் கண்ணியப்படுத்தப்படும்.
இதேபோல், தவிர்க்க முடியாத சில காரணங்களைத் தவிர, "இப்தார்" நிகழ்ச்சிகளுக்காக யாராவது நம்மை அழைத்தால், நாம் அதனை தயங்காது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இது நாம் அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய கண்ணியமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழகான ஒரு சுன்னத்தான செயலை, "பித்னா" நிறைந்த இக் காலத்தில் நாம் உயிர்ப்பிக்க முனைய வேண்டும்

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

'இப்தார்' சிறந்த செயல் Empty Re: 'இப்தார்' சிறந்த செயல்

Post by ஹம்னா Tue 16 Aug 2011 - 18:54

##* ##*


'இப்தார்' சிறந்த செயல் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

'இப்தார்' சிறந்த செயல் Empty Re: 'இப்தார்' சிறந்த செயல்

Post by முனாஸ் சுலைமான் Tue 16 Aug 2011 - 20:38

இப்தார் நோன்பு துறக்கச் செய்யும் நிகழ்வு, பெரிய விருந்துகளாக அல்லது மிதமிஞ்சிய செலவுகளில் அல்லது மேல் மட்டத்தில் அமைய வேண்டும் என்றில்லை. சாதாரணமாக, மிகமிகச் சிறியதாக, எந்தெந்த ஊருக்கு என்னென்ன உணவு வகைகள் பொருந்துமோ, அந்தந்த வகையில், இடத்துக்கு ஏற்றவாறு எளிய முறையிலும் சிறிய மட்டத்திலும் செய்யலாம். இதனை நாமும் அல்லாஹ்வுக்காக வேண்டி புனித நோன்பு காலத்தில், நமது கைச் செலவுக்கு தகுந்தபடி செய்யலாம். ஒரு பேரீச்சம்பழம், ஒருமிடக்கு தண்ணீர் போன்றவற்றை கொண்டு அடுத்தவருக்கு "இப்தார்" நோன்பு துறக்கச் செய்ய முடியும். :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

'இப்தார்' சிறந்த செயல் Empty Re: 'இப்தார்' சிறந்த செயல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum