Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு!
3 posters
Page 1 of 1
நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு!
![நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு! Superficial-anterior-muscles](https://2img.net/h/4.bp.blogspot.com/_W8Kxq8Ls81Q/TOCHSAF95AI/AAAAAAAAC1k/oOEWyGoZ9Ow/s320/superficial-anterior-muscles.jpg)
நீரிழிவு நோய் எனப்படும் சக்கரை வியாதியால் அவதிப்படும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில் இந்நோய்யின் தாக்கம் மருந்து மாத்திரை, ஊசிகள் மூலம் கட்டுப்படுத்தப் படுகிறது.
எனினும் பூரணகுணம் அடைவது அரிதாகவே உள்ளது. நீரிழிவு வியாதியை கட்டுபடுத்தாத நிலையில் தொடர்ந்து இருக்க நேர்ந்தால் அதனால் ஏற்படும் பக்க அல்லது பின் விளைவுகளில் முக்கியமானது நரம்புகள் பாதிக்கப்படுவதாகும்.
*
நரம்புகள் பாதிக்கப்பட்டால் அதனால் மேலும் பல முக்கியமான உடலின் செயல்பாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நம் உடலில் தொடு உணர்ச்சி, வலி உணர்ச்சி, உடல் அசைவு, நடமாட்டம், உணவு ஜீரணம், பாலியல் செயல்பாடு போன்றவற்றுக்கு தேவையான அனைத்துமே பாதிப்புக்கு உள்ளாகின்றன.
*
பெரும்பாலும் இந்த இனிப்புநீர் வியாதி தோன்றிய பின் 10 அல்லது 15 வருடங்களுக்கு பின்புதான் இவ்வாறு நரப்புகள் பாதிக்கப்படலாம். உண்மையில் நீரிழிவு நோயால் நரம்புகளின் பாதிப்பு சரியாக தெரியாவிட்டாலும் சில காரணங்கள் யூகிக்கப்படுகின்றன.
நரம்புகளின் மூலமாக தகவல் சமிக்ஞைகள் செல்கின்றன. இதை செயல்படுத்துவது சில இரசாயன மாற்றங்கள். உயர்ந்த இனிப்பு இதன் சம நிலையை பாதித்து செயல் இழக்கச் செய்யலாம். உயர்வான இனிப்பு இரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டு பண்ணி விடுவதால் நரம்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைவுபடுகிறது.
*
இதனால் நரம்புகளுக்கு தேவையான பிராணவாயு குறைவுபடுகிறது. அதோடு நரம்புகளை சுற்றியுள்ள சுவர் பகுதியையும், இனிப்பு பாதித்து கெடுக்கலாம். இந்த நீரழிவுநோய் இதர பகுதிகளில் உள்ள நரம்புகளையும் பாதிப்படைய செய்யும். ஆனால் இதில் ஓர் வினோதம் என்னவேற்றால் இந்த நோய் மூளையை அல்லது நரம்பு மண்டலத்தை தாக்குவதில்லை. அப்படி மற்றும் நேர்ந்தால் வீபரிதம்தான்.
*
இந்த நரம்புகள்தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் மின்சார சமிக்ஞைகளை, சிக்கலான கம்பிவலை போல் பரவியுள்ளன. நீரழிவு நோயால் இந்த 'தொலைத்தொடர்பு' வேகம் குறையலாம். செய்தி தவறாகலாம் அல்லது தடைப்படலாம். இவ்வாறு நரம்புகள் கெடுவதை நரம்பு அழற்சி என்றும் கூறுவர்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு! X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு!
இது மூன்று வகைப்படும்:
பலநரம்புகள் கோளாறு,
குவிமைய நரம்பு கோளாறு,
தன்னியக்க நரம்புக் கோளாறு எனப்படும்.
இவற்றை விரிவாகப் பார்த்தால் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பலநரம்புகள் கோளாறு(Poly Neuropathy):
உடலின் எல்லாப் பகுதி நரம்புகளையும் இது பாதிக்கலாம். ஆனால் முக்கியமாக கைகளிலும். கால்களிலும் உள்ள பெரிய நீண்ட நரம்புகளைத்தான் கடுமையாகத் தாக்குகிறது. அதிலும் கால்களின் அடிப்பகுதியையும் ஒரேமாதிரி இரண்டு கால்களையும் பாதிக்கும். இதில் கால் அசைவு, நடப்பது போன்றவை பாதிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக உணர்வு குன்றிப்போதல், வலி மதமதப்பு, கூசுதல், CRAMPS என்ற தசைச்சுழுக்கு, போன்றவை காணப்படும்.
*
குவிமைய நரம்புக்கோளாறு(Focal Neuropathy):
இதில் ஒரு குறிப்பிட்ட நரம்பு பாதிக்கப்படலாம். அல்லது சில நரம்புகள் பாதிக்கப்படலாம். உடலின் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்படும். ஒற்றைவகையில் பாதிப்பு கொஞ்சங் கொஞ்சமாக முன்னேறும், ஆனால் இந்த வகை தாக்குதல் திடிரென்று ஏற்படும். இதிலும் மதமதப்பு, வலி, பலகீனம் உண்டாகும். இதுவும் எப்பகுதியிலும் ஏற்படலாம். அதாவது முகத்தில் கூட ஏற்படலாம். முகத்தில் கன்னப் பகுதியின் தசைகள் பாதிக்கப்பட்டால் அப்பகுதி செயலற்றும் மறுபக்கம் இழுத்துக் கொண்டும் காணப்படும். இதனால் முக அமைப்பு கோணாலாகும். இவ்வாறு கண் நரம்புகள், கை நரம்புகளும் பாதிக்கப்படும்.
தன்னியக்க நரம்புக்கோளாறு(Autonomic Neuropathy):
இந்த நரம்புகள் நாம் எண்ணிப் பார்க்காத வகையில் தாமே செயல்பட்டு வரும். இவை உறுப்புகளை கட்டுப்படுத்துபவை. இருதயத்துடிப்பு, ஜீரணம், வியர்வை சுரத்தல், சிறுநீர் கட்டுப்பாடு போன்றவை சில உதாரணங்கள். இப்பகுதி நரம்புகள் இவ்வாறு தாக்கப்பட்டால், இந்த உறுப்பு செயலற்றுப் போவதால் நமது கவன்மெல்லாம் அங்கேயே திரும்ப நேரிடும்.
பலநரம்புகள் கோளாறு,
குவிமைய நரம்பு கோளாறு,
தன்னியக்க நரம்புக் கோளாறு எனப்படும்.
இவற்றை விரிவாகப் பார்த்தால் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பலநரம்புகள் கோளாறு(Poly Neuropathy):
உடலின் எல்லாப் பகுதி நரம்புகளையும் இது பாதிக்கலாம். ஆனால் முக்கியமாக கைகளிலும். கால்களிலும் உள்ள பெரிய நீண்ட நரம்புகளைத்தான் கடுமையாகத் தாக்குகிறது. அதிலும் கால்களின் அடிப்பகுதியையும் ஒரேமாதிரி இரண்டு கால்களையும் பாதிக்கும். இதில் கால் அசைவு, நடப்பது போன்றவை பாதிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக உணர்வு குன்றிப்போதல், வலி மதமதப்பு, கூசுதல், CRAMPS என்ற தசைச்சுழுக்கு, போன்றவை காணப்படும்.
*
குவிமைய நரம்புக்கோளாறு(Focal Neuropathy):
இதில் ஒரு குறிப்பிட்ட நரம்பு பாதிக்கப்படலாம். அல்லது சில நரம்புகள் பாதிக்கப்படலாம். உடலின் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்படும். ஒற்றைவகையில் பாதிப்பு கொஞ்சங் கொஞ்சமாக முன்னேறும், ஆனால் இந்த வகை தாக்குதல் திடிரென்று ஏற்படும். இதிலும் மதமதப்பு, வலி, பலகீனம் உண்டாகும். இதுவும் எப்பகுதியிலும் ஏற்படலாம். அதாவது முகத்தில் கூட ஏற்படலாம். முகத்தில் கன்னப் பகுதியின் தசைகள் பாதிக்கப்பட்டால் அப்பகுதி செயலற்றும் மறுபக்கம் இழுத்துக் கொண்டும் காணப்படும். இதனால் முக அமைப்பு கோணாலாகும். இவ்வாறு கண் நரம்புகள், கை நரம்புகளும் பாதிக்கப்படும்.
தன்னியக்க நரம்புக்கோளாறு(Autonomic Neuropathy):
இந்த நரம்புகள் நாம் எண்ணிப் பார்க்காத வகையில் தாமே செயல்பட்டு வரும். இவை உறுப்புகளை கட்டுப்படுத்துபவை. இருதயத்துடிப்பு, ஜீரணம், வியர்வை சுரத்தல், சிறுநீர் கட்டுப்பாடு போன்றவை சில உதாரணங்கள். இப்பகுதி நரம்புகள் இவ்வாறு தாக்கப்பட்டால், இந்த உறுப்பு செயலற்றுப் போவதால் நமது கவன்மெல்லாம் அங்கேயே திரும்ப நேரிடும்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு! X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு!
![நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு! Untitled](http://2.bp.blogspot.com/_W8Kxq8Ls81Q/TOCIJT4KeYI/AAAAAAAAC1s/YNfMaDhtUbs/s320/untitled.bmp)
பல நரம்புக்கோளாறு, குவிமைய நரம்புக்கோளாறு எப்படி ஏற்படுவது என்பது முந்திய தொடரில் பார்த்தோம். அடுத்தாக தன்னியக்க நரம்புக் கோளாறு பற்றி அறிவோம். என்னவெனில் தாமாக இயங்கும் தன்னியக்க நரம்புகள், நாம் எண்னிப்பாக்காத வகையில் தாமே செயல் பட்டு வரும் உறுப்புக்ளை கட்டுப்படுத்துபவை.
*
இருதயத்துடிப்பு, ஜீரணம், வியர்வை சுரத்தல், சிறுநீர் கட்டுப்பாடு போன்றவை சில உதாரணங்கள். இப்பகுதி நரம்புகள் நீரழிவால் தாக்கப்படும் போது, இந்த உறுப்புகள் செயலற்றுப் போவதால் நமது கவனமெல்லாம் அங்கேயே திரும்ப நேரிடும்.
***
தன்னியக்க நரம்புக் கோளாறு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றி பார்ப்போம்:
1. இருதயம், இருதயத்துடிப்பில் மாற்றம் எழுந்து நின்றால் இரத்த அழுத்தம் குறைவு.
*
2. இருதய நரம்புகள் இறந்து போனால் மாரடைப்பின் வலி தெரியாமற் போகலாம்.
3. வயிறு, குடல், நரம்புகள் கெடுவதால் ஜீரணம் தடைப்பட்டு அதனால் குமட்டல், வாந்தி, வயிறு உப்புதல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பசியின்மை போன்றவை தோன்றுதல்.
*
4. சிறுநீர்ப்பை சரியாக இயங்காமல் எப்போது அது நிறைகிறது என்று தெரியாமல் போகலாம், சிறுநீரும் முழுதாக வெளியேறாத நிலையும் ஏற்படலாம்.
*
5. இதனால் நோய்க்கிருமிகள் தொற்று உண்டாகி சிறு நீரகம் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
*
6. இனிப்பு அதிகம் குறைந்து போனால் அதன் அறிகுறிகளான வியர்வை, நடுக்கம், பரபரப்பு, கண் மங்கிப்போய் தெரியாமல் போதல், அளவுக்கு அதிகமான வியர்வை.
இப்படி பலவிதத்தில் இனிப்பு நீர் வியாதி நரம்புகளை தாக்குகின்றன. மனிதர்க்கு நரம்புகள் பாதிப்பு ஏற்படாத வகையில் இனிப்பின் அளவைக் கட்டுப்படுத்தும் எல்லாவிதமான நடவடிக்கை களையும் துரிதமாக எடுக்க வேண்டும். அதாவது மருத்துவரை அனுகி சிகிச்சை பெறுவது நல்லது.
*
நரம்புகளின் பாதிப்பு சில அறிகுறிகள் மூலமாக தென்படும். அதில் குறிப்பாக கைகள், கால்கள், பாதங்கள் கூசுதலோடு மதமதப்பாகவும், எரிச்சலுடனும், வலி குத்தலுடனும் காணப்படும். தொடு உண்ர்ச்சி மிகுந்து காணப்படும்.
*
இரவில் கால்களில் தசைச்சுளுக்கு உண்டாதல். பாதங்கள், கால்விரல்கள் தரையில் படுவது சரிவர தெரியாது போதல். பாதங்களின் தோல்தடிப்பாதல் புண்கள் வந்து மாறாது இருத்தல். இப்படிபல அறிகுறிகள் காணப்படும் உடனே மருத்துவரை அனுகுவது நன்மையாகும்.
துவக்க காலத்திலே வைத்தியம் செய்து, மருந்து மாத்திரை அல்லது ஊசி மூலம் கட்டுப்படுத்திக் கொள்வது நலம் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் உண்ணும் உணவில் இனிப்பின் அளவைக் குறைத்து, மாப்பொருள், கொழுப்பு, இனிப்பு பண்டங்கள் இதனையும் தவிர்த்து, தானியங்கள், பழங்கள், கீரைவகைகள் இவற்றை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிடுதல், இனிப்பு நீர் என்ற சக்கரை வியாதி அதாவது நீரிழிவு நோய் தாக்கத்தில் இருந்து எம் உடலை பாதுகாத்து நீண்ட நாள் உயிர் வாழலாம்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு! X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு!
நன்றி ஹம்னா சிறந்த மருத்துவ தொகுப்புக்கு
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு!
நீரிழிவு நோய் ஒரு slow killing .. நோய் . ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகளை உருவாக்கிவிடும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள்.
» நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள்..
» நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள்
» சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா?
» தசை அழற்சி நோயால், பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா
» நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள்..
» நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள்
» சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா?
» தசை அழற்சி நோயால், பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|