சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Today at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

மனம் Khan11

மனம்

4 posters

Go down

மனம் Empty மனம்

Post by Atchaya Thu 15 Sep 2011 - 13:11

“நமது மனம் உன்னதமான ஒரு நிலையில் இருக்கும்போது, நமது முழு ஆற்றலும் வெளிவருகிறது. நாம் செய்யும் வேலையில் நமது முழுத்திறமையும் பரிமளிக்கிறது. சில நேரங்களில் இந்த உன்னத மனநிலை தானாகவே நமக்கு வந்தடைகிறது. ஆனால், இன்னும் சில நேரங்களில், அதுவும் சில முக்கியமான நேரங்களில் இந்த உன்னத மனநிலை நமக்குப் பிடிகொடுக்காமல் நழுவி விடுகிறது. அதனால் நாம் எடுத்த முயற்சியில் வெற்றியும் நம்மை விட்டு நழுவிவிடுகிறது. நமக்குத் திறமை இருந்தும் அது சமயத்திற்குக் கை கொடுக்காமல் தவிக்கிறோம்”.

மனம் போன போக்கிலே, கால் போகலாமா? மனம் போன போக்கிலேதான் கால் போகும். வேறு வழியே இல்லை. அந்த அளவிற்கு நமது மனம் நமது நடவடிக்கைகள் மீது ஆதிக்கம் செய்கிறது. மீண்டும் சொல்கிறேன், மனம் போன போக்கிலேதான் கால் போகும்.

மனதைக் கட்டுப்படுத்துவது என்ன சுலபமா? எந்த நினைவு வரக்கூடாது என்று கடுமையாக முயற்சி செய்கிறோமோ அதே நினைவு தான் மீண்டும் மீண்டும் வந்து படுத்துகிறது. எதை நினைவில் நிறுத்தவேண்டும் என்று விழைகின்றோமோ சில வேளைகளில் அது நிற்பதில்லை. மறந்துவிடுகிறோம். இப்படி இருக்கையில் மனதைக் கட்டுப்படுத்துவது எப்படி? கட்டுப்படுத்தத்தான் முடியுமா?

கண்டிப்பாக முடியும். கட்டுப்படுத்துவது மாத்திரம் இல்லை அதை நல்வழிப்படுத்தி நமக்குச் சாதகமாக அதன் அபரிமிதமான சக்தியைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.
அரிதரிது மானிடராதல் அரிது. மனிதனால் முடியாதது என்று எதுவுமே இல்லை. மனித சக்திக்கு ஈடு இணையே இல்லை. மனிதன் இறைவனின் அம்சம். அப்படிப் பலரும் போற்றும் மனித இனத்தின் மேன்மைக்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முதன்மையான காரணம், மனிதனின் சிந்திக்கும் திறமைதான்.

அதனால்தான் இந்தச் சிந்தனைகள் உருவாகும் (உருவாக்கும்) மனம் என்ற அந்தக் கருவறை குறித்து ஞானிகள் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். பண்டைய காலங்களிலிருந்தே இந்த மனம் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. பல அரிய தகவல்களை நாம் இப்போது அறியப் பெற்றிருக்கின்றோம். இந்த சிந்தையாற்றலால்தான் தம்மை விட சக்திவாய்ந்த மிருகங்களையும் மிகவும் அனாயசமாக மனிதன் ஆட்டிப்படைக்கிறான்.

நமது உடலில் புதைந்து கிடக்கும் இந்த மனம், உடலோடு இணைந்திருக்கிறது. அதனால் தான் உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் மனம் பாதிக்கப்படுகின்றது. மனதில் ஏற்படும் சில எண்ணங்களால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

வெள்ளையான அந்த மேடையில் மஞ்சள் நிறத்தில் இந்தப் பழம், ஒரு கையால் பழத்தைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் கூராக இருக்கும் கத்தியால் பழத்தை அறுக்க, வீச்ச் என்று சாறு முகத்தில் லேசாக தெரிக்கின்றது. அந்தப் புளிப்பு சுவையும், காற்றில் பரவிய அதன் சுகந்தமும் சேர்ந்து.. வாயில் ஜலம் வந்துவிடுகிறது.
என்ன நிஜமாகவே வாயில் நீர் ஊருகிறதா? எங்கே பழம்? எங்கே கத்தி? மனத்தில் நினைத்த அளவிலேயே வாயில் நீர் ஊருகிறதே பாருங்களேன்.

உடலிற்கும் மனதிற்கும் உள்ள மிக நுணுக்கமான பந்தம்தான் இந்த விளைவை ஏற்படுத்துகிறது. சரி இந்தப் பிணைப்பினால் நமக்கு என்ன லாபம்? மிகுந்த லாபம் இருக்கின்றது. மனதில் ஏற்படும் சில எண்ணங்களால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றது என்றால், உடலின் சில அசைவுகளால் மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?

மனநிலை சற்று கவலையாக, தொய்வாக இருக்கும் நேரத்தில், தலையைக் கவிழ்த்திக் கொண்டு, சற்றுக் கூன் போட்டு, கைகளைத் தொய்வாக விட்டு அமர்ந்திருந்தால், கவலை இன்னமும் கூடிவிடும். மனம் இன்னும் பாரமாகி விடும். ஆனால், அதே நிலையிலும், சற்று நிமிர்ந்து நின்று, தலையை உயர்த்தி, கைகளை இடுப்பில் வைத்து, சற்று ஆழமாக மூச்சு விட்டுப்பாருங்கள். மனம் சற்று லேசானது போலத் தோன்றும்

நமது மனம் உன்னதமான ஒரு நிலையில் இருக்கும்போது, நமது முழு ஆற்றலும் வெளிவருகிறது. நாம் செய்யும் வேலையில் நமது முழுத்திறமையும் பரிமளிக்கிறது. சில நேரங்களில் இந்த உன்னத மனநிலை தானாகவே நமக்கு வந்தடைகிறது. ஆனால், இன்னும் சில நேரங்களில், அதுவும் சில முக்கியமான நேரங்களில் இந்த உன்னத மனநிலை நமக்குப் பிடிகொடுக்காமல் நழுவிவிடுகிறது. அதனால் நாம் எடுத்த முயற்சியில் வெற்றியும் நம்மை விட்டு நழுவி விடுகிறது. நமக்குத் திறமை இருந்தும் அது சமயத்திற்குக் கை கொடுக்காமல் தவிக்கிறோம்.

இதனையே நாம் வெற்றி மனநிலை என்றும், தோல்வி மனநிலை என்றும் பாகுபடுத்திக் கொள்ளலாம். இந்த இரண்டு நிலைகளுமே தற்காலிகமானவைதான்.

மகாகவி பாடினான்,

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்;- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

உங்கள் எண்ணமும் இதுபோன்ற ஒரு அக்கினிக் குஞ்சுதான். இதில் சிறியதென்றும், பெரியதென்றும் ஒன்றும் இல்லை. உங்களைத் தகித்து, எதையும் செய்ய, சாதிக்கக்கூடிய ஒரு வெறியை ஏற்படுத்தும் சக்தி கொண்டது இந்த எண்ணம்.

நன்றி கோபிநாத் & நமது நம்பிக்கை
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மனம் Empty Re: மனம்

Post by kalainilaa Thu 15 Sep 2011 - 13:18

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்;- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;- தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

உங்கள் எண்ணமும் இதுபோன்ற ஒரு அக்கினிக் குஞ்சுதான். இதில் சிறியதென்றும், பெரியதென்றும் ஒன்றும் இல்லை. உங்களைத் தகித்து, எதையும் செய்ய, சாதிக்கக்கூடிய ஒரு வெறியை ஏற்படுத்தும் சக்தி கொண்டது இந்த எண்ணம்.

நன்றி தோழரே ! நம்பிக்கை சொல்லும் கட்டுரைக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மனம் Empty Re: மனம்

Post by நண்பன் Thu 15 Sep 2011 - 13:34

மிகவும் பயனுள்ள ஒரு கட்டுரை அட்சயா பகிர்வுக்கு மிக்க நன்றி
மனநிலை சற்று கவலையாக, தொய்வாக இருக்கும் நேரத்தில், தலையைக் கவிழ்த்திக் கொண்டு, சற்றுக் கூன் போட்டு, கைகளைத் தொய்வாக விட்டு அமர்ந்திருந்தால், கவலை இன்னமும் கூடிவிடும். மனம் இன்னும் பாரமாகி விடும். ஆனால், அதே நிலையிலும், சற்று நிமிர்ந்து நின்று, தலையை உயர்த்தி, கைகளை இடுப்பில் வைத்து, சற்று ஆழமாக மூச்சு விட்டுப்பாருங்கள். மனம் சற்று லேசானது போலத் தோன்றும்

நிச்சியமாக இது என்னிடம் உள்ள ஒரு பளக்கம் கவலைகள் அதிகமாகும் போது நானும் இவ்வாறுதான் மிகவும் பயனுள்ள தகவல் அட்சயா வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனம் Empty Re: மனம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 Sep 2011 - 13:49

மிக்க நன்றி அண்ணா மனச்சோர்வென்றின் போதான் இந்த பதிவினைப்பார்த்தேன் மிகவும் புத்துணர்வு பிறந்தது மனதின் அடிப்படையில்தான் எமது செயல்பாடுகள் அமைகிறது மனதையாழும் போது வாழ்வில் சிக்கல்கள் தவிர்ந்து வென்றிட முடிகிறது மிக்க நன்றி அண்ணா நல்ல பகிர்வு


மனம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனம் Empty Re: மனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum