Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
வாகை சூட வா - திரைப்பட விமர்சனம் ( அருமை )
4 posters
Page 1 of 1
வாகை சூட வா - திரைப்பட விமர்சனம் ( அருமை )
அஞ்சறைப் பெட்டிக்குள் துளசி செடி முளைத்த மாதிரி அப்படியொரு படம். டைட்டிலிலேயே துவங்கிவிடுகிறது டைரக்டோரியல் டச்! சித்தாள் ஒருவர் தன் தலையில் தானே கல்லடுக்கிக் கொள்ளும் அந்த காட்சியை பார்க்கவே இன்னொரு முறை தியேட்டருக்கு போகலாம்.
66 களில் நடக்கிறது கதை. மகனை அரசு வேலையில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படும் அப்பாவுக்காக 'கிராம சேவக்' என்ற அமைப்பின் மூலம் 'கண்டெடுத்தான் காடு' கிராமத்திற்கு வாத்தியாராக போகிறார் விமல். சில மாதங்கள் வகுப்பெடுத்தால் சர்டிபிகேட்டும், கொஞ்சம் சம்பளமும் கிடைக்கும். இந்த சர்டிபிகேட் வாங்கினால் அரசு வேலை நிச்சயம். இந்த பழங்கால விதியின்படி அந்த கிராமத்திற்கு செல்லும் அவர் அங்கு சந்திக்கும் பனித்துளி காதலும், படீர் திடீர் எதிர்ப்புகளும்தான் படம்.
ஏரியல் ஷாட்டிலிருந்து எண்ணி பார்த்தால் இருபது குடிசைகளும் ஒரே ஒரு செங்கல் சூளையும்தான் காட்சி பின்னணி. ஆனால் இதற்குள் எத்தனையெத்தனை வித்தைகள் காட்டுகிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்? வல்லவர்களுக்கு வெற்று சூனியம் கூட வெனீஸ்தான்!
கொத்தடிமைகள் போல குடும்பம் குடும்பமாக கல் அறுக்கிறார்கள் செங்கல் சூளையில். 'சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல புள்ளைங்களை அனுப்பி வைங்க. பாடம் சொல்லித் தர்றேன்' என்று கெஞ்சுகிற விமலை அலட்சியமாக நோக்குகிறது அந்த ஊர்(?) எப்படியோ போராடி அவர்களுக்கு சில கணக்குகளையும், எழுத்துக்களையும் சொல்லித் தருகிறார் அவர். கணக்கு கேட்காமலே வேலை செய்யும் இந்த அடிமைகள் வாத்தியார் வந்தபின் கணக்கு கேட்பது முதலாளி பொன்வண்ணனை உறுத்துகிறது. அவரது கண்ணசைவில் அடி பின்னி எடுக்கிறார்கள் வாத்தியாரை. அடிக்கு பயந்த வாத்தியார் ஊரை விட்டு போனாரா? இவர் மீது காதல் கொண்ட அந்த ஊர் அழகி இனியாவை ஏற்றுக் கொண்டாரா? சட்டென்று மழை நின்ற மாதிரி முடிந்து போகிறது படம். குடையை மடக்கிய பின்பும் குளிர் போகாதல்லவா? அதுதான் இந்த மொத்த படமும்...
இதுவரைக்கும் எங்கேயிருந்தாரோ இந்த இனியா. இனிமேல் தமிழ்சினிமாவின் மூச்சுக்காற்றில் இவரது பெயரும் எழுதப்பட்டிருக்கும். லேசாக இமைத்தால் கூட அதிலும் ஒரு அர்த்தத்தை போட்டு அசர வைக்கிறார் மனுஷி. வாத்தியாரின் ஓலை குடிசைக்கு வெளியே இருக்கும் மூங்கிலில் அப்படியே தலைசாய்ந்து நிற்கும் ஒய்யாரமும், தன் காதலை நாசுக்காக சொல்லி புரிய வைக்க முயலும் அழகும் கண்ணை விட்டு அகலாது. தன் காதல் அவருக்கு புரிந்துவிட்டதாக நினைத்து ஒரு நடை நடக்கிறாரே, ஹைய்யோ...! இதற்கு முன்பு ஓராயிரம் முறை கேட்டிருந்தாலும், 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலை இந்த படத்தில் கேட்கும்போது நரம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்கிறது.
தனது உடற்கட்டை நினைத்து பிரஸ்தாபிக்கும் விமலிடம் 'பால் வருமா சார்' என்று கேட்டு கதிகலங்கடிக்கிறாள் அந்த சிறுமி. ரேடியோவுக்குள் ஆள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை அக்கு வேறாக்குகிறார்கள் சிறுவர்கள். தன்னை முட்டுவதற்காகவே திரியும் கிடா ஆட்டையும், வம்படியாக வகுப்புக்கு வராமல் ஏய்க்கும் சிறுவர்களையும் சமாளிக்கும் விமல், அடைகிற அத்தனை அவஸ்தைகளும் அழகான நகைச்சுவை ப்ளே கிரவுண்ட்.
'டூ நாலெட்டு' தம்பி ராமய்யாவும் அவரது கணக்கும், சிரிப்பும், 'குருவி சத்தம் கேட்குது' என்று ஓடும் குமரவேலும், 'அவரு பைத்தியம் இல்லீங்க தம்பி' என்று கிராமத்து மனம் காட்டும் நம்பிராஜனும், ஆண்டையாக கம்பீரம் காட்டும் பொன்வண்ணனும், தென்னவனும் இன்னும் இன்னும் பெயர் தெரியாத அத்தனை சிறுவர்களும் நம் மனசில் கற்களை அடுக்கி பங்களாவே கட்டுகிறார்கள். ஒரு சில காட்சிகளில் வந்தாலும், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிக்க வைக்கிறார் கே.பாக்யராஜ்.
நடிகர், நடிகைகளை நேர்த்தியாக தேர்ந்தெடுத்த சற்குணம், அதற்கு கொஞ்சமும் குறையாமல் தொழில் நுட்ப கலைஞர்களையும் துணைக்கழைத்துக் கொண்டிருப்பது சிறப்பு. இசையமைப்பாளர் டி.ஜிப்ரானின் 'போறானே...' 'சர சர சாரக்காத்து' பாடல்கள் இனிமை. பின்னணி இசையிலும் தனித்து நிற்கிறார். ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒவ்வொரு பிரேமிலும் கூட கதையை சொல்லியிருக்கிறார். குறிப்பாக விமல் போன பின் அந்த குடிசையையே இனியா பார்த்துக் கொண்டிருக்கும்போது அமைக்கப்பட்டிருக்கும் லைட்டிங். பீரியட் பிலிம்களில் ஆர்ட் டைரக்டரின் பங்கு மிக மிக அவசியமானது. அதை உணர்ந்து நிறைவு செய்திருக்கிறார் அவரும்.
இவர்கள்தான் இப்படி போட்டி போட்டுக் கொண்டு சபாஷ் பெறுகிறார்கள் என்றால் கிராபிக்ஸ் கலைஞர்களும் சளைக்கவில்லை. ஒரு காட்சியில் இனியாவின் முகத்தில் மினுக்கட்டாம் பூச்சியை பொட்டாக வைக்க நினைத்த சற்குணத்தின் கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். குளத்தில் மிதக்கும் நிலவை அள்ளி பக்கத்தில் எறிகிறாரே விமல், அதிலும் கூட! இப்படி படம் முழுக்க ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்காத கிராபிக்ஸ்சும் கவர்கிறது.
'கமர்ஷியலா இல்லீயே....', 'மெசேஜ் சொன்னா புரியுமா நம்ம ஜனங்களுக்கு...' இப்படியெல்லாம் பேசி வம்பளப்பவர்கள் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருந்தாலே போதும். இப்படம் வாகை சூடும்!
பொத்துங்க சார் ப்ளீஸ்!
66 களில் நடக்கிறது கதை. மகனை அரசு வேலையில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படும் அப்பாவுக்காக 'கிராம சேவக்' என்ற அமைப்பின் மூலம் 'கண்டெடுத்தான் காடு' கிராமத்திற்கு வாத்தியாராக போகிறார் விமல். சில மாதங்கள் வகுப்பெடுத்தால் சர்டிபிகேட்டும், கொஞ்சம் சம்பளமும் கிடைக்கும். இந்த சர்டிபிகேட் வாங்கினால் அரசு வேலை நிச்சயம். இந்த பழங்கால விதியின்படி அந்த கிராமத்திற்கு செல்லும் அவர் அங்கு சந்திக்கும் பனித்துளி காதலும், படீர் திடீர் எதிர்ப்புகளும்தான் படம்.
ஏரியல் ஷாட்டிலிருந்து எண்ணி பார்த்தால் இருபது குடிசைகளும் ஒரே ஒரு செங்கல் சூளையும்தான் காட்சி பின்னணி. ஆனால் இதற்குள் எத்தனையெத்தனை வித்தைகள் காட்டுகிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்? வல்லவர்களுக்கு வெற்று சூனியம் கூட வெனீஸ்தான்!
கொத்தடிமைகள் போல குடும்பம் குடும்பமாக கல் அறுக்கிறார்கள் செங்கல் சூளையில். 'சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல புள்ளைங்களை அனுப்பி வைங்க. பாடம் சொல்லித் தர்றேன்' என்று கெஞ்சுகிற விமலை அலட்சியமாக நோக்குகிறது அந்த ஊர்(?) எப்படியோ போராடி அவர்களுக்கு சில கணக்குகளையும், எழுத்துக்களையும் சொல்லித் தருகிறார் அவர். கணக்கு கேட்காமலே வேலை செய்யும் இந்த அடிமைகள் வாத்தியார் வந்தபின் கணக்கு கேட்பது முதலாளி பொன்வண்ணனை உறுத்துகிறது. அவரது கண்ணசைவில் அடி பின்னி எடுக்கிறார்கள் வாத்தியாரை. அடிக்கு பயந்த வாத்தியார் ஊரை விட்டு போனாரா? இவர் மீது காதல் கொண்ட அந்த ஊர் அழகி இனியாவை ஏற்றுக் கொண்டாரா? சட்டென்று மழை நின்ற மாதிரி முடிந்து போகிறது படம். குடையை மடக்கிய பின்பும் குளிர் போகாதல்லவா? அதுதான் இந்த மொத்த படமும்...
இதுவரைக்கும் எங்கேயிருந்தாரோ இந்த இனியா. இனிமேல் தமிழ்சினிமாவின் மூச்சுக்காற்றில் இவரது பெயரும் எழுதப்பட்டிருக்கும். லேசாக இமைத்தால் கூட அதிலும் ஒரு அர்த்தத்தை போட்டு அசர வைக்கிறார் மனுஷி. வாத்தியாரின் ஓலை குடிசைக்கு வெளியே இருக்கும் மூங்கிலில் அப்படியே தலைசாய்ந்து நிற்கும் ஒய்யாரமும், தன் காதலை நாசுக்காக சொல்லி புரிய வைக்க முயலும் அழகும் கண்ணை விட்டு அகலாது. தன் காதல் அவருக்கு புரிந்துவிட்டதாக நினைத்து ஒரு நடை நடக்கிறாரே, ஹைய்யோ...! இதற்கு முன்பு ஓராயிரம் முறை கேட்டிருந்தாலும், 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலை இந்த படத்தில் கேட்கும்போது நரம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்கிறது.
தனது உடற்கட்டை நினைத்து பிரஸ்தாபிக்கும் விமலிடம் 'பால் வருமா சார்' என்று கேட்டு கதிகலங்கடிக்கிறாள் அந்த சிறுமி. ரேடியோவுக்குள் ஆள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை அக்கு வேறாக்குகிறார்கள் சிறுவர்கள். தன்னை முட்டுவதற்காகவே திரியும் கிடா ஆட்டையும், வம்படியாக வகுப்புக்கு வராமல் ஏய்க்கும் சிறுவர்களையும் சமாளிக்கும் விமல், அடைகிற அத்தனை அவஸ்தைகளும் அழகான நகைச்சுவை ப்ளே கிரவுண்ட்.
'டூ நாலெட்டு' தம்பி ராமய்யாவும் அவரது கணக்கும், சிரிப்பும், 'குருவி சத்தம் கேட்குது' என்று ஓடும் குமரவேலும், 'அவரு பைத்தியம் இல்லீங்க தம்பி' என்று கிராமத்து மனம் காட்டும் நம்பிராஜனும், ஆண்டையாக கம்பீரம் காட்டும் பொன்வண்ணனும், தென்னவனும் இன்னும் இன்னும் பெயர் தெரியாத அத்தனை சிறுவர்களும் நம் மனசில் கற்களை அடுக்கி பங்களாவே கட்டுகிறார்கள். ஒரு சில காட்சிகளில் வந்தாலும், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிக்க வைக்கிறார் கே.பாக்யராஜ்.
நடிகர், நடிகைகளை நேர்த்தியாக தேர்ந்தெடுத்த சற்குணம், அதற்கு கொஞ்சமும் குறையாமல் தொழில் நுட்ப கலைஞர்களையும் துணைக்கழைத்துக் கொண்டிருப்பது சிறப்பு. இசையமைப்பாளர் டி.ஜிப்ரானின் 'போறானே...' 'சர சர சாரக்காத்து' பாடல்கள் இனிமை. பின்னணி இசையிலும் தனித்து நிற்கிறார். ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒவ்வொரு பிரேமிலும் கூட கதையை சொல்லியிருக்கிறார். குறிப்பாக விமல் போன பின் அந்த குடிசையையே இனியா பார்த்துக் கொண்டிருக்கும்போது அமைக்கப்பட்டிருக்கும் லைட்டிங். பீரியட் பிலிம்களில் ஆர்ட் டைரக்டரின் பங்கு மிக மிக அவசியமானது. அதை உணர்ந்து நிறைவு செய்திருக்கிறார் அவரும்.
இவர்கள்தான் இப்படி போட்டி போட்டுக் கொண்டு சபாஷ் பெறுகிறார்கள் என்றால் கிராபிக்ஸ் கலைஞர்களும் சளைக்கவில்லை. ஒரு காட்சியில் இனியாவின் முகத்தில் மினுக்கட்டாம் பூச்சியை பொட்டாக வைக்க நினைத்த சற்குணத்தின் கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். குளத்தில் மிதக்கும் நிலவை அள்ளி பக்கத்தில் எறிகிறாரே விமல், அதிலும் கூட! இப்படி படம் முழுக்க ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்காத கிராபிக்ஸ்சும் கவர்கிறது.
'கமர்ஷியலா இல்லீயே....', 'மெசேஜ் சொன்னா புரியுமா நம்ம ஜனங்களுக்கு...' இப்படியெல்லாம் பேசி வம்பளப்பவர்கள் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருந்தாலே போதும். இப்படம் வாகை சூடும்!
பொத்துங்க சார் ப்ளீஸ்!
-ஆர்.எஸ்.அந்தணன்
Re: வாகை சூட வா - திரைப்பட விமர்சனம் ( அருமை )
தலையே சொல்லிவிட்டது இன்று அவசியம் பார்கிறேன் .
பகிர்வுக்கு நன்றி .
பகிர்வுக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வாகை சூட வா - திரைப்பட விமர்சனம் ( அருமை )
எனக்கும் சேர்த்தே டிக்கட் எடுத்திடுங்கள் மாஸ்டர்kalainilaa wrote:தலையே சொல்லிவிட்டது இன்று அவசியம் பார்கிறேன் .
பகிர்வுக்கு நன்றி .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாகை சூட வா - திரைப்பட விமர்சனம் ( அருமை )
nallaa irukku thalaivaa verry cuteநண்பன் wrote:எனக்கும் சேர்த்தே டிக்கட் எடுத்திடுங்கள் மாஸ்டர்kalainilaa wrote:தலையே சொல்லிவிட்டது இன்று அவசியம் பார்கிறேன் .
பகிர்வுக்கு நன்றி .
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: வாகை சூட வா - திரைப்பட விமர்சனம் ( அருமை )
நீங்களும் படத்தில் புலியாமேrisana wrote:nallaa irukku thalaivaa verry cuteநண்பன் wrote:எனக்கும் சேர்த்தே டிக்கட் எடுத்திடுங்கள் மாஸ்டர்kalainilaa wrote:தலையே சொல்லிவிட்டது இன்று அவசியம் பார்கிறேன் .
பகிர்வுக்கு நன்றி .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு வாகை சூட வா தேர்வு
» ஏலே - திரைப்பட விமர்சனம்
» குரூப் – திரைப்பட விமர்சனம்
» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
» விருபாக்ஷா -திரைப்பட விமர்சனம்
» ஏலே - திரைப்பட விமர்சனம்
» குரூப் – திரைப்பட விமர்சனம்
» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
» விருபாக்ஷா -திரைப்பட விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|