Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Today at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
சீதாப் பழத்தில் ஒழிந்திருக்கும் சிறப்பு நன்மைகள்
3 posters
Page 1 of 1
சீதாப் பழத்தில் ஒழிந்திருக்கும் சிறப்பு நன்மைகள்
சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் இந்திய இலங்கை மொழி வழக்கப்பகிர்வில் இது சற்று மாறுபடுகிறது.
Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இதனை இலங்கை போன்ற இடங்களில் அண்ணாமுண்ணா என்றே அழைக்கப்படுகிறது.
பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும்
கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே
அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும்,
சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது
பழத்தில் உள்ள சத்துக்கள்:
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம்
சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர
மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பொஸ்பரஸ்,
இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம்
கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை
கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து.
சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத
பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள்
மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.
மேனி பளபளப்பாகும்:
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன்
பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.
பேன்கள் ஒழிந்துவிடும்.
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.
சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும்
கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின்
பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி
குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.
மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை
தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர்
அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்
எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி
அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக்
கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம்
கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும்.
சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை
தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும்
மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின்
கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
சீத்தாப்பழ வையின்:
நன்கு கனிந்த சீதாப்பழத்தில் இருந்து ஒயின் தயாரிக்கப்படுகிறது. இது மருத்துவ குணம் கொண்டது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சீதாப் பழத்தில் ஒழிந்திருக்கும் சிறப்பு நன்மைகள்
சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம்
கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும்.
சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை
தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
முக்கிய விடையமாச்சே இனி இப்பழம் எங்கு கண்டாலும் வாங்கி வரனும். :flower:
கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும்.
சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை
தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
முக்கிய விடையமாச்சே இனி இப்பழம் எங்கு கண்டாலும் வாங்கி வரனும். :flower:
Re: சீதாப் பழத்தில் ஒழிந்திருக்கும் சிறப்பு நன்மைகள்
நாட்டுக்கு வந்தால் அதிகமாக சாப்பிடலாம் நிறைப் பேருக்கு இதன் குணம் தெரியாதுமுனாஸ் சுலைமான் wrote:சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம்
கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும்.
சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை
தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
முக்கிய விடையமாச்சே இனி இப்பழம் எங்கு கண்டாலும் வாங்கி வரனும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஆப்ரிகாட் பழத்தில் உள்ள நன்மைகள்
» அன்னாசி பழத்தில் வைட்டமின்
» லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்
» பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்
» நட்சத்திர பழத்தில் உள்ள சத்துக்கள்
» அன்னாசி பழத்தில் வைட்டமின்
» லிச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்
» பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்
» நட்சத்திர பழத்தில் உள்ள சத்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|