Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
மூக்கில் ஏற்படும் பிரச்னைகளுக்கான எளிய தீர்வுகள்
3 posters
Page 1 of 1
மூக்கில் ஏற்படும் பிரச்னைகளுக்கான எளிய தீர்வுகள்
உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றும் உறுப்புகளில் ஒன்று மூக்கு. மூக்கில் தோன்றும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
மூக்கு ஆனது சுவாசம், நுகர்ச்சி ஆகிய செயல்பாடுகளுக்கு மட்டும் உதவக் கூடியது அல்ல. கண்ணீருக்கான கால்வாயாகவும் இருக்கிறது. கண்களில் கண்ணீர் பெருகும்போது, அதில் ஒருபகுதி மூக்கு வழியாக வெளியேறுகிறது. மழை, பனியால் முதலில் பாதிப்புக்கு ஆளாவது மூக்குதான்.
வைரஸ் தொற்று காரணமாக மூக்கில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதன் காரணமாக மூக்கு தசை வீங்கி திரவத்தை வெளியேற்றுகிறது. இந்த திரவம் உள்ளேயே தேங்கி சளியாக மாறுகிறது.
2 முதல் 3 வாரங்களில் இது குணமாகி விடும். 2 வாரங்களுக்கு பிறகும் சளி குணமாகவில்லை என்றால், சைனஸ் பிரச்னையாக இருக்கலாம். கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். அலர்ஜிக்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். மூக்கில் ஏதாவது பிரச்னை என்றால், மூக்கடைப்புதான் முதலில் தோன்றுகிறது.
மூக்கில் அடிபடுவதால் அதன் நடுச்சுவர் வளைந்து மூக்கடைப்பு உண்டாகலாம். நடுச்சுவரில் சீழ்கட்டி, சதைக் கட்டிகளும் மூக்கடைப்புக்கு காரணங்களாக உள்ளன. மூக்கில் உள்ள செப்டம் என்ற எலும்பு சிலருக்கு வளைந்து இருக்கும். இதனால்கூட சுவாசப் பாதையில் தடை ஏற்படலாம். இதற்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும்.
பாலிப் என்கிற சதை வளர்ச்சியாலும் மூக்கடைப்பு ஏற்படுகிறது. அலர்ஜி அல்லது பூஞ்சைகள், சதை வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன. இது ஆஸ்துமாவுக்கும் வழிவகுப்பதால், அறுவை சிகிச்சை மூலம் சதையை வேரோடு அகற்ற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மீண்டும் வளர்ந்து தொல்லை கொடுக்கும்.
சில சிறுவர்களுக்கு மூக்கில் இருந்து ரத்தம் தானாக கொட்டும் பிரச்னை இருக்கும். மூக்கினுள் விரலை விட்டு நோண்டுவதால் ரத்தம் வரலாம். தட்பவெப்ப நிலை மாறுபாடு காரணமாகவும், சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடியும்.
தொழுநோய், காசநோய், ரத்தஅழுத்தம், சைனஸ் போன்றவையும் மூக்கில் ரத்தம் வடிவதற்கு காரணங்களாக உள்ளன. பிறந்த 2வது நாளிலேயே குழந்தைகளுக்கு வாசனையை நுகரும் சக்தி வந்துவிடுகிறது.
வாசனையை வைத்தே தனது தாயை குழந்தைகள் அடையாளம் கண்டுகொள்கின்றன. நமது மூக்கு 10 ஆயிரம் வகையான வாசனைகளை உணரும் திறன் படைத்தது. நுகரும் திறன் சிலருக்கு பிறவியில் இருந்தே இல்லாமல் இருக்கும். சளி, சைனஸ் போன்ற காரணங்களாலும், மூக்கு பொடி பழக்கத்தாலும் நுகரும் திறன் படிப்படியாக குறையலாம்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு நாசல் ஸ்பிரே மூலம் நுகரும் திறனை மீட்டெடுக்க முடியும். சிறுநீரகம், பித்தப்பையில் கல் ஏற்படுவது போல மூக்கிலும் கல் ஏற்படுகிறது.
மூக்கில் உறைந்த ரத்தகட்டி அல்லது கெட்டியான சளி இருந்தால் அதன்மீது உடலில் உள்ள கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் படிந்து கல் போல மாறுகிறது.
மூக்கு தொடர்பான பிரச்னைகளுக்கு தற்போது நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அதிநவீன லேசர் முறையில் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதில் காயமோ, தழும்போ ஏற்படுவதில்லை.
மூக்கு ஆனது சுவாசம், நுகர்ச்சி ஆகிய செயல்பாடுகளுக்கு மட்டும் உதவக் கூடியது அல்ல. கண்ணீருக்கான கால்வாயாகவும் இருக்கிறது. கண்களில் கண்ணீர் பெருகும்போது, அதில் ஒருபகுதி மூக்கு வழியாக வெளியேறுகிறது. மழை, பனியால் முதலில் பாதிப்புக்கு ஆளாவது மூக்குதான்.
வைரஸ் தொற்று காரணமாக மூக்கில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதன் காரணமாக மூக்கு தசை வீங்கி திரவத்தை வெளியேற்றுகிறது. இந்த திரவம் உள்ளேயே தேங்கி சளியாக மாறுகிறது.
2 முதல் 3 வாரங்களில் இது குணமாகி விடும். 2 வாரங்களுக்கு பிறகும் சளி குணமாகவில்லை என்றால், சைனஸ் பிரச்னையாக இருக்கலாம். கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். அலர்ஜிக்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். மூக்கில் ஏதாவது பிரச்னை என்றால், மூக்கடைப்புதான் முதலில் தோன்றுகிறது.
மூக்கில் அடிபடுவதால் அதன் நடுச்சுவர் வளைந்து மூக்கடைப்பு உண்டாகலாம். நடுச்சுவரில் சீழ்கட்டி, சதைக் கட்டிகளும் மூக்கடைப்புக்கு காரணங்களாக உள்ளன. மூக்கில் உள்ள செப்டம் என்ற எலும்பு சிலருக்கு வளைந்து இருக்கும். இதனால்கூட சுவாசப் பாதையில் தடை ஏற்படலாம். இதற்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும்.
பாலிப் என்கிற சதை வளர்ச்சியாலும் மூக்கடைப்பு ஏற்படுகிறது. அலர்ஜி அல்லது பூஞ்சைகள், சதை வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன. இது ஆஸ்துமாவுக்கும் வழிவகுப்பதால், அறுவை சிகிச்சை மூலம் சதையை வேரோடு அகற்ற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மீண்டும் வளர்ந்து தொல்லை கொடுக்கும்.
சில சிறுவர்களுக்கு மூக்கில் இருந்து ரத்தம் தானாக கொட்டும் பிரச்னை இருக்கும். மூக்கினுள் விரலை விட்டு நோண்டுவதால் ரத்தம் வரலாம். தட்பவெப்ப நிலை மாறுபாடு காரணமாகவும், சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடியும்.
தொழுநோய், காசநோய், ரத்தஅழுத்தம், சைனஸ் போன்றவையும் மூக்கில் ரத்தம் வடிவதற்கு காரணங்களாக உள்ளன. பிறந்த 2வது நாளிலேயே குழந்தைகளுக்கு வாசனையை நுகரும் சக்தி வந்துவிடுகிறது.
வாசனையை வைத்தே தனது தாயை குழந்தைகள் அடையாளம் கண்டுகொள்கின்றன. நமது மூக்கு 10 ஆயிரம் வகையான வாசனைகளை உணரும் திறன் படைத்தது. நுகரும் திறன் சிலருக்கு பிறவியில் இருந்தே இல்லாமல் இருக்கும். சளி, சைனஸ் போன்ற காரணங்களாலும், மூக்கு பொடி பழக்கத்தாலும் நுகரும் திறன் படிப்படியாக குறையலாம்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு நாசல் ஸ்பிரே மூலம் நுகரும் திறனை மீட்டெடுக்க முடியும். சிறுநீரகம், பித்தப்பையில் கல் ஏற்படுவது போல மூக்கிலும் கல் ஏற்படுகிறது.
மூக்கில் உறைந்த ரத்தகட்டி அல்லது கெட்டியான சளி இருந்தால் அதன்மீது உடலில் உள்ள கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் படிந்து கல் போல மாறுகிறது.
மூக்கு தொடர்பான பிரச்னைகளுக்கு தற்போது நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அதிநவீன லேசர் முறையில் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதில் காயமோ, தழும்போ ஏற்படுவதில்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூக்கில் ஏற்படும் பிரச்னைகளுக்கான எளிய தீர்வுகள்
அறிந்திடாத பல தகவல்கள் இதில் அடங்கியுள்ளது.
நன்றி பகிர்வு. ##* ##*
நன்றி பகிர்வு. ##* ##*
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மூக்கில் ஏற்படும் பிரச்னைகளுக்கான எளிய தீர்வுகள்
ஹம்னா wrote:அறிந்திடாத பல தகவல்கள் இதில் அடங்கியுள்ளது.
நன்றி பகிர்வு. ##* ##*
@. @.
Similar topics
» மூக்கில் ஏற்படும் நோய்கள்
» மூக்கில் ஏற்படும் நோய்கள்
» மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை
» இருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்!
» பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...
» மூக்கில் ஏற்படும் நோய்கள்
» மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை
» இருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்!
» பருக்களால் ஏற்படும் வடுக்களை போக்க சில எளிய டிப்ஸ்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|