Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
கிரீசை காப்பாற்ற ஐரோப்பிய நாடுகள் முன்வருமா
3 posters
Page 1 of 1
கிரீசை காப்பாற்ற ஐரோப்பிய நாடுகள் முன்வருமா
:கடந்த இரண்டு நாட்களாக, பிரான்ஸ் நாட்டில் நடந்த ஜி20 மாநாட்டில், ஐரோப்பிய மண்டல கடன் நெருக்கடிக்கு முக்கிய காரணமாக உள்ள கிரீஸ் நாட்டைக் காப்பாற்றும் வகையில், தெளிவான முடிவு எட்டப்படவில்லை. எனினும், சர்வதேச நிதியமைப்பிற்கு, இரண்டு வார காலக்கெடு விதித்து, பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டுள்ளது.நெருக்கடி பரவும்: கிரீஸ் நாட்டின் பொருளாதார நிலை, கடந்த ஒரு மாதத்தில் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், அந்நாட்டு வங்கிகளின் நிதி நிலையும் குறைந்தது. வர்த்தகச் சந்தையும் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
இதன் பாதிப்பு, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது."யூரோ' மண்டலத்தில் கிரீஸ்: இந்த நிலை தொடர்ந்தால், "யூரோ' மண்டலத்திலிருந்து கிரீசை நீக்கும் நிலை உருவாகும். அத்தகைய நிலை ஏற்பட்டால், அந்நாடு இன்னும் அதிக கடனாளி ஆகி விடும். வங்கிகள் அனைத்தும் திவாலாகி விடும். அந்நாட்டு பணத்தை, "யூரோ'விலிருந்து வேறு வகையில் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அதற்குரிய மதிப்பீட்டை நிர்ணயிப்பது, தற்போதைய நிலையில் சாத்தியமல்ல.
கிரீஸ் நாட்டின் பிரச்னை, தற்போது இத்தாலியையும், ஸ்பெயினையும் பாதித்துள்ளது. மேலும் "யூரோ' மண்டலத்தை அதிகளவில் பாதிப்பதற்குள், தீர்வு காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2008ல், அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்த போது, உலக நாடுகள் அனைத்தும் ஆட்டம் காணும் என்று கணக்கிடப்பட்டது. அந்த அபாயத்தின் போது, இந்தியா சற்றே தடுமாறினாலும், பெரிய அளவு பாதிப்பு ஏற்படாத வகையில் நிலை நின்றது.
என்ன நடக்கும்: ஆனால், தற்போதைய நிலை வேறு. ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டால், அது இந்தியாவை பெரிய அளவில் பாதிக்கும். ஐரோப்பிய மண்டலத்தில் செய்துள்ள அனைத்து முதலீடுகளும் பாதிக்கப்படும். அம்மண்டலத்தில் உள்ள நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் பாதிப்படையும்.
மன்மோகன் சிங் வேண்டுகோள்:இதன் காரணமாக, இந்திய வங்கிகள் முடங்கும் நிலை ஏற்படும். எனவே, இப்பிரச்னையை முக்கிய கவனமாக எடுத்து, கடனிலிருந்து கிரீசை விடுவித்து, கிரீசின் பாதிப்பு மற்ற நாடுகளில் பரவாமல் தடுக்க வேண்டியது மிக அவசியம் என, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம் துவங்கிய, ஜி20 மாநாட்டில் வலியுறுத்தினார்.இதற்கிடையில், கடனிலிருந்து கிரீசை விடுவிக்க, பல ஆலோசனைகள் கூறப்பட்டன. வங்கிகளின் கடனை, பாதி அளவு ரத்து செய்வது, நிதிநிலையில் வலுவாக உள்ள நாடுகள், கிரீசில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பது ஆகியவை, இந்த ஆலோசனைகளில் முக்கியமானவை.
கிரீஸ் பிரதமருக்கு நெருக்கடி: அவற்றை, கிரீஸ் பிரதமர் பப்பண்ட்ரீ ஒதுக்கித் தள்ளினார். எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால், புதிய திட்டங்கள் தீட்டலாம் எனக் கூறினார். இதற்குச் சாத்தியமில்லை என்பதால், நிதி அமைச்சரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.எதிர்க்கட்சிகள் கொந்தளித்து, பிரதமரை பதவியை விட்டு விலகுமாறு அறிவுறுத்தின. ஜெர்மனி போன்ற நாடுகளும் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஜி20 மாநாட்டில் இது எதிரொலித்ததால் பயந்த பப்பண்ட்ரீ, தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்வதாக அறிவித்தார்.தற்போது, நிதி ஆலோசகர்களுடனும், அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அவர் முனைந்துள்ளார்.சர்வதேச நிதியமைப்பின் உதவியைச் சரியான முறையில் பயன்படுத்தி, கடனிலிருந்து மீளுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிரீஸ் கடனாளியானது ஏன்:ஐரோப்பிய நாடுகளுக்குப் பொதுவான பணமாக, "யூரோ' அறிவிக்கப்பட்ட போது, அந்நாடுகளின் பொருளாதார நிலை, வெவ்வேறாக இருந்தது. அதைக் கருத்தில் கொள்ளாமல், ஐரோப்பாவின் 27 நாடுகளில், 17 நாடுகளுக்கு பொதுவான பணமாக, "யூரோ' அங்கீகரிக்கப்பட்டு விட்டதால், தற்போது கிரீஸ் நாடு சிக்கலில் தவிக்கிறது.கிரீஸ் நாட்டில், 2001ம் ஆண்டு, "யூரோ' அறிமுகப்படுத்தப்பட்டது. 2002 பிப்ரவரி வரை, அதன் பழைய பணமான, "டிராச்மா' புழக்கத்தில் இருந்தது. இன்னும் கூட, "டிராச்மா'விலிருந்து முற்றிலுமாக கிரீஸ் மாறிவிடவில்லை. பழைய பணத்திலிருந்து மாற, வரும் 2012, மார்ச் வரை, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதற்குள், கிரீஸ் திவாலாகும் சூழல் உருவாகி விட்டது.சர்வதேச நிதியமைப்பின் நடவடிக்கை என்ன:"யூரோ' மண்டல பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்பட்டால் சமாளிக்க, இ எப்.எஸ்.எப்., என்ற, ஐரோப்பிய நிலைத்த நிதியமைப்பு 2010, மே மாதம் உருவாக்கப்பட்டது. இது, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடுகளுக்கு, கடன் பத்திரங்கள் வழங்கி, அதன் மூலம், அந்நாடுகளின் வங்கிகளின் நிதி நிலையைச் சீராக்கும் பணியை மேற்கொள்ளும்.
தற்போது, இந்த அமைப்பு மட்டும், தனியாக கிரீசை மீட்கும் நிலை இல்லை.
எனவே தான், சர்வதேச நிதியமைப்பின் உதவி கோரப்பட்டுள்ளது.சர்வதேச நிதிமைப்பில் டெபாசிட் செய்துள்ள பணத்தின் சதவீத அடிப்படையில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஐரோப்பிய நாடுகள், அதிலிருந்து கடன் பெற்றுக் கொள்ளவும், கிரீசை மீட்டெடுக்கத் தேவையான பணத்தைத் திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 200 பில்லியன் டாலர் திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நடவடிக்கை, ஆறு மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட்டால், "யூரோ' மண்டல கடன் நெருக்கடி, ஓரளவு கட்டுக்குள் வரும்.
இதன் பாதிப்பு, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது."யூரோ' மண்டலத்தில் கிரீஸ்: இந்த நிலை தொடர்ந்தால், "யூரோ' மண்டலத்திலிருந்து கிரீசை நீக்கும் நிலை உருவாகும். அத்தகைய நிலை ஏற்பட்டால், அந்நாடு இன்னும் அதிக கடனாளி ஆகி விடும். வங்கிகள் அனைத்தும் திவாலாகி விடும். அந்நாட்டு பணத்தை, "யூரோ'விலிருந்து வேறு வகையில் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அதற்குரிய மதிப்பீட்டை நிர்ணயிப்பது, தற்போதைய நிலையில் சாத்தியமல்ல.
கிரீஸ் நாட்டின் பிரச்னை, தற்போது இத்தாலியையும், ஸ்பெயினையும் பாதித்துள்ளது. மேலும் "யூரோ' மண்டலத்தை அதிகளவில் பாதிப்பதற்குள், தீர்வு காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2008ல், அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்த போது, உலக நாடுகள் அனைத்தும் ஆட்டம் காணும் என்று கணக்கிடப்பட்டது. அந்த அபாயத்தின் போது, இந்தியா சற்றே தடுமாறினாலும், பெரிய அளவு பாதிப்பு ஏற்படாத வகையில் நிலை நின்றது.
என்ன நடக்கும்: ஆனால், தற்போதைய நிலை வேறு. ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டால், அது இந்தியாவை பெரிய அளவில் பாதிக்கும். ஐரோப்பிய மண்டலத்தில் செய்துள்ள அனைத்து முதலீடுகளும் பாதிக்கப்படும். அம்மண்டலத்தில் உள்ள நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் பாதிப்படையும்.
மன்மோகன் சிங் வேண்டுகோள்:இதன் காரணமாக, இந்திய வங்கிகள் முடங்கும் நிலை ஏற்படும். எனவே, இப்பிரச்னையை முக்கிய கவனமாக எடுத்து, கடனிலிருந்து கிரீசை விடுவித்து, கிரீசின் பாதிப்பு மற்ற நாடுகளில் பரவாமல் தடுக்க வேண்டியது மிக அவசியம் என, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம் துவங்கிய, ஜி20 மாநாட்டில் வலியுறுத்தினார்.இதற்கிடையில், கடனிலிருந்து கிரீசை விடுவிக்க, பல ஆலோசனைகள் கூறப்பட்டன. வங்கிகளின் கடனை, பாதி அளவு ரத்து செய்வது, நிதிநிலையில் வலுவாக உள்ள நாடுகள், கிரீசில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பது ஆகியவை, இந்த ஆலோசனைகளில் முக்கியமானவை.
கிரீஸ் பிரதமருக்கு நெருக்கடி: அவற்றை, கிரீஸ் பிரதமர் பப்பண்ட்ரீ ஒதுக்கித் தள்ளினார். எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால், புதிய திட்டங்கள் தீட்டலாம் எனக் கூறினார். இதற்குச் சாத்தியமில்லை என்பதால், நிதி அமைச்சரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.எதிர்க்கட்சிகள் கொந்தளித்து, பிரதமரை பதவியை விட்டு விலகுமாறு அறிவுறுத்தின. ஜெர்மனி போன்ற நாடுகளும் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஜி20 மாநாட்டில் இது எதிரொலித்ததால் பயந்த பப்பண்ட்ரீ, தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்வதாக அறிவித்தார்.தற்போது, நிதி ஆலோசகர்களுடனும், அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அவர் முனைந்துள்ளார்.சர்வதேச நிதியமைப்பின் உதவியைச் சரியான முறையில் பயன்படுத்தி, கடனிலிருந்து மீளுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிரீஸ் கடனாளியானது ஏன்:ஐரோப்பிய நாடுகளுக்குப் பொதுவான பணமாக, "யூரோ' அறிவிக்கப்பட்ட போது, அந்நாடுகளின் பொருளாதார நிலை, வெவ்வேறாக இருந்தது. அதைக் கருத்தில் கொள்ளாமல், ஐரோப்பாவின் 27 நாடுகளில், 17 நாடுகளுக்கு பொதுவான பணமாக, "யூரோ' அங்கீகரிக்கப்பட்டு விட்டதால், தற்போது கிரீஸ் நாடு சிக்கலில் தவிக்கிறது.கிரீஸ் நாட்டில், 2001ம் ஆண்டு, "யூரோ' அறிமுகப்படுத்தப்பட்டது. 2002 பிப்ரவரி வரை, அதன் பழைய பணமான, "டிராச்மா' புழக்கத்தில் இருந்தது. இன்னும் கூட, "டிராச்மா'விலிருந்து முற்றிலுமாக கிரீஸ் மாறிவிடவில்லை. பழைய பணத்திலிருந்து மாற, வரும் 2012, மார்ச் வரை, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதற்குள், கிரீஸ் திவாலாகும் சூழல் உருவாகி விட்டது.சர்வதேச நிதியமைப்பின் நடவடிக்கை என்ன:"யூரோ' மண்டல பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்பட்டால் சமாளிக்க, இ எப்.எஸ்.எப்., என்ற, ஐரோப்பிய நிலைத்த நிதியமைப்பு 2010, மே மாதம் உருவாக்கப்பட்டது. இது, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடுகளுக்கு, கடன் பத்திரங்கள் வழங்கி, அதன் மூலம், அந்நாடுகளின் வங்கிகளின் நிதி நிலையைச் சீராக்கும் பணியை மேற்கொள்ளும்.
தற்போது, இந்த அமைப்பு மட்டும், தனியாக கிரீசை மீட்கும் நிலை இல்லை.
எனவே தான், சர்வதேச நிதியமைப்பின் உதவி கோரப்பட்டுள்ளது.சர்வதேச நிதிமைப்பில் டெபாசிட் செய்துள்ள பணத்தின் சதவீத அடிப்படையில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஐரோப்பிய நாடுகள், அதிலிருந்து கடன் பெற்றுக் கொள்ளவும், கிரீசை மீட்டெடுக்கத் தேவையான பணத்தைத் திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 200 பில்லியன் டாலர் திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நடவடிக்கை, ஆறு மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட்டால், "யூரோ' மண்டல கடன் நெருக்கடி, ஓரளவு கட்டுக்குள் வரும்.
Re: கிரீசை காப்பாற்ற ஐரோப்பிய நாடுகள் முன்வருமா
இவர்கள் உலகை கடனாளியாக்கியவர்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கிரீசை காப்பாற்ற ஐரோப்பிய நாடுகள் முன்வருமா
இது தானோ இறைவன் வைத்த ஆப்பு ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா?
» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
» மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
» மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|