சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

அலறும் குரல்...??? Khan11

அலறும் குரல்...???

5 posters

Go down

அலறும் குரல்...??? Empty அலறும் குரல்...???

Post by முfதாக் Wed 18 Jan 2012 - 22:06

ஏழ்மையின் வலிகள் எனைப்
புரட்டிப் போட்ட நாட்கள்
ஒரு வேளை உணவே
பண்டிகை காலப் பலகாரம் போலானது

எத்தனை வலிகள்,எத்தனை ஏக்கங்கள்
எதைச் சொல்ல எதை விட நான்
தந்தைக்கு நெஞ்சுவலி
தாயிற்கோ மனமெங்கும் வலி

மனம் மட்டும் தினம் தினம்

கனவு கண்டு கண்டு
களைத்துப் போனது
ஒரு வேளைக் கருவாட்டுக் கறிக்காய்

பக்கத்து வீட்டுக் கறி மணத்தில்
பல வேளை சோறு உண்டதுண்டு
குருணல் அரிசி எமக்கு
குருளைச் சம்பா போலானது

எப்போதாவது இரவுச்சாப்பாடு
சீனி இலாத் தேனீருக்கு
சண்டை இட்டு-இறப்பர்
வட்டில் இரண்டாகிப் போகும்

மரண வீடுகளில் பல நாட்கள்
பல நாட்பசி தீர்த்ததுண்டு
அழைக்காத விருந்திற்கு
அரை மணி நேரம் முந்திச் சென்று

பள்ளிக்குள் சென்றால் பாடத்தில் கவனமேது
அடி வடிறு மட்டும் பசித்திருக்க
பள்ளிக்கூடம் பார்ப்போர் கூடமானது
ஒவ்வொரு வெள்ளி மட்டும்
ஒழுங்கான தரிசனம் அரை வேளை என்பதால்

நண்பனின் வாய் பார்த்து
வயிறு நிறையும்-அதனால்
இடை வேளை எனக்கோ
இல்லாது போனது

சவர்க்காரம் இல்லாத சலவை
உடம்பிற்கு உதவும் மணல்
மனதுக்குள் என்னேரமும்
ஓலமைடும் தாயின் குரல்
குக்கலுக்குள் சிக்கித் தவிக்கும் தந்தை

வயதுக்கு வந்த அக்காவிற்வு

பக்கத்து வீட்டுப் பழைய துணி புத்தாடை
தம்பி அழும் குரல்-ஐந்து
வீடு தாண்டி அலறும் தேனீர் கேடு

மயான அமைதி எங்கள் வீடெங்கும்
முலாமிட்ட மோதிரம் அக்காவின்

ஓரே அணிகலன் கறுக்காமல் அதைக்
கழற்றி வைப்படுதும் உண்டு சில வேளை

எத்தனை வலிகள்,எத்தனை ஏக்கங்கள்
எதைச் சொல்ல எதை விட நான்

ஒவ்வொரு நாழும் ஒரு யுகம் போலானது
பொழுதுகள் கழிவது எழுதிய விதியானது
ஏழையாய் வாழ்வதில் ஏதாடா ஒரு சுகம்
பாடையில் போவதே கேட்டிடும் ஒரு வரம்


ஓர் நண்பனின் பழைய டையறியிலிருந்து,,,
அலறும் குரல்...??? 876805 அலறும் குரல்...??? 876805 அலறும் குரல்...??? 876805


Last edited by முffதா ஐ முஹம்மட் on Thu 19 Jan 2012 - 6:26; edited 1 time in total
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அலறும் குரல்...??? Empty Re: அலறும் குரல்...???

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 22:33

மனசு கனக்கிறது வரிகளைப்படிக்கும் போது
நேற்றய என் நிலையும் இப்படித்தான் இருந்தது
ஒவ்வொரு நாழும் ஒரு யுகம் போலானது
பொழுதுகள் கழிவது எழுதிய விதியானது
ஏழையாய் வாழ்வதில் ஏதாடா ஒரு சுகம்
பாடையில் போவதே கேட்டிடும் ஒரு வரம்

சில வீடுகளில் நடக்கும் இந்தக்கொடுமைகளைப் பார்க்வும் முடியாமல் அவர்களின் தேவையை நிறைவேற்றவும் முடியாமல் தவித்த நாட்கள் அதிகம் சிறு வயதில்.
இப்போது இறைவன் அருளால் முடிந்த வரை இல்லாதோருக்கு உதவுகிறேன் அது என்றும் நிலைக்கனும் உலகில் பட்டினியால் உயிரிளப்புக்கள் இல்லாமல் போகனும் ஆமீன்.

வரிகள் மனதின் வலிகள்
நன்றி நன்றி நன்றி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அலறும் குரல்...??? Empty Re: அலறும் குரல்...???

Post by முfதாக் Thu 19 Jan 2012 - 6:38

இது எனக்குப் புதிதாய் அறிமுகமான ஓர் நண்பன் நேற்று என்னிடம் தான் பட்ட கஷ்டங்களினைச் சொல்லி வெந்து கொண்டான். அவனுக்காய் எழுதப்பட்டது இக் கவிதை,,,

”நண்பன்” உங்கழுக்குள் இப்படி ஒரு சோகமா...???
கேட்கவே மனம் மயானமாகிறது. இழமையில் ஏழ்மை ஐயோ, சகிக்க முடியாதது.

உங்களுக்கு என் உளம் கொண்ட ஆறுதல்கள்,,,

உலகில் மாற்றங்கள் மட்டுமே உண்மையானது அதை மட்டுமே நம்புகிறவன் நான் காலத்திற்கு மாற்றும் சக்தியும் மறக்கடிக்கும் சக்தியும் உள்ளது. இதனால் தான் இன்றுவரை உலகம் உருள்கிறது என்பது என் எண்ணம்,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அலறும் குரல்...??? Empty Re: அலறும் குரல்...???

Post by நண்பன் Thu 19 Jan 2012 - 13:19

முffதா ஐ முஹம்மட் wrote:இது எனக்குப் புதிதாய் அறிமுகமான ஓர் நண்பன் நேற்று என்னிடம் தான் பட்ட கஷ்டங்களினைச் சொல்லி வெந்து கொண்டான். அவனுக்காய் எழுதப்பட்டது இக் கவிதை,,,

”நண்பன்” உங்கழுக்குள் இப்படி ஒரு சோகமா...???
கேட்கவே மனம் மயானமாகிறது. இழமையில் ஏழ்மை ஐயோ, சகிக்க முடியாதது.

உங்களுக்கு என் உளம் கொண்ட ஆறுதல்கள்,,,

உலகில் மாற்றங்கள் மட்டுமே உண்மையானது அதை மட்டுமே நம்புகிறவன் நான் காலத்திற்கு மாற்றும் சக்தியும் மறக்கடிக்கும் சக்தியும் உள்ளது. இதனால் தான் இன்றுவரை உலகம் உருள்கிறது என்பது என் எண்ணம்,,,
:];: :];: :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அலறும் குரல்...??? Empty Re: அலறும் குரல்...???

Post by *சம்ஸ் Thu 19 Jan 2012 - 13:56

வலிதாங்கி வந்த வரிகள் அனைத்தும் உள்ளத்தை உருக்கி கண்களை கலக்கிச் சென்றது.

வறுமையின் கொடுமை சொல்லில் அடங்காது சொல்லித் துயர் தீராது என்பது உண்மை காலங்கள் மாறும் கண்டிப்பாக அனைவருக்கும் நல்ல நேரம் பிறக்கும் நல்லதை நினைத்து நல்லதை செய்வோம் வாழ்த்துக்கள் தோழரே. :!#: :!#: :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அலறும் குரல்...??? Empty Re: அலறும் குரல்...???

Post by ஹம்னா Thu 19 Jan 2012 - 14:15

கவிதை படித்து மனம் கலங்குகிறது.


அலறும் குரல்...??? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அலறும் குரல்...??? Empty Re: அலறும் குரல்...???

Post by rajmalar5 Thu 19 Jan 2012 - 17:11

கவிதை அல்ல கண்ணீர்க்கதை. மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் இருந்து என்ன பயன். அடுத்தவர் தயவிலிருந்து விடுபட்டு சிறிய உதவிகளையாவது செய்ய ஆசைதான் . அந்த நாள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். பார்க்கலாம் . :!#:

rajmalar5
புதுமுகம்

பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

அலறும் குரல்...??? Empty Re: அலறும் குரல்...???

Post by நண்பன் Thu 19 Jan 2012 - 17:14

rajmalar5 wrote:கவிதை அல்ல கண்ணீர்க்கதை. மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் இருந்து என்ன பயன். அடுத்தவர் தயவிலிருந்து விடுபட்டு சிறிய உதவிகளையாவது செய்ய ஆசைதான் . அந்த நாள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். பார்க்கலாம் . அலறும் குரல்...??? 876805
உங்கள் நல்ல எண்ணமே எதிர் கால வெற்றிப்படிகல் அலறும் குரல்...??? 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அலறும் குரல்...??? Empty Re: அலறும் குரல்...???

Post by rajmalar5 Thu 19 Jan 2012 - 17:22

நன்றி நண்பரே. :];:

rajmalar5
புதுமுகம்

பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

அலறும் குரல்...??? Empty Re: அலறும் குரல்...???

Post by முfதாக் Thu 19 Jan 2012 - 21:03

உண்மையில் இது கதையோ கற்பனையோ அல்ல நடந்த உண்மைகளின் ஓர் தொகுப்பு இன்னமும் எழுத வேண்டி இருந்தது சுருக்கிக் கொண்டேன்,,,

ஏழ்மை ஒருவனின் வாழ்வினை எவ்வாறெல்லாம் மாற்றுகிறது
எனக்கே மனம் கசிந்து சில நொடி நான் மெளனியானேன் அது என் மனதிற்குள் ஏதோ செய்தது அதன் வெளிப்பாடுதான் இது,,,

எத்தனையோபேர் ஒரு வேளை உணவுக்கே மிகவும் கஷ்டப்படுவது நாம் கண்டும் காணாதவர்களாய்,எத்தனை முதிர் கன்னிகள் எம் சூழலில் நாம் கண்டும் காணாதவர்களாய்,,,
எத்தனை விதவைகள் எம் சூழலில் நாம் காணாதவர்களாய்,,,

ஏனோ எமது மனங்கள் கண்டு கொள்ளாமையை கொண்டு வாழ்கிறது,,,

வேதனை வேதனை வேதனை
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அலறும் குரல்...??? Empty Re: அலறும் குரல்...???

Post by முfதாக் Fri 20 Jan 2012 - 8:22

அனைவருக்கும் என் நன்றிகள்,,,

அலறும் குரல்...??? 2737039178 அலறும் குரல்...??? 2737039178 அலறும் குரல்...??? 2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அலறும் குரல்...??? Empty Re: அலறும் குரல்...???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum