சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்... Khan11

பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்...

2 posters

Go down

பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்... Empty பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்...

Post by ahmad78 Mon 3 Sep 2012 - 15:50

பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்...



மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது.

மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞானத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

இன்னொருபுறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வேலை முரண்பாடுகள், அதிகரிக்கும் மன அழுத்தம் போன்றவைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன.



அந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம்.

நோய்களை கண்டறிவதற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோகிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன்படுகின்றன. இவைகளில் சில எக்ஸ்ரே கதிர்களை அடிப்படையாகக் கொண்டவை. சில காந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. ஒலி அலைகளை அடிப்படையாகக் கொண்டும் சில இயங்குகின்றன. இவைகளை தேவைக்கு தக்கபடி பயன்படுத்தி எல்லாவிதமான நோய்களையும் கண்டறிகிறோம்.



குழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது பற்றி முதலில் பார்ப்போம். திருமணமான தம்பதிகள் எந்த வித கருத்தடை முறைகளையும் பின்பற்றாமல் உறவு கொண்டு ஒரு வருடம் ஆகியும் பெண் தாய்மையடையவில்லை என்றால் அந்தப் பெண், குழந்தைப்பேறுக்கான சிகிச்சைக்குரியவர் ஆகிறார். அவர் தாய்மையடைவதற்கு என்ன தடைகள் இருக்கின்றன என்பது முதலில் சோதனை மூலம் கண்டறியப்படவேண்டும். சினைப்பையின் வளர்ச்சி நன்றாக இருக்கிறதா, அதில் இருந்து முட்டை முதிர்ந்து வெடித்து இயல்பாக வெளிவருகிறதா, கருப்பையின் அளவு- வளர்ச்சி போன்றவை முழுமையாக இருக்கிறதா, கட்டிகள் இருக்கிறதா என்பதை எல்லாம் `அல்ட்ரா சவுண்ட்' மூலம் கண்டறியலாம்.

சினைப்பை, கருப்பையில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்தால் சினைமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கருவாகி, நகர்ந்துபோகும் கருக்குழாய்களில் (பேலோபியன் டியூப்) ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியவேண்டும். `ஹிஸ்ட்ரோ சால்பிங்கோ கிராம்' எனப்படும் சோதனையை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் நவீனமுறையில் செலுத்தி, பரிசோதித்து கருக்குழாய் அடைப்புகளை துல்லியமாக கண்டறிந்து விடலாம்.

`அல்ட்ரா சவுண்ட்` மூலம் சினைப்பை, கருப்பை சோதனை செய்யும்போது கட்டிகளோ, புற்றுநோய் பாதிப்போ இருப்பதாக கண்டறிந்தால், அந்த பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது, அந்த கட்டி எந்த வகையை சார்ந்தது என்பதை எல்லாம் துல்லியமாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மூலம் கண்டறிந்துவிடலாம். அதை அடிப்படையாக வைத்து சிகிச்சைக்கு திட்டமிட்டுவிட முடியும்.

பெண் கர்ப்பம் ஆவது சிறுநீர் மூலம் உறுதி செய்யப்படுகிறது. பின்பு ஐந்தாவது வாரத்தில் கரு, கருக்குழாயிலே தங்கிவிட்டதா அல்லது கருவாக்கம் நிகழ்ந்து, கருப்பையை அடைந்துவிட்டதா என்பதை கண்டறிவது மிக அவசியமாகும். கருக்குழாயிலே கரு தங்கி வளர்ந்தால் அது ஆபத்தானதாகும். அதை `அல்ட்ரா சவுண்ட்` மூலம் கண்டுபிடித்து விடலாம். கருப்பையில் குழந்தை வளரத் தொடங்கிய பின்பு 12, 13 வாரங்களில் கர்ப்பகாலத்துக்கு தக்கபடி குழந்தையின் வளர்ச்சி இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

கர்ப்பமான 24-28 வது வாரங்களில் தாயின் வயிற்றுக்குள் அம்னியோட்டிக் திரவம் அதிகமாக இருக்கும். அப்போது குழந்தை வயிற்றுக்குள் இருந்து சிரிப்பதையும், கை- கால்களை அசைப் பதையும், கொட்டாவி விடுவதையும், நாக்கை வெளியேதள்ளி அசைப்பதையும் 4-டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கில் பார்க்கலாம். அதைப் பார்க்கும்போது பெற்றோர் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். அவ்வளவு துல்லியமாக இருக்கும். இப்போது அதை பெற்றோர்கள் பதிவு செய்து வாங்கிச் சென்று, பாதுகாத்து தேவைப்படும் போதெல்லாம் போட்டுப் பார்த்து மகிழ்கிறார்கள். நாங்கள் மருத்துவரீதியாக இந்த காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதை துல்லியமாக பார்க்கவே இந்த வகை ஸ்கேனை பயன்படுத்துவோம்.

36-38 வது வாரங்கள் கர்ப்பிணியை பொறுத்தவரையில் மிக முக்கிய காலகட்டமாகும். அந்த நேரத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் வயிற்றில் இருக்கும் அம்னியோடிக் திரவத்தின் அளவு, குழந்தையின் தலை சரியான பாதையில் திரும்பி வருதல், நஞ்சுக்கொடியின் நிலை போன்றவைகளை எல்லாம் ஆராய்ந்து அதற்கு தக்கபடி கர்ப்பிணிக்கு சுக பிரசவமா? சிசேரியனா என்று முடிவு செய்துவிடலாம்.

`டிரான்ஸ் வெஜைனல் ஸ்கேன்` என்ற அல்ட்ரா சவுண்ட் வகை ஸ்கேன் கருவியை பெண்களின் பிறப்பு உறுப்புவரை கொண்டு செல்லலாம். அதன் மூலம் சினைப்பை, கருப்பை, கருக்குழாய்களில் இருக்கும் பாதிப்பை தெள்ளத்தெளிவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். கருப்பை வாய் புற்றுநோயையும் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வாய்ப்பிருக்கிறது.

மார்பக புற்றுநோய் பெண்களை அச்சப்படுத்தும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக 40 வயதுவாக்கில் இதன் தாக்குதல் ஏற்படுகிறது. மார்பக சுய பரிசோதனை மூலம் பெண்களே கட்டி ஏதாவது இருக்கிறதா என்று கண்டறியலாம். அதை எவ்வாறு செய்துபார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறோம். மார்பக காம்புகளில் இருந்து பச்சை கறுப்பு நிறம் கலந்த திரவம் வந்தாலும், சிவப்பு நிற திரவம் வந்தா லும், காம்புகள் உள் இழுத்த நிலைக்கு சென்றாலும் பெண்கள் உஷாராகிவிட வேண்டும். ஒருவேளை அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

முழு மார்பகத்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஒரு பகுதியிலோ- முழுமையாகவோ நிறமாற்றம் ஏற்பட்டாலோ- வலி தோன்றினாலோ, அக்குளில் நெறிகட்டியது போல் தோன்றினாலோ பெண்கள் நவீன டிஜிட்டல் மோமோகிராம் சோதனைக்கு உள்படுத்திக்கொள்ளவேண்டும். எந்தவித தயாரெடுப்பும் இன்றி இயல்பாக வந்து, பத்து நிமிடத்திலே இந்த பரிசோதனையை செய்து முடித்திடலாம்.

மோமோகிராம் மூலம் கட்டி ஏதேனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது சாதாரண கட்டியா, புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய `எப்.என்.ஏ.சி` என்கிற நீடில் முறையை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வலி இல்லாமல் செல் எடுக்கப்படும். பயாப்சி செய்தும் பார்க்கப்படும். இவை இரண்டையுமே இப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கின் வழிகாட்டுதல்படி துல்லியாக செய்ய முடிகிறது.

மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் 40 வயதை கடக்கும் பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை டிஜிட்டல் மோமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள முன்வரவேண்டும். அதன் மூலம், நோய் இருந்தால் தொடக்க நிலையிலே கண்டறிந்து சிகிச்சை கொடுத்துவிடலாம். 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஆஸ்டியோபேராசிஸ் என்ற எலும்பு பலகீன நோய் உருவாகிறது. எந்த அளவுக்கு எலும்பு பலகீனமாக இருக்கிறது என்பதை `டெக்ஸ்சா ஸ்கேன்' மூலம் கண்டறிந்து, தேவைப்பட்டால் சிகிச்சை கொடுக்கலாம்.

நோய்களை கண்டுபிடிக்க மட்டுமே பயன்பட்டுவந்த ஸ்கேன் முறைகள் தற்போது நோயை கண்டறிவதோடு மட்டுமின்றி சிகிச்சை அளிக்கும் முறையாகவும் மேம்பட்டிருக்கிறது. பெண்ணின் கருப்பையில் கட்டி இருப்பது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் தெரியவந்தால், `ஹை இன்டன்சிட்டி போக்கஸ்டு அல்ட்ரா சவுண்ட்' எனப்படும் நவீன ஸ்கேனிங் கருவி மூலம் சக்திவாய்ந்த ஒலி அலைகளை பாய்ச்சி கட்டியை கரைத்துவிட முடியும். எம்.ஆர்.ஐ. ஸ்கேனின் வழிகாட்டுதல்படி இதை செய்ய வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் ரேடியாலஜி எனப்படும் கதிரியக்கத் துறை அதிசயிக்கத்தக்க வளர்ச்சியினை பெற்றுவிடும்.

பெண்கள் இப்போதும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு வரும் குறிப்பிட்ட நோய்களைப் பற்றி வெளியே பேசவும், சிகிச்சை பெறவும் தயங்குகிறார்கள். அதுவே அவர்களது ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் எதிரியாக அமைந்துவிடுகிறது. பெண்கள் நோயிடம் விழிப்புடன் இருந்து, தொடக்கத்திலே அதை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் மகிழ்ச்சியுடன் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்பிருக்கிறது. நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் அதற்கு துணைபுரிகிறது.

விளக்கம்: டாக்டர் பியூலா இம்மானுவேல் M.B.B.S.,D.M.R.D.,D.N.B.

source: http://senthilvayal.blogspot.in/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்... Empty Re: பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்...

Post by பானுஷபானா Tue 4 Sep 2012 - 13:58

பகிர்வுக்கு நன்றி... பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்... 331844 பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்... 331844 பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்... 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum