Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு
2 posters
Page 1 of 1
அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு
மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையேயும், கடும் சட்ட போராட்டத்திற்கும் இடையே இன்று காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து அரசாணை நகல் தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது. தனக்கு மனநிறைவை தருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழகம் - கர்நாடகம் இடையேயான, காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1989ல், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், 1990ல், இடைக்கால தீர்ப்பை வழங்கியது.அதை, உடனடியாக அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்பின், 2007ல், நடுவர் மன்றம், தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உடனடியாக, சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்தப் பிரச்னையால், இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடாமல், ஆறு ஆண்டுகளாக, மத்திய அரசு காலம் கடத்தி வந்தது.இந்நிலையில், இந்த விவகாரத்தில், சமீபத்தில் தலையிட்ட, சுப்ரீம் கோர்ட், "இன்றைக்குள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.உடன், இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில், மத்திய சட்ட அமைச்சகமும், நீர்வளத்துறை அமைச்சகமும் தீவிரம் காட்டின. அதனால், சில நாட்களுக்கு முன்னதாகவே, இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகலாம் என, நம்பப்பட்டது. ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவால், அரசிதழில் வெளியிடுவது தடைபட்டது.
இந்நிலையில் இன்று காவிரி நடுமன்ற தீர்ப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கான அரசாணை நகல் தமிழகம், புதுச்சேரி, கேரள ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.இனி தமிழகத்திற்கு தடையின்றி 419 டி.எம்.சி. தண்ணீர் தடையின்றி கிடைக்கும்.
நீர்பங்கீடு எவ்வளவு
அரசிதழில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. ,கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி., கேரளாவிற்கு 30 டி.எம்.சி. , புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., தண்ணீர் தடையின்றி கிடைக்கும்.
மனநிறைவை தருகிறது: ஜெ.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டியில், கூறியிருப்பதாவது: காவரி நடுமன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது எனக்கு மன நிறைவை தருகிறது. 22 ஆண்டு கால போராட்டத்தி்ற்கு கிடைத்த வெற்றி .இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி,தமிழக மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைத்துள்ளது .இனி கர்நாடகா தண்ணீர் இல்லை என கைவிரிக்க முடியாது என்றார்.
நாராயணசாமி வரவேற்பு காவரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியானது மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என்றார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறுகையில், தமிழக மக்களுக்கு மிகுந்த மகி்ச்சியளிக்கிறது. இதன் மூலம் காவிரி விவகாரத்தில் சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.
கர்நாடகாவில் போராட்டம்
காவிரி நடுவர்மன்ற குழுவின் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகா ரட்சக வேதிக அமைப்பின் சார்பில் பெங்களூரு ரயில் நிலையம், மைசூர் ரயில் நிலையம் ஆகியவற்றில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
-தினமலர்
தமிழகம் - கர்நாடகம் இடையேயான, காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1989ல், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், 1990ல், இடைக்கால தீர்ப்பை வழங்கியது.அதை, உடனடியாக அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்பின், 2007ல், நடுவர் மன்றம், தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உடனடியாக, சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்தப் பிரச்னையால், இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடாமல், ஆறு ஆண்டுகளாக, மத்திய அரசு காலம் கடத்தி வந்தது.இந்நிலையில், இந்த விவகாரத்தில், சமீபத்தில் தலையிட்ட, சுப்ரீம் கோர்ட், "இன்றைக்குள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.உடன், இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில், மத்திய சட்ட அமைச்சகமும், நீர்வளத்துறை அமைச்சகமும் தீவிரம் காட்டின. அதனால், சில நாட்களுக்கு முன்னதாகவே, இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகலாம் என, நம்பப்பட்டது. ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவால், அரசிதழில் வெளியிடுவது தடைபட்டது.
இந்நிலையில் இன்று காவிரி நடுமன்ற தீர்ப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கான அரசாணை நகல் தமிழகம், புதுச்சேரி, கேரள ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.இனி தமிழகத்திற்கு தடையின்றி 419 டி.எம்.சி. தண்ணீர் தடையின்றி கிடைக்கும்.
நீர்பங்கீடு எவ்வளவு
அரசிதழில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. ,கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி., கேரளாவிற்கு 30 டி.எம்.சி. , புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., தண்ணீர் தடையின்றி கிடைக்கும்.
மனநிறைவை தருகிறது: ஜெ.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டியில், கூறியிருப்பதாவது: காவரி நடுமன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது எனக்கு மன நிறைவை தருகிறது. 22 ஆண்டு கால போராட்டத்தி்ற்கு கிடைத்த வெற்றி .இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி,தமிழக மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைத்துள்ளது .இனி கர்நாடகா தண்ணீர் இல்லை என கைவிரிக்க முடியாது என்றார்.
நாராயணசாமி வரவேற்பு காவரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியானது மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என்றார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறுகையில், தமிழக மக்களுக்கு மிகுந்த மகி்ச்சியளிக்கிறது. இதன் மூலம் காவிரி விவகாரத்தில் சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.
கர்நாடகாவில் போராட்டம்
காவிரி நடுவர்மன்ற குழுவின் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகா ரட்சக வேதிக அமைப்பின் சார்பில் பெங்களூரு ரயில் நிலையம், மைசூர் ரயில் நிலையம் ஆகியவற்றில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
-தினமலர்
Re: அரசிதழில் வெளியானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு
- காவிரி
நதிநீர் பங்கீடு தொடர்பான முக்கிய முடிவுகளை மேலாண்மை வாரியமே எடுக்கும்
என்பதால், தமிழகத்தைப் பொறுத்த வரை, காவிரி நதிநீரைப் பெறுவதற்காக இனி
நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24690
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து எடியூரப்பா நடை பயணம்
» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
» காவிரி நுழைவாயிலில் ஆடிப்பெருக்கு உற்சாகம்
» பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
» காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்
» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
» காவிரி நுழைவாயிலில் ஆடிப்பெருக்கு உற்சாகம்
» பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
» காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|