சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

எப்படி எப்படி - சிறுவர் கதை Khan11

எப்படி எப்படி - சிறுவர் கதை

4 posters

Go down

எப்படி எப்படி - சிறுவர் கதை Empty எப்படி எப்படி - சிறுவர் கதை

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 11:31

ஆதனார் என்ற அரசர் தென்றல் நாட்டை நல்லாட்சி செய்து வந்தார். மக்களுக்கு ஏதேனும் குறை உள்ளதா என்பதை அறிய விரும்பினார். வணிகனைப் போல மாறுவேடம் போட்டுக் கொண்டு குதிரையில் அமர்ந்தார்.

ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டு வந்தார்.

வழியில் வழிப் போக்கன் ஒருவன் நின்று இருந்தான். குதிரையில் அவர் வருவதைப் பார்த்த அவன் கை காட்டினான்.

அவரும் குதிரையை நிறுத்தினார்.

""ஐயா! நீண்ட தொலைவு நடந்து வந்ததால் களைப்பு அடைந்து உள்ளேன். பக்கத்து ஊர் செல்ல வேண்டும். உங்கள் குதிரையில் என்னையும் ஏற்றிச் செல்லுங்கள். இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்,'' என்று வேண்டினான்.

இரக்கப்பட்ட அவர், ""குதிரையில் ஏறிக் கொள்,'' என்றார்.

அவனும் குதிரையில் ஏறி அமர்ந்தான்.

இருவரையும் சுமந்து கொண்டு குதிரை பக்கத்து ஊரை அடைந்தது.

""உன் ஊர் வந்துவிட்டது இறங்கிக் கொள்,'' என்றார் அரசர்.

""இது என் குதிரை... நான் ஏன் இறங்க வேண்டும்? இரக்கப்பட்டு உன்னைக் குதிரையில் ஏற்றி வந்தேன். பெரிய ஏமாற்றுக்காரனாக இருப்பாய் போல இருக்கிறதே. நீ கீழே இறங்கு,'' என்று அதட்டினான் வழிப்போக்கன்.

""இது என் குதிரை. நீ கீழே இறங்கு,'' என்றார் அரசர்.

அங்கே கூட்டம் கூடி விட்டது.

"தான் யார் என்ற உண்மையைச் சொல்ல வேண்டாம். என்னதான் நடக்கிறது பார்ப்போம்' என்று நினைத்தார் அரசர்.

கூட்டத்தினரைப் பார்த்து, ""ஐயா! இது என் குதிரை... வழியில் இவன் குதிரையில் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கெஞ்சினான். நானும் குதிரையில் ஏற்றி வந்தேன். இங்கே வந்ததும் இதைத் தன் குதிரை என்று அடாவடியாகப் பேசுகிறான்,'' என்றார்.

அவனோ, ""இது என் குதிரை. இவனை நான் ஏற்றி வந்தேன். உங்கள் எல்லாரையும் இவன் ஏமாற்றப் பார்க்கிறான்,'' என்றான்.

அங்கே இருந்தவர்களால் குதிரைக்குச் சொந்தக்காரர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருவரையும் பார்த்து, ""இந்த ஊர் நீதிபதியிடம் செல்லுங்கள். அவர் உங்கள் வழக்கைத் தீர்த்து வைப்பார்,'' என்றனர்.

அவர்கள் இருவரும் குதிரையுடன் நீதிபதியிடம் வந்தனர். தான் அரசன் என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தவில்லை.

"நீதிபதி எப்படி தீர்ப்பு வழங்குகிறார்? பார்ப்போம்,' என்று நினைத்தார்.

இருவரையும் பார்த்து நீதிபதி, ""உங்களுக்குள் என்ன வழக்கு?'' என்று கேட்டார்.

""நீதிபதி அவர்களே! நான் குதிரையில் வந்து கொண்டிருந்தேன். வழியில் இவர் குதிரையில் தன்னை ஏற்றி வரும்படி வேண்டினார். நான் இவரை ஏற்றி வந்தேன். இந்த ஊர் வந்ததும் இவர், இது தன் குதிரை என்கிறார். என்னை ஏற்றி வந்ததாகச் சொல்கிறார். என் குதிரைக்கு உரிமை கொண்டாடுகிறார். நீங்கள்தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்,'' என்றார் அவர்.

""நீ என்ன சொல்கிறாய்?'' என்று அரசரைப் பார்த்து கேட்டார் நீதிபதி.

""நீதிபதி அவர்களே! இது என் குதிரை. இரக்கப்பட்டு இவனை ஏற்றி வந்தேன். இப்போது இந்தக் குதிரையே இவனுடையது என்கிறார். இப்படி ஒரு ஏமாற்றுக்காரனை நான் பார்த்தது இல்லை. நீங்கள்தான் என் குதிரையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என்றான் அவன்.

அங்கிருந்த வீரர்களை அழைத்தார் நீதிபதி.

""இந்தக் குதிரையைக் கொட்டடியில் அடையுங்கள். மற்ற குதிரைகளுடன் இது இருக்கட்டும்,'' என்றார்.

அவர்களும் அந்தக் குதிரையை மற்ற குதிரைகளுடன் சேர்த்துக் கட்டினர்.

சிறிது நேரம் சென்றது. குதிரைகள் கட்டப்பட்டு இருந்த இடத்திற்கு நீதிபதி வந்தார்.

அவர்கள் இருவரையும் ஒவ்வொருவராக அழைத்தார்.

""உங்கள் குதிரையை அடையாளம் காட்டுங்கள்,'' என்றார்.

இருவருமே, அந்தக் குதிரையைச் சரியாக அடையாளம் காட்டினர்.

மாறுவேடத்தில் இருந்த அரசரைப் பார்த்த நீதிபதி, ""இது உங்கள் குதிரை. இவன் ஏமாற்ற முயன்று இருக்கிறான்,'' என்றார்.

இதைக் கேட்ட அரசர் வியப்பு அடைந்தார். தன் மாறுவேடத்தை நீக்கினார்.

அரசரைப் பார்த்த நீதிபதி அவரை வணங்கினார்.

""நீதிபதி அவர்களே! நாங்கள் இருவருமே குதிரையைச் சரியாக அடையாளம் காட்டினோம். நான்தான் குதிரையின் சொந்தக்காரன் என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?'' என்று கேட்டார்.

""அரசர் பெருமானே! நீங்கள் குதிரையின் அருகே சென்றதும், அது மகிழ்ச்சியாகக் கனைத்தது. உங்களை உரசிக் கொண்டு நின்றது. ஆனால், அவன் அருகில் சென்றதும் அந்தக் குதிரை அவனை உதைத்தது. இதைப் பார்த்த நான் நீங்கள்தான் குதிரையின் சொந்தக்காரன் என்பதை அறிந்து கொண்டேன்,'' என்று விளக்கம் தந்தார் நீதிபதி.

""உங்கள் அறிவுக்கூர்மையைப் பாராட்டுகிறேன்,'' என்ற அரசன் அவர்களுக்கு பரிசுகளை கொடுத்தார்.

ஏமாற்ற முயன்ற வழிப்போக்கனுக்கு, தக்க தண்டணை கொடுத்தார் அரசர்.


சிறுவர் மலர்


Last edited by Muthumohamed on Sat 6 Apr 2013 - 14:01; edited 2 times in total
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எப்படி எப்படி - சிறுவர் கதை Empty Re: எப்படி எப்படி - சிறுவர் கதை

Post by rammalar Sat 6 Apr 2013 - 12:58

கதை நல்லா இருக்கு...
-
எப்படி எப்படி - சிறுவர் கதை 654px-Poulain-3
-
இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ளது. எடிட் செய்யவும்
-
எப்படி எப்படி - சிறுவர் கதை 800522


Last edited by rammalar on Sat 6 Apr 2013 - 13:17; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23946
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எப்படி எப்படி - சிறுவர் கதை Empty Re: எப்படி எப்படி - சிறுவர் கதை

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 13:13

rammalar wrote:கதை நல்லா இருக்கு...
-
இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ளது. எடிட் செய்யவும்
-
எப்படி எப்படி - சிறுவர் கதை 800522

தகவலுக்கு நன்றி ராம் அண்ணா திருத்தி விட்டேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எப்படி எப்படி - சிறுவர் கதை Empty Re: எப்படி எப்படி - சிறுவர் கதை

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 13:16

Muthumohamed wrote:
rammalar wrote:கதை நல்லா இருக்கு...
-
இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ளது. எடிட் செய்யவும்
-
எப்படி எப்படி - சிறுவர் கதை 800522

தகவலுக்கு நன்றி ராம் அண்ணா திருத்தி விட்டேன்
ஏமாற்ற முயன்றவனுக்கு தண்டனை கிடைத்தது அதுவும் நீக்குப்பட்டு விட்டது முஹம்மட் :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எப்படி எப்படி - சிறுவர் கதை Empty Re: எப்படி எப்படி - சிறுவர் கதை

Post by பானுஷபானா Sat 6 Apr 2013 - 13:38

:”@:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எப்படி எப்படி - சிறுவர் கதை Empty Re: எப்படி எப்படி - சிறுவர் கதை

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 14:02

நண்பன் wrote:
Muthumohamed wrote:
rammalar wrote:கதை நல்லா இருக்கு...
-
இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ளது. எடிட் செய்யவும்
-
எப்படி எப்படி - சிறுவர் கதை 800522

தகவலுக்கு நன்றி ராம் அண்ணா திருத்தி விட்டேன்
ஏமாற்ற முயன்றவனுக்கு தண்டனை கிடைத்தது அதுவும் நீக்குப்பட்டு விட்டது முஹம்மட் :]

தவறு திருத்தப்பட்டு விட்டது அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எப்படி எப்படி - சிறுவர் கதை Empty Re: எப்படி எப்படி - சிறுவர் கதை

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 14:13

Muthumohamed wrote:
நண்பன் wrote:
Muthumohamed wrote:
rammalar wrote:கதை நல்லா இருக்கு...
-
இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ளது. எடிட் செய்யவும்
-
எப்படி எப்படி - சிறுவர் கதை 800522

தகவலுக்கு நன்றி ராம் அண்ணா திருத்தி விட்டேன்
ஏமாற்ற முயன்றவனுக்கு தண்டனை கிடைத்தது அதுவும் நீக்குப்பட்டு விட்டது முஹம்மட் :]

தவறு திருத்தப்பட்டு விட்டது அண்ணா
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எப்படி எப்படி - சிறுவர் கதை Empty Re: எப்படி எப்படி - சிறுவர் கதை

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 14:40

நண்பன் wrote:
Muthumohamed wrote:
நண்பன் wrote:
Muthumohamed wrote:
rammalar wrote:கதை நல்லா இருக்கு...
-
இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ளது. எடிட் செய்யவும்
-
எப்படி எப்படி - சிறுவர் கதை 800522

தகவலுக்கு நன்றி ராம் அண்ணா திருத்தி விட்டேன்
ஏமாற்ற முயன்றவனுக்கு தண்டனை கிடைத்தது அதுவும் நீக்குப்பட்டு விட்டது முஹம்மட் :]

தவறு திருத்தப்பட்டு விட்டது அண்ணா
@. @.

@. @. @. :] :] :]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எப்படி எப்படி - சிறுவர் கதை Empty Re: எப்படி எப்படி - சிறுவர் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum