Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
இப்படியும் புற்றுநோய் வரலாம்
Page 1 of 1
இப்படியும் புற்றுநோய் வரலாம்
![இப்படியும் புற்றுநோய் வரலாம் 161e9551-c599-4f3f-8932-cbdc1a632061_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Aug/161e9551-c599-4f3f-8932-cbdc1a632061_S_secvpf.gif)
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏராளம். பெரும்பாலானோருக்கு அத்தகைய புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்று தெரியும். அதில் புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற டயட் மற்றும் அதிகப்படியான கதிர்வீச்சுக்கள் சருமத்தில் பாய்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
புற்றுநோயானது ஆரோக்கியமற்ற சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது. ஆகவே புற்றுநோயைப் பற்றிய முழு விழிப்புணர்வானது அனைவருக்கும் இருப்பது என்பது மிகவும் அவசியம். ஏனெனில் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் மற்றும் செயல்களை தினந்தோறும் மேற்கொள்கிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் அவற்றால் கூட புற்றுநோய் ஏற்படும் என்ற அறிவு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவற்றைப் பற்றி தெரிந்தால், எந்த ஒரு செயலையும் நிம்மதியாக மேற்கொள்ள முடியாது. இருப்பினும், அவற்றை தெரிந்து கொண்டால், புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து தம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்பதற்காக தமிழ் போல்டு ஸ்கை, புற்றுநோயை ஏற்படுத்தும் சில விசித்திரமான காரணங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
காற்று சுத்தப்படுத்திகள்:
ஆய்வு ஒன்றில், காற்று சுத்தப்படுத் திகளைப் பயன்படுத் துவதாலும், புற்றுநோய் வளர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்கிறது. ஏனெனில் அதில் ப்தளேட்ஸ் என்னும் புற்றுநோய் செல்களை வளர்க்கும் பொருள் இருக்கிறது. ஆகவே அறைகளில் நறுமணத்துடன் வைத்துக் கொள்ள, அத்தகைய காற்று சுத்தப்படுத்திகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, நறுமணமிக்க மெழுகுவர்த்திகளை அறைகளில் வைக்கலாம்.
மௌத் வாஷ்:
ஆய்வு ஒன்றில், மௌத் வாஷில் எத்தனால் அதிகம் இருப்பதால், அதனைப் பயன்படுத்தினால், அது வாய் புற்றநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்கிறது. ஏனெனில் எத்தனாலானது வாயில் உள்ள திசுக்களை உடைத்து, புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென்களை வாயில் எளிதில் ஊடுருவ வைக்கும்.
ஒயின்:
ஆராய்ச்சி ஒன்றில், சிறிய டம்ளர் ஒயினைக் குடித்தால், இருமடங்கு அதிகமாக புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் 125 மிலி டம்ளர் ஒயின் குடித்தால், வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் 168 சதவீதம் வரும் என்றும் சொல்கிறது.
ஜலதோஷம்:
புதிய ஆய்வு ஒன்றில், குழந்தைப் பருவத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஜலதோஷமும் ஒரு காரணமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆராய்ச்சியாளர்கள், இத்தகைய புற்றுநோயானது கர்ப்பத்தின் போது ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் அல்லது அதிகப்படியான ஜலதோலத்தை சாதாரணமாக நினைத்து விடுவதால், அது லுகேமியா அல்லது மூளை கட்டிகள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும் என்றும் சொல்கிறார்கள்.
டியோடரண்ட்:
டியோடரண்ட்டில் அலுமினியம் அதிகம் இருப்பதால், அது மார்பக புற்றுநோயுடன் தொடர்புடையதாக புதிய ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
சிப்ஸ்:
பெற்றோர்கள் தினந்தோஷம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக சிப்ஸ் கொடுத்தனுப்புவார்கள். ஆனால் அவ்வாறு வாரத்திற்கு 5 சிப்ஸ்களுக்கு மேல் சாப்பிட்டால், 27 சதவீதம் மார்க புற்றுநோய் வருவதாக, அதிர்ச்சிïட்டக்கூடிய விதமாக ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்துள்ளது.
வைட்டமின் ஈ:
வைட்டமின் ஈ அளவுக்கு அதிகமாக உடலினுள் சென்றால், நுரையீரல் புற்றோய் வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் 77,000 மக்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், வைட்டமின் ஈ அதிகம் உள்ளோருக்கு புற்றுநோய்த் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் சொல்கிறது. சாசேஜ் மற்றும் பர்கர் ஐரோப்பிய கமிஷன் ஒன்று, சிவப்பு நிறச்சாயம் சாசேஜில் பயன்படுத்தப்படுவதால், அதனை உட்கொண்டால், புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
சூப்:
தினமும் அதிக உப்பு போட்டு சூப் குடித்தால், வயிற்று புற்றுநோய் வருவதாக, நிபுணர் ஒருவர் சொல்கிறார்.
எக்ஸ்ரே:
உடலின் உள்ளுறுப்புக்களை படம் பிடித்து தெளிவாக காட்டும் எக்ஸ்ரே கருவிகளில் இருந்து வெளிவரும் கதிர்களால், புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பிரிட்டனில், இந்த எக்ஸ்ரேவினால், 700 பேர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கின்றனர்.
மொபைல் போன்:
தொடர்ந்து 10 நிமிடம் மொபைல் போன்களை காதுகளில் வைத்து பேசினால், மூளையில் மாற்றங்கள் ஏற்பட்டு, புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். அதுவும் மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் கதிர்கள், மூளைச் செல்களை பிரித்துவிடுவதாகவும் கூறுகின்றனர்.
மாட்டிறைச்சி அதிகமான அளவில் மாட்டிறைச்சி:
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிட்டால், புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. அதிலும் மக்கள் மாட்டிறைச்சி, செம்மறியாட்டு இறைச்சி, சாசேஜ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்று சொல்கிறது.
டூத் ஒயிட்னர்:
பற்களை வெண்மையாக்கும் பொருட்களை அதிகம் பயன்படுத்தினால், அதில் உள்ள அதிகப்படியான ப்ளீச்சிங் தன்மை கூட புற்றுநோயை உண்டாக்கும். எனவே ஐரோப்பிய கமிஷன், பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் உள்ள ப்ளீச்சிங்கின் அளவை குறைத்து, தயாரிக்க முடிவெடுத்துள்ளனர்.
அடடா... எதைத் தொட்டாலும் புற்றுநோய் என்றால், எதையுமே நிம்மதியாக செய்ய முடியாது போலிருக்கே... என்ன கொடுமை சார் இது....
இருப்பினும் நண்பர்களே! கவனமாக இருங்கள்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இப்படியும் படத்தலைப்புகள் வரலாம்
» நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்!
» எப்போது வரலாம்?
» குழந்தைகளுக்கும் நீரிழிவு வரலாம்!
» குழந்தைகளுக்கும் வரலாம் கண்புரை நோய்!
» நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்!
» எப்போது வரலாம்?
» குழந்தைகளுக்கும் நீரிழிவு வரலாம்!
» குழந்தைகளுக்கும் வரலாம் கண்புரை நோய்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|