சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் விடுதலைப் போராளி குயிலிக்கு நினைவுத் தூண் Khan11

வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் விடுதலைப் போராளி குயிலிக்கு நினைவுத் தூண்

Go down

வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் விடுதலைப் போராளி குயிலிக்கு நினைவுத் தூண் Empty வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் விடுதலைப் போராளி குயிலிக்கு நினைவுத் தூண்

Post by rammalar Tue 17 Jun 2014 - 11:16

வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் விடுதலைப் போராளி குயிலிக்கு நினைவுத் தூண் 17dm1
-
வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் குயிலியின் தியாகத்தை
உணர்த்தும் வகையில் அரசால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண்.
====================
8-ஆம் நூற்றாண்டில் சிவகங்கை அரண்மனையை ஆக்கிரமித்த ஆங்கிலப் படையின் ஆயுதக் கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்தவர், வீரமங்கை குயிலி. இது சிவகங்கையை வேலுநாச்சியார் மீட்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
-
விடுதலைப் போராளி குயிலியின் தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழக அரசு வேலு நாச்சியாருக்கு அமைத்துள்ள மணிமண்டபத்தில் குயிலுக்கும் நினைவுத் தூணை அமைத்துள்ளது.
-
1772-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி ஆங்கில கம்பெனி படைக்கும் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத தேவருக்கும் காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் மன்னரும், அவரது இளையராணியுமான கௌரி நாச்சியாரும் பீரங்கித் தாக்குதலுக்குப் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து பட்டத்து ராணியான வேலு நாச்சியார் ஆங்கில படையிடமிருந்து சிவகங்கையை மீட்க கொல்லங்குடியிலிருந்து தப்பி, திண்டுக்கல்லை அடுத்த விருப்பாட்சியில் கோபால நாயக்கரிடம் தஞ்சம் புகுந்தார்.
-
நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் விருப்பாட்சிக்குச் சென்று வேலு நாச்சியாரைச் சந்திக்க வேண்டும் என சிவகங்கையில் அறிவிக்கப்பட்டது. இளம் பெண்ணான வீரம் செறிந்த குயிலியின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆண், பெண் என்ற பேதமின்றி விருப்பாட்சிக்குச் சென்றனர்.
-
போர்க் களத்தில் பெண்களின் பங்கினை உருவாக்கும் புரட்சிக் கருத்தைக் கொண்ட வேலு நாச்சியார் அப் படைக்கு நாட்டுப் பற்று, அர்ப்பணிப்பு, நம்பிக்கை, வீரம் நிறைந்தவரைத் தேர்வு செய்யும் வகையில் தலைமையைத் தேடியபோது இவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற குயிலியை பெண்கள் படையின் தளபதியாகத் தேர்வு செய்தார்.
-
திண்டுக்கல்லில் இருந்த ஹைதர் அலியிடம் படை உதவிகளைப் பெற்ற வேலு நாச்சியார் 1780-இல் பெரும் படையுடன் சிவகங்கையை ஆங்கிலேயரிடமிருந்து மீட்கப் புறப்பட்டார். மூன்று பிரிவுகளாக படைகளை அனுப்பி போரிட்டதில், சிவகங்கையைத் தவிர்த்து மற்ற பகுதிகளை வேலு நாச்சியார் மீட்டார். சிவகங்கை அரண்மனை ஆங்கிலேயர் வசம் இருந்தது. இதனை மீட்க குயிலி ஒற்றனைப் போல செயல்பட்டு, தசரா விழாவில் பெண்களுக்கு அரண்மனையில் உள்ள கோயிலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை ராணியிடம் கூறி பெண்கள் படையினருடன் கோயிலுக்குச் செல்வதைப் போலச் சென்று போரிடலாம் என யோசனை தெரிவித்தார்.
-
பெண்கள் படையுடன் பக்தர்களைப் போல நுழைந்த குயிலியின் படைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத ஆங்கிலேயப் படைத் தளபதி, அரண்மனையில் இருந்த ஆயுத கிட்டங்குகளில் உள்ள துப்பாக்கிகளைக் கொண்டு விடுதலை போராளிகள் மீது தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பித்தார். வெறும் வாள்களையும், வளரிகளையும் கொண்டு போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த குயிலி அரண்மனை ஆலயத்தில் விளக்கேற்றுவதற்காக வைத்திருந்த எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிட்டங்கியில் குதித்து அவற்றை அழித்து தானும் மறைந்தார். குயிலின் தியாகத்தால் சிவகங்கை மீட்கப்பட்டது வரலாறு.
-
இழந்த நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து மீட்ட வேலு நாச்சியாருக்கு சிவகங்கையில் தமிழக அரசு மணிமண்டபத்தை அமைத்து வருகிறது. இந்த மணிமண்டபத்தில் விடுதலைப் போராளியான குயிலியின் தியாகத்தைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு நினைவுத் தூணையும் அரசு இங்கு அமைத்துள்ளது.
-
பணிகள் நிறைவுற்ற நிலையில் உள்ள வேலு நாச்சியார் மணிமண்டபமும், குயிலிக்கான நினைவுத் தூணும் விரைவில் திறக்கப்பட உள்ளன.
========
நன்றி: தினமணி

 
பின்னூட்டமொன்றை இடுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24044
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum