சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் அரசு பள்ளி மாணவர்கள்:மவுனம் சாதிக்கும் கல்வித்துறை. Khan11

தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் அரசு பள்ளி மாணவர்கள்:மவுனம் சாதிக்கும் கல்வித்துறை.

Go down

தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் அரசு பள்ளி மாணவர்கள்:மவுனம் சாதிக்கும் கல்வித்துறை. Empty தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் அரசு பள்ளி மாணவர்கள்:மவுனம் சாதிக்கும் கல்வித்துறை.

Post by *சம்ஸ் Sat 4 Dec 2010 - 6:31

திருப்பூர் :அரசு பள்ளி மாணவர்களில் சிலர், பள்ளிக்கு முழுக்கு போட்டு விட்டு, ஆண்டிபாளையம் வாய்க்காலுக்குச் சென்று, தீயபழக்கங்களில் ஈடுபடுகின்றனர். பீடி, சிகரெட், மது வகைகளுக்கு அடிமையாகின்றனர். அவர்களை திருத்த வேண்டிய கல்வித்துறை அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர்.

ஆண்டிபாளையம் ஸ்டாப் அருகே உள்ளது பி.ஏ.பி., கிளை கால்வாய். 10 அடி ஆழம் கொண்டது; ஏழு அடி வரை தண்ணீர் செல்லும். திருப்பூர் நகரப்பகுதியை விட்டு, 10 கி.மீ., தள்ளி, காட்டுப்பகுதியில் இருப்பதால், நகரத்தினர் யாரும் இப்பகுதிக்கு அதிகமாக செல்வதில்லை.இதை பயன்படுத்திக் கொள்ளும் அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல், தினமும் அங்கு செல்கின்றனர். வாய்க்காலில் தண்ணீர் விடப்படும் நாட்களில் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், தண்ணீர் வராதபோது, 20க்கும் மேற்பட்ட மாணவர்களும் அப்பகுதியில் முகாமிடுகின்றனர்.

அப்பகுதியினர் கூறியதாவது:தினமும் காலை 10.00 மணிக்கு மேல், ஒரு பஸ்சுக்கு 10 பேர் வீதம் ஆண்டிபாளையம் வாய்க்காலுக்கு மாணவர்கள் வருகின்றனர். வரும் மாணவர்களில் யாரும், இங்குள்ளகிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் அல்ல. வாய்க்காலில் தண்ணீர் சென்றால், 1.00 மணி வரை குளித்து விட்டு, திரும்பிச் செல்கின்றனர். மதியத்துக்கு மேல், மேலும் சில மாணவர்கள் வந்து குளிக்கின்றனர். சில நேரங்களில் மூன்றுக்கு மேற்பட்ட பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வரும்போது, அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. அடிதடியும் ஏற்படுவதும் உண்டு. வாய்க்காலில் தண்ணீர் போகாத நேரத்தில், இங்கு வரும் மாணவர்கள் ஏமாந்து போகின்றனர். வந்து விட்டோம்; நேரத்தை போக்கியாக வேண்டும் என எண்ணி அருகில் உள்ள காடுகளுக்குள் சுற்றித்திரிகின்றனர்.சில நேரங்களில் அருகில் பயிரிடப்பட்டுள்ள, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று விடுகின்றனர். ஆண்டிபாளையம் வாய்க்கால், அதை ஒட்டி கிளை வாய்க்கால் பிரியும் இடத்தில் அரசு கட்டடம் உள்ளது; அதற்குள் ஒளிந்து கொள்கின்றனர். இப்பகுதிக்கு ரோந்து போலீசார் வருவதும் இல்லை; மாணவர்களை கண்டு கொள்வதுமில்லை, என்றனர்.

மாணவர்களிடையே தீய பழக்கம்: ஆண்டிபாளையம் ஷட்டரை ஒட்டிய பகுதியில் இருந்து செட்டிபாளையம், நல்லூர் வருவதற்கு கிளை வாய்க்கால் ஒன்று பிரிகிறது. அந்த இடத்தில், பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட இரண்டு கட்டடங்கள் பயன்பாடின்றி உள்ளன. வாய்க்காலில் தண்ணீர் போகாதபோது, இங்கு வரும் மாணவர்கள், நேரத்தை கழிக்க, பீடி,சிகரெட், மது உள்ளிட்ட தீய பழக்கங்களை கற்றுக்கொள்கின்றனர். இதற்கு, அப்பகுதியில் சுற்றித்திரியும் வேலையில்லாத "சைக்கோ' வாலிபர்கள் உதவுகின்றனர்.

தடுப்பது யார்? குழந்தைகள் பள்ளிக்கு சென்று படித்துக் கொண்டிருப்பர் என பெற்றோர் நம்புகின்றனர். உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கும்; வேறு காரணத்துக்காக விடுமுறை எடுத்திருப்பர் என அரசு பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களின் விடுமுறையை பெரிதுபடுத்துவதில்லை. பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை எனில், ஏன், எதற்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்போது தான், தீய பழக்கத்தை கற்றுக்கொள்ளும் மாணவர்களை திருத்த முடியும்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:தனியார் பள்ளிகளில் நடத்துவதுபோல், அரசு பள்ளிகள் பலவற்றில் பெற்றோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவதில்லை. இதனால், மாணவர்களின் நிலை குறித்து பெற்றோருக்கு நேரடியாக தெரிவதில்லை. துறை சார்ந்த உயரதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்துவதில்லை. ஒவ்வொரு முறை தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெறும்போது, மாணவர்களின் குறைவான வருகை குறித்து கல்வித்துறைக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்; எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை, என்றார்.

நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum