Latest topics
» எதையும் பார்க்காம பேசாதே...by rammalar Today at 11:57 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm
» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm
» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon May 13, 2024 2:30 pm
கே.பாலசந்தரின் மறைவையொட்டி, கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தி:
2 posters
Page 1 of 1
கே.பாலசந்தரின் மறைவையொட்டி, கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தி:
இதயத்தை உலுக்கிவிட்டது இயக்குநர் சிகரத்தின் இறப்பு. பாலசந்தர் என்பது ஒருவரின் பெயரன்று; தமிழ் சினிமாவின் துண்டுச் சரித்திரம். இந்தியாவின் தெற்கிலும் ஒரு சிகரம் இருக்கிறது என்று வடக்கை அண்ணாந்து பார்க்க வைத்தவர் பாலசந்தர்.
நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கல்களையும் கலைவடிவமாக்கிய கலைமேதை. சலித்துப்போன பாணியில் புளித்துப்போன கதைகளால் அலுத்துப்போன தமிழ் சினிமாவை புதிய பாதைக்கு அழைத்து வந்தவர்களில் பாலசந்தரும் தலையாயவர்.
நாடகக் கலை அவரை வளர்த்தது; திரைக்கலையை அவர் வளர்த்தார். கறுப்பு – வெள்ளைப் படங்களுக்கு கிரீடம் சூட்டியவர் பாலசந்தர். தன் முதல் படத்திற்கே ‘நீர்க்குமிழி’ என்று பெயரிட்டு மூடநம்பிக்கையை முறியடித்தவர். கமல் – ரஜினி என்ற சரித்திரக் கலைஞர்களை வழங்கியது மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான சராசரிக் கலைஞர்களுக்கும் முகமும், முகவரியும் தந்தவர் அவர். பாடல்களுக்கும், வசனங்களுக்கும் அவர் கொடுத்த முன்னுரிமையால் தமிழ் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது.
அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், தண்ணீர் தண்ணீர், சிந்துபைரவி போன்ற கலைக் கருவூலங்களை உருவாக்கி தமிழ் சினிமாவுக்குப் பொற்காலப் பெருமையைக் கூட்டியவர் பாலசந்தர். நான் பழகிய வரையில் அவர் ஒரு குழந்தை. கள்ளம் கபடமற்ற கலைஞர். ஒரு தென்னங்கீற்றில் துள்ளித் திரியும் அணிலைப்போல சுதந்திரமான சுறுசுறுப்பு உள்ளவர்.
திரையுலகம் தாதாசாகிப் பால்கே விருதுபெற்ற உன்னத இயக்குநரை இழந்து நிற்கிறது. குடும்பம் தங்கள் தலைவனை இழந்து நிற்கிறது. பல இயக்குநர்கள் தங்கள் பிதாமகனை இழந்திருக்கிறார்கள். நான் கவிதை எழுதும் என் கட்டை விரலை இழந்து நிற்கிறேன்.
போய் வாருங்கள் இயக்குநர் சிகரமே உங்கள் புகழைக் காத்துக்கிடக்கும் பெருங்கடமையில் எங்கள் காலம் கழியும். நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்ற சராசரிக் கோரிக்கையெல்லாம் இந்தச் சமூகத்தில் எடுபடாது. நீங்கள் இயக்கிய கலைச்சித்திரங்களே உங்கள் நினைவுச் சின்னங்களாகும். உங்கள் புகழ் வாழ்க" என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
நன்றி-தி இந்து
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24113
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து
» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
» கவிஞர் வாலி!கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை!
» கவிஞர் வைரமுத்து குறளுக்கு குரல் கொடுத்து பாடகரானார்!
» உலகத் தமிழ் படைப்பாளிகள் மையம் உருவாக வேண்டும்- கவிஞர் வைரமுத்து _
» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
» கவிஞர் வாலி!கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை!
» கவிஞர் வைரமுத்து குறளுக்கு குரல் கொடுத்து பாடகரானார்!
» உலகத் தமிழ் படைப்பாளிகள் மையம் உருவாக வேண்டும்- கவிஞர் வைரமுத்து _
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|