Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
உலகத் தமிழ் படைப்பாளிகள் மையம் உருவாக வேண்டும்- கவிஞர் வைரமுத்து _
Page 1 of 1
உலகத் தமிழ் படைப்பாளிகள் மையம் உருவாக வேண்டும்- கவிஞர் வைரமுத்து _
உலகத்தமிழ்ப் படைப்பாளிகள் மையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். தமிழ் படைப்புகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் பிறமொழியாளர்களின் முன்னிலையில் உலகமெங்கும் வெளியிடப்பட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூரில் உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடு கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமானது. மாநாட்டை ஆரம்பித்து வைத்துப் பேசிய சிங்கப்பூர் தமிழ் எழுத்தளார் கழகம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் மாநாட்டைக் கவிஞர் வைரமுத்து வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கவிஞர் வைரமுத்து அங்கு மேலும் கூறியதாவது, தென்னாட்டுத் தமிழ் அறிஞர்களோடு பன்னாட்டுப் படைப்பாளிகளும் ஒரு கூரையின் கீழ் கூடியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. கூடிக் கலையும் மற்றுமொரு கொண்டாட்டமாக இந்த மாநாடு முடிந்துவிடக் கூடாது என்ற கவலையும் வருகிறது.
இந்த மாநாடு நம் பெருமைகளை மட்டுமே ஓயாது பேசி ஓய்ந்துவிடக்கூடாது சில கேள்விகளை நாம் முன்வைக்க வேண்டும்.
அந்தக் கேள்விகள் தர்க்கத்திற்கும் நியாயத்திற்கும் உட்பட்டவையாயின், அவற்றுக்கான விடைகளை நாம் தேடியாக வேண்டும்.
உலகமயமாதல் என்று பெரும் புயலில் உலகத்தின் குறுமொழிகளும் சிறுமொழிகளும் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது என்ற கூற்று உண்மையா? அது உண்மையானால் தமிழ்மொழிக்கும் தீங்கு நேருமா? அப்படி நேருமானால் தமிழ்மொழி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வழிகள் யாவை என்பதையும் இந்த மாநாடு விவாதிக்க வேண்டும்.
நம் பலங்களை மட்டும் பேசியே பொய்வலிமை பூண்டுவிட்டோம். நம் பலவீனங்களும் பேசப்பட வேண்டும். ஒரு மாநாட்டில் தனி நபர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுத் தத்துவங்களே முன்நிறுத்தப்பட வேண்டும்.
முதலில் நம்மை நமக்குள் மதிக்கும் மனோ பாவம் வளர வேண்டும். முதல் மனிதன் பேசிய மூத்தமொழி என்ற பெருமை நம் வீட்டுக்குள் இருக்கிறது. ஆனால் வீட்டுக்கு வெளியே நிலைமை வேறாக இருக்கிறது.
கன்னடம் நமது சகோதர மொழிதான். அதன் மீது எப்போதும் நமக்கு மதிப்புண்டு. இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருது என்று கருதப்படுகிற ஞானபீடம் பரிசை கன்னடமொழி எட்டு முறை பெற்றிருக்கிறது. தமிழ் இரண்டு முறைதான் பெற்றிருக்கிறது.
இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசின் கடைசிப்பட்டியலில் இரண்டு இந்தியப் படைப்பாளிகள் இடம் பெற்றிருந்தார்கள். அதில் ஒருவர் ராஜஸ்தானியின் சிறுகதை எழுத்தாளர். இன்னொருவர் மலையாளக் கவிஞர். நோபல் பரிசுக்கு இரண்டு இந்தியர்கள் இறுதிச்சுற்று வரை இடம்பெற்றது நமக்கு மகிழ்ச்சி தான்.
ஆனால், 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி" என்று அகப்பெருமை பேசுகிற தமிழ்ப்படைப்பாளியின் பெயர் அதில் இடம்பெறவில்லையே.
நோபல் பரிசும் ஒனறும் ஒரு மொழியின் அளவுகோல் அல்ல எனினும் அதில் இடம் பிடிக்காத குறை நம் இனத்திற்கு இருக்கிறதே!
உலகப் படைப்புகளுக்கு இணையான பெருமையும் நமக்கு உண்டு, அதை உலகத்திற்கு எடுத்துச் செல்லாத பலவீனமும் நமக்கு உண்டு.
போகச் சமுதாயத்திலும் போர்ச் சமுதாயத்திலும் தான் உன்னத இலக்கியங்கள் பிறக்கும். இன்று தாய்த் தமிழ்நாட்டை விட தமிழ் ஈழத்திலும் கடல் கடந்த இலங்கைத் தமிழர்களிடமும் தான் அந்த உன்னத இலக்கியம் உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
உலகத் தமிழ்ப்படைப்பாளிகளை ஒன்று கூட உலகத்தமிழ்ப் படைப்பாளிகள் மையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் சிங்கப்பூர் அதற்குப் பொருத்தமான தளமாகத் திகழும் என்று நம்புகிறேன்.
மாநாட்டைத் தொடங்கிவைப்பது எளிதுஈ தமிழன் எதையும் தொடங்குவதில் கெட்டிக்காரன்; ஆனால் முடிக்கத் தெரியாதவன். தொடங்கிய எழுச்சியோடு இந்த மாநாடு நிறைவு பெறவும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன் செயலாளர் அண்ணாமலை ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், நடிகர் சிவகுமார், இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் ஆகியோர் இம்மாநாட்டில் உரை நிகழ்த்தியுள்ளனர்.
சிங்கப்பூரில் உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடு கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமானது. மாநாட்டை ஆரம்பித்து வைத்துப் பேசிய சிங்கப்பூர் தமிழ் எழுத்தளார் கழகம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் மாநாட்டைக் கவிஞர் வைரமுத்து வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கவிஞர் வைரமுத்து அங்கு மேலும் கூறியதாவது, தென்னாட்டுத் தமிழ் அறிஞர்களோடு பன்னாட்டுப் படைப்பாளிகளும் ஒரு கூரையின் கீழ் கூடியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. கூடிக் கலையும் மற்றுமொரு கொண்டாட்டமாக இந்த மாநாடு முடிந்துவிடக் கூடாது என்ற கவலையும் வருகிறது.
இந்த மாநாடு நம் பெருமைகளை மட்டுமே ஓயாது பேசி ஓய்ந்துவிடக்கூடாது சில கேள்விகளை நாம் முன்வைக்க வேண்டும்.
அந்தக் கேள்விகள் தர்க்கத்திற்கும் நியாயத்திற்கும் உட்பட்டவையாயின், அவற்றுக்கான விடைகளை நாம் தேடியாக வேண்டும்.
உலகமயமாதல் என்று பெரும் புயலில் உலகத்தின் குறுமொழிகளும் சிறுமொழிகளும் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது என்ற கூற்று உண்மையா? அது உண்மையானால் தமிழ்மொழிக்கும் தீங்கு நேருமா? அப்படி நேருமானால் தமிழ்மொழி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வழிகள் யாவை என்பதையும் இந்த மாநாடு விவாதிக்க வேண்டும்.
நம் பலங்களை மட்டும் பேசியே பொய்வலிமை பூண்டுவிட்டோம். நம் பலவீனங்களும் பேசப்பட வேண்டும். ஒரு மாநாட்டில் தனி நபர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுத் தத்துவங்களே முன்நிறுத்தப்பட வேண்டும்.
முதலில் நம்மை நமக்குள் மதிக்கும் மனோ பாவம் வளர வேண்டும். முதல் மனிதன் பேசிய மூத்தமொழி என்ற பெருமை நம் வீட்டுக்குள் இருக்கிறது. ஆனால் வீட்டுக்கு வெளியே நிலைமை வேறாக இருக்கிறது.
கன்னடம் நமது சகோதர மொழிதான். அதன் மீது எப்போதும் நமக்கு மதிப்புண்டு. இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருது என்று கருதப்படுகிற ஞானபீடம் பரிசை கன்னடமொழி எட்டு முறை பெற்றிருக்கிறது. தமிழ் இரண்டு முறைதான் பெற்றிருக்கிறது.
இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசின் கடைசிப்பட்டியலில் இரண்டு இந்தியப் படைப்பாளிகள் இடம் பெற்றிருந்தார்கள். அதில் ஒருவர் ராஜஸ்தானியின் சிறுகதை எழுத்தாளர். இன்னொருவர் மலையாளக் கவிஞர். நோபல் பரிசுக்கு இரண்டு இந்தியர்கள் இறுதிச்சுற்று வரை இடம்பெற்றது நமக்கு மகிழ்ச்சி தான்.
ஆனால், 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி" என்று அகப்பெருமை பேசுகிற தமிழ்ப்படைப்பாளியின் பெயர் அதில் இடம்பெறவில்லையே.
நோபல் பரிசும் ஒனறும் ஒரு மொழியின் அளவுகோல் அல்ல எனினும் அதில் இடம் பிடிக்காத குறை நம் இனத்திற்கு இருக்கிறதே!
உலகப் படைப்புகளுக்கு இணையான பெருமையும் நமக்கு உண்டு, அதை உலகத்திற்கு எடுத்துச் செல்லாத பலவீனமும் நமக்கு உண்டு.
போகச் சமுதாயத்திலும் போர்ச் சமுதாயத்திலும் தான் உன்னத இலக்கியங்கள் பிறக்கும். இன்று தாய்த் தமிழ்நாட்டை விட தமிழ் ஈழத்திலும் கடல் கடந்த இலங்கைத் தமிழர்களிடமும் தான் அந்த உன்னத இலக்கியம் உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
உலகத் தமிழ்ப்படைப்பாளிகளை ஒன்று கூட உலகத்தமிழ்ப் படைப்பாளிகள் மையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் சிங்கப்பூர் அதற்குப் பொருத்தமான தளமாகத் திகழும் என்று நம்புகிறேன்.
மாநாட்டைத் தொடங்கிவைப்பது எளிதுஈ தமிழன் எதையும் தொடங்குவதில் கெட்டிக்காரன்; ஆனால் முடிக்கத் தெரியாதவன். தொடங்கிய எழுச்சியோடு இந்த மாநாடு நிறைவு பெறவும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன் செயலாளர் அண்ணாமலை ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், நடிகர் சிவகுமார், இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் ஆகியோர் இம்மாநாட்டில் உரை நிகழ்த்தியுள்ளனர்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|