Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
அவித்த உணவுகளே அருமை!
4 posters
Page 1 of 1
அவித்த உணவுகளே அருமை!
நீங்கள் உண்மையாக நேசிக்கிற யாருக்காவது பரிசளிக்க விரும்புகிறீர்களா? ஸ்டீமர் வாங்கி கொடுங்கள். அது அவர்களது ஆரோக்கியத்துக்கு நல்லது. உங்கள் நட்புக்கும் நல்லது. அப்படி என்ன விசேஷம்... ஸ்டீமிங்கில்?
ஸ்டீமிங் என்பது வேறொன்றுமில்லை... நமது பாரம்பரிய சமைக்கும் வழிமுறையான அவித்தல் எனப்படும் நீராவியில் உணவுகளை வேகவைக்கும் முறைதான். பாரம்பரிய சமையல் முறையான அவித்தல் சமீப காலமாக விஞ்ஞானிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. பல பல்கலைக்கழகங்கள் அதன் பெருமையை பேசுகின்றன. அவித்தலின் அவசியம் குறித்து அவை கூறியிருப்பவற்றை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?
இல்லினாயிஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஆவியில் வேகவைக்கும் உணவுகளின் பெருமைகளை இதோ இப்படி அடுக்கியிருக்கிறது. பிராக்கோலியில் இருக்கும் ஒரு வகை என்சைம் கேன்சரை தடுக்கும் தன்மை வாய்ந்தது. பிராக்கோலியை வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிடும் போது அது அழிந்து போய்விடுவதாகவும், ஆவியில் வேக வைக்கும் போதுதான் அதன் முழு பலன்களை நாம் அனுபவிக்க முடியும் என்றும் சொல்கிறது.
ஆவியில் வேக வைக்கும் போது, அதிலிருக்கும் குளுக்கோசினோலேட்ஸ், சல்பரோபேனாக மாறுகிறது. இதுதான் கேன்சர் வராமல் தடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பச்சையாக இருக்கும் பிராக்கோலியை விட, ஆவிகாட்டும் போது குளுக்கோசினோலேட்ஸ் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது. பசலைக்கீரை மற்றும் பிராக்கோலியை அவிக்கும் போது வைட்டமின் பி பாதுகாக்கப்படுகிறது. வேக வைத்தாலோ பாதி வைட்டமின்கள் அழிந்துவிடுகின்றன என்கிறது அந்த ஆய்வு.
சீன ஆய்வுகளும் அவிக்கப்பட்ட பிராக்கோலியில் வைட்டமின் சி மற்றும் குளோரபைல் போன்ற சத்துகள் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கின்றன. மீனைக் கூட அவித்து சாப்பிடும் முறை நல்லது என்கிறார்கள். மத்தி மீனில் கொத்தமல்லி சட்னி வைத்து தடவி அதை வாழை இலையில் வைத்து அவித்து சாப்பிடுவது நமது முன்னோர் பயன்படுத்திய முறை என்பதை இங்கே நினைவில் கொள்க. இந்த முறையில் நத்தை, இறால் போன்றவற்றையும் சமைக்கலாம் என்கிறார்கள்.
கேரட், பசலை, காளான், முட்டைகோஸ் போன்ற பல காய்கறிகளை பச்சையாக சாப்பிடு வதைவிடவும் அவிக்கும்போது அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், ஃபெருலிக் ஆசிட், கரோட்டினாயிட்ஸ் பாதுகாக்கப்படுகின்றன என்கிறது கார்னல் பல்கலைக்கழக ஆய்வு. வைட்டமின் சியும் வைட்டமின் பியும் நீரில் கரையக் கூடியவை. அதனால் கொதிக்க வைக்கும் போது சத்து இழப்பு ஏற்படுதல் சகஜம். அதீத வெப்பத்தினாலும் வைட்டமின் சி போய்விடும். வைட்டமின் ஏ, இ, டி போன்றவை கொழுப் பில் கரையக்கூடியவை. அவற்றையும் ஆவியில் வேக விடுங்கள். அப்போது ஒரு சொட்டு நல்லெண்ணெய், கடலெண்ணெய் அல்லது கடுகெண்ணெய் பயன்படுத்துவது அந்த ஊட்டச்சத்துகளை நம் உடல் எடுத்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும்!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அவித்த உணவுகளே அருமை!
அவித்த உணவுகளே அருமை!
ஊட்டச்சத்து நிபுணர் ஷீலா சுவர்ணகுமாரி சொல்கிறார்...
‘‘நம் முந்தைய தலைமுறையோடு இந்தத் தலைமுறையை ஒப்பிட்டுப் பார்த்தால் நம் உணவுப்பழக்கம் ரொம்பவே மாறிவிட்டது. மாறிவரும் இந்த உணவுப்பழக்கத்தால் பருமன், நீரிழிவு, இதய நோய்கள் போன்ற லைஃப் ஸ்டைல் பிரச்னைகள் அதிகரித்து விட்டன. இது போன்ற பிரச்னையோடு வருபவர்களுக்கு, ‘இதை சாப்பிடலாம்... இதை சாப்பிடக்கூடாது’ என்று சொல்வதோடு, ‘இப்படி இப்படி சமைத்து சாப்பிடுங்கள்’ என்றும் சொல்கிறோம். பொதுவாக உடல்நிலை சரியில்லாதவர்களை எண்ணெய், காரம் தவிர்த்த உணவுகளை சாப்பிட சொல்வோம்.
அதிலும் அவிக்கப்பட்ட உணவுகளை பரிந்துரை செய்கிறோம். அவித்தல், பேக்கிங், கிரில்லிங் போன்ற எண்ணெய் இல்லாத உணவுமுறைகள் சிறந்தவை என்றாலும் நடுத்தர குடும்ப மக்களுக்கு பேக்கிங், கிரில்லிங் முறைகள் தெரிவதில்லை. அல்லது அந்த முறையை பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்துவதில்லை. அதனாலே இங்கே அவிக்கப்பட்ட உணவு முறைகளை கையாள்கிறோம். அவிக்கப்பட்ட உணவுகள், கொழுப்பு குறைவாகவோ, கொழுப்பில்லாமலோ இருப்பதால் ஆரோக்கியமான உணவாகிறது. வேறு முறைகளில் உணவு தயாரிக்கும் போது அதீத வெப்பம் காரணமாகவும் சத்து இழப்புகள் ஏற்படும். அந்த நிலை அவித்தலில் தவிர்க்கப்படுகிறது.
இப்போதைய தலைமுறையினர் காலை உணவு களை பெரும்பாலும் தவிர்க்கின்றனர். அல்லது சாண்ட்விச், கார்ன்ஃப்ளேக்ஸ் போன்றவற்றையே காலை உணவாக்கிக் கொள்கின்றனர். துரித உணவுகள் எவையும் அவித்தல் முறையில் செய்யப்படுவதில்லை. நமது பாரம்பரிய உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவற்றை இளம் தலைமுறை விரும்புவதில்லை. அவற்றின் மகிமையை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஆவியில் வேக வைக்கும் உணவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வெளியே செல்லும் போது ஆவியில் வேக வைத்த மக்காச்சோளம் ஆகியவற்றை சிறு தீனியாக சாப்பிடுவது நல்லது. நீங்கள் ஆரோக்கியமானவராக இருக்க விரும்பினால் வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து, அவித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்!’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3339
ஊட்டச்சத்து நிபுணர் ஷீலா சுவர்ணகுமாரி சொல்கிறார்...
‘‘நம் முந்தைய தலைமுறையோடு இந்தத் தலைமுறையை ஒப்பிட்டுப் பார்த்தால் நம் உணவுப்பழக்கம் ரொம்பவே மாறிவிட்டது. மாறிவரும் இந்த உணவுப்பழக்கத்தால் பருமன், நீரிழிவு, இதய நோய்கள் போன்ற லைஃப் ஸ்டைல் பிரச்னைகள் அதிகரித்து விட்டன. இது போன்ற பிரச்னையோடு வருபவர்களுக்கு, ‘இதை சாப்பிடலாம்... இதை சாப்பிடக்கூடாது’ என்று சொல்வதோடு, ‘இப்படி இப்படி சமைத்து சாப்பிடுங்கள்’ என்றும் சொல்கிறோம். பொதுவாக உடல்நிலை சரியில்லாதவர்களை எண்ணெய், காரம் தவிர்த்த உணவுகளை சாப்பிட சொல்வோம்.
அதிலும் அவிக்கப்பட்ட உணவுகளை பரிந்துரை செய்கிறோம். அவித்தல், பேக்கிங், கிரில்லிங் போன்ற எண்ணெய் இல்லாத உணவுமுறைகள் சிறந்தவை என்றாலும் நடுத்தர குடும்ப மக்களுக்கு பேக்கிங், கிரில்லிங் முறைகள் தெரிவதில்லை. அல்லது அந்த முறையை பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்துவதில்லை. அதனாலே இங்கே அவிக்கப்பட்ட உணவு முறைகளை கையாள்கிறோம். அவிக்கப்பட்ட உணவுகள், கொழுப்பு குறைவாகவோ, கொழுப்பில்லாமலோ இருப்பதால் ஆரோக்கியமான உணவாகிறது. வேறு முறைகளில் உணவு தயாரிக்கும் போது அதீத வெப்பம் காரணமாகவும் சத்து இழப்புகள் ஏற்படும். அந்த நிலை அவித்தலில் தவிர்க்கப்படுகிறது.
இப்போதைய தலைமுறையினர் காலை உணவு களை பெரும்பாலும் தவிர்க்கின்றனர். அல்லது சாண்ட்விச், கார்ன்ஃப்ளேக்ஸ் போன்றவற்றையே காலை உணவாக்கிக் கொள்கின்றனர். துரித உணவுகள் எவையும் அவித்தல் முறையில் செய்யப்படுவதில்லை. நமது பாரம்பரிய உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவற்றை இளம் தலைமுறை விரும்புவதில்லை. அவற்றின் மகிமையை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஆவியில் வேக வைக்கும் உணவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வெளியே செல்லும் போது ஆவியில் வேக வைத்த மக்காச்சோளம் ஆகியவற்றை சிறு தீனியாக சாப்பிடுவது நல்லது. நீங்கள் ஆரோக்கியமானவராக இருக்க விரும்பினால் வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து, அவித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்!’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3339
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அவித்த உணவுகளே அருமை!
அறிந்திடாத தகவல் பகிர்வுக்கும் உங்கள் தேடலுக்கும் என்றும் என் அன்பும் மகிழ்வும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவித்த உணவுகளே அருமை!
பகிர்விற்கு நன்றி அஹமட்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவித்த உணவுகளே அருமை!
இந்த மாதிரி தொடர் மருத்துவ தேடல் எங்கே கொண்டு போய் விடுமோ? யாமறியோம் பராபரனே!
அவித்த உணவின் மகிமை தனிதான். ஆனால் தொடர்ந்து சாப்பிட முடியாதே! எண்ண்யில் பொரித்தது இல்லாவிட்டால் பலருக்கு இறங்காதே!
அவித்த உணவின் மகிமை தனிதான். ஆனால் தொடர்ந்து சாப்பிட முடியாதே! எண்ண்யில் பொரித்தது இல்லாவிட்டால் பலருக்கு இறங்காதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அவித்த உணவுகளே அருமை!
Nisha wrote:இந்த மாதிரி தொடர் மருத்துவ தேடல் எங்கே கொண்டு போய் விடுமோ? யாமறியோம் பராபரனே!
அவித்த உணவின் மகிமை தனிதான். ஆனால் தொடர்ந்து சாப்பிட முடியாதே! எண்ண்யில் பொரித்தது இல்லாவிட்டால் பலருக்கு இறங்காதே!
அந்தப்பலரில் தாங்களும் அடங்குமா தாயே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவித்த உணவுகளே அருமை!
இல்லையேப்பா! எனக்கு எண்ணெயில் பொரித்தவை ஒத்துக்குவதில்லை என்பதால் நான் ரோல்ஸ், வடை, கட்லட் போன்றவையே அதிகம் சாப்பிடுவதில்லையே!
இப்போது பால், பாலினால் செய்யப்படும் எந்த உண்வும், வினாகிரி விட்ட உண்வுகளும் சாப்பிட வேண்டாம் என டாக்டர் சொல்லி இருக்காரே
நான் பெரும்பாலும் வீட்டில் சாப்பிட சொதி , பால் கறி மாதிரி, கீரைகளில்சுண்டல் போல் தான் செய்வேன். அதிகம் எண்ணெய் சேர்ப்பதில்லை.
இப்போது பால், பாலினால் செய்யப்படும் எந்த உண்வும், வினாகிரி விட்ட உண்வுகளும் சாப்பிட வேண்டாம் என டாக்டர் சொல்லி இருக்காரே
நான் பெரும்பாலும் வீட்டில் சாப்பிட சொதி , பால் கறி மாதிரி, கீரைகளில்சுண்டல் போல் தான் செய்வேன். அதிகம் எண்ணெய் சேர்ப்பதில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|