சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம் Khan11

கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம்

3 posters

Go down

கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம் Empty கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம்

Post by ahmad78 Thu 2 Jul 2015 - 11:49

கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம் Ld3490இந்தியாவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களில் சரிபாதிப் பேர்தான் புற்றுநோய்க்கான போரில் வெற்றி பெறுகின்றனர். 72 ஆயிரம் பெண்கள் உயிரிழக்கின்றனர். ஆனால், இது தவிர்க்கக்கூடிய நோய்தான். இதுபற்றி தொடர் விழிப்புஉணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது, தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சரளா கோவிந்தராஜனிடம் கேட்டோம்.

'கர்ப்பப்பையின் கீழ்ப் பகுதியானது, பிறப்பு உறுப்பில் இணையும் இடத்தில் வாய் போன்ற அமைப்பில் 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்ற கிருமியால் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் கிருமி தாக்குதலின்போது பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியே, இதை எதிர்த்து வெற்றிகொள்கிறது. சில பெண்களுக்கு இந்தக் கிருமி சில காலத்துக்கு உடலுக்குள்ளேயே அமைதியாகக் காத்திருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காலத்தில் தாக்குதல் நடத்துகிறது. இந்த நிலையில், இயல்பான செல்களில் மாற்றம் ஏற்படுகிறது. மாற்றம் அடைந்த இந்த செல்கள் அதிவேகத்தில் பெருக்கம் அடைகிறது. இவை இறப்பதும் இல்லை.

இந்த வைரஸ் கிருமி, பாலியல் உறவின் மூலமே பரவுகிறது. என்னதான் வைரஸ் கிருமி மூலம் புற்றுநோய் ஏற்படுகிறது என்றாலும், இளம் வயதிலேயே உடல் உறவு (15 வயது அல்லது அதற்கு கீழ்), பலருடன் உறவு, சிகரெட் பிடித்தல், சுகாதாரமற்ற நாப்கின் பயன்படுத்துதல் உள்ளிட்ட சில காரணிகள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரித்துவிடுகிறது. ஹெச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களால் ஹியூமன் பாப்பிலோமா வைரஸை எதிர்த்துப் போராட முடிவது இல்லை.

ஒருவருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், அதன் அறிகுறிகள் ஏதும் வெளியே தெரியாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முற்றிய நிலையை அடைய 10 ஆண்டுகள் ஆகும். இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளியில் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறோம்.

பிரச்னை முற்றும் நிலையில், தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது அதிக வலி அல்லது ரத்தப்போக்கு ஏற்படலாம், வழக்கத்துக்கு மாறாக வெள்ளைப்படுதல், மாதவிலக்கின்போது ரத்தம் கட்டியாக வெளிப்படுதல் அல்லது மிகக் குறைந்த அளவில் உதிரப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள். மெனோபாசுக்குப் பிறகு உதிரப்போக்கு இருந்தால் நிச்சயம் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:


புகைபிடித்தலையும் திருமணமாகும் வரை உடல் உறவையும் தவிர்க்க வேண்டும். 9 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். தாம்பத்திய வாழ்வைத் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. முதல் ஊசிக்குப் பிறகு எட்டு வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ், ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது டோஸ் என எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் சிறுவர்களும், இளம் ஆண்களும்கூட இதைப் போட்டுக்கொள்ளலாம். இதனால் பெண்ணுக்கு இன்னும் அதிகப் பாதுகாப்பு கிடைக்கும்.

என்னதான் தடுப்பூசி போட்டாலும், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை  பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உயிரிழப்புக்களை முற்றிலுமாகத் தடுக்க முடியும்' என்றார்.


http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3492


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம் Empty Re: கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம்

Post by பானுஷபானா Thu 2 Jul 2015 - 14:42

nalla thakaval nanri muhaitheen
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம் Empty Re: கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம்

Post by நண்பன் Sat 4 Jul 2015 - 8:53

பயனுள்ள பதிவு நன்றி அஹ்மட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம் Empty Re: கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum