Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
உஷாரய்யா உஷாரு!
+2
சுறா
Nisha
6 posters
Page 1 of 1
உஷாரய்யா உஷாரு!
கணவன், மனைவி இருவரும் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். முப்பது வயது தாண்டாதவர்கள். திட்டமிட்டு ஒரே ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொண்டார்கள். சிறுமிக்கு 7 வயது. தனிக்குடித்தனம்.
இரண்டு பேரும் அவரவர் துறையில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். பாசம் நிறைந்த தம்பதியாக அவர்கள் இருந்தாலும், ‘மனைவி மேலும் முன்னேறி தன்னைவிட உயர்ந்த அந்தஸ்துக்கு போய்விடக்கூடாதே’ என்ற எண்ணம் கணவருக்கும்– ‘கணவரைவிட தனது அந்தஸ்து தாழ்ந்துவிட்டால், அவர் தன்னை மதிக்கவேமாட்டார்’ என்ற சிந்தனை மனைவியிடமும் இருந்துகொண்டே இருந்ததால், இருவருமே வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். குடும்ப விஷயங்கள் அனைத்தையும் அவர்கள் மனம்விட்டுப் பேசினாலும், தவறிக்கூட அவர்கள் அலுவலக விஷயங்களை பேசிக்கொள்வதில்லை. ஏன்என்றால் ஏதாவது நெருக்கடிக்கு ஆலோசனை கேட்கப்போய், ‘இதுதான் சரியான நேரம் என்று தவறான ஆலோசனை கொடுத்து காலை வாரி விட்டுவிடக் கூடாதே!’ என்ற அவநம்பிக்கை அவர்கள் இருவரிடமுமே இருந்துகொண்டிருந்தது.
மகள் மீது இருவரும் உயிரையே வைத்திருந்தார்கள். சொத்து வாங்கும்போதும், காரை அடிக்கடி மாற்றும்போதும், பெருமளவில் பணத்தை டெபாசிட் செய்யும்போதும் மகளைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே ‘எல்லாம் உனக்காகத்தான்!’ என்பார்கள். அதை கேட்கவே அந்த குழந்தைக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.
வழக்கம்போல் அவசர அவசரமாக கணவன், மனைவி இருவரும் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். எந்தெந்த நாளில் யார் குழந்தையை கொண்டுபோய் பள்ளியில் விட்டுவிட்டு, மாலையில் அழைத்து வரவேண்டும் என்பதற்கு முதலிலே கருத்தொருமித்து ஒரு ‘டைம்டேபிள்’ போட்டுவைத் திருக்கிறார்கள். அதன்படி, அன்று குழந்தையை கொண்டுபோய் பள்ளியில் விடுவது– அழைத்து வருவது இரண்டும் தாயின் வேலை!
குழந்தைக்கு எப்போதெல்லாம் பள்ளிவிடுமுறை என்பதை முதலிலே தெரிந்து கொண்டு அதற்கு தக்கபடி யாராவது ஒருவர் லீவு போட்டு குழந்தையை கவனித்துக்கொள்வார்கள். ஆனால் ‘யார் லீவு எடுப்பது?’ என்பதில் பெரும்பாலும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் எழும். கடைசியில் ஒருவழியாக சமாதானமாகி ‘எங்களில் யார் லீவு எடுக்கவேண்டும் என்பதை நீயே சொல்?’ என்று குழந்தை பக்கம் பிரச்சினையை திருப்பிவிடுவார்கள்.
குழந்தை ‘அப்பா பெயரை சொல்வதா? அம்மா பெயரை சொல்வதா?’ என்று தெரியாமல் ரொம்பவும் குழம்பிப்போகும். இருவரில் யார் பெயரை குழந்தை சொன்னாலும் கொஞ்சநேரம் திட்டுவிழும். ‘தன் பெயரை சொல்லிவிட்டதற்காக மட்டுமல்ல.. அடுத்தும் தன் பெயரை சொல்லிவிடக்கூடாது’ என்பதற்காக லேசாக குழந்தையை மிரட்டிவைப்பார்கள்.
அன்று குழந்தையை பள்ளியில் கொண்டுவிடுவது தனது வேலை என்பதால், தாயார் அவசரமாக குழந்தையை கிளப்பிக்கொண்டிருந்தாள். அப்போது போன் வந்தது. ‘தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று பள்ளிக்கு விடுமுறை’ என்று தகவல் சொன்னார்கள்.
உடனே குழந்தை பரிதாபமாக தாயை பார்த்தது. அவள், ‘என்னால இன்றைக்கு லீவு போட முடியாது. உங்கப்பாதான் லீவு போடணும்’ என்றாள். தந்தையோ, ‘இன்றைக்கு குழந்தையை கொண்டு விடுவது, கூட்டி வருவது எல்லாம் உன் கணக்கு. அவளுக்கு ஸ்கூல் இல்லாவிட்டாலும் நீதான் கவனித்துக்கொள்ளவேண்டும்’ என்றார். தாயோ தனக்கு முக்கியமான வேலை இருக்கிறது. அதனால் லீவு போட முடியாது என்று வாதிட்டாள்.
வழக்கம்போல், யார் லீவு எடுப்பது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை குழந்தையிடம் விடாமல் இருவருமே கடும் வாக்குவாதம் செய்தார்கள். அதை தாங்கிக்கொள்ள முடியாத குழந்தை, ‘இரண்டு பேருமே போங்க! நான் தனியாக இருந்துகொள்கிறேன்’ என்றது.
இரண்டு பேரும் வேலைக்கு போய்விட்டு, மாலையில் சீக்கிரமாகவே திரும்பினார்கள். வீட்டில் குழந்தை இல்லை. ஒரு கடிதம் மட்டும் இருந்தது.
‘எனக்காகத்தான் நீங்க வேலைபார்க்கிறதாகவும், சம்பாதிக்கிறதாகவும் சொல்றீங்க. ஆனால் ஸ்கூல் ஒருநாள் லீவுன்னாலே எனக்கு பயமாக இருக்கிறது. உங்க சண்டையை என்னால் தாங்கிக்க முடியலை. இன்னொரு தங்கச்சியோ, தம்பியோ இருந்தால் அதுகிட்டேயாவது என் கவலையை சொல்லிக்கலாம். அதுக்கும் வழியில்லை. என்னால உங்களுக்குள் சண்டை எதுக்கு! நானே எங்கேயாவது போயிடுறேன்’ என்று குழந்தைத்தனமாக கிறுக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டது.
ராத்திரி முழுக்க தேடி, விடியற்காலையிலே அந்த குழந்தையை கண்டுபிடிச்சிட்டாங்க!
உங்க வீடுகளிலும் குழந்தைகள் இருக்கத்தானே செய்யும்! இந்த மாதிரி அதுக முன்னால நின்று நீயா, நானா? போராட்டம் நடத்தாதீங்கன்னு சொல்ல வர்றோம். அவ்வளவுதானுங்க..!
http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/07/19171004/Usarayya-usaru.vpf
இரண்டு பேரும் அவரவர் துறையில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். பாசம் நிறைந்த தம்பதியாக அவர்கள் இருந்தாலும், ‘மனைவி மேலும் முன்னேறி தன்னைவிட உயர்ந்த அந்தஸ்துக்கு போய்விடக்கூடாதே’ என்ற எண்ணம் கணவருக்கும்– ‘கணவரைவிட தனது அந்தஸ்து தாழ்ந்துவிட்டால், அவர் தன்னை மதிக்கவேமாட்டார்’ என்ற சிந்தனை மனைவியிடமும் இருந்துகொண்டே இருந்ததால், இருவருமே வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். குடும்ப விஷயங்கள் அனைத்தையும் அவர்கள் மனம்விட்டுப் பேசினாலும், தவறிக்கூட அவர்கள் அலுவலக விஷயங்களை பேசிக்கொள்வதில்லை. ஏன்என்றால் ஏதாவது நெருக்கடிக்கு ஆலோசனை கேட்கப்போய், ‘இதுதான் சரியான நேரம் என்று தவறான ஆலோசனை கொடுத்து காலை வாரி விட்டுவிடக் கூடாதே!’ என்ற அவநம்பிக்கை அவர்கள் இருவரிடமுமே இருந்துகொண்டிருந்தது.
மகள் மீது இருவரும் உயிரையே வைத்திருந்தார்கள். சொத்து வாங்கும்போதும், காரை அடிக்கடி மாற்றும்போதும், பெருமளவில் பணத்தை டெபாசிட் செய்யும்போதும் மகளைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே ‘எல்லாம் உனக்காகத்தான்!’ என்பார்கள். அதை கேட்கவே அந்த குழந்தைக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.
வழக்கம்போல் அவசர அவசரமாக கணவன், மனைவி இருவரும் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். எந்தெந்த நாளில் யார் குழந்தையை கொண்டுபோய் பள்ளியில் விட்டுவிட்டு, மாலையில் அழைத்து வரவேண்டும் என்பதற்கு முதலிலே கருத்தொருமித்து ஒரு ‘டைம்டேபிள்’ போட்டுவைத் திருக்கிறார்கள். அதன்படி, அன்று குழந்தையை கொண்டுபோய் பள்ளியில் விடுவது– அழைத்து வருவது இரண்டும் தாயின் வேலை!
குழந்தைக்கு எப்போதெல்லாம் பள்ளிவிடுமுறை என்பதை முதலிலே தெரிந்து கொண்டு அதற்கு தக்கபடி யாராவது ஒருவர் லீவு போட்டு குழந்தையை கவனித்துக்கொள்வார்கள். ஆனால் ‘யார் லீவு எடுப்பது?’ என்பதில் பெரும்பாலும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் எழும். கடைசியில் ஒருவழியாக சமாதானமாகி ‘எங்களில் யார் லீவு எடுக்கவேண்டும் என்பதை நீயே சொல்?’ என்று குழந்தை பக்கம் பிரச்சினையை திருப்பிவிடுவார்கள்.
குழந்தை ‘அப்பா பெயரை சொல்வதா? அம்மா பெயரை சொல்வதா?’ என்று தெரியாமல் ரொம்பவும் குழம்பிப்போகும். இருவரில் யார் பெயரை குழந்தை சொன்னாலும் கொஞ்சநேரம் திட்டுவிழும். ‘தன் பெயரை சொல்லிவிட்டதற்காக மட்டுமல்ல.. அடுத்தும் தன் பெயரை சொல்லிவிடக்கூடாது’ என்பதற்காக லேசாக குழந்தையை மிரட்டிவைப்பார்கள்.
அன்று குழந்தையை பள்ளியில் கொண்டுவிடுவது தனது வேலை என்பதால், தாயார் அவசரமாக குழந்தையை கிளப்பிக்கொண்டிருந்தாள். அப்போது போன் வந்தது. ‘தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று பள்ளிக்கு விடுமுறை’ என்று தகவல் சொன்னார்கள்.
உடனே குழந்தை பரிதாபமாக தாயை பார்த்தது. அவள், ‘என்னால இன்றைக்கு லீவு போட முடியாது. உங்கப்பாதான் லீவு போடணும்’ என்றாள். தந்தையோ, ‘இன்றைக்கு குழந்தையை கொண்டு விடுவது, கூட்டி வருவது எல்லாம் உன் கணக்கு. அவளுக்கு ஸ்கூல் இல்லாவிட்டாலும் நீதான் கவனித்துக்கொள்ளவேண்டும்’ என்றார். தாயோ தனக்கு முக்கியமான வேலை இருக்கிறது. அதனால் லீவு போட முடியாது என்று வாதிட்டாள்.
வழக்கம்போல், யார் லீவு எடுப்பது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை குழந்தையிடம் விடாமல் இருவருமே கடும் வாக்குவாதம் செய்தார்கள். அதை தாங்கிக்கொள்ள முடியாத குழந்தை, ‘இரண்டு பேருமே போங்க! நான் தனியாக இருந்துகொள்கிறேன்’ என்றது.
இரண்டு பேரும் வேலைக்கு போய்விட்டு, மாலையில் சீக்கிரமாகவே திரும்பினார்கள். வீட்டில் குழந்தை இல்லை. ஒரு கடிதம் மட்டும் இருந்தது.
‘எனக்காகத்தான் நீங்க வேலைபார்க்கிறதாகவும், சம்பாதிக்கிறதாகவும் சொல்றீங்க. ஆனால் ஸ்கூல் ஒருநாள் லீவுன்னாலே எனக்கு பயமாக இருக்கிறது. உங்க சண்டையை என்னால் தாங்கிக்க முடியலை. இன்னொரு தங்கச்சியோ, தம்பியோ இருந்தால் அதுகிட்டேயாவது என் கவலையை சொல்லிக்கலாம். அதுக்கும் வழியில்லை. என்னால உங்களுக்குள் சண்டை எதுக்கு! நானே எங்கேயாவது போயிடுறேன்’ என்று குழந்தைத்தனமாக கிறுக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டது.
ராத்திரி முழுக்க தேடி, விடியற்காலையிலே அந்த குழந்தையை கண்டுபிடிச்சிட்டாங்க!
உங்க வீடுகளிலும் குழந்தைகள் இருக்கத்தானே செய்யும்! இந்த மாதிரி அதுக முன்னால நின்று நீயா, நானா? போராட்டம் நடத்தாதீங்கன்னு சொல்ல வர்றோம். அவ்வளவுதானுங்க..!
http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/07/19171004/Usarayya-usaru.vpf
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உஷாரய்யா உஷாரு!
அருமையான படிப்பினை. குழந்தை முன்பு நாம் வீம்புக்காக சண்டை பிடித்தால் இப்படித்தான் நடக்கும். குழந்தையை பார்த்துக்கொள்ள யாரையாவது வேலைக்கு வைத்திருக்கலாம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: உஷாரய்யா உஷாரு!
மிக அருமையான படிப்பினை அக்கா.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: உஷாரய்யா உஷாரு!
அருமையான படிப்பினைக் கதை.
இப்படித்தான் பலபேர் வாழ்க்கையின் குறிக்கோள் தெரியாமல் பணம் பணம் என ஓடி ஓடி உழைக்கிறார்கள். பணம் சம்பாரிப்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை அறியாமல் அதுவே வாழ்க்கை என எண்ணி தனது அன்புக்கு ஏங்குபவர்களுக்கு நேரம் ஒதுக்காமல் அவர்களை உதாசினப்படுத்தி இளமையையும், வாலிபத்தையும் ஆரோக்கியத்தையும் பணம் தேடுவதிலேயே செலவலித்து வாழ்க்கையை வாழாமலேயே மறைந்து போகிறார்கள்.
இப்படித்தான் பலபேர் வாழ்க்கையின் குறிக்கோள் தெரியாமல் பணம் பணம் என ஓடி ஓடி உழைக்கிறார்கள். பணம் சம்பாரிப்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை அறியாமல் அதுவே வாழ்க்கை என எண்ணி தனது அன்புக்கு ஏங்குபவர்களுக்கு நேரம் ஒதுக்காமல் அவர்களை உதாசினப்படுத்தி இளமையையும், வாலிபத்தையும் ஆரோக்கியத்தையும் பணம் தேடுவதிலேயே செலவலித்து வாழ்க்கையை வாழாமலேயே மறைந்து போகிறார்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: உஷாரய்யா உஷாரு!
சிந்திக்க வைக்கும் சிறந்த கதை வீட்டில் நீயா நான் பிரச்சினை வேண்டாம் எப்பவும் அன்பாவும் பாசமாக புரிந்து கொண்டு வாழ பழகிக் கொள்வோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உஷாரய்யா உஷார்!
» உஷார் ஐயா உஷாரு!
» கோடை வந்துருச்சு உஷாரு.
» கோடை வந்துருச்சு.....உஷாரு
» உள்ளே தள்ளும் முன் உஷாரு ஹார்மோன் சிக்கன்; காத்திருக்கும் சிக்கல்!
» உஷார் ஐயா உஷாரு!
» கோடை வந்துருச்சு உஷாரு.
» கோடை வந்துருச்சு.....உஷாரு
» உள்ளே தள்ளும் முன் உஷாரு ஹார்மோன் சிக்கன்; காத்திருக்கும் சிக்கல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|