சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்! Khan11

கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்!

Go down

கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்! Empty கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்!

Post by rammalar Wed 27 Feb 2019 - 14:34

கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்! E_1314616812





இரவை வைத்திருக்கிறது
உன் மடி.
உன்விரல்கள் கோத
கிடைக்கும் மழைப் பகல்.
மெல்லிசைப் பாகில் 
ஊறி மிதக்கும்
உன் வார்த்தைகள்,
என் பிறையின் 
மீந்த வெற்றிடத்தில்
நிரம்பும் 
உன் புன்னகை
பாதங்களடியில்
சருகாய் உடைகிறது காலம்,
காத்திருப்பின் 
கடைசி இழையைத்
தட்டிச் செல்கின்றன
தட்டான்கள்.
-----
- ஜா.பிராங்க்ளின் குமார்,
-
---------------------------


உணர்விருக்கை
--
பேருந்து நிறுத்த 
சிமெண்ட் இருக்கையிடம்
இருக்கக் கூடும்
எண்ணற்ற கதைகள்
முக்கிய சாலையிலிருந்து
ஒதுங்கி நிற்கும்
கிராமத்து மாந்தர்களின்
நடைப்பயணக் குறிப்புகள்
சுமை தூக்கிகளாய்
பள்ளி செல்லும்
சின்னஞ் சிறுசுகளின்
கண்களில் மின்னும்
வண்ணக் கனவுகள்
“என் ஆளு வருவா
நீ போடா மாப்ள’
காத்திருக்கும்
இளவட்டங்களின்
இனிய அவஸ்தைகள்
ஜன சந்தடிகள்
எதுமற்ற போதுகளில் 
தனிமையில் காயும்
நண்பகலின் வெறுமை
அடக்கி வைப்பார்
யாரும் இல்லாமல்
துள்ளி நடமிடும்
மேகக் குழந்தையின்
வியர்வைக் கதைகள்
கூடவே..
கூப்பிடும் தூரத்தில்
இல்லாத நீ
அருகினில் அமர்ந்து
கைகோர்த்துப் பேசுகின்ற
பல கதைகளும்
-
-கல்யாணி சுரேஷ்
-
------------------------


உயிர்த்தெழுதல்
---
போய்ச்சேருமிடத்தில்
புதிதாய் ஒன்று
இருக்குமென்று
ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள்
அம்மா.
புறப்படும்போது
வாகனமொன்றில்
அடிப்பட்டு இறந்த
வீட்டு புனைக்காக
விட்டுவிட்டு அழுதுகொண்டிருந்தான்
குட்டிப் பையன்.
பயணம் முழுவதும்
அநேகர் மனதில்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழந்து
மரித்துக் கொண்டிருந்தது.
அந்தப் பூனை.
-
----
- செல்வராஜ் ஜெகதீசன்
-
------------------------------


சித்திரம்!
--
கடலின் ஈரத்தைச்
சுமந்து வருகிறது
அலைகள்
அலையின் ஈரத்தைக்
கவர்ந்து செல்கிறது
காற்று
காற்றின் ஸ்பரிசத்தில்
அலை. அலையாய்க்
கடலின் நுண்சித்திரம்
ஆங்கோர் வீட்டின்
சுவரெங்கும்!
---
-ஒவியர் அ.செல்வம் 
------------------
நன்றி - கல்கி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum