Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Today at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
எது சரி… எது தவறு…!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
எது சரி… எது தவறு…!
நடக்கக் கூடாதவை -நடந்தால், தீமை தரக்கூடியவைகளை
செய்ய முனைவோம். இது, மனித இயல்பு.
தந்தைக்கு உண்டான பெரும் பிரச்னை; அதிலிருந்து அவரை
காப்பாற்ற, மகள் செய்த செயலை பார்க்கலாம்; தைரியம்
வரும்.
புத்தர், ஊர் ஊராக போய், உபதேசம் செய்து, நல்வழி காட்டி
வந்த காலம் அது.
பெரும் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு, உத்பலா
எனும் பெண் இருந்தாள்.
துாய்மையான மனம் படைத்த, உத்பலா, அழகில் ஈடு
இணை இல்லாதவள். அவளின் அழகு, ஊர் முழுதும்
பேசப்பட்டது. ‘உத்பலாவை நான் தான் திருமணம் செய்து
கொள்வேன்…’ என்று, பெரிய பெரிய பணக்காரர்கள்,
போட்டி போட்டனர்.
உத்பலாவை மணக்கும் போட்டியில், அரச குமாரர்கள் கூட
இருந்தனர்.
‘அரச குமாரர்கள் உட்பட, பெரிய பெரிய மனிதர்களெல்லாம்,
உத்பலாவை மணக்கப் போட்டி போடுகின்றனரே… என்ன
செய்வது? யாராவது ஒருவருக்குத்தானே, திருமணம் செய்து
கொடுக்க முடியும்…
‘அப்படி, யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுத்தால்,
மற்றவர்கள், அவனை கொன்று விடலாம்… மகளுக்கும்
ஆபத்து வரும்… என்ன செய்வது?’ என்று நடுங்கினார்,
உத்பலாவின் தந்தை.
மனக்கவலையை யாரிடமாவது சொன்னால்,
அது குறையுமல்லவா… உத்பலாவை அழைத்த தந்தை,
அவளிடம், நிலைமையை விளக்கிக் கூறினார்.
பொறுமையாகக் கேட்ட உத்பலா, ‘அப்பா… ஏன் கவலை?
என்ன செய்யலாம், சொல்லுங்கள்…’ என, கேட்டாள்.
சற்று நிதானித்த தந்தை, ஒருவழியாக தன் மனதில் இருந்ததை
வெளிப்படுத்தினார்…
‘அம்மா… உன்னிடம் இதைச் சொல்லவே, தயக்கமாக இருக்கிறது.
இருந்தாலும், வேறு வழியில்லை…’ என்று இழுத்தார்.
‘என்ன அப்பா இது… தயக்கம் வேண்டாம்; சொல்லுங்கள்…
நீங்கள் என்ன சொன்னாலும், செய்கிறேன்…’ என்றாள், உத்பலா.
மனதைக் கட்டுப்படுத்தியவர், ‘மகளே… திருமணமே செய்து
கொள்ளாமல், நீ பவுத்தத் துறவியாக மாறுவது தான்,
இந்தப் பிரச்னையில் இருந்து, தப்பிப் பிழைக்க ஒரே வழி…
நீ என்ன சொல்கிறாய்?’ எனக் கேட்டார்.
கைகளைக் கொட்டி, மனதில் இருந்த மகிழ்ச்சியை,
அப்படியே முகத்தில் வெளிப்படுத்தினாள், உத்பலா.
‘அப்பா… இதைச் சொல்லவா இந்த பாடு பட்டீர்கள்…
நீங்கள் எதைச் சொன்னாலும், அது என் நல்லதுக்காக தான்
என்பது, எனக்கு தெரியாதா… நீங்கள் சொன்னபடி, பவுத்தத்
துறவி ஆகிறேன்…’ என்றவள், மறுநாளே, துறவு பூண்டாள்.
அவள் அழகுக்காக, அவளை மணக்க முயன்றோர் உட்பட
அனைவரும், அவள் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.
புத்தர் காலத்தில் மட்டுமல்ல, குடும்ப நன்மைக்காக,
தங்களையே தியாகம் செய்த, உத்பலா போன்ற பல பெண்கள்,
இன்றும் நம் தமிழகத்தில் நிறைய பேர் உள்ளனர்.
அவர்களின் தியாகத்தை மதிக்கிறோமோ இல்லையோ…
அப்படிப்பட்ட, உத்பலாக்களை அவமானப்படுத்தாமல்
இருந்தாலே போதும்!
–
——————————–
பி.என்.பரசுராமன்
வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தவறு – தவறு தவறுக்கு மேல் தவறு!
» ஆறு தவறு
» ஒரு நிமிடத் தவறு...!
» தவறுக்குத் தவறு நாம் செய்வதா...???
» மாற்றுத்திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு
» ஆறு தவறு
» ஒரு நிமிடத் தவறு...!
» தவறுக்குத் தவறு நாம் செய்வதா...???
» மாற்றுத்திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|