Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
உண்மையை சந்தேகப்படாதீர்கள்!
Page 1 of 1
உண்மையை சந்தேகப்படாதீர்கள்!
நள்ளிரவு…
அந்த சோளக் கொல்லையில் திடீரென ஏதோ சலசலப்பு!
சத்தம் கேட்டு ஓடி வந்தான் காவல் காரன்.
அங்கு மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
‘மாட்டை எப்படியாவது பிடித்துவிட வேண்டும்’ என்ற
முடிவுடன் வேகமாகத் தாவி, மாட்டின் வாலைக்
கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். மறுகணம், மாடு
மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது!
அப்போதுதான் தெரிந்தது… அது, சிவபெருமானின் நந்தி
என்று. நந்தி, கயிலாயத்தை நோக்கிப் பறக்க, இவனும்
அதன் வாலைப் பிடித்துத் தொங்கியபடி பறந்தான்.
இருவரும் கயிலாயத்தை அடைந்தனர்.அங்கு சிவனாரை
கண்டதும், ‘`இறைவா, இது நியாயமா? உங்கள் நந்தி
என் சோளக் கொல்லையை நாசம் செய்துவிட்டது’’ என்று
முறையிட்டான்.
‘’கவலை வேண்டாம். இழப்பை ஈடுகட்ட இதோ…
பை நிறைய தங்கக் காசுகள்!’’ என்று ஒரு பையைக்
கொடுத்தார் இறைவன். அவரை வணங்கி, பணிவுடன்
பையைப் பெற்றுக் கொண்டவன்,
நந்தியின் உதவியுடன் பூமிக்கு வந்து சேர்ந்தான்.
வீட்டை அடைந்ததும், ‘இது, உண்மையிலேயே தங்கக்
காசுதானா?’ என்று அவனுக்குச் சந்தேகம் எழுந்தது.
உடனே ஒரு காசை மட்டும் எடுத்துக் கொண்டு நண்பனின்
நகைக் கடைக்குச் சென்றான்.
தங்கக் காசை நண்பனிடம் தந்து, ‘’இது தங்கம்தானா…
உரசிப் பார்த்துச் சொல்!’’ என்றான். நண்பனும் உரசிப்
பார்த்தான்.
‘அட! விலை மதிப்பு இல்லா தங்கமாயிற்றே.
இது, இவனுக்கு எப்படிக் கிடைத்தது?’ என்று யோசித்த
நண்பன், ‘இது வெறும் பித்தளைதான்!
உன்னை ஏமாற்றியவர் யார்?’ என்று கேட்டான்.
இவனும் நடந்ததை விவரித்தான்.
அன்றிரவு! மீண்டும் நந்தி வந்தது.
‘பித்தளை யைக் கொடுத்து ஏமாற்றுவது உனக்கு அழகா?’
என்று இறைவனைக் கேட்க வேண்டும் என முடிவு செய்தவன்,
நந்தியின் வாலைப் பிடித்தான்.
நந்தி உயரே எழும்பியது. நம்ம ஆசாமி, அதன் வாலைப்
பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்தான். அப்போது, எவரோ
இவன் காலைப் பிடித்து இழுப்பதாக உணர்ந்தான்.
மெள்ள குனிந்து பார்த்தான்.
அட… ‘பித்தளை’ என்று பொய் சொன்ன நண்பன்!
ஆசை யாரை விட்டது. நந்தி பறந்து கொண்டிருக்க அதன்
வாலைப் பிடித்தபடி இவன், இவனது காலைப் பிடித்தபடி
நண்பன்!
நண்பன் கேட்டான்
‘’ஆமாம்… உனக்கு எவ்வளவு தங்கக் காசுகள் கொடுத்தார்கள்?’’
உடனே, நந்தியின் வாலைப் பிடித்துத் தொங்கிக்
கொண்டிருந்த நம்ம ஆசாமி, உற்சாகத்துடன்
இரண்டு கைகளையும் விரித்து, ‘இவ்வளவு!’ என்றான்.
அவ்வளவுதான்…
இரண்டு பேரும் பூமியில் இருந்த அதே சோளக்
கொல்லையில் வந்து விழுந்தனர்.
இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?
வாலைப் பிடித்தவன், உண்மையைச் சந்தேகப் பட்டான்.
காலைப் பிடித்தவன், பேராசைப் பட்டான். உண்மையைச்
சந்தேகப்படுகிறவர்களுக்கும் பேராசைப் படுகிறவர்களுக்கும்
இதுவே கதி என்கிறது ஆன்மிகம்.
உண்மையை சந்தேகப்பட்டால், ‘பொத்’தென்று விழ நேரிடும்,
உஷார்!
---------------------
தென்கச்சி சுவாமிநாதன்,
ஓவியம்: சேகர்
சக்தி விகடன் இதழிலிருந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஒரு உண்மையை சொல்லாம மறைச்சீட்டீங்களே…!!!
» உண்மையை ஊமையாக்காதே ..
» உண்மையை நாம் உணர்வதில்லை.
» உண்மையை தவிர... (கலைநிலா )
» இந்த உண்மையை வரைந்த ஓவியன்!
» உண்மையை ஊமையாக்காதே ..
» உண்மையை நாம் உணர்வதில்லை.
» உண்மையை தவிர... (கலைநிலா )
» இந்த உண்மையை வரைந்த ஓவியன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|