Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில்
191 அடி உயர கோபுரம், 10,000 சிலைகள், 183 ஏக்கர் - அமெரிக்காவில்
உருவானது 2வது பெரிய இந்துக்கோயில்!
-
பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோயில் வளாகம்
183 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது நியூயார்க் நகரில் அமைந்துள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தைப்
போல நான்கு மடங்கு பெரியது.
உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில் என்னும் பெருமையை
உடையது கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கூர்வாட் விஷ்ணு
கோயில். சுமார் 402 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் பரந்து
விரிந்து காணப்படும்.
இரண்டாவது பெரிய இந்துக் கோயிலாக 156 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ள ஶ்ரீரங்கம் அரங்கநாதன் கோயில் திகழ்ந்தது. தற்போது
அந்தப் பெருமையை அமெரிக்காவில் அமைந்துள்ள நியூஜெர்சி
அக்ஷர்தாம் கோயில் தட்டிச் செல்கிறது. சுமார் 183 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயில் 'பாப்ஸ்' என்கிற ஆன்மிக
அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது.
பாப்ஸ் (BAPS) என்று அழைக்கப்படும் போச்சாசன்வாசி ஶ்ரீ அக்ஷர்
புருஷோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா என்கிற அமைப்பு
அமெரிக்காவில் ட்ரென்டன் மாநகரின் அருகில் மிகப்பெரிய கோயில்
ஒன்றை உருவாக்கியிருக்கிறது.
பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோயில் வளாகம் 183 ஏக்கர்
நிலப்பரப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது நியூயார்க்
நகரில் அமைந்துள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தைப்போல நான்கு மடங்கு
பெரியது. பளிங்குக் கற்கள் கொண்டு எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும்
இந்த ஆலயத்தில் 10 ஆயிரம் சிலைகள் உள்ளன.
இந்த வளாகத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.
இதன் கட்டுமானத்துக்காக உலகெங்கிலும் இருந்து 2 மில்லியன் கன அடி
உயர் ரகப் பளிங்குக் கற்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தியச் சிற்பிகள்
அவற்றைக் கலைநயத்துடன் சிற்பங்களாக தூண்களாக உருவாக்கி
இருக்கிறார்கள்.
இவற்றில் பிரதான கோயில் ஒன்றின் கோபுரம் 191 அடி உயரத்தில் கற்கள்
கொண்டே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயில் உருவாக்கத்தில் சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் கடந்த
12 ஆண்டுகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் கடின உழைப்பில்
உருவான இந்த ஆலயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் - 8) அன்று
தொடக்க விழா கண்டது.
இதையொட்டிப் பல சர்வதேசப் பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தக் கோயில் வளாகத்தில் இந்துக்களின் சடங்குகள் மற்றும்
சம்பிரதாயங்கள் குறித்த ஆன்மிக அருங்காட்சியம் ஒன்றும் அமைக்கப்
பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் ஆன்மிகம் குறித்து அறிந்துகொள்ள
உதவும் பல அரங்குகள் இந்த வளாகத்தில் உள்ளன.
இது அமெரிக்க வாழும் இந்துக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்
என்கிறார்கள்.
இதுகுறித்துக் கோயில் நிர்வாகம் சார்பில் பேசும்போது, "இது சமகாலத்தில்
கட்டப்பட்ட இந்துக்கோயில்களில் மிகப்பெரியது. அமெரிக்க வாழ்
இந்துக்களுக்குப் பெருமை சேர்க்கும் மிக பிரமாண்டமான கட்டுமானம் இது"
என்கிறார்கள்.
சர்ச்சை
இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகளின் போது 2021-ம் ஆண்டு சில
பணியாளர்கள் அமெரிக்க நீதிமன்றத்தை நாடினர். கோயில் நிர்வாகம்
ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்குவதாகவும்
குறைந்தபட்ச சம்பள விதியைப் பின்பற்றாமலும் செயல்படுவதாகவும் புகார்
தெரிவித்தனர். இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் வளாகத்தில் சோதனை
நடத்தி வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் கோயில் வளாகம்
பக்தர்கள் பார்வைக்காக வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் திறக்கப்பட
உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நன்றி: இல.சைலபதி (விகடன்)
உருவானது 2வது பெரிய இந்துக்கோயில்!
-
பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோயில் வளாகம்
183 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது நியூயார்க் நகரில் அமைந்துள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தைப்
போல நான்கு மடங்கு பெரியது.
உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில் என்னும் பெருமையை
உடையது கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கூர்வாட் விஷ்ணு
கோயில். சுமார் 402 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் பரந்து
விரிந்து காணப்படும்.
இரண்டாவது பெரிய இந்துக் கோயிலாக 156 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ள ஶ்ரீரங்கம் அரங்கநாதன் கோயில் திகழ்ந்தது. தற்போது
அந்தப் பெருமையை அமெரிக்காவில் அமைந்துள்ள நியூஜெர்சி
அக்ஷர்தாம் கோயில் தட்டிச் செல்கிறது. சுமார் 183 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயில் 'பாப்ஸ்' என்கிற ஆன்மிக
அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது.
பாப்ஸ் (BAPS) என்று அழைக்கப்படும் போச்சாசன்வாசி ஶ்ரீ அக்ஷர்
புருஷோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா என்கிற அமைப்பு
அமெரிக்காவில் ட்ரென்டன் மாநகரின் அருகில் மிகப்பெரிய கோயில்
ஒன்றை உருவாக்கியிருக்கிறது.
பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோயில் வளாகம் 183 ஏக்கர்
நிலப்பரப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது நியூயார்க்
நகரில் அமைந்துள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தைப்போல நான்கு மடங்கு
பெரியது. பளிங்குக் கற்கள் கொண்டு எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும்
இந்த ஆலயத்தில் 10 ஆயிரம் சிலைகள் உள்ளன.
இந்த வளாகத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.
இதன் கட்டுமானத்துக்காக உலகெங்கிலும் இருந்து 2 மில்லியன் கன அடி
உயர் ரகப் பளிங்குக் கற்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தியச் சிற்பிகள்
அவற்றைக் கலைநயத்துடன் சிற்பங்களாக தூண்களாக உருவாக்கி
இருக்கிறார்கள்.
இவற்றில் பிரதான கோயில் ஒன்றின் கோபுரம் 191 அடி உயரத்தில் கற்கள்
கொண்டே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயில் உருவாக்கத்தில் சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் கடந்த
12 ஆண்டுகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் கடின உழைப்பில்
உருவான இந்த ஆலயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் - 8) அன்று
தொடக்க விழா கண்டது.
இதையொட்டிப் பல சர்வதேசப் பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தக் கோயில் வளாகத்தில் இந்துக்களின் சடங்குகள் மற்றும்
சம்பிரதாயங்கள் குறித்த ஆன்மிக அருங்காட்சியம் ஒன்றும் அமைக்கப்
பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் ஆன்மிகம் குறித்து அறிந்துகொள்ள
உதவும் பல அரங்குகள் இந்த வளாகத்தில் உள்ளன.
இது அமெரிக்க வாழும் இந்துக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்
என்கிறார்கள்.
இதுகுறித்துக் கோயில் நிர்வாகம் சார்பில் பேசும்போது, "இது சமகாலத்தில்
கட்டப்பட்ட இந்துக்கோயில்களில் மிகப்பெரியது. அமெரிக்க வாழ்
இந்துக்களுக்குப் பெருமை சேர்க்கும் மிக பிரமாண்டமான கட்டுமானம் இது"
என்கிறார்கள்.
சர்ச்சை
இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகளின் போது 2021-ம் ஆண்டு சில
பணியாளர்கள் அமெரிக்க நீதிமன்றத்தை நாடினர். கோயில் நிர்வாகம்
ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்குவதாகவும்
குறைந்தபட்ச சம்பள விதியைப் பின்பற்றாமலும் செயல்படுவதாகவும் புகார்
தெரிவித்தனர். இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் வளாகத்தில் சோதனை
நடத்தி வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் கோயில் வளாகம்
பக்தர்கள் பார்வைக்காக வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் திறக்கப்பட
உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நன்றி: இல.சைலபதி (விகடன்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உலகின் பிரமாண்ட கட்டடம்..!
» உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடம்!
» உலகின் இரண்டாவது அழகி பிரியங்கா சோப்ரா
» உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet )
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடம்!
» உலகின் இரண்டாவது அழகி பிரியங்கா சோப்ரா
» உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet )
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|