Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
----------
அனுமன் சிறந்த ஸ்ரீராம பக்தர். எந்த இடத்தில், ‘ராம’ நாமம் ஒலிக்கிறதோ
அங்கே நிச்சயம் ஆஞ்சனேயப் பெருமான் இருப்பார் என்பது ஐதீகம். மிகுந்த
பராக்கிரமசாலியும், வரப்பிரசாதியுமான கடவுள் இவர்.
அனுமனை பக்தியோடும், நம்பிக்கையோடும் பூஜிக்கும் பக்தர்களின்
மனக்குழப்பங்கள், நோய்கள் தீர்ந்து, பணக்கஷ்டங்கள் விலகும்.
அனுமனை தரிசிக்க ஏற்ற நாட்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகள்
ஆகும். என்றும் சிரஞ்சீவியாய் இந்த பூமியில் இருப்பவர் ஆஞ்சனேய
சுவாமிகள். ஆஞ்சனேயருக்கு வடை மாலை, வெற்றிலை மாலை,
வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்வது வழக்கம்.
அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
அசுரன் ராவணன், சீதா தேவியை தூக்கிச் சென்று, அசோக வனத்தில்
சிறை வைத்திருந்தபோது அனுமன் சீதையை சந்தித்தார். ஸ்ரீராமரின்
கணையாழியை கொடுத்து சீதா தேவியிடம் இருந்து சூடாமணியைப்
பெற்றார். அப்போது சீதா தேவி மனம் மகிழ்ந்து அனுமனை ஆசீர்வதிக்க
எண்ணினார். அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வெற்றிலைக்
கொடி படர்ந்திருந்ததைப் பார்த்தார். சில வெற்றிலைகளைப் பறித்து,
அனுமனின் தலையில் போட்டு, ’இந்த இலை உனக்கு வெற்றியை
தரட்டும்’ என ஆசீர்வதித்தார்.
அதன் காரணமாகவே தாங்கள் நினைக்கும் காரியங்கள் வெற்றி பெற
வேண்டும் என்று பக்தர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தி
வழிபடுகின்றனர். சுப காரியங்களில் வெற்றிலை தாம்பூலம் வைத்துக்
கொடுப்பது, திருமணங்களில் மணமக்களை ஆசீர்வதிப்பதற்கு
வெற்றிலையில் பணம் வைத்துக் கொடுப்பது என்பது நடைமுறையில்
இருக்கிறது.
வடை மாலை சாத்துவதன் காரணத்தை அறிவோமா?
அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில்
செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல தோற்றமளித்த சூரியன், குழந்தை
அனுமனை மிகவும் கவர்ந்து விட்டது. அடுத்த கணமே சூரியனைக் கையில்
பிடிக்க எண்ணி, வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். ஒரு பச்சிளங்குழந்தை,
சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள்
திகைத்தனர்.
அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை
உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற
வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. அனுமனிடம் தோற்றுப்
போன ராகு பகவான், அவருக்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார்.
தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து
எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ, அவரை எந்தக் காலத்திலும் தான்
பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி
ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.
இந்த உணவுப் பண்டம் தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க
வேண்டும் எனவும் ராகு பகவான் சொன்னார்.
அதனால்தான் உளுந்தினால் ஆன வடைகளைத் தயாரித்து மாலையாக்கி
அனுமனுக்கு சாத்தி வழிபாடு நடைபெறுகிறது. இதனால் ராகு தோஷம் நிவர்த்தி
ஆவதுடன், அனுமனின் அருள் கிடைத்து, நாம் நினைத்த காரியமும் ஜயமாகிறது.
-
-எஸ்.விஜயலட்சுமி (கல்கி)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» முதுகு வலி ஏற்பட காரணம் தெரியுமா?
» ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?
» சென்னை சீரழிவுக்குக் காரணம் யார் தெரியுமா? - அதிர வைக்கும் உண்மைகள்!விகடன் கவர் ஸ்டோரி
» ஆண்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?
» சென்னை சீரழிவுக்குக் காரணம் யார் தெரியுமா? - அதிர வைக்கும் உண்மைகள்!விகடன் கவர் ஸ்டோரி
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|