சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை Khan11

அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை

Go down

அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை Empty அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை

Post by rammalar Sat 8 Jun 2024 - 20:39

அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை Vikramathithan-kathai-1-300x156

--
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன், மரத்தின் 
மீதேறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கிழே இறக்கி, தன் முதுகில் 
சுமந்து கொண்டு செல்லும் போது அவ்வேதாளம் விக்ரமாதித்தியனிடம்
 தான் ஒரு கதை சொல்லப்போவதாகவும் அக்கதையின் முடிவில் 
கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலை விக்ரமாதித்தியன் 
கூறவேண்டும் என்று கூறி,வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது… 
-
ஒரு முறை சந்திரகாந்தன் என்கிற மன்னன் “சிவபுரி” என்கிற 
நாட்டை ஆண்டு வந்தான். வீரத்திலும், கொடையிலும் சிறந்தவனான 
அம்மன்னனின் ஆட்சியில் மக்கள் எல்லோரும் நன்றாகவே வாழ்ந்து 
வந்தனர். 


ஒரு சமயம் மன்னன் சந்திரகாந்தனின் அரண்மனை வாயில் 
காப்பாளன் சந்திரகாந்தனிடம் வந்து “நமது நாட்டை எதிரி நாட்டு 
படைகள் தாக்கப் போவதாக” கூறினான். 


இதைக் கேட்டு திகைத்த மன்னன் “அரண்மனை வாயில் காப்பாளனான 
உனக்கு இது எப்படி தெரியும்”? எனக் கேட்டான். அதற்கு பதிலேதும் 
அளிக்காமல் அமைதியாக இருந்தான் அந்த வாயில் காப்பாளன்.


சில நாட்கள் கழித்து திடீரென்று எதிரி நாட்டுப் படைகள் சந்திரகாந்தனின் 
சிவபுரி நாட்டை தாக்கின. ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக இருந்த 
சந்திரகாந்தனும், அவனது படைகளும் மிகவும் வீரத்துடன் சண்டையிட்டு 
எதிரி நாடு படைகளை நாட்டை விட்டே துரத்தினர். 


அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை Mahabharatham3-300x214

அப்போது சந்திரகாந்தனுக்கு தன் அரண்மனை காவலன் கூறிய விஷயம் 
நினைவிற்கு வந்தது. மறுநாள் அவனை அழைத்து அவனுக்கு பரிசு தர 
எண்ணினான் மன்னன். அதன் படியே அடுத்த நாள் அரசவையைக் கூட்டி 
ஆயிரம் பொற்காசுகளை அக்காவலனுக்கு அளித்தான் மன்னன். 


சந்திரகாந்தன் அப்போது “நம் நாட்டை எதிரிகள் தாக்கப்போவது உனக்கு 
எப்படி முன்பே தெரியும்? என மன்னன் கேட்டான். அதற்கு அக்காவலன் 
தனக்கு சில நிகழ்வுகள் அது நிஜத்தில் நடப்பதற்கு முன்பே, தனது 
தூக்கத்தில் கனவுகள் மூலம் தெரிய வந்ததாக கூறினான். 


இதைக் கேட்ட சந்திரகாந்தன் “நீ ஆயிரம் பொற்காசுகளை வைத்துக்
கொள்ளலாம், ஆனால் நீ இப்போது காவலன் பணியிலிருந்து நீக்கப்
படுகிறாய்” எனக் கூறினான். 


இங்கு இக்கதையை நிறுத்திய வேதாளம், விக்ரமாதித்தியனிடம் 
“விக்ரமாதித்தியா தன் நாட்டு வெற்றிக்கு காரணமாக இருந்த தன் 
அரண்மனைக் காவலனுக்கு ஆயிரம் பொற்காசுகளை கொடுத்துவிட்டு, 
அவனை பணியிலிருந்து சந்திரகாந்தன் ஏன் நீக்கினான்? எனக்கேட்டது. 


சற்று நேரம் சிந்தித்த விக்ரமாதித்தியன், “காவலன் தன் கனவின் மூலம் 
எச்சரித்து தன் நாட்டைக் காப்பாற்றியதற்கு பரிசாக அவனுக்கு ஆயிரம் 
பொற்காசுகள் தரப்பட்டது, அதே நேரத்தில் தன் அரண்மனை காவலன் 
பணியின் போது அவ்வீரன் தூங்கியிருக்கிறான். அப்போதே அவனுக்கு 
அக்கனவு ஏற்பட்டிருக்கிறது. தன் கடமையில் அலட்சியமாக இருந்த 
காரணத்தினால் அவனை பணியில் இருந்து மன்னன் சந்திரகாந்தன் 
நீக்கியது சரியே” என்று பதிலளித்தான். 


விக்ரமாதித்தியனின் இப்பதிலைக் கேட்ட வேதாளம் மீண்டும் 
பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.
-
-சத்தீஷ்-தெய்வீகம்.காம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum