சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Khan11

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

+9
jaleelge
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
றஸ்ஸாக்
நண்பன்
ராகவா
கவியருவி ம. ரமேஷ்
rammalar
பானுஷபானா
13 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sat 22 Mar 2014 - 23:08

First topic message reminder :

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள் எனும் தலைப்பில் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பித்து  பூக்களின் படங்களில் பெயர்கள் மட்டுமல்லாமல் அதன் தாவரவியல் பெயர், மருத்துவகுணங்கள், என அறிவியல் ரிதியாகவும்  தொகுக்கப்பட்டது.


இதுவரை தொகுக்கப்பட்ட பூக்களின் பட்டியல்  
பெயர்களின் மேல் சுட்டவும்.

  1. செங்காந்தள்
  2. ஆம்பல்
  3. அனிச்சம்
  4. குவளை
  5. குறிஞ்சி
  6. வெட்சி
  7. செங்கொடுவேரி
  8. தேமாம்பூ
  9. மணிச்சிகை
  10. உந்தூழ்
  11. கூவிளம் பூ
  12. எறுழம்
  13. சுள்ளி
  14. கூவிரம்
  15. வடவனம்
  16. வாகை
  17. குடசம்
  18. எருவை
  19. செருவிளை
  20. கருவிளம்
  21. பயினி
  22. வானி
  23. குரவம்
  24. பசும்பிடி
  25. வகுளம்
  26. காயா
  27. ஆவிரை
  28. வேரல்
  29. சூரல்
  30. சிறுபூளை
  31. குறு்நறுங்கண்ணி
  32. குருகிலை
  33. மருதம்
  34. கோங்கம
  35. போங்கம்
  36. திலகம்
  37. பாதிரி
  38. செருந்தி
  39. அதிரல்
  40. சணபகம்
  41. கரந்தை
  42. குளவி
  43. மா
  44. தில்லை
  45. பாலை
  46. முல்லை
  47. குல்லை
  48. பிடவம்
  49. செங்கருங்காலி
  50. வாழை
  51. வள்ளி
  52. நெய்தல்
  53. தாழை
  54. தளவம்
  55. தாமரை
  56. ஞாழல்
  57. மௌவல்
  58. கொகுடி
  59. சேடல்
  60. செம்மல்
  61. சிறுசெங்குரலி
  62. கோடல்
  63. கைதை
  64. வழை
  65. காஞ்சி
  66. மணிக்குலை
  67. பாங்கர்
  68. மராஅம்
  69. தணக்கம்
  70. ஈங்கை
  71. இலவம்
  72. கொன்றை
  73. அடும்பு
  74. ஆத்தி
  75. அவரை
  76. பகன்றை
  77. பலாசம்
  78. பிண்டி
  79. வஞ்சி
  80. பித்திகம்
  81. சிந்துவாரம்
  82. தும்பை
  83. துழாய்
  84. தோண்றி
  85. நந்தி
  86. நறவம்
  87. புன்னாகம்
  88. பாரம்
  89. பீரம்
  90. குருக்கத்திப்பூ
  91. ஆரம்
  92. காழ்வை
  93. புன்னை
  94. நரந்தம் 
  95. நாகப்பூ
  96. இருவாட்சி
  97. குருந்தம் 
  98. வேங்கை
  99. புழகு



  1. மல்லிகையின் வெவ்வேறு இனங்கள
  2. விதைகளுக்கிடையிலான மாறுபாடுகள்
  3. குறுநறுங்கண்ணி போங்கம் திலகம் விதைகளின் வித்தியாசங்கள்!
  4. சங்ககால மலர்களின் பட்டியல் 


மலர்களில் கூறப்படும் மருத்துவக்குறிப்புக்களை  தகுந்த ஆலோசனையின்றி முயற்சித்து பார்க்க வேண்டாம்!

இத்தொகுப்பை நான் முழுமைப்படுத்த உதவிய விக்கிமீடியா, கற்க நிற்க [*படங்கள் ] மற்றும் அனைத்து இணைய தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.


Last edited by Nisha on Tue 18 Aug 2015 - 23:13; edited 27 times in total (Reason for editing : முதல் பதிவில் லிங்க இணைப்புக்காக)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by நேசமுடன் ஹாசிம் Mon 28 Apr 2014 - 16:22

அரிய பதிவு வாழை பற்றிய அறிவின்றியே அதை பயன்படுத்தியிருக்கிறோம் நன்றி


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sun 4 May 2014 - 13:52

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide60
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Ipomoea_batatas
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Untitled-5
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Sweet20potatott

வள்ளி என்பது கொடி. Sweet poடடொ,சக்கரவள்ளிக் கிழங்குஎனப்படும்.

குறிஞ்சி நிலத்தின் வள்ளி என்ற மலர் / கொடியின் பெயரே நிலத் தெய்வமான வள்ளிக்கும் ஆகிவந்துள்ளது. வஞ்சி, கொடிச்சி என்ற பெண்களின் பெயர்களும் மலர்களின் பெயர்களே. இன்றும் நம் பெண்களுக்கு தாமரை, மல்ககை, செண்பகம் என்றெல்லாம் பெயர் வைக்கும் மரபு உண்டு.

வள்ளி என்பது கிழங்கு தரும் கொடி. இது மலைகளில் தானே படரும். மாவலி எனப்படும் மாவள்ளிக் கிழங்குக் கொடியே இங்கு வள்ளி எனக் குறிப்பிடப்படுகிறது. இதம மாவலிக் கிழங்கை இக்காலத்தில் ஊறுகாய் போடப் பயன்படுத்துகின்றனர்.


  • மாகாளிக்கிழங்கு என்றும் அழைப்பர். நன்னாரியைப் போலிருக்கும்...நாட்டில் விளைந்தால் நன்னாரி, மலையில் விளைந்தால் மாகாளி என்பது பேச்சு வழக்கு... மருத்துவத்தில் உட்சூடு, பித்தம்,அரோசகம் சிலேட்டுமம்,வாதக்குற்றம் ஆகிய நோய்களைக் குணப்படுத்தும்... குளிர்ப் பானங்கள் தயாரிக்க இதன் சாறு பயன்படும்.
  • உணவாக: இவை வித்தியாசமான மணமும், சுவையும் கொண்டிருக்கும்... பிடித்தவர்களுக்குச் சுகமான அனுபவம்... இந்தக்கிழங்கை சுத்தமாக, மண்ணில்லாமல் கழுவி மேற்தோல்சீவிச் சிறுதுண்டுகளாக வெட்டி புளித்த ஒரே சீரான திடமுள்ள தயிரில் போட்டு, உப்பிட்டு, நன்றாக ஊறியதும் மோர் அல்லது தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகப்பிரமாதமாக இருக்கும்...சிலர் எலுமிச்சைபழச் சாற்றிலும் உப்பிட்டு ஊறவைத்துப் பயன்படுத்துவர்.

சர்க்கரை வள்ளிகிழங்கு அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது

ஆனைவள்ளி எனப்படும் நீர்வள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு விற்பனைக்கு வரும் கிழங்கு. இது யானையின் கால் அளவு பருமன் கொண்டது. விற்பவர்கள் இதனைச் சிறுசிறு தகட்டுக் கீற்றுகளாக அரிந்து தருவர். இதன் நீரோட்டச் சுவை இனிப்பு.

வெற்றிலை-வள்ளிக்-கிழங்கு பயிரிப்படும். கொடியின் வேரில் கிழங்கு விழும். விளைய ஒன்பது மாதம் பிடிக்கும். இதன் கொடி வெற்றிலை போலவே இருக்கும். இதை அரியும்போது கொழகொழப்பான நீர் சுரக்கும். பொறியல் செய்து இதனை உண்பர். சமைத்து உண்ணும்போதும் நாவை அரிக்கும் நுணநுணப்பு இதில் இருக்கும்.
சர்க்கரை-வள்ளிக்-கிழங்கு கொடியின் வேரில் விளையும். பச்சையாகவே தின்னலாம். இனிக்கும். வேக வைத்தும், பொறியல் செய்தும் இதனை உண்பர்.

மரவள்ளி என்றும், ஆள்வள்ளி என்றும் கூறப்படும் கிழங்கு ஆள் உயரம் வளரும் செடியில் விழுவது. இதனைப் பச்சையாகவும், வேக வைத்தும், பொறியல் செய்தும், தோலை அகற்றிவிட்டு உண்பர்.

"கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'' (தொல்.புற௩3)


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sun 4 May 2014 - 13:54

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide61
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 567WhiteWaterLily
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Nymphaea_pubescens
கருநீலமுடைய நெய்தல் பெரும்பான்மையும் கழிகளிலேயே காணப்படும். ஆனால், கழனி, கயங்கள் இவை~ களிலும் ஆங்காங்கு காணப்படும். `மணிப்பூ நெய்தல், என்று குறிப்பர். நலம் பெற்ற அழகிய குளிர்ந்த கண்ணிற்கு நெய்தல் மலரை உவமையாக்கி மகிழ்வர் புலவர். மாலை நேரத்தில் இம்மலர் கூம்பும். இது மிகுதியான மலர்ந்திருக்கும் காட்சி, நீலமணி நிறைந்த பொதியை அவிழ்த்து விட்டாற் போலிருக்கும்.

நெய்தல் மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர்.ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை. இம்மலர் நன்னீர் மலராகும்.

நெய்தல் குலையாக மலர்ந்து மணம் வீசும். `மணிக்~ குலைக் கட்கமழ் நெய்தல்' என்று குறிஞ்சிப் பாட்டு வர்ணிக்கின்றது. - நெய்தல் உட்துளையை உடைய மலர் என்று கூறுவர்.

நெய்தலின் காம்பு திரட்சியுடையது. ஆதலின் அதனைப் `பாசடை நிவந்த கணைக்கால்' நெய்தல் என்றனர். சேறு நிறைந்த செழிப்பான இடங்களில் நெய்தல் இடையறாது பூக்கும் தன்மை வாய்ந்தது. நறு மணமும், தேனும் நிறைந்தது. கரும்பைவிட இனிப்புடையதான நெய்தல் மலரை எருமைகள் விரும்பியுண்கின்றன என்பதைப் பதிற்றுப்பத்தால் அறிலாம்.

நெய்தலை நீல மலர் என்று பின்னத்தூரார் கூறுவர். நெய்தலும் நீலமலரும் நிறத்தால் ஒக்குமாயினும், நீலத்தின் இதழ் முழுவதும் நீலநிறம் கொண்டிருப்பதே இவற்றிடை வேறுபாடு. அன்றியும், நீலம் காலையில் மலரும்; நெய்தல் வைகறையில் மலரும். மேலும் பல்லிதழ் நெய்தலோடு நீலம் `நிகர்க்கும்' என்ற ஐங்குறுநூற்று அடிகள், நெய்தல் வேறு, நீலம் வேறு என்பதனைச் சுட்டுகின்றன. நெய்தற் பூவின் இதழ் வேல்வடிவில் இருக்கும். சங்க இலக்கியத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட மலர்களுள் நெய்தல் மலரும் ஒன்று.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sun 4 May 2014 - 13:57

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide62
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Coconut
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Coconut-1
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Shotinamboli

தாழை என்றதும் தாழம்பூவா??? என நினைத்திட வேன்டாம். தென்னை மரத்தின் சிறு மலர்கள் இருக்கும் பாளை, தெங்கம் பாளை தான் குறிஞ்சிப் பாட்டில் தாழை என பெயர் கொண்டது

வேரிலே குடித்த நீருக்கு தலையிலேதண்ணீர் தரும்" எனும் சொல் வழக்குக்கு சொந்தக் கார மரம், அனைவரும் வருடம் முழுவதும் மலர்ந்திருக்கும் மரம்,மலர்கள், பிஞ்சாகி, காயாகி, கணிந்தாலும் காய் என்றே அழைக்கப்படும். கோடைக்கேற்ற கலப்படமற்ற குளிர்பானம் - இளநீர்

இந்தப் பாளையிலிருந்து பதநீர் எடுத்து காய்ச்சி கருப்பட்டி, வெல்லம் என இனிப்புகளும்
தயாரிக்கின்றனர். காய்ச்சுகையில் வரும் மனம் வெகு தூரம் வரை பரவும்.

தேங்காய் என்பது தென்னைமரத்தின் பழம் ஆகும். இதனை தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுகின்றது. தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கம்+ "காய்" = தேங்காய் என அழைக்கப்படுகின்றது.

தேங்காயின் புறத்தே பச்சையாக இருப்பினும், பழுப்பு நிறத்தில் அடர்த்தியாக நார்கள் உள்ளே இருக்கும். இந்த நார்களை உரித்தால் உள்ளே மண்பழுப்பு நிறத்தில் மிகக்கெட்டியான ஓட்டுடன், ஒரு பெரிய கொட்டை போல் இருப்பது தான் தேங்காய். அந்த தேங்காய்க்குள் தேங்காய்நீர் இருப்பதை ஆட்டிப் பார்த்தால் உணரலாம். அளவாக முற்றிய தேங்காயை நெற்று என்பர். அந்த கெட்டியான ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளைநிறத்தில் ஏறத்தாழ 1 செ.மீ பருமனுக்கு பருப்பு காணப்படும். இந்தப் பருப்புதான் சமையலுக்குப் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் மிக இளசாக இருந்தால் அதனுள் நிறைய தேங்காய்நீர் இருக்கும். இதனை இளநீர் என்பர். இது கோடை காலங்களில் வெய்யிலின் வெக்கையைத் தணிக்க அருந்துவர்.

இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

தென்னை மரம் 30 மீ வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.மணற்பாங்கான நிலத்தில் வளர வல்ல தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரியஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by நேசமுடன் ஹாசிம் Sun 4 May 2014 - 17:49

படித்தேன் பதில் நாளை இடுகிறேன் நேரமானது வீடு செல்கிறேன்


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Mon 5 May 2014 - 8:42

நன்றி ஹாசிம்!

இப்பதிவுகள் பின்னூட்டங்கள் இடப்படாவிட்டாலும்  முழுமையாக தொகுக்கப்படவே செய்யும்பா..

இதெல்லாம் நீண்டகால நோக்கில் தேடுவோருக்கு பயன் படட்டும் எனும்  நோக்கம் கொண்டே பதிகின்றேன். 

ரெம்ப வருந்தமெல்லாம் பட வேண்டாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 21 May 2014 - 8:23

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide63
புதர் தாவர வகையை சேர்ந்தது.மஞ்சள் நிற மல்லிகை செம்முல்லை என்று கபிலரால் செல்லமாக அழைக்கப் பட்ட மலர் .தளவமும் முல்லை இனத்தைச் சேர்ந்தது. நச்சினார்க்~ கினியர் இதனைச் செம்முல்லை என்று குறிப்பர். மலைச்~ சாரல்களிலும் பாறைகளின் மேலும் இது படர்ந்து காணப்படும். கார்காலத்தில் மாலைநேரத்தில் மிகுதியாக மலர்ந்து நிற்கும். மணமிக்க இம்மலரின்போது சிச்சிலிப் பறவையின் அலகைப்போன்று சிறிது சிவப்பாகவும் கூர்மையாகவும் இருக்கும்.தளவ மலரின் மொட்டுகள் சிவப்பாக இருக்கும். அதாவது பூவிதழின் புறத்தோற்றம் சிவப்பாக இருக்கும். மலர்ந்ததும் ஒவ்வொரு பூவிதழின் அகத்தோற்றமும் வெண்மையாக இருக்கும். இவ்வாறு பூவிதழின் தளம் மாறுபடுவதால் இதனைத் தளவம் என்றனர்.

இது முல்லைப் பூவின் இனம். இந்த முல்லை-மொட்டு செந்நிறத்தில் இருப்பதால் இதனைச் செம்முல்லை என்றனர்
சிறிய நீள் வட்டங்களை ஓட்ட வைத்தது போல ஐந்தாறு இதழ்களுடன் மணி(பெல்) போன்ற கூம்பிய காம்பு, மிதமான நறுமணம், கொத்துக் கொத்தாய் மலர்கள் காண‌ப்ப‌டும்.

முல்லை என்பது கொகுடி, தளவம், முல்லை தளவம் என்னும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இதன் ஏப்ரல் யூன் மாதங்களில் மலரும்.

சித்த மருத்துவத்தில் முல்லைக்கு வேறு பெயர்களாக கணிகை, கற்பு, கெச்சம், வாளபிளப்பி என அழைக்கப்படுவதும் உண்டு.

முல்லை செடி, கொடி என 2 வகைகளில் இருக்கிறது. இது எல்லா விற்பனை மண்ணிலும் வளரக்கூடிய தன்மையுடையது. இது சிலபகுதிகளில் பிச்சிப்பூ எனவும் அழைக்கப்படுவதுண்டு.

மருத்துவப் பயன்கள்

முல்லைப் பூவை வாழை நாரிலோ, நூலிலோ சரமாகக் கட்டி தலையில் வைத்துக் கொண்டால் தலையில் உள்ள நீர்க்கோர்வை போகும். இதன் மணம் நுகரும்போது சித்தப்பிரமை விலகும் எனச் சொல்லப்படுகிறது. இம் மலர்களை நுகர்வதால் மனது புத்துயிர் பெற்று சாந்தமடைகிறது. கோபம் தணிகிறது. இருதயம் மென்மை பெறுகிறது. ஆகவே, இம்மலரின் வாசனையை நுகர்வது மிக நல்லது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 21 May 2014 - 8:25

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide65

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 800px-Nelumbo

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 800px-Fleurs-lotus
தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

தாமரைப்பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். இது ஒரு நீர்த்தாவரம். ஆகையால், இது எப்போதும் நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே காணப்படும்.

தாமரை, சிவப்பு, வெண்மை ஆகிய இருநிறங்களிலும் காணப்படுகிறது. இவற்றுள் கவர்ச்சியுடன் விளங்குவது செந்தாமரையே. தாமரை சேறு நிரம்பிய வயல்களிலும் மிகுதியாகக் காணப்படும். ஆகவே `செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை' என்று புறநானூறு கூறுகிறது.

இது கழனி, பொய்கை இங்கெல்லாம் மிகுதியாக வளர்ந்திருக்கும். தாமரையிலுள்ள எண்ணற்ற இதழ்களை நோக்கி, நூற்றிதழ் தாமரை எனவும், `பல்லிதழ்த் தாமரை' எனவும் கூறினர். இது பூத்து நிற்கும்போது மிகுந்த ஒளியுடன் விளங்கும். அவ்வாறு சிவந்து ஒளிவிடும் தாமரையை `விளக்கு ஒளிவிடுவதைப்போல இருக்கிறது' என்று கூறுவர்.

தாமரையின் மொட்டு கழுவைப் போன்றிருப்பதாகக் `கழுநிவந்தன்ன கொழுமுகை' என்ற அகப்பாடல் அடி கூறுகிற஼து. நீண்டு கூர்மையாக இருக்கும் வெண்டாமரை மொட்டைக் கொக்கு என்று எண்ணிக் கெண்டைமீன் மயங்குகிறது. தாமரை காலையில் மலரும் மாலையில் சூரியன் மறைந்தவுடன் இதுவும் கூம்பிவிடும்.
ஆம்பலை முன்வைத்துக் கூறுவதால், ஆம்பலும் தாமரையும் காலையில் மலரும் பூக்கள் என்பதை அறியலாம். தாமரையின் புற இதழ்கள், உள்ளிதழ்களைப் போல மிகுந்த சிவப்பாக இருக்காது. நிறம் வெளுத்து இருக்கும். அது முயலின் செவியை நினைக்கத் தூண்டுகிறது புலவரை:

மாலையில் கூம்பிய தாமரையினுள் சிறிது வெம்மை காணப்படும். தலைவி, தலைவனுக்கு, வேனிற்காலத்தில் தண்மையுடையவளாகவும், குளிர் காலத்தில் வெம்மை~ யுடையவளாகவும் இருக்கிறாள். அவ்வாறு தலைவியின் மேனி வெம்மைக்குத் தாமரை மலரின் அகத்துள்ள வெம்மையே உவமையாகக் கூறப்படுகின்றது.
தாமரையின் பிற பெயர்களாக வருவன, நளினம், பதுமம், அரவிந்தம், கமலம், என்பன. காரணப் பெயர்களாகக் கயமலர், பொய்கைப்போது, எரிப்பூ, தீப்பூ என்றும் கூறுவர்.

தாமரைத் தாது மஞ்சள் நிறமுடையதாக இருக்கும்.
 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 21 May 2014 - 8:27

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide66

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Cassiasophera
இதனைப் `புலிநகக்கொன்றை' என்றும் கூறுவர். இது கடற்கரையில் மிகுதியாக வளர்ந்திருக்கும். பெரும்~ பான்மை இடங்களில் புன்னையையும் ஞாழலையும் சேர்த்தே வழங்குவர். இளவேனிற்காலம் மலரும் இம்மலர் பொன்னிற வண்ணத்தை உடையது. இது மகளிர்மேல் படரும் சுணங்கிற்கு உவமையாகக் கூறப்படுகிறது.
புலி நகம் போன்ற இதழ்களை உடைய மலராதலால் இப்பெயரிட்டு அழைப்பர்.

அடர் மஞ்சளில், ஐந்து இதழ்களில், கொத்துக் கொத்தாய் மலரும் இம்மலர்.வெண்சிறு கடுகு (mustard) போல் இருக்கும். பொன்னிறத்தில் பூக்கும்

எல்லா நிலங்களிலும் பூக்கும் என்றாலும் நெய்தல் நிலத்தில் மிகுதி.கானலில் பூக்கும்.
மணிபல்லவத்தீவில் கடலோரம் இருந்த இலஞ்சியில் ஞாழலும் பூத்திருந்தது.

உடன் வளரும் மரங்கள் - செருந்தி,புன்னை,தாழை,மா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 21 May 2014 - 8:28

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide67-1
மலரின் பெயர் : Wild Jasmine
தாவரவியல் பெயர் : Jasminum angustifolium
Family: Oleaceae

முல்லை வகைகளில் ஒரு இனம் மௌவல். முல்லையைப் போன்று இதுவும் மணமிகுந்த வெண்ணிற மலர். இதன்- மொட்டு வெண்மை நிறத்துடன் கூரியதாக இருக்கும். இதற்கு மகளிரின் வெண்பற்களை உவமையாகக் கூறுவர்.
கார்காலத்தில் இது மலரும். இது வீடுகளில் மிகுதியாகப் படர்ந்திருக்கும். நொச்சி மரத்திலும் இதனைப் படர்த்தியிருப்பர்.

மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை) என வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன.

இரவில் பூக்கும் இந்த மலர் சுற்றிலும் மணக்கும்.மரமாக வளர்ந்து அவற்றின் கொம்பிலே பூக்கும்.ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மலரும் பூவிது.ஒற்றை அடுக்கில், ஏழு எட்டு இதழ்களோடுகாணப்படும்.தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை "வன மல்லிகை.மல்லிகை, மௌவல், சண்பகம் ஆகியவை வெவ்வேறு மலர்கள்.நொச்சிச் செடி ஆற்றங்கரைகளில் வளரும். இது ஆற்று நொச்சி. வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலை ‘மனைநொச்சி’ எனவும் வழங்கினர்.

ஜாஸ்மினம் என்று பண்டைய ஃபிரஞ்சு மொழியிலும் அரபியில் ஜாஸ்மின் என்றும் பாரசீக மொழியில் யாஸ்மின் என, அதாவது "கடவுளின் பரிசு"எனப் பொருள்படுவதாக, அழைக்கப்படும் மல்லிகை ஒரு ஆலிவ் குடும்பமான ஒலிசியே என்னும் புதர்கள் மற்றும் கொடிகள் சார்ந்த ஒரு பேரினம் ஆகும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Thu 29 May 2014 - 8:42

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide68குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Jasmine_Bud_in_Chennai_during_Spring

அடுக்குமல்லி எனப்படும் நறுந்தண் கொகுடிகொகுடி என்னும் மலரை இக்காலத்தில் அடுக்குமல்லி என்கின்றனர்.
இந்த மல்லிகையில் ஒரே பூவில் (தாமரை போல்) பல அடுக்குகள் இருக்கும்.

மல்லிகை (Jasminum sambac) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது. மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.

தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை வன மல்லிகை. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை/பாம்பே வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றே அழைக்கப்படுகிறது.

சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் இந்தக் கொகுடி மலரும் ஒன்று.
அதில் இந்த நறுமணம் மிக்க குளிர்ச்சி மிக்க பூ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by ராகவா Thu 29 May 2014 - 8:43

அடடா..அருமையான பகுதி..
அக்கா சித்தமருத்துவம் புத்தகமும்,அழகிய மூலிகை மருத்துவம் இருந்தால் அனுப்புங்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Thu 29 May 2014 - 8:49

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide69குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Im0904-03_parijatham

இது பாரிஜாதம் பவளமல்லி,பகடாப்பூ, மஞ்சள்பூ என்றும் குறிப்பிடப்படுகிறது. சுரசுரப்பான இலைகளையுடைய சிறுமரம். இதன் மலர்கள் பவள நிறக்காம்பும் வெண்ணிற இதழ்களையும் உடையது. மலருக்காக வீட்டுத் தோட்டங்களிலும் நந்தவனங்களிலும் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது.இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும்.

பவள மல்லிகை மரமானது வெண்மையான இதழ்களைக் கொண்டதாகவும், ஆரேஞ்சு நிறமுடைய காம்புப் பகுதியையும் உடையதான மிகவும் அழகான பூக்களைத் தருகின்றது. பூக்கள் இரவிபால் போன்ற நறுமணம்! இப்பூவைப் பறிக்ககத் தேவையில்லை. இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்துவிடும். இம்மரம் இரவு நேரம்மிகவும் சுகந்தமான மணத்தைத் தரும்.

இதன் இலை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவக் குணமுடையது இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும்; வேர்ப்பட்டை கோழையகற்றும்; பித்தத்தைச் சமனப்படுத்தும்.




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Thu 29 May 2014 - 8:51

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide70

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Jasmine20Grandiflorum20Absolute

சாதி மல்லிகை (Jasminum grandiflorum ) - ஸ்பானிஷ் ஜாஸ்மின், ராயல் ஜாஸ்மின், காடலோனியான் ஜாஸ்மின் என்றெல்லாம் ஆங்கிலத்திலும் சமேலி என்று இந்தியிலும் அழைக்கப்படும் மலர் இது,

தெற்காசியாவில் காணப்படும் செடி வகையாகும். இந்தியாவில் இதன் இலைகள் ஆயுர்வேத மருத்துவத்திலும், இதன் மலர்கள் பெண்களின் சிகை அலங்காரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில், இது சால்ட் ரேஞ் மற்றும் ராவல்பிண்டி மாவட்டத்திலுள்ள காடுகளில், கடல்மட்டத்திலிருந்து 500-1500 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. இது சில நேரங்களில், மல்லிகையின் (Jasminum officinale ) ஒரு வகையாகவே கருதப்படுகிறது.

இது படர்ந்து 2–4 மீட்டர் உயரம் வளரக்கூடிய இலையுதிர் புதர்ச் செடியாகும். இதன் இலைகள், எதிர் இலையடுக்கத்துடன், 5–12 செ.மீ. நீளத்துடன், காது (அல்லது இறகு) வடிவமுள்ள 5–11 குற்றிலைகளுடன் காணப்படும்.

இதன் மலர்கள், திறந்த நுனிவளராப்பூந்துணர்களாக, 13–25 மீ.மீ. நீளம் கொண்ட தண்டுடன் வெண்ணிறம் கொண்ட அல்லிவட்டத்துடன் (இதழ்கள்) 13–22 மீ.மீ. நீளமுள்ள ஐந்து இதழ்களுடன் பூக்கின்றன.இவற்றின் மணம் தனித்தன்மையுடனும், இனிமையாகவும் இருக்கும்.

இது மிதவெப்ப மண்டலங்களிலும், வெப்ப மண்டலங்களைச் சார்ந்த பகுதிகளிலும் அழகுச் செடியாக வளர்க்கப்படுகின்றது.

கரைத்துப்பிரித்தல் (கரைப்பான் வழிச் சாறு இறக்கல்) முறைப்படி, இவற்றின் சாறு எடுக்கப்பட்டு, ஜாஸ்மின் கான்கிரீட்டுகளாகவும், ஜாஸ்மின் ஒலியோரேசின்களாகவும் மாற்றப்படுகின்றன. இவை இரண்டும் வாசனைத்திரவியத் தொழிலில் உபயோகப்படுகின்றன.

செம்மல் என்னும் மலரை ஒரு தனி மலராகச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது.உதிர்ந்த பழம்பூக்களைச் செம்மல் எனக் குறிப்பிடும் சொல்லாட்சியும் உள்ளது.

செந்நிறத்தில் காடுமேடுகளில் பூத்துக் கிடக்கும் மலரே செம்மல் எனல் பொருத்தமானது. குறிஞ்சிநிலக் கோதையர் இந்தச் செம்மல் மலரையே குவித்து விளையாடினர். அவர்கள் குவித்து விளையாடிய 99 வகையான மலர்களில் செம்மல் என்பது ஒன்று.

இதுவும் செம்மல் என விக்கிமீடியா சொல்கிறது.
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 800pxflowersemmal


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Fri 6 Jun 2014 - 22:34

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide71குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Trapa_natans_flowerகுறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Water_chestnutகுறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 373px-



விதைகளோடு கூடிய நீர் வாழ் தாவரம் இது. குட்டை செடி வகையை சார்ந்தது. 12 முதல் 15 அடி (3.6 முதல் 4.5 மீ) நீளம் வரை வளரகூடிய தாக நீரினுள் அமிழ்த்தப்ட்ட நீண்ட தண்டுகள் மேல் விசிறி-வடிவ இலைகளோடு நீரில் மிதந்து கொண்டிருக்கும் . ஜீன் மாதத்தில் துளிர்த்து ஜூலை முதல் ஆகஸ்ட் வரை வெளிறிய‌ வெள்ளை நிற பூக்கள் பூக்கிறது.

இது. 3,000 ஆண்டுகளாக சீனா மற்றும் இந்தியா பயிரிடப்படும் தாவர இனமாகும். இந்தியாவில் singhara அல்லது paniphal (கிழக்கு இந்தியா) என்று அழைக்கப்படுகிறது ஏரிகளின் பயிரிடப்படுகிறது. தானிய பயிர் தோல்விகாலத்தில் இத்தாவரத்தின் பழங்கள் உலர்த்தப்ட்டு வேகவைத்த மாற்றுதானியமாக சாப்பிடுவதற்கும் பயன் பட்டது.

தாயாந்து, தாய்வான், வடசீனா, இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் பயிரிடப்படுகின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Fri 6 Jun 2014 - 22:35

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide72

கோடல் என்பது வெண்காந்தள் மலர்.

கோடல் என்றும் தோன்றி என்றும் கூறப்பெறும் காந்தள்மலர் மலைச்சாரலில் வளரும். இதன் மலர் குலைகுலையாகப் பூத்திருக்கும். இதற்கு நல்ல மணம் உண்டு.கொம்பு கோடு இல்லாத செடியைக் (கோடு+அல்) கோடல் என்று குறிப்பிட்டனர் எனத் தெரிகிறது. கோடல் என்பது வளையலுக்கும் பெயர். வளையல் போன்று இருப்பதால் `கோடல்' என்ற காரணப் பெயர் வந்திருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.

குறிஞ்சிப்பாட்டு மலர்களின் பெயரை அடுக்கிக் காட்டும்போது ஒண்செங்காந்தள் என்று செங்காந்தள் மலரையும், கோடல் என்று வெண்காந்தள் மலரையும் குறிப்பிடுகிறது.

காந்தள் மலருக்கு ஆறு இதழ்கள் மட்டுமே உண்டு. முருகப்பெருமானுக்கு ஆறு தலை எனக் கற்பனை செய்கின்றனர். காந்தள் மலருக்குக் கார்த்திகை மலர் என்னும் பெயர் உண்டு. முருகனைக் கார்த்திகேயன் என்பார்கள். இவை எல்லாமே ஒப்புமைக் கற்பனைகள்.

பெண்ணின் கையிலிருந்த வளையல்கள் கோடல் மலர் போலக் கழன்று வீழ்ந்தன எனப் பாடல்கள் உவமை காட்டுகின்றன.

சங்கு அடுத்துச் செய்த வளையல்கள் வெள்ளைநிறம் கொண்டவை. எனவே வெண்காந்தள் மலராகிய கோடல் மலரே இங்கு உவமையாக்கப்பட்டுள்ளன


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Fri 6 Jun 2014 - 22:36

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide73குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 3228941960_f1e30ff92f_o

கைதை என்னும் மலர் தாழம்பூவின் இனம்.
பூவே முள்ளாகிக் கையில் தைப்பதால் ‘கைதை’ என இதற்குப் பெயரிட்டனர்.
கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும்.
கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ.
கைதை என்பது நிழல் தரும் மரம்.

அடர் பச்சையும் வெளிர் பச்சையும் சமவிகிதத்தில் கலந்த நிறத்தில் இலைகள், மொட்டு விடுகையிலேஆழ்ந்த மஞ்சள் அதன் நிறம் மலர்கையிலே வெளிறிவிடும்.

இந்தியா, இலங்கை சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா,மலேசியா ஆகிய நாடுகளில் இவ்வகைதாவரம் வளர்கிரது.

தாழை மலரே தாழம்பூ எனப்படுகிறது. நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.

சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை, கைதை ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Fri 6 Jun 2014 - 22:38

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide74

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 3359816745_93480fa390_z

வழை என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும். 'கொங்கு முதிர் நறு வழை' எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கம் தருகிறது.

எல்லா மலர்களும், இலைகளுக்கு நடுவே கிளை முடியுமிடத்தில் மலரும்,

ஆனால் இந்த மலர்கள், மரத்திலே மலரும்.அடர் பச்சை வண்ண இலைகள்,தூய வெள்ளையில் உள்ளம் கொள்ளை கொள்ளும் சிறு இதழ்கள், அதன் நடுவில் மகரந்தங்கள் முதிர்ந்து கிடக்கும் , மலர் தாங்கும் சிறு காம்புடன் அடர்த்தியாய் வளரும் மர வகை மணம் நிறைந்த மலர்கள், அவை வாடினாலும் மணம் வீசும்.வாசனைத் திரவியங்களின் தயாரிப்பில் இம்மலர் உபயோகப் படுத்தப் படுகிறது..

சில மருத்துவ குணங்களும் கொண்ட மலர் இது.

வழைமரம் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்

•ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை.

•குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை.

•வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று.

•நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.

•கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும்.

•குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து.

•தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்த்து.

•யானை விரும்பும் தழைமரம்.

•மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள்.

•வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை.

•வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Fri 6 Jun 2014 - 22:41

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide75குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 False20White20Teakகுறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 False20White20Teak-2

ஆற்றுப்பூவரசு என அழைக்கபடும் காஞ்சிமரம் அழகு மிக்கது. மணல் மலிந்த ஆற்றுத் துறைகளில் 10. 20 மீற்றர்கள் வரை உயரமாக் வளர்ந்து 3. 7 செ. மீற்றர்கள் நீளமான இலைகளோடு மிகச்சிறிய பச்சை நிற பூக்கள் பூக்கும் பெரிய இலையுதிர் மரம் இது.சிடம்பர் முதல் மார்ச் வரை பூக்கும் மலரினம் .

தண்ணீர் நிறைந்த பொய்கை, ஆறு, மாடு, இவைகளின் கரைகளில் இது வளர்ந்து நிற்கும். இம்மலரிலிருந்து நறுமணம் கமழும்.

காஞ்சி இளவேனிற் காலத்தில் மலரும். மஞ்சள் நிற மலரையுடைய இதன் மொட்டுக்க‌ள் கொத்தாகப் பயறுபோற் காட்சியளிக்கும். -இணராகப் பூத்து நிற்கும் காஞ்சிப் பூக்கள் கோதை போன்று காட்சிதரும்.

இம் மலரில் தாதும், தேனும் நிறைந்திருக்கும். ஆகவே, இம்மலரைச் சுற்றி மிஞிறுகள் எப்போதும் ஆர்த்துக் கொண்டேயிருக்கும். இதன் தாதினைக் குயில்களும் அளைந்து கொண்டிருக்கும்.

ஆற்றோர ஊர்கள் வெள்ளத்தால் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றும் மரங்களாய்க் காஞ்சி மரங்கள் இருந்தன.
காஞ்சிப் பூக்கள் அதன் நனை பருவத்தில் மீன் போலத் தோற்றமளிக்கும் பூக்கள் மரத்தில் இருக்கும்போதே அதன் தாதுகள் கொட்டும்.குறைந்த உயரத்திலேயே கிளைகள் விடும் காஞ்சிமரத்தின் மீது பசுமையான இலைகளை உடைய குருகு என்னும் கொடி குறுங்கால் காஞ்சி மரத்தில் ஏறிப் படர்ந்து பூத்துக் கிடக்கும்.காஞ்சி இலைகளை ஆயர் தம் ஆடுமாடுகளுக்குத் தீனியாக அறுத்துப் போடுவர்.காஞ்சி தழைக்காக வெட்டப்படும்.மணல் மலிந்த ஆற்றுத் துறைகளில் மருதும் காஞ்சியும் நெருங்கி வளரும்.

இது மருத நிலத்தில் வளருகின்ற மரம். பரந்து நிழல்தரும் மரமாகையால் உழவர்கள் இதனடியில் நெல்லின் குப்பையைக் குவித்து வைப்பர்.

காஞ்சிப்பூவின் மணததை வதுவை நாற்றம் என்றனர்

மயில்மணிச்சிரல் என்னும் மீன்கொத்தி குயில் முதலான பறவைகள் காஞ்சி காஞ்சி மரத்தில் இருப்பிடம் கொள்வதை விரும்பும்.அமரும் இருக்கைகள் காஞ்சித் தழையில் செய்யப்படுவது உண்டு.
காஞ்சித் தளிர்களை ஆரமாகக் கட்டி அணிந்துகொள்வர்


ச‌ங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் காஞ்சியும் ஒன்று.
மகிழ்வு காஞ்சி மரத்தடியில் அதன் உதிர்-பூ எருவின் மேல் மகளிர் குரவை ஆடுவர்.
மகளிர் வள்ளைப் பாட்டில் ஊர்வளம் பாடி காஞ்சி நிழலில் நெல் குற்றுவர்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 11 Jun 2014 - 10:07


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide76-1

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Blue_water_lily

கருநீலமுடைய நெய்தல் பெரும்பான்மையும் கழிகளிலேயே காணப்படும். ஆனால், கழனி, கயங்கள் இவைகளிலும் ஆங்காங்கு காணப்படும். `மணிப்பூ நெய்தல் என்று குறிப்பர். நலம் பெற்ற அழகிய குளிர்ந்த கண்ணிற்கு நெய்தல் மலரை உவமையாக்கி மகிழ்வர் புலவர்.

மாலை நேரத்தில் இம்மலர் கூம்பும். இது மிகுதியான மலர்ந்திருக்கும் காட்சி, நீலமணி நிறைந்த பொதியை அவிழ்த்து விட்டாற் போலிருக்கும்.நெய்தல் குலையாக மலர்ந்து மணம் வீசும். `மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்' என்று குறிஞ்சிப் பாட்டு வர்ணிக்கின்றது.

நெய்தல் உட்துளையை உடைய மலர் என்று கூறுவர்.நெய்தலின் காம்பு திரட்சியுடையது. ஆதலின் அதனைப் `பாசடை நிவந்த கணைக்கால்' நெய்தல் என்றனர். சேறு நிறைந்த செழிப்பான இடங்களில் நெய்தல் இடையறாது பூக்கும் தன்மை வாய்ந்தது. நறு மணமும், தேனும் நிறைந்தது. கரும்பைவிட இனிப்புடையதான நெய்தல் மலரை எருமைகள் விரும்பியுண்கின்றன என்பதைப் பதிற்றுப்பத்தால் அறி௟லாம்.

நெய்தலை நீல மலர் என்று பின்னத்தூரார் கூறுவர். நெய்தலும் நீலமலரும் நிறத்தால் ஒக்குமாயினும், நீலத்தின் இதழ் முழுவதும் நீலநிறம் கொண்டிருப்பதே இவற்றிடை வேறுபாடு. அன்றியும், நீலம் காலையில் மலரும்; நெய்தல் வைகறையில் மலரும். மேலும் பல்லிதழ் நெய்தலோடு நீலம் `நிகர்க்கும்' என்ற ஐங்குறுநூற்று அடிகள், நெய்தல் வேறு, நீலம் வேறு என்பதனைச் சுட்டு~ கின்றன. நெய்தற் பூவின் இதழ் வேல்வடிவில் இருக்கும். சங்க இலக்கியத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட மலர்களுள் நெய்தல் மலரும் ஒன்று


நெய்தல் மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர்.

ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை.

நெய்தல் கண்ணுக்கு உவமையாகக் காட்டப்படும்,வைகறையில் மலரும். பூ.நறுமணம் கொண்டது. செருந்தியொடு சேர்ந்து பூக்கும்பூ.

குறிஞ்சிப்பாட்டு நன்னீர் மலர்,உவர்நீர் மலரென இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது.

நன்னீர் மலரெனபடுவது சுனையிலும், நெல்வயலிலும்,குளங்களிலும் பூக்கும்.

உவர் நீர் மலரெனபடுவது உப்பங்கழிகளில் பூக்கும்.

அஃதே நீள் நறு நெய்தல். இதன் காம்பு நீண்டது. அலங்கும் இதழ்களைக் கொண்டது.புல்லிய இதழ்களைக் கொண்டது. மணிக்குலைக் கள் கமழ் நெய்தல். இது குறுகிய காம்பினைக் கொண்டது.

நெய்தல் பூத்திருக்கும் பகுதியை ‘நெய்தல் படப்பை’ என்பர்.
கண்ணியாகக் கட்டித் தலையிலும் சூடிக்கொள்வர். தொடையாகக் கட்டி மார்பில் அணிந்துகொள்வர்.
நெய்தல் பூவை தெய்வப்பாவைக்குச் சூட்டும் பழக்கம் இல்லை.

சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் ‘நெய்தலங்கானல் நெடியோய்!’ என விளிக்கிறார். இதனால் நெய்தலங்கானல் என்பது சோழநாட்டின் பகுதியாக விளங்கிய பெருநிலப் பகுதி எனத் தெரிகிறது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 11 Jun 2014 - 10:10

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide77

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Toothbrushfruits

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 410px-
உகாய் (Salvadora persica), (Galenia asiatica, Salvadora indica, அராக், மிஸ்வாக்)என்பது பெரும்பாலும் பற்சுகாதாரத்துக்காகப் பரிந்துரைக்கப்படும் ஒரு செடி.

முல்லைப்பூவைப் போலத் தலையில் சூடிக்கொள்வர்.ஓமை, உகாய், உவா என வெவ்வேறு பெயர்களாலும் அழைக்கபடுகிறது.மிகச் சிறிய வெள்ளை மலர்கள் அதனூடே அதனினும் சிறிய பச்சை மொட்டுகள், வெளிர் சிகப்பில் கனிகள் மலரை விட கனிகள் அழகாய் இருக்கும்.பட்டுப் புழு வளர்ப்பில் உதவும் மரம் இது

உகாய் மரத்தின் காய் நெல்லைப் போல் நெல்லின் அளவினதாய் இருக்கும். அதன் நெற்று ஈரம் பட்டவுடன் வெடித்துச் சிதறும். காயிலிருந்து வெடித்து உதிரும் விதை மிளகைப்போல் காரம் உடையது. பறவைகள் உகாய் விதைகளை மேயும்.இது மழையின் ஈர மண்ணில் காலூன்ற ஏந்தாய் அமையும். நறுமணம்மிக்க இந்த மரத்தின் மலர்கள் மலரும் காலம் ஜூன் மாதம் ஆகும்.

மருத்துவப்பயன்கள்
உகாய் மரம் சிறுநீரகக் கல்லுக்கு எதிரான தன்மையைக் கொண்டது. முகம்மது நபியவர்கள் இதன் குச்சிகளையே பற்தூரிகையாகப் பயன்படுத்தியுள்ளார்கள். முஸ்லிம்களிற் பெரும்பாலானோர் இதனை இன்றளவிலும் பின்பற்றுகின்றனர். பல நூற்றாண்டுகளாகப் பற்தூரிகையாகப் பயன்படுத்தப்படும் இதனை உலக சுகாதார நிறுவனம் வாய்ச் சுகத்துக்கான சிறந்த பொருளாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறது. இதில் ஏராளமான மருந்துப் பொருட்கள் காணப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன


பாங்கர் மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்

குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று பாங்கர் மலர்

திருப்பரங்குன்றத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று.
சூடும் பூக்களில் ஒன்று.

பாட்டங்கால் எனப்பட்ட வீட்டுத்தோட்டத்தில் பூக்கும்.
பாங்கர் கொடி முசுண்டைமேல் ஏறிப் பம்பிக் கிடக்கும்

சங்ககாலத்து ஊர்களில் ஒன்று உகாய்க்குடி. அவ்வூரில் வாழ்ந்த புலவர் உகாய்க்குடி கிழார். இவரது பாடல் குறுந்தொகைத் தொகுப்பில் பாடல் எண் 63 ஆக அமைந்துள்ளது

ஓமாம்புலியூர் சிவன் கோவிலின் ஸ்தல விருட்சமாக இந்த ஓமை ஓராயிரம் பலன்கள் கொண்ட ஒற்றை மரம் இருப்பதாகவும் தகவல் உண்டு.




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 11 Jun 2014 - 10:12

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide78

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Taloora20Lac20Tree

மரா மரத்தைப் பழந்தமிழ் மராஅம் என்றே வழங்கியது. பின்னர் இதனை மராம் என்றனர்.

Taloora லேக் மரம் இலையுதிர் மரம் ஆகும் . மராஅம் மலர் ஒரு முனையத்தில் அடர்த்தியாக இல்லாது கிளை விட்டு பிரியும் மலர்க்கொத்து போல் சுண்ணாம்பு நீறு போல் வெண்மையாகப் பூக்கும். மணம் மிக்கது. பூ வலமாகச் சுழன்றிருக்கும்.

மராஅம் ஊர்த்தெருவில் ஓங்கிப் பூக்கும் இப்பூகுவித்து விளையாடும் பூ. கூந்தலில் சூடும் பூ.
மகளிர் கூந்தலில் பாதிரி, அதிரல் ஆகிய பூக்களோடு மராஅம் பூவையும் அடைச்சிக்கொள்வர் (சடைவில்லை ஆக்கிச் செருகிக்கொள்வர்). பருந்து இருக்கும் அளவுக்கு உயரமானது.

இம்மரத்தின் பட்டையிலிருந்து ஒரு வகை சாயம் தயாரிக்கபடுகிறது.

மராஅம் என்னும் வெண்கடம்ப மரச் சோலையில் வேழ வெண்பூ பூக்குமாம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 10:15

நன்றி உங்கள் படிபினையான இந்த தகவல்ளுக்கு  *_  *_
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 11 Jun 2014 - 10:15

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Slide79

'தணக்கு நுணாவே' என்று பிங்கல நிகண்டு (நூற்பா 2717 இம்மரத்தைக் குறிப்பிடுவதோடு . இதற்கு நூணா, தணக்கு, மஞ்சள் பாவட்டை,மஞ்சனத்தி என பல பெயர்கள் உண்டு என்பதும் ஆங்கிலத்தில் 'Togari wood' என்ற அழைக்கப்படும் இம்மரத்தைத் தாவரவியலாளர் 'MORINDA TINCTORIA' என்றழைப்பதாகவும் என் தேடலில் கிடைத்தவை.

ஆனால் மேலே இருக்கும் முதல் படம், விபரம் மேபிள் http://en.wikipedia.org/wiki/Mapleஎனப்படும் உயர் ரக கனடிய தவர இனத்தை குறிக்கிறது. எனினும. கிடைத்த தகவல்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது கீழே இருக்கும் இரண்டாது, மூன்றாவது படங்களே இப்பூவிற்குரிய சான்றாக இருக்குமென கருதுகிறேன்.


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 2442347707_24eabfa7e3_z

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Yamas304

சிறிய வெள்ளை நிற மலர். முத்தின் வெண்மையில், நீண்ட ஐந்து இதழ்களும், நடுவே சிறு மகரந்தக் குழல்களும், அடர் பச்சையில் இலைகளும் கொண்டது.

நுணாமரம் அல்லது மஞ்சணத்தி எனப்படும் ஒருவகை மூலிகை சிறுமரமாகும். இது விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது. சுமார் 15 அடி உயரம் வரை வளரும். தடிப்பான பட்டையும், இதிரடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு கிளைகளையும் சிறிய வெண்னிற மலர்களையும் முடிச்சு முடிச்சாக்காய்களையும் கருப்பு நிறப் பழங்களையும் உடைய மரம். மரத்தின் உட்புறம் மஞ்சள் வண்ணமாயிருக்கும்

மஞ்சணத்தியின் காய் பழுத்தவுடன் கருப்பு நிறமாகக் காட்சியளிக்கும்.கருகருவென முடிச்சு முடிச்சாக இருக்கும் இதன் பழத்தை இப்பழத்தை உண்ணும் பழக்கம் இன்றும் உள்ளது.துவர்ப்பு சுவை கொண்டபழம் இது.

இதன் காய், பழம், இலை ஆகியன ஆடு, மாடுகளின் உணவாகப் பயன்படுகிறது. நெற்பயிருக்குத் தழை உரமாக மஞ்சணத்தி கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கை உண்டு

நுணாமரம் இலேசானது. என்றாலும் நாரோட்டம் இருப்பதால் வலிமையானது.உறுதிக்கும் பெயர் போனது.

இம்மரம், கலப்பை-மாட்டுவண்டியின் உறுப்புகள், கதவு-நிலை ஆகியன செய்யப் பயன்படுகிறது. குறிப்பாக ஏர் மற்றும் மாட்டுவண்டியின் நுகக்கால் செய்ய இதனைப் பயன்படுத்தும் வழக்கம் முன்னர் பரவலாக இருந்துள்ளது. இதன் பொருட்டே கிணற்றோரத்திலும், வயலோரத்திலும் வளரும் மஞ்சணத்திச் செடிகளை அழிக்காமல் வளரவிடுவர். இம்மரம் மாட்டின் கழுத்தில் புண் ஏற்படுத்தாது. இதன் காரணமாகவே, நுகக்கால் செய்ய இம்மரத்தை விரும்பிப் பயன்படுத்தியுள்ளனர். இம்மரத்தின் மிருதுத்தன்மை காரணமாக 'பாதக்குறடு' எனப்படும் மரச்செருப்பை மஞ்சணத்தி மரத்தால் செய்வர். சுவரொட்டிகள் அச்சடிக்கப் பயன்படுத்தும் மரத்திலான எழுத்துக்கள் செய்ய மஞ்சணத்திக் கட்டையையே விரும்பிப் பயன்படுத்துகின்றனர். எழுத்துக்களில் எளிதில் சிராய்ப்பு ஏற்படாமையே இதற்குக் காரணமாகும். மஞ்சணத்தி மரத்தால் செய்யப்பட்ட பணப் பெட்டியில் பணம் வைத்தால் வீண்செலவு ஏற்படாது. பணம் அதிலேயே தங்கியிருக்கும் என்ற நம்பிக்கையும் சிலரிடம் காணப்படுகிறது. கட்டில் கால்கள் இம்மரத்தால் செய்யப்படும்.குங்குமச் சிமிழ், தெய்வச் சிலைகள் போன்ற கலைப்பொருள் இதனால் செய்யப்படும்

செயற்கை இழைகலான லினென் மற்றும் உல்லன் துணிகளுக்கு இயற்கை சாயம் கொடுக்க இதன் வேரிலிருந்து சிகப்பு நிறம் தயாரிக்கப்படுகிறது

சிறு செடியாக வளரும்போதே இதைப் பிடுங்கி எறியாவிட்டால் நன்றாக வேர்விட்டுவிடும். பின்னர் மண்வெட்டி மற்றும் கடப்பாரையைப் பயன்படுத்தி அகழ்ந்தெடுத்துதான் அப்புறப்படுத்த வேண்டும். இதன் வேரின் ஒரு சிறு பகுதி மண்ணுக்குள் புதைந்து இருந்தாலும் அதிலிருந்து மரம் துளிர்த்துவிடும். வீட்டுத் தோட்டங்களிலும் குளக்கரை ஓரங்களிலும் இம்மரம் வளந்திருப்பதைக் காணலாம், ஆயினும் வேம்பு, பூவரசுபோல் இம்மரத்தை விருப்பத்துடன் நட்டு வளர்ப்பதில்லை.

'தணக்கு நுணாவே' என்று பிங்கல நிகண்டு (நூற்பா 2717 இம்மரத்தைக் குறிப்பிடுகிறது.
இம்மரம் மருத்துவக் குணமுடையது. 'பதார்த்த தகுணபாடம்' என்ற நூல் இதன் பயன்பாடுகளை இவ்வாறு குறிப்பிடுகிறது.

"பட்டை கரப்பானொரு பாரச் சிலேஷ்மசுர
மொட்டிநின்ற புண்கிரந்தி யோட்டுங்காண்-மட்டலரை
யேந்து நுனாவி னிலைமாந்தம் தீர்த்துநல்ல
காந்திதரு மேகமடுங் காண்."

மஞ்சணத்தி மரத்தின் பட்டையானது கரப்பான், கபச்சுரம், கிரந்தி ஆகிய நோய்களையும் மஞ்சணத்தி இலையானது மாந்தம், மேகம் ஆகிய நோய்களையும் போக்கும் என்பதை இந்நூற்பாவால் அறிய முடிகிறது.

இவை தவிர இன்றளவும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இம்மரம் பின்வரும் நோய்களைத் தீர்க்கப் பயன்படுகிறது.

1. இரத்தக்கட்டு

(அ) மஞ்சணத்தி இலையைச் சட்டியிலிட்டு வதக்கி, சூட்டுடன் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

(ஆ) வெள்ளைக் கல்லைச் சுடவைத்து அக்கல்லை மஞ்சணத்தி இலையுடன் ஒரு துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

(இ) மஞ்சணத்தி இலைச் சாறு ஓர் அவுன்ஸ் உள்ளுக்குச் சாப்பிட வேண்டும்.

2. வெட்டுக்காயம்

(அ) மஞ்சணத்திக் கட்டையை இழைத்துப் பொடியாக்கி நல்லெண்ணெயில் கலந்து வெட்டுக் காயத்தில் வைத்தால் காயம் விரைவில் குணமாகும்.

(ஆ) மஞ்சணத்தி இலையுடன் மஞ்சளை அரைத்துக் கட்ட வேண்டும்.

பிஹார், மத்தியப் பிரதேசம், வங்காளம் ஆகிய மாநிலங்களில் இது தனிப் பயிராகப் பயிரிடப்படுகிற‌து
.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 11 Jun 2014 - 10:17

SAFNEE AHAMED wrote:நன்றி உங்கள் படிபினையான இந்த தகவல்ளுக்கு  *_  *_

ஓ! பின்னூட்டமிட்டதுக்கு நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 4 Empty Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum