Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters
Page 12 of 25
Page 12 of 25 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
First topic message reminder :
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
பலநூறு கவி எழுதினேன்
என்னை பெற்ற அம்மாவுக்கும் எழுதினேன்
என்னை வளர்த்த அப்பாவுக்கும் எழுதினேன்
என்னோடு பிறந்த உறவுகளுக்கும் எழுதினேன்
என்னை ஆளாக்கிய ஆசானுக்கும் எழுதினேன்
அப்போதல்லாம் வரிகள் முட்டவும் இல்லை
வார்த்தைகள் சொட்டவும் இல்லை
தானாய் வழிந்தது எழுத்துக்கள்
தேனாய் பொழிந்தது வார்த்தைகள்
ஆறாய்ப் பாய்ந்தது கவி வரிகள்
ஆனால் என்னமோ இன்று
என் நண்பனுக்கு ஒரு கவி எழுத
காலை முதல் கற்பனை குதிரையை
ஓட ஓட துரத்திப்பார்க்கிறேன்
ஒன்றுமே தோன்றவில்லை
எங்கள் நட்புக்கு இடையிலும்
ஒளிவு மறைவு ஒன்றுமே இல்லை
அதற்கும் புரிந்ததோ என்னவோ....!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஒளிவு மறைவு இல்லை என்றால் அந்த நட்பு புனிதமானது.
அருமை
அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
கவிதைகள் அருமை...
-
*_ *_
-
*_ *_
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நன்றி உணர்வுகளை பகிர்ந்து கொண்ட உறவுகளுக்குசுறா wrote:ஒளிவு மறைவு இல்லை என்றால் அந்த நட்பு புனிதமானது.
அருமை
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நன்றி அன்பு அன்பருக்குrammalar wrote:கவிதைகள் அருமை...
-
*_ *_
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நன்றி அன்பு அக்காNisha wrote:நினைவுகளை எவராலும் தட்டிப்பறிக்க இயலாது!
கவிதை நன்று!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நட்பு கவிதை அருமை பர்சான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காதலித்துப்பார் !
கண்ணில் பட்டதெல்லாம் தின்னத்தோணும்
காதில் கேட்டதெல்லாம் பாடத்தோணும்
கண்ணில் படுபவைகள் அவளாகத்தான் இருக்கும்
பாடும் வரிகள் எல்லாம் அவளுக்காகத்தான் இருக்கும்
குப்புறப் படுத்தாலும் நித்திரை வராது
நித்திரையில் பாதியில் எழும்பதோணும்
தூக்கத்திலும் உளறல்கள் வரும்
உச்சி வெயிலும் கடுங்குளிராகும்
மார்கழி பனியும் சுட்டெரிக்கும்
மமதை கொண்ட யானையையும் அடக்க தோன்றும்
பட்டாம் பூச்சியும் நண்பனாகும்
தேதிகள் ஞாபகம் வராது
தேர்விலும் அவள் பெயர் எழுதத்தோணும்
அம்மாவும் நண்பியாவாள்
அப்பாவும் தோழனாவான்
காதலித்துப்பார்
16.10.2014
Last edited by Farsan S Muhammad on Sat 18 Oct 2014 - 8:07; edited 2 times in total
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
உங்கள் அன்புக்கு நன்றி உங்கள் வரவேற்பே என்னை மென்மேலும் எழுத தூண்டுகிறதுபானுஷபானா wrote:நட்பு கவிதை அருமை பர்சான்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
காதலித்துப்பார் என்ற தலைப்பிற்கு உங்களின் வித்தியாசமான வரிகள் ஒரே மூச்சில் சொல்லி முடித்தது போல் கவிதை பாராட்டுக்கள் தொடருங்கள்
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
இயந்திர வாழ்க்கையில் இதெற்கென்று நேரமொதுக்க முடியாது கிடைக்கும் நேரத்தில் கண்ணில் பட்ட பிடித்தமான வைரமுத்துவின் தலைப்புக்கு சட்டென்று எழுதி பற்றென்று பதிவிட்டது.நேசமுடன் ஹாசிம் wrote:காதலித்துப்பார் என்ற தலைப்பிற்கு உங்களின் வித்தியாசமான வரிகள் ஒரே மூச்சில் சொல்லி முடித்தது போல் கவிதை பாராட்டுக்கள் தொடருங்கள்
நன்றி உங்கள் அன்புக்கு உங்களைப்போல் கவிஞ்சர்களின் உந்துதலே என்னை ஊக்கபடுத்துகிறது என் எழுத்துக்கு மகுடம் சூட்டுகிறது
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நிச்சயமாக பல கோணங்களில் எழுதுங்கள் கவிக் கடலில் அதிகமதிகம் நீந்திப்பாருங்கள் பல முத்துக்கள் மறைந்து கிடக்கிறது நீங்களே வியந்துவிடுவீர்கள் கற்றுத் தேர்ந்து பெரும் கவிஞனாகிட என் வாழ்த்துகள்Farsan S Muhammad wrote:இயந்திர வாழ்க்கையில் இதெற்கென்று நேரமொதுக்க முடியாது கிடைக்கும் நேரத்தில் கண்ணில் பட்ட பிடித்தமான வைரமுத்துவின் தலைப்புக்கு சட்டென்று எழுதி பற்றென்று பதிவிட்டது.நேசமுடன் ஹாசிம் wrote:காதலித்துப்பார் என்ற தலைப்பிற்கு உங்களின் வித்தியாசமான வரிகள் ஒரே மூச்சில் சொல்லி முடித்தது போல் கவிதை பாராட்டுக்கள் தொடருங்கள்
நன்றி உங்கள் அன்புக்கு உங்களைப்போல் கவிஞ்சர்களின் உந்துதலே என்னை ஊக்கபடுத்துகிறது என் எழுத்துக்கு மகுடம் சூட்டுகிறது
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நன்றி மிக்க மகிழ்ச்சிநேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக பல கோணங்களில் எழுதுங்கள் கவிக் கடலில் அதிகமதிகம் நீந்திப்பாருங்கள் பல முத்துக்கள் மறைந்து கிடக்கிறது நீங்களே வியந்துவிடுவீர்கள் கற்றுத் தேர்ந்து பெரும் கவிஞனாகிட என் வாழ்த்துகள்Farsan S Muhammad wrote:இயந்திர வாழ்க்கையில் இதெற்கென்று நேரமொதுக்க முடியாது கிடைக்கும் நேரத்தில் கண்ணில் பட்ட பிடித்தமான வைரமுத்துவின் தலைப்புக்கு சட்டென்று எழுதி பற்றென்று பதிவிட்டது.நேசமுடன் ஹாசிம் wrote:காதலித்துப்பார் என்ற தலைப்பிற்கு உங்களின் வித்தியாசமான வரிகள் ஒரே மூச்சில் சொல்லி முடித்தது போல் கவிதை பாராட்டுக்கள் தொடருங்கள்
நன்றி உங்கள் அன்புக்கு உங்களைப்போல் கவிஞ்சர்களின் உந்துதலே என்னை ஊக்கபடுத்துகிறது என் எழுத்துக்கு மகுடம் சூட்டுகிறது
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
தேவையான அளவுக்கு கருத்துக்கள் இருப்பதால்
நான் வாழ்த்துகிறேன்
தொடருங்கள் நன்றி
நான் வாழ்த்துகிறேன்
தொடருங்கள் நன்றி
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
உங்கள் தன்னடக்கம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி இனியவன்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நீ தந்த வலிகளும் வடுக்களும்
இன்னும் என் வாழ்வில்
அழியாச்சின்னங்கள்....!
அடர்ந்த வனத்தின் நடுவே
உயர்ந்த ஆலமரமாய் என் வாழ்வில்
பலரை வாழவைக்க விரும்புகின்றேன்.
மீண்டும் ஒரு புயலில் சிக்கி
அடி சாய விரும்பவில்லை - நான்....!
19.10.2014
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அப்போ இனி காதலிக்க மாட்டேன்னு சொல்றீங்க தானே கவிஞரே. அருமை அருமை. கவிதையை சொன்னேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Farsan S Muhammad wrote:
நீ தந்த வலிகளும் வடுக்களும்
இன்னும் என் வாழ்வில்
அழியாச்சின்னங்கள்....!
அடர்ந்த வனத்தின் நடுவே
உயர்ந்த ஆலமரமாய் என் வாழ்வில்
பலரை வாழவைக்க விரும்புகின்றேன்.
மீண்டும் ஒரு புயலில் சிக்கி
அடி சாய விரும்பவில்லை - நான்....!
19.10.2014
நீ என் ஜாதிப்பா
இப்படிக்கு காதலில்
கடுப்பேறிய சங்கம்
*_ *_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
பர்சான் நிஜமாகவே காதலிக்க ஆரம்பிச்சிட்டிங்களா?
கவிதையெல்லாம் அசத்தலா வருதே!
கவிதையெல்லாம் அசத்தலா வருதே!
அருமையான உவமை!அடர்ந்த வனத்தின் நடுவே
உயர்ந்த ஆலமரமாய்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அதுக்கு அது அர்தமல்ல, காதல் புட்டுக்கிச்சின்னு நினைக்கிறேன். இனி குடும்பத்தை பார்க்கிறேன்னு அர்த்தம் :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
சுறா wrote:அதுக்கு அது அர்தமல்ல, காதல் புட்டுக்கிச்சின்னு நினைக்கிறேன். இனி குடும்பத்தை பார்க்கிறேன்னு அர்த்தம் :)
ஐயோ பர்சான்! நிஜம்மாவாப்பா! அக்காவிடம் மட்டும் சொல்லிரணுமாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Nisha wrote:சுறா wrote:அதுக்கு அது அர்தமல்ல, காதல் புட்டுக்கிச்சின்னு நினைக்கிறேன். இனி குடும்பத்தை பார்க்கிறேன்னு அர்த்தம் :)
ஐயோ பர்சான்! நிஜம்மாவாப்பா! அக்காவிடம் மட்டும் சொல்லிரணுமாம்!
ஆமா சொல்லிட்டேன் அக்கா கிட்ட மட்டும் சொல்லிடுங்க பர்ஸான்!
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
என்ன கிண்டலா சார்!))&))&))&))&))&
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
சார் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி சார் )(சுறா wrote:அதுக்கு அது அர்தமல்ல, காதல் புட்டுக்கிச்சின்னு நினைக்கிறேன். இனி குடும்பத்தை பார்க்கிறேன்னு அர்த்தம் :)
Last edited by நண்பன் on Mon 20 Oct 2014 - 9:40; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - என்னப்பா கவிதை எல்லாம் எழுதுரே ஏதாவது காதல் கீதல் பண்ணுறியா???
என்னப்பா கவிதை எல்லாம் எழுதுரே
ஏதாவது காதல் கீதல் பண்ணுறியா???
*******************************************
ஆமாம் காதலிக்கிறேன்
இனிய தமிழை...!
ஆமாம் காதலிக்கிறேன்
என் எழுத்துக்களை...!
ஆமாம் காதலிக்கிறேன்
என் இனிய மார்க்கத்தைக்காதலிக்கிறேன்...!
ஆமாம் காதலிக்கிறேன்
என்னை பெற்ற அன்னையை...!
ஆமாம் காதலிக்கிறேன்
என்னை ஆளாக்கிய தந்தையை...!
ஆமாம் காதலிக்கிறேன்
என் உற்றார் உறவினர்களை......!
அமாம் காதலிக்கிறேன்
எனக்கு அறிவூட்டிய ஆசான்களை...!
ஆமாம் காதலிக்கிறேன்
என் பிறந்த தேசத்தை...!
ஆமாம் காதலிக்கிறேன்
என்னை வாழவைக்கும் தேசத்தை...!
ஆமாம் காதலிக்கிறேன்
என் இணைய நட்புகளை...!
ஆமாம் காதலிக்கிறேன்
என் இனிய நண்பர்களை...!
மொத்தத்தில் நான்
என்னைக்காதலிக்கிறேன்.
20.10.2014
Last edited by Farsan S Muhammad on Mon 20 Oct 2014 - 10:48; edited 3 times in total
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Page 12 of 25 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25
Page 12 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|