Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
+12
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
rammalar
சுறா
பாயிஸ்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
Farsan S Muhammad
16 posters
Page 19 of 25
Page 19 of 25 • 1 ... 11 ... 18, 19, 20 ... 25
சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
First topic message reminder :
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
பொற்காலம்
வாழ்வில் கிடைத்த
சொற்பகாலம் - அது
பரவசம் பொங்கும்
புதுமைக்காலம் -
இச்சைகள் துடிக்கும்
இன்பக்காலம் ......
பச்சிளம் பருவம்
எனினும் மெச்சிடும்
புதுமைகள் நச்சென்று
தோன்றும் விசித்திர
காலம் - எண்ணங்கள்
எல்லாம் விண்ணைத்
தொடும் சொப்பனக்காலம்.......
அரும்பு மீசை - மனதில்
விரும்பும் ஆசைகள் -
அத்தனையும் அருமையே
புத்தகக் காலம் - புதுமைகள்
படைக்கும் பக்குவக் காலம் .....
நிகழ்காலமும் நினைத்து
இனித்திடும் அதுவே
பாடசாலைக் காலம்....
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை வயலில் விதைத்தது
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
படத்தினை என்னால் காண முடியவில்லை கவிதை அருமைFarsan S Muhammad wrote:
துடிக்கிறது என் இதயவறைகள் தாறுமாறாக
வலிக்கிறது அதன் ஒவ்வொரு அணுக்களும்
சிலிர்க்கிறது என் தேகத்தின் மயிர்த்துளைகள் அத்தனையும்...!!
வடிகிறது என் கண்களிலிருந்து கண்ணீர் சாரை சாரையாக
மடிகிறது தானாய் என் கஷ்டங்கள் அனைத்தும்
சலிக்கிறது நாம் வாழும் வாழ்க்கைய எண்ணி...!!
மிளிர்கிறது என்னுள் துன்பங்களை மறந்த புது உத்வேகம்
இத்தனையும் கணப்பொழுதில் புகைப்படம்
என்னுள் உண்டாக்கிய மாற்றங்கள்...!!
பசியால் துடிக்கும் இரு உயிர்களில்
ஒரு உயிராவது பசியாறும் தருணம்
இங்கு மடிவது மானிடம் அல்ல மனிதமே...!!
(தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 'கெவின் கார்ட்டர்' என்ற புகைப்படக் கலைஞரால் 1993ல் சூடானில் எடுக்கப்பட்ட இப்புகைப்படம் 'புலிட்டர்' என்ற விருதின் மூலம் உலகப் புகழ் பெற்றது)
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நேசமுடன் ஹாசிம் wrote:படத்தினை என்னால் காண முடியவில்லை கவிதை அருமைFarsan S Muhammad wrote:
துடிக்கிறது என் இதயவறைகள் தாறுமாறாக
வலிக்கிறது அதன் ஒவ்வொரு அணுக்களும்
சிலிர்க்கிறது என் தேகத்தின் மயிர்த்துளைகள் அத்தனையும்...!!
வடிகிறது என் கண்களிலிருந்து கண்ணீர் சாரை சாரையாக
மடிகிறது தானாய் என் கஷ்டங்கள் அனைத்தும்
சலிக்கிறது நாம் வாழும் வாழ்க்கைய எண்ணி...!!
மிளிர்கிறது என்னுள் துன்பங்களை மறந்த புது உத்வேகம்
இத்தனையும் கணப்பொழுதில் புகைப்படம்
என்னுள் உண்டாக்கிய மாற்றங்கள்...!!
பசியால் துடிக்கும் இரு உயிர்களில்
ஒரு உயிராவது பசியாறும் தருணம்
இங்கு மடிவது மானிடம் அல்ல மனிதமே...!!
(தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 'கெவின் கார்ட்டர்' என்ற புகைப்படக் கலைஞரால் 1993ல் சூடானில் எடுக்கப்பட்ட இப்புகைப்படம் 'புலிட்டர்' என்ற விருதின் மூலம் உலகப் புகழ் பெற்றது)
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
பல வருடங்களாக இணையத்தில் இந்தப் படத்தைப் பார்க்கிறேன் எப்போது பார்த்தாலும் அப்போது என் உள்ளம் உருகும்
இன்னும் அதிக வரிகளையும் வலிகளாக சேர்த்த பர்சான்
உங்களுக்கு எமது நன்றிகள்
இன்னும் அதிக வரிகளையும் வலிகளாக சேர்த்த பர்சான்
உங்களுக்கு எமது நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
முடிவாய் வரும் வினைசொற்களை முதல் அடியாய் எடுப்பதேன் பர்சான்?
என வினையில் முடியும் சொற்களை முடிவாக்கி எழுதினால் கவிதை முற்றுப்பெற்று இன்னும் அழகாய் இருக்குமே!
என வினையில் முடியும் சொற்களை முடிவாக்கி எழுதினால் கவிதை முற்றுப்பெற்று இன்னும் அழகாய் இருக்குமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
மிக்க நன்றி அக்கா இனிவரும் கவிதைகளில் பின்பற்றுகிறேன்Nisha wrote:முடிவாய் வரும் வினைசொற்களை முதல் அடியாய் எடுப்பதேன் பர்சான்?
என வினையில் முடியும் சொற்களை முடிவாக்கி எழுதினால் கவிதை முற்றுப்பெற்று இன்னும் அழகாய் இருக்குமே!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
மனதை உருக்கும் படம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
உண்மைதான் மிக்க நன்றி பானு அக்காபானுஷபானா wrote:மனதை உருக்கும் படம்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
என் நாட்குறிப்பேட்டின் பக்கங்களை
நனைக்கிறது என் விழிகளை மீறிய நீர்த்துளிகள்
அதனுள் ஒளித்துவைத்த மயில் இறகும்
முகப்பவுடரும் தாங்கிக்கொள்ளாத அளவு...!!
அதற்கும் கைக்குட்டை இருந்திருந்தால்
என் கண்ணீரை பகிர்ந்து கொண்டிருக்கும்
நாட்குறிப்பில் நான் வரைந்த உன் பொக்கிஷ
நினைவுப்பக்கங்களின் பேனாமை சிதையாமல்....!!
நனைக்கிறது என் விழிகளை மீறிய நீர்த்துளிகள்
அதனுள் ஒளித்துவைத்த மயில் இறகும்
முகப்பவுடரும் தாங்கிக்கொள்ளாத அளவு...!!
அதற்கும் கைக்குட்டை இருந்திருந்தால்
என் கண்ணீரை பகிர்ந்து கொண்டிருக்கும்
நாட்குறிப்பில் நான் வரைந்த உன் பொக்கிஷ
நினைவுப்பக்கங்களின் பேனாமை சிதையாமல்....!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அடடா அந்த அழவுக்கு வருகிறதா
ஐயோ அனுதாப வாழ்த்துக்கள்
இப்போது என்ன செய்யலாம்
அவள் நினைவுப்பொக்கிசத்தை
கண்ணீர் அழித்து விட்டதே பர்சான்
பாவம் நீங்கள்
நல்லா சிந்திக்கிறீர்கள்
ஐயோ அனுதாப வாழ்த்துக்கள்
இப்போது என்ன செய்யலாம்
அவள் நினைவுப்பொக்கிசத்தை
கண்ணீர் அழித்து விட்டதே பர்சான்
பாவம் நீங்கள்
நல்லா சிந்திக்கிறீர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
நிஜங்களை நினைவாக்கி நித்தமும் கவியாக்கி மீட்டுப்பார்க்கும் உங்கள் காதல் அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
மிக்க மகிழ்ச்சி உறவுகளே ஊக்கபடுத்தி வாழ்த்துக்கள் பல கூறியதற்கு, ஆனாலும் அனைத்து கவி வரிகளும் கற்பனையே
நிஜம் அல்ல
நிஜம் அல்ல
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஊமைகள்
**************
அகில மொழிகள் அனைத்தும்
தெரிந்தும் ஊமைகள் நாங்கள்..!
எங்கள் சுற்றி இட்ட வட்டத்திற்குள்
சுற்றித்திரிகின்ற கோழைகள் நாங்கள்...!
எங்கள் பற்களை நாங்களே பிடுங்கி
கடலில் வீசிய கையாலாகாதவர்கள் நாங்கள்....!
எங்கள் உணர்வுகளை யாருக்கும் உதவாமல்
ஊனமாக்கிய ஊதாரிகள் நாங்கள்..!
மனச்சாட்சியை மண்ணுள் புதைத்து
திணறித்திரியும் நடைப்பிணங்கள் நாங்கள்...!
ஒற்றைவார்த்தையில் சொன்னால்
பட்டை தீட்டிய ஊமைகள் நாங்கள்...!!
**************
அகில மொழிகள் அனைத்தும்
தெரிந்தும் ஊமைகள் நாங்கள்..!
எங்கள் சுற்றி இட்ட வட்டத்திற்குள்
சுற்றித்திரிகின்ற கோழைகள் நாங்கள்...!
எங்கள் பற்களை நாங்களே பிடுங்கி
கடலில் வீசிய கையாலாகாதவர்கள் நாங்கள்....!
எங்கள் உணர்வுகளை யாருக்கும் உதவாமல்
ஊனமாக்கிய ஊதாரிகள் நாங்கள்..!
மனச்சாட்சியை மண்ணுள் புதைத்து
திணறித்திரியும் நடைப்பிணங்கள் நாங்கள்...!
ஒற்றைவார்த்தையில் சொன்னால்
பட்டை தீட்டிய ஊமைகள் நாங்கள்...!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
http://www.chenaitamilulaa.net/t48780p33-topic#441280
கவிதைகளுக்கு மதிப்பீடுகளை தனிமடலில் அனுப்புங்கள்.
கவிதைகளுக்கு மதிப்பீடுகளை தனிமடலில் அனுப்புங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
என்னவளின் அழகில் அசந்து போன
புள்ளிமான்களும் மதி மயங்கி மண்டியிடப்பார்க்கிறது..
அவள் ஒளிவீசும் வதனமதில் திணறிப்போன
துள்ளி ஓடும் முயல்களும் பால்நிலவென மெய்மறந்துவிட்டன..
அவள் மணம் வீசும் பஞ்சுபோன்ற குழல் கண்டு
பாவம் கர்வம் கொண்ட அணில்களும் அசந்துவிட்டன..
இவள் நாணம் கண்டு விண்ணில் உள்ள
ஆயிரம் ஆயிரம் தேவதைகளும் பனியாய் உருகி
அவள் பாதமதை தழுவுகின்றன
வெண்ணிலவும் என்னவளிடம் தோற்றுப்போய்
ஒரு நிலவு போதுமென்று கருமேகத்துள் சுருண்டு விடுகின்றன...
இத்தனையும் கண்டும் என்னவளை வர்ணிக்க என்னுள்
வரிகள் சொட்டுகின்றன வார்த்தைகள் முட்டுகின்றன...
இயற்கை அனைத்தும் தோற்றுவிட்ட என்னவளிடம்
நானும் அல்லவா தோற்றுவிட்டேன்...!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
மொத்தத்தில் உங்கள் தேவதையிடம் விலங்குகள் மண்டியிடுகின்றன
இன்னும் மனித விலங்குகள் நெருங்கும் முன் நீங்கள் கரம் பிடிங்கள்
வார்த்தைகள் அனைத்தும் அழகு
இயற்கை அனைத்தும் தோற்றுவிட்ட என்னவளிடம்
நானும் அல்லவா தோற்றுவிட்டேன்...!!
இன்னும் மனித விலங்குகள் நெருங்கும் முன் நீங்கள் கரம் பிடிங்கள்
வார்த்தைகள் அனைத்தும் அழகு
இயற்கை அனைத்தும் தோற்றுவிட்ட என்னவளிடம்
நானும் அல்லவா தோற்றுவிட்டேன்...!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
ஆயிரம் ஆயிரம் தேவதைகளும் பனியாய் உருகி
அவள் பாதமதை தழுவுகின்றன
வெண்ணிலவும் என்னவளிடம் தோற்றுப்போய்
ஒரு நிலவு போதுமென்று கருமேகத்துள் சுருண்டு விடுகின்றன..
அப்படியா சேதி!
வார்த்தை நயங்கள் அசத்தல் பர்சான். சூப்பராக இருக்கின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
உறவுகள் அனைத்துக்கும் நன்றிகள் பலகோடி
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
பள்ளிப் பருவம்
மான்களும் எங்களிடம் நடை பயிலும்
சூரியனும்உதிக்க எங்களிடம் அனுமதிகேட்கும்
காற்றும் நாங்கள் சொல்லும் திசையில் வீசும்
மழையும் எங்கள் பாடலுக்கு இசை போடும்...!!
எங்கள் ஆசைகளுக்கு எல்லைகளும் இல்லை
எங்கள் பாசத்திற்கு அளவே இல்லை
பாலினம் வேறு எங்களிடம் இல்லை
கறுப்பு வெள்ளையும் பார்ப்பதும் இல்லை நாங்கள்...!!
பந்த பாசம் யாதும் இல்லை ஆனாலும்
எங்களிடம் உற்ற உறவுகள் தோற்றுவிடும்
ஒற்றை வடையை ஒன்பதுபேரும் சாப்பிடுவோம்
ஒற்றுமைக்கு எறும்பையும் விஞ்சிடுவோம்
போட்டி என்றால் கத்திக்கும் பயப்படமாட்டோம்...!!
சின்ன சின்ன சண்டைகள்
மிஞ்சி போனால் ஒருநாள் மட்டும்
ஒன்றாய் நன்றாய் என்றும் பிரியா
உறவுகள் எங்கள் பள்ளி உறவுகள்...!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
ஊர் என்ன சொல்லும் நம்மைப்பற்றி...!!
என்னவள் கரம் கோர்த்து
கம்மாங்கரை, களத்துமேடு,
வயல்காடு, வரம்புகட்டு என
சுற்றித்திரிய எத்தனை ஆசைகள்தான் என்னுள்
என்ன..? செய்ய..! தடுக்கிறது நாகரிகம்...!!
உடைத்தெறிந்து வெளியேறத்துடிக்கிறது
ஆனாலும் ஊர் என்ன சொல்லும் நம்மைப்பற்றி...!!
யாருமில்லா வீதியில
ஊர்உறங்கும் வேலையில
உன்னிடம் சத்தமிட்டு...!
என் காதல் சொல்ல ஆசைதான் என்னுள்
என்ன..? செய்ய..! தடுக்கிறது ஊர்வழமை...!!
உடைத்தெறிந்து வெளியேறத்துடிக்கிறது
ஆனாலும் ஊர் என்ன சொல்லும் நம்மைப்பற்றி...!!
பாய்மரக் கப்பல் கட்டி,
அதுநிறைய தொட்டில் கட்டி
யாருமில்லா தீவொன்றில்
நாம் மட்டும் வாழ ஆசைதான் என்னுள்
என்ன..? செய்ய..! தடுக்கிறது குடும்பவழமை..!!
உடைத்தெறிந்து வெளியேறத்துடிக்கிறது
ஆனாலும் ஊர் என்ன சொல்லும் நம்மைப்பற்றி...!!
கம்மாங்கரை, களத்துமேடு,
வயல்காடு, வரம்புகட்டு என
சுற்றித்திரிய எத்தனை ஆசைகள்தான் என்னுள்
என்ன..? செய்ய..! தடுக்கிறது நாகரிகம்...!!
உடைத்தெறிந்து வெளியேறத்துடிக்கிறது
ஆனாலும் ஊர் என்ன சொல்லும் நம்மைப்பற்றி...!!
யாருமில்லா வீதியில
ஊர்உறங்கும் வேலையில
உன்னிடம் சத்தமிட்டு...!
என் காதல் சொல்ல ஆசைதான் என்னுள்
என்ன..? செய்ய..! தடுக்கிறது ஊர்வழமை...!!
உடைத்தெறிந்து வெளியேறத்துடிக்கிறது
ஆனாலும் ஊர் என்ன சொல்லும் நம்மைப்பற்றி...!!
பாய்மரக் கப்பல் கட்டி,
அதுநிறைய தொட்டில் கட்டி
யாருமில்லா தீவொன்றில்
நாம் மட்டும் வாழ ஆசைதான் என்னுள்
என்ன..? செய்ய..! தடுக்கிறது குடும்பவழமை..!!
உடைத்தெறிந்து வெளியேறத்துடிக்கிறது
ஆனாலும் ஊர் என்ன சொல்லும் நம்மைப்பற்றி...!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
யாரும் ஏதும் சொல்லப்போவதில்லை அவள் உங்களவளாக இருந்தால்arsan S Muhammad wrote:என்னவள் கரம் கோர்த்து
கம்மாங்கரை, களத்துமேடு,
வயல்காடு, வரம்புகட்டு என
சுற்றித்திரிய எத்தனை ஆசைகள்தான் என்னுள்
என்ன..? செய்ய..! தடுக்கிறது நாகரிகம்...!!
உடைத்தெறிந்து வெளியேறத்துடிக்கிறது
ஆனாலும் ஊர் என்ன சொல்லும் நம்மைப்பற்றி...!!
யாருமில்லா வீதியில
ஊர்உறங்கும் வேலையில
உன்னிடம் சத்தமிட்டு...!
என் காதல் சொல்ல ஆசைதான் என்னுள்
என்ன..? செய்ய..! தடுக்கிறது ஊர்வழமை...!!
உடைத்தெறிந்து வெளியேறத்துடிக்கிறது
ஆனாலும் ஊர் என்ன சொல்லும் நம்மைப்பற்றி...!!
பாய்மரக் கப்பல் கட்டி,
அதுநிறைய தொட்டில் கட்டி
யாருமில்லா தீவொன்றில்
நாம் மட்டும் வாழ ஆசைதான் என்னுள்
என்ன..? செய்ய..! தடுக்கிறது குடும்பவழமை..!!
உடைத்தெறிந்து வெளியேறத்துடிக்கிறது
ஆனாலும் ஊர் என்ன சொல்லும் நம்மைப்பற்றி...!!
நடு நிசியில் சத்தமிட்டு காதலைச்சொல்லப்போரிங்க என்பதை எப்படிச்சொல்லிருக்கிங்க பாருங்க கெட்டிக்காரன்தான். கப்பல்ல தொட்டில இப்பகட்டிடாதிங்க அதல்லாம் அப்புரம்தான். எல்லாத்துக்கும் முதல்ல காதலை சொல்லிவிட்டு கரம் பிடியுங்கள் நன்றாக இருக்கும்.
வித்தியாசமான கற்பனை நன்றாகவுள்ளது வாழ்த்துக்கள் தோழரே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
கவிஞ்சனின் கற்பனைக்கு அளவு இருக்க மிக்க நன்றி சகோபாயிஸ் wrote:யாரும் ஏதும் சொல்லப்போவதில்லை அவள் உங்களவளாக இருந்தால்arsan S Muhammad wrote:என்னவள் கரம் கோர்த்து
கம்மாங்கரை, களத்துமேடு,
வயல்காடு, வரம்புகட்டு என
சுற்றித்திரிய எத்தனை ஆசைகள்தான் என்னுள்
என்ன..? செய்ய..! தடுக்கிறது நாகரிகம்...!!
உடைத்தெறிந்து வெளியேறத்துடிக்கிறது
ஆனாலும் ஊர் என்ன சொல்லும் நம்மைப்பற்றி...!!
யாருமில்லா வீதியில
ஊர்உறங்கும் வேலையில
உன்னிடம் சத்தமிட்டு...!
என் காதல் சொல்ல ஆசைதான் என்னுள்
என்ன..? செய்ய..! தடுக்கிறது ஊர்வழமை...!!
உடைத்தெறிந்து வெளியேறத்துடிக்கிறது
ஆனாலும் ஊர் என்ன சொல்லும் நம்மைப்பற்றி...!!
பாய்மரக் கப்பல் கட்டி,
அதுநிறைய தொட்டில் கட்டி
யாருமில்லா தீவொன்றில்
நாம் மட்டும் வாழ ஆசைதான் என்னுள்
என்ன..? செய்ய..! தடுக்கிறது குடும்பவழமை..!!
உடைத்தெறிந்து வெளியேறத்துடிக்கிறது
ஆனாலும் ஊர் என்ன சொல்லும் நம்மைப்பற்றி...!!
நடு நிசியில் சத்தமிட்டு காதலைச்சொல்லப்போரிங்க என்பதை எப்படிச்சொல்லிருக்கிங்க பாருங்க கெட்டிக்காரன்தான். கப்பல்ல தொட்டில இப்பகட்டிடாதிங்க அதல்லாம் அப்புரம்தான். எல்லாத்துக்கும் முதல்ல காதலை சொல்லிவிட்டு கரம் பிடியுங்கள் நன்றாக இருக்கும்.
வித்தியாசமான கற்பனை நன்றாகவுள்ளது வாழ்த்துக்கள் தோழரே
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
அது என்ன துளி?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
என்னவளுக்காக ............
இதமான குளிர் நாளின்
இனிதான காலைபொழுது
என்னவளுக்கு பிடிக்கும் என்பதால்
அதில் நானும் லயித்துவிட்டேன்....!!
மார்கழித்திங்கள் தூறல் மழையில்
நனைவது என்னவளுக்கு பிடிக்கும்
என்பதால் அதில் நானும் நனைகிறேன்...!!
காதல் கதைகள் படிப்பது
என்னவளுக்கு பிடிக்கும் என்பதால்
இப்போதெல்லாம் நானும்
தேடித்தேடி படிக்கின்றேன்....!!
கூடமேல பாடல் என்னவளுக்கு
அதிகம் பிடிக்கும் என்பதால்
எனது அலைபேசியின் அழைப்பு
மணியையும் அதுவாக மாற்றிவிட்டேன்....!!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
இலைமேல் நீர்த்துளிசுறா wrote:அது என்ன துளி?
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Page 19 of 25 • 1 ... 11 ... 18, 19, 20 ... 25
Page 19 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|