Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
+6
நண்பன்
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
சுறா
ந.க.துறைவன்
10 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
First topic message reminder :
பசலை நோய்…!!
*
உன்னை மனநோயாளி என்று
முத்திரைக் குத்தி
மனசாட்சியில்லாமல்
உறவுகள் இம்சை செய்வதைப்
பார்க்க மனம்
வேதனைப்படுகின்றது.
உன் காதலைப் பிரிக்க
எதையோ சொல்லி
நம்ப வைக்க
முயற்சிப்பவர்களின்
கட்டுக்கதை தானே இது.
உன்னை எப்படி
நம்ப வைப்பதென்று
காதலன் துடிக்கிறான்.
உன்னைச் சேர்த்து விடாமல்
தடுக்க ஊர் துடிக்கிறது.
யார் அறிகிறார்களோ? இல்லையோ?
உன் காதலன் மட்டுமே அறிவான்.
உன் பசலை நோய்க்கு மருந்து.
*
பசலை நோய்…!!
*
உன்னை மனநோயாளி என்று
முத்திரைக் குத்தி
மனசாட்சியில்லாமல்
உறவுகள் இம்சை செய்வதைப்
பார்க்க மனம்
வேதனைப்படுகின்றது.
உன் காதலைப் பிரிக்க
எதையோ சொல்லி
நம்ப வைக்க
முயற்சிப்பவர்களின்
கட்டுக்கதை தானே இது.
உன்னை எப்படி
நம்ப வைப்பதென்று
காதலன் துடிக்கிறான்.
உன்னைச் சேர்த்து விடாமல்
தடுக்க ஊர் துடிக்கிறது.
யார் அறிகிறார்களோ? இல்லையோ?
உன் காதலன் மட்டுமே அறிவான்.
உன் பசலை நோய்க்கு மருந்து.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
அச்சமே ஆபத்து….!!
*
அன்றைய காதலர்களின்
காதல் கடிதங்கள்
பாதுகாக்கப்பட்டன.
வரலாற்றில் பதியப்பட்டன.
இன்றைய காதலர்கள்
கடிதம் எழுதுவதை மறந்து
எஸ்எம்எஸ்
குறுஞ்செய்திகளில்
பரிமாறிக் கொண்டு
அடுத்த நொடியே
அழகியல் கற்பனை வரிகளை
அழித்துவிட்டு
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள்.
சமுகச் சங்கிலியில் சிக்குண்டு
அச்சத்தில் வாழ்வது சாதல்
அச்சமின்றி வாழ்வது காதல்.
*
*
அன்றைய காதலர்களின்
காதல் கடிதங்கள்
பாதுகாக்கப்பட்டன.
வரலாற்றில் பதியப்பட்டன.
இன்றைய காதலர்கள்
கடிதம் எழுதுவதை மறந்து
எஸ்எம்எஸ்
குறுஞ்செய்திகளில்
பரிமாறிக் கொண்டு
அடுத்த நொடியே
அழகியல் கற்பனை வரிகளை
அழித்துவிட்டு
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள்.
சமுகச் சங்கிலியில் சிக்குண்டு
அச்சத்தில் வாழ்வது சாதல்
அச்சமின்றி வாழ்வது காதல்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
பூனைக் குறும்பு..!!
*
அறையெங்கும் பூனையின் தொல்லை
அன்றாடம் வழக்கமாகிப் போன
அலுப்பூட்டும் செயலாகி விட்டது.
வீட்டில் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்து
திட்டு வாங்குவதும் அதற்குப்
பழக்கமாகி விட்டதில் ஒன்றும்
அதிசயமில்லை எப்பொழுதேனும்
அப்பூனைக் கண்ணில் தென்படவில்லை
எனில் எங்கே தொலைந்தது என்றுக் கேட்டுத்
தேடுவார்கள் அனைவரும். அக்குறும்புப்
பூனையோ? யாருக்கும் தெரியாமல்
படுக்கையறைக் கட்டிலின் கீழ்
பவ்வியமாக ஒளிந்துத் திருட்டுத்
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து
வெளியில் ஓடிவரும் யாரோ
உள்ளே நுழையும் காலடிச் கத்தம் கேட்டு..!
*
*
அறையெங்கும் பூனையின் தொல்லை
அன்றாடம் வழக்கமாகிப் போன
அலுப்பூட்டும் செயலாகி விட்டது.
வீட்டில் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்து
திட்டு வாங்குவதும் அதற்குப்
பழக்கமாகி விட்டதில் ஒன்றும்
அதிசயமில்லை எப்பொழுதேனும்
அப்பூனைக் கண்ணில் தென்படவில்லை
எனில் எங்கே தொலைந்தது என்றுக் கேட்டுத்
தேடுவார்கள் அனைவரும். அக்குறும்புப்
பூனையோ? யாருக்கும் தெரியாமல்
படுக்கையறைக் கட்டிலின் கீழ்
பவ்வியமாக ஒளிந்துத் திருட்டுத்
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து
வெளியில் ஓடிவரும் யாரோ
உள்ளே நுழையும் காலடிச் கத்தம் கேட்டு..!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
பிம்பங்களின் மர்மம்…!!
*
அவள் சொன்னதைச் செய்வாள்
செய்ததைச் சொல்வாள்
அவள் சொல்லாமல் விட்டதை
என்னிடம் சொல்லியும் காட்டுவாள்.
நான் சொல்லாமல் இருப்பதை
எப்படியும் சொல்லக் கேட்பாள்
அவள் என்னிடம் எதை மறைத்தாளோ
எனக்குத் தெரியாது?
நான் மறைத்ததும்
அவளுக்குத் தெரியாது?
மறைத்தல் என்பது மனதின் மர்மம்
வெளிப்படுகிறது அவரவர் பிம்பம்.
*
*
அவள் சொன்னதைச் செய்வாள்
செய்ததைச் சொல்வாள்
அவள் சொல்லாமல் விட்டதை
என்னிடம் சொல்லியும் காட்டுவாள்.
நான் சொல்லாமல் இருப்பதை
எப்படியும் சொல்லக் கேட்பாள்
அவள் என்னிடம் எதை மறைத்தாளோ
எனக்குத் தெரியாது?
நான் மறைத்ததும்
அவளுக்குத் தெரியாது?
மறைத்தல் என்பது மனதின் மர்மம்
வெளிப்படுகிறது அவரவர் பிம்பம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
தேவி சிரித்தாள்…!!
*
விடு
பார்வதி தேவி விடு.
லிங்கத்தை
ஆலிங்கனம் செய்தது போதும்,
சிவன்
மூச்சுத் திணறுகிறானே
உனக்குத் தெரியவில்லையா?
விடு தேவி விட்டு விடு
உன் அரவணைப்பில் மெய்
மறந்து செயலற்றவனாய்…
விடு
பார்வதி தேவி
சிவனை விட்டு விடு.
பார்வதி தேவி
சிவனை விடுத்தாள்
அப்பாடா, என்று பெருச்சு விட்டான்
சிவன்
அசைந்தது அகிலம்
இன்றைய விளைளாட்டு போதுமென்று
தேவி சிரித்தாள் பரமன் சிரித்தான்
தரிசித்தார்கள் பக்தர்கள் பரவசமாய்…!!
*
*
விடு
பார்வதி தேவி விடு.
லிங்கத்தை
ஆலிங்கனம் செய்தது போதும்,
சிவன்
மூச்சுத் திணறுகிறானே
உனக்குத் தெரியவில்லையா?
விடு தேவி விட்டு விடு
உன் அரவணைப்பில் மெய்
மறந்து செயலற்றவனாய்…
விடு
பார்வதி தேவி
சிவனை விட்டு விடு.
பார்வதி தேவி
சிவனை விடுத்தாள்
அப்பாடா, என்று பெருச்சு விட்டான்
சிவன்
அசைந்தது அகிலம்
இன்றைய விளைளாட்டு போதுமென்று
தேவி சிரித்தாள் பரமன் சிரித்தான்
தரிசித்தார்கள் பக்தர்கள் பரவசமாய்…!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
சிக்னல்…!!
*
நீ காட்டிய சிக்னல் பார்த்து விட்டு
எவனோ ஒருத்தன் சிரிக்கிறான்.
அக்கம் பக்கம் பார்த்து சிக்னல் காட்டு.
அப்பொழுது தான்
அடுத்தவனுக்குப் புரியாது.
அதில் எந்த சிக்கலும் இருக்காது?
பாதுகாப்பானதாக இருக்கவேண்டும்
ஆபத்தானதாக இருக்கக் கூடாது
காதல் சிக்னல்!!.
*
*
நீ காட்டிய சிக்னல் பார்த்து விட்டு
எவனோ ஒருத்தன் சிரிக்கிறான்.
அக்கம் பக்கம் பார்த்து சிக்னல் காட்டு.
அப்பொழுது தான்
அடுத்தவனுக்குப் புரியாது.
அதில் எந்த சிக்கலும் இருக்காது?
பாதுகாப்பானதாக இருக்கவேண்டும்
ஆபத்தானதாக இருக்கக் கூடாது
காதல் சிக்னல்!!.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
யாருக்குப் பிடிக்கணும்?
*
உன்னை
என் பெற்றோர்களுக்குப் பிடித்திருந்தது
பார்த்து சம்மதம் சொல்ல அழைத்து வந்தார்கள்.
நான் உன்னைப் பார்த்தேன்
நீ என்னைப் பார்த்தாய்.
மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா? என்று
உன்னிடம்
உன் அம்மாவும் என் அம்மாவும்
இரகசியமாய் கேட்டார்கள்.
என் சம்மதம் கேட்காமலேயே
எப்படி நீ ஒற்றை வார்த்தையில்
பிடித்திருக்கிறது என்று சொன்னாய்?
அம்மாக்களுக்குப் பிடிப்பதைப்
பிள்ளைகள் தலையில் கட்டுகிறார்கள்
பிள்ளைகளுக்குப் பிடிப்பதை
அம்மாக்கள் மறுக்கிறார்கள்.
*
*
உன்னை
என் பெற்றோர்களுக்குப் பிடித்திருந்தது
பார்த்து சம்மதம் சொல்ல அழைத்து வந்தார்கள்.
நான் உன்னைப் பார்த்தேன்
நீ என்னைப் பார்த்தாய்.
மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா? என்று
உன்னிடம்
உன் அம்மாவும் என் அம்மாவும்
இரகசியமாய் கேட்டார்கள்.
என் சம்மதம் கேட்காமலேயே
எப்படி நீ ஒற்றை வார்த்தையில்
பிடித்திருக்கிறது என்று சொன்னாய்?
அம்மாக்களுக்குப் பிடிப்பதைப்
பிள்ளைகள் தலையில் கட்டுகிறார்கள்
பிள்ளைகளுக்குப் பிடிப்பதை
அம்மாக்கள் மறுக்கிறார்கள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
கருணைக் கொலை…!!
*
நான்
உன்னைக் காதலித்தாலும்
நீ என்னைக் காதலித்தாலும்
உயிருக்கு
உத்தரவாதமில்லை.
இப்பொழுது
இளம்பருவத்தினர்
இளமையுணர்வுகள்
இரக்கமற்றவர்களால்
கருணைக் கொலையாகும்
பரிதாப ஆடுகள்
போலாகி விட்டது
காதல்.
*
*
நான்
உன்னைக் காதலித்தாலும்
நீ என்னைக் காதலித்தாலும்
உயிருக்கு
உத்தரவாதமில்லை.
இப்பொழுது
இளம்பருவத்தினர்
இளமையுணர்வுகள்
இரக்கமற்றவர்களால்
கருணைக் கொலையாகும்
பரிதாப ஆடுகள்
போலாகி விட்டது
காதல்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
சிவப்பு தக்காளி…!!
*.
கோடைக் கால வெப்ப நிலை கொதிப்பு ஏறுது
தக்காளி போல் சிவந்த மேனி தத்தளிக்குது!
மல்லிகைப்பூ கூந்தலிலே அழகு காட்டுது
சுட்டெரிக்கும் வெயிலிலே சிரிக்க மறுக்குது!
நெற்றிக் கன்னம் கண்களிலே சோர்வுத் தெரியுது.
முலாம்பழம் முகத்தினிலே வியர்வை வழியுது
வெள்ளரிப் பிஞ்சாய் தளிர்கரங்கள் துவண்டிருக்குது
வெள்ளமாக அரும்பி வியர்வை வழிந்து ஓடுது.
.
அவசரமாய் பஸ் பிடிச்சி போகப் பார்க்குறே
ஜன நெரிசல் புழுக்கத்திலே மூச்சுத் திணறுது.
.
,இறங்கி நடந்து போகையிலே அசதி தெரியுது
ஆண்கள் பார்க்கும் பார்வையிலே அனல் வீசுது.
.
ஆபிஸு கேட்டிக்குள்ளே நுழைஞ்சி போகிறே
அழுது வடிஞ்சி நிற்கிற முகங்கள் பார்க்குறே!
.
அப்பாடா என்ன வெயில் என்று புலம்புறே?
ஆயாசம் தீரும் மட்டும் தண்ணிக் குடிக்கிறே!!.
*
*.
கோடைக் கால வெப்ப நிலை கொதிப்பு ஏறுது
தக்காளி போல் சிவந்த மேனி தத்தளிக்குது!
மல்லிகைப்பூ கூந்தலிலே அழகு காட்டுது
சுட்டெரிக்கும் வெயிலிலே சிரிக்க மறுக்குது!
நெற்றிக் கன்னம் கண்களிலே சோர்வுத் தெரியுது.
முலாம்பழம் முகத்தினிலே வியர்வை வழியுது
வெள்ளரிப் பிஞ்சாய் தளிர்கரங்கள் துவண்டிருக்குது
வெள்ளமாக அரும்பி வியர்வை வழிந்து ஓடுது.
.
அவசரமாய் பஸ் பிடிச்சி போகப் பார்க்குறே
ஜன நெரிசல் புழுக்கத்திலே மூச்சுத் திணறுது.
.
,இறங்கி நடந்து போகையிலே அசதி தெரியுது
ஆண்கள் பார்க்கும் பார்வையிலே அனல் வீசுது.
.
ஆபிஸு கேட்டிக்குள்ளே நுழைஞ்சி போகிறே
அழுது வடிஞ்சி நிற்கிற முகங்கள் பார்க்குறே!
.
அப்பாடா என்ன வெயில் என்று புலம்புறே?
ஆயாசம் தீரும் மட்டும் தண்ணிக் குடிக்கிறே!!.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
நெற்றிவடு…!!
*
திங்கட்கிழமை விநாயகருக்கு
வாழைப்பழத்தில் விளக்கேற்றினாள்.
செவ்வாய்கிழமை துர்க்கைக்கு
எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றினாள்.
புதன்கிழமை விஷ்ணுசகஸ்ரநாமம் படிச்சி
துளசிமாடத்தில் விளக்கேற்றினாள்.
வியாழக்கிழமை குருபகவானுக்கு
தேங்காயில் விளக்கேற்றினாள்
வெள்ளிக்கிழமை காமாட்சிக்கு
பொங்கல் வச்சி மாவிளக்கேற்றினாள்.
சனிக்கிழமை கிரகத் தோஷம் நீங்கிட
சனிபகவானுக்கு எள் விளக்கேற்றினாள்.
ஞாயிற்றுக்கிழமை காலபைரவருக்கு
உச்சிவேளைப் பூசையில் விளக்கேற்றினாள்.
எல்லா நாளும் பக்தியோடு வழிப்பட்டவளுக்கு
நல்ல வரன் அமையவில்லை.
புகுந்த வீட்டிற்குப் போய் விளக்கேற்றும்
பாக்கியம் இன்னும் கிட்டவில்லை - இன்னும்
பகவான்கள் யாரும் கண் திறக்கவில்லை்.
நெற்றிவடு வலப்புறமாய் கருமுடிகள் ஒன்றிரண்டு
வெள்ளி கம்பியாய் தகதகத்து மின்னுகிறது.
*
*
திங்கட்கிழமை விநாயகருக்கு
வாழைப்பழத்தில் விளக்கேற்றினாள்.
செவ்வாய்கிழமை துர்க்கைக்கு
எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றினாள்.
புதன்கிழமை விஷ்ணுசகஸ்ரநாமம் படிச்சி
துளசிமாடத்தில் விளக்கேற்றினாள்.
வியாழக்கிழமை குருபகவானுக்கு
தேங்காயில் விளக்கேற்றினாள்
வெள்ளிக்கிழமை காமாட்சிக்கு
பொங்கல் வச்சி மாவிளக்கேற்றினாள்.
சனிக்கிழமை கிரகத் தோஷம் நீங்கிட
சனிபகவானுக்கு எள் விளக்கேற்றினாள்.
ஞாயிற்றுக்கிழமை காலபைரவருக்கு
உச்சிவேளைப் பூசையில் விளக்கேற்றினாள்.
எல்லா நாளும் பக்தியோடு வழிப்பட்டவளுக்கு
நல்ல வரன் அமையவில்லை.
புகுந்த வீட்டிற்குப் போய் விளக்கேற்றும்
பாக்கியம் இன்னும் கிட்டவில்லை - இன்னும்
பகவான்கள் யாரும் கண் திறக்கவில்லை்.
நெற்றிவடு வலப்புறமாய் கருமுடிகள் ஒன்றிரண்டு
வெள்ளி கம்பியாய் தகதகத்து மின்னுகிறது.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
அழகின் தரிசனம்…!!
அவள் எப்பொழுதும் ஏதேனும்
ஒரு வழியில் வீடு திரும்புகிறாள்
எந்த குறுக்குப் பாதையென்று
அறிவது அறிதாகவேயிருக்கிறது
அவ்வழியை அடையாளம் கண்டு
வழிக்காட்ட மரமோ கோயிலோ
அங்கே இருப்பதாய் தெரியவில்லை.
பறவையின் இருப்பிடம் அறிந்திடலாம்
அவள் இருப்பிடம் அறிவது
அத்தனை புதிராக இருக்கிறது
தேவதையாய் மறைந்து போகிறவள்
பேரழகின் தரிசனம் காண்பதற்கு
காத்திருக்கிறது கண்கள்
தெய்வ தரிசனம் எளிது
அழகின் தரிசனம் கடினம்
*
அவள் எப்பொழுதும் ஏதேனும்
ஒரு வழியில் வீடு திரும்புகிறாள்
எந்த குறுக்குப் பாதையென்று
அறிவது அறிதாகவேயிருக்கிறது
அவ்வழியை அடையாளம் கண்டு
வழிக்காட்ட மரமோ கோயிலோ
அங்கே இருப்பதாய் தெரியவில்லை.
பறவையின் இருப்பிடம் அறிந்திடலாம்
அவள் இருப்பிடம் அறிவது
அத்தனை புதிராக இருக்கிறது
தேவதையாய் மறைந்து போகிறவள்
பேரழகின் தரிசனம் காண்பதற்கு
காத்திருக்கிறது கண்கள்
தெய்வ தரிசனம் எளிது
அழகின் தரிசனம் கடினம்
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
ந.க.துறைவன் wrote:அழகின் தரிசனம்…!!
அவள் எப்பொழுதும் ஏதேனும்
ஒரு வழியில் வீடு திரும்புகிறாள்
எந்த குறுக்குப் பாதையென்று
அறிவது அறிதாகவேயிருக்கிறது
அவ்வழியை அடையாளம் கண்டு
வழிக்காட்ட மரமோ கோயிலோ
அங்கே இருப்பதாய் தெரியவில்லை.
பறவையின் இருப்பிடம் அறிந்திடலாம்
அவள் இருப்பிடம் அறிவது
அத்தனை புதிராக இருக்கிறது
தேவதையாய் மறைந்து போகிறவள்
பேரழகின் தரிசனம் காண்பதற்கு
காத்திருக்கிறது கண்கள்
தெய்வ தரிசனம் எளிது
அழகின் தரிசனம் கடினம்
*
அருமை ஐயா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
ந.க.துறைவன் wrote:பூனைக் குறும்பு..!!
*
அறையெங்கும் பூனையின் தொல்லை
அன்றாடம் வழக்கமாகிப் போன
அலுப்பூட்டும் செயலாகி விட்டது.
வீட்டில் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்து
திட்டு வாங்குவதும் அதற்குப்
பழக்கமாகி விட்டதில் ஒன்றும்
அதிசயமில்லை எப்பொழுதேனும்
அப்பூனைக் கண்ணில் தென்படவில்லை
எனில் எங்கே தொலைந்தது என்றுக் கேட்டுத்
தேடுவார்கள் அனைவரும். அக்குறும்புப்
பூனையோ? யாருக்கும் தெரியாமல்
படுக்கையறைக் கட்டிலின் கீழ்
பவ்வியமாக ஒளிந்துத் திருட்டுத்
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து
வெளியில் ஓடிவரும் யாரோ
உள்ளே நுழையும் காலடிச் கத்தம் கேட்டு..!
*
அருமை ஐயா
இப்படித் தான் எங்க வீட்டில் ஒரு பூனை இருந்தது இப்போது காணாமல் போய்விட்டது . எப்படி போனது என தெரியவில்லை.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
மிக்க நன்றி பானுஷா நலமா?
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
ந.க.துறைவன் wrote:மிக்க நன்றி பானுஷா நலமா?
நலம் ஐயா நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
நன்றி பானு...வாழ்க வளமுடன்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
காதல் தெம்மாங்கு பாடு…!!
தென்றல் காற்றே தென்றல் காற்றே
தெம்மாங்கு பாடு.
தாவணி போட்டக் கன்னி வருகிறாள்
தெம்மாங்கு பாடு.
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
தெம்மாங்கு பாடு
செவத்த பொண்ணு பாதையில் வருகிறாள்
வரவேற்று பாடு.
மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே
தெம்மாங்கு பாடு
அவள் கருத்த கூந்தலைச் சூடிய அழகை
தெம்மாங்ஞ பாடு
கோவைப் பழமே கோவைப் பழமே
தெம்மாங்கு பாடு
சிவந்த உதடுகள் துடிக்குது பாரு
தெம்மாங்கு பாடு
உள்ளம் உருக உணர்வுகள் பெருக
தெம்மாங்கு பாடு
காதல் தெம்மாங்கு பாடு
காதல் தெம்மாங்கு பாடு!!
*
தென்றல் காற்றே தென்றல் காற்றே
தெம்மாங்கு பாடு.
தாவணி போட்டக் கன்னி வருகிறாள்
தெம்மாங்கு பாடு.
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
தெம்மாங்கு பாடு
செவத்த பொண்ணு பாதையில் வருகிறாள்
வரவேற்று பாடு.
மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே
தெம்மாங்கு பாடு
அவள் கருத்த கூந்தலைச் சூடிய அழகை
தெம்மாங்ஞ பாடு
கோவைப் பழமே கோவைப் பழமே
தெம்மாங்கு பாடு
சிவந்த உதடுகள் துடிக்குது பாரு
தெம்மாங்கு பாடு
உள்ளம் உருக உணர்வுகள் பெருக
தெம்மாங்கு பாடு
காதல் தெம்மாங்கு பாடு
காதல் தெம்மாங்கு பாடு!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
நன்றி குமார்
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
நன்றி குமார்
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
நன்றி குமார்
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
செல்பி…!!
*
செல்போனில் பேசுகிறாள்
சிரித்து சிரித்து மகிழ்கிறாள்
சத்தமில்லாமல் பேசுகிறாள்
சந்தேகம் வாராமல் பேசுிறாள்.
குறுஞ்செய்திகள் அனுப்புகிறாள்
குறும்பு வரிகள் படிக்கிறாள்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள்
குனிந்து வெட்கப்பட்டு வியர்க்கிறாள்
செல்பி எடுத்து பார்க்கிறாள்
அழகை ரசித்து சிரிக்கிறாள்
நண்பர்களுக்கு அனுப்புகிறாள்
நிறைய லைக் வாங்குகிறாள்
மனம் கலங்கி நிற்கிறாள்
மலங்க மலங்க முழிக்கிறாள்
சிக்கில் போக்கத் தெரியாமல்
சிக்கிக் கிட்டு தவிக்கிறாள்.
ந.க.துறைவன்.
*
*
செல்போனில் பேசுகிறாள்
சிரித்து சிரித்து மகிழ்கிறாள்
சத்தமில்லாமல் பேசுகிறாள்
சந்தேகம் வாராமல் பேசுிறாள்.
குறுஞ்செய்திகள் அனுப்புகிறாள்
குறும்பு வரிகள் படிக்கிறாள்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள்
குனிந்து வெட்கப்பட்டு வியர்க்கிறாள்
செல்பி எடுத்து பார்க்கிறாள்
அழகை ரசித்து சிரிக்கிறாள்
நண்பர்களுக்கு அனுப்புகிறாள்
நிறைய லைக் வாங்குகிறாள்
மனம் கலங்கி நிற்கிறாள்
மலங்க மலங்க முழிக்கிறாள்
சிக்கில் போக்கத் தெரியாமல்
சிக்கிக் கிட்டு தவிக்கிறாள்.
ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
ந.க.துறைவன் wrote:செல்பி…!!
*
செல்போனில் பேசுகிறாள்
சிரித்து சிரித்து மகிழ்கிறாள்
சத்தமில்லாமல் பேசுகிறாள்
சந்தேகம் வாராமல் பேசுிறாள்.
குறுஞ்செய்திகள் அனுப்புகிறாள்
குறும்பு வரிகள் படிக்கிறாள்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள்
குனிந்து வெட்கப்பட்டு வியர்க்கிறாள்
செல்பி எடுத்து பார்க்கிறாள்
அழகை ரசித்து சிரிக்கிறாள்
நண்பர்களுக்கு அனுப்புகிறாள்
நிறைய லைக் வாங்குகிறாள்
மனம் கலங்கி நிற்கிறாள்
மலங்க மலங்க முழிக்கிறாள்
சிக்கில் போக்கத் தெரியாமல்
சிக்கிக் கிட்டு தவிக்கிறாள்.
ந.க.துறைவன்.
*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
பித்தப்பூக்கள்….!!
*
1.
நான் யார்?
*
நான் யார் தெரிகிறதா?
என்றான்
நான் யார்? என்று
எனக்கே தெரியவில்லை
உன்னை எப்படி?
எனக்கு தெரியும்?
2.
வலி…!!
*
மலரைப் பறித்தவளுக்கு
அதன் வலி தெரியவில்லை
இப்பொழுது தான்
அவளுக்குப் புரிந்தது
மனதைப் பறித்தவன்
கொடுத்த வலி.
ந.க.துறைவன்
*
1.
நான் யார்?
*
நான் யார் தெரிகிறதா?
என்றான்
நான் யார்? என்று
எனக்கே தெரியவில்லை
உன்னை எப்படி?
எனக்கு தெரியும்?
2.
வலி…!!
*
மலரைப் பறித்தவளுக்கு
அதன் வலி தெரியவில்லை
இப்பொழுது தான்
அவளுக்குப் புரிந்தது
மனதைப் பறித்தவன்
கொடுத்த வலி.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
வேறு யார்….!!
*
உன்னை எங்கெல்லாம்
தேடுவது இங்கேயா இருக்கிறாய்?
இங்கே இருக்கிறாய் என்று
தெரிந்திருந்தால் நேற்றே வந்து
பார்த்திருப்பேனே?
நேற்று இங்கே இருந்தேன்
இன்று தான் இங்கில்லலை.
இப்பொழுது எங்குதானிருக்கிறாய்?
உன்னிலே தேடிப்பார் அங்கே
இருக்கிறேனா? என்று
நீ தேடுவது நானல்லவா!
வேறு யார்? அந்த நான்!
ந.க.துறைவன்.
*
உன்னை எங்கெல்லாம்
தேடுவது இங்கேயா இருக்கிறாய்?
இங்கே இருக்கிறாய் என்று
தெரிந்திருந்தால் நேற்றே வந்து
பார்த்திருப்பேனே?
நேற்று இங்கே இருந்தேன்
இன்று தான் இங்கில்லலை.
இப்பொழுது எங்குதானிருக்கிறாய்?
உன்னிலே தேடிப்பார் அங்கே
இருக்கிறேனா? என்று
நீ தேடுவது நானல்லவா!
வேறு யார்? அந்த நான்!
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
உச்சம் எதுவெனில்…!!
1.
உச்சக் கட்ட அதிர்வின்
இன்வலி முயங்கல்கள்
உள்வாங்கி திணர்கின்றன
அமைதியாய் இரவு.
2.
வலிகள் தான் இன்பம்
வலிகள் தான் துன்பம்
வலிகள் தான்
நீ, நான், நாம்
வலியில் தான் பிறந்தோம்
வலியில் தான் இறக்கிறோம்.
3.
உன் அனல்
என் வேட்கை
பனிக்குளிர்.
4.
கனன்று சிவந்திருக்கிறது
சாந்தம் இல்லாத அவள்
காந்தப் பார்வை.
5.
மோகம் முள்
ரணம் உள்
ந.க.துறைவன்.
*
1.
உச்சக் கட்ட அதிர்வின்
இன்வலி முயங்கல்கள்
உள்வாங்கி திணர்கின்றன
அமைதியாய் இரவு.
2.
வலிகள் தான் இன்பம்
வலிகள் தான் துன்பம்
வலிகள் தான்
நீ, நான், நாம்
வலியில் தான் பிறந்தோம்
வலியில் தான் இறக்கிறோம்.
3.
உன் அனல்
என் வேட்கை
பனிக்குளிர்.
4.
கனன்று சிவந்திருக்கிறது
சாந்தம் இல்லாத அவள்
காந்தப் பார்வை.
5.
மோகம் முள்
ரணம் உள்
ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்.
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க.துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்.
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க.துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|