சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Khan11

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

+2
சுறா
நேசமுடன் ஹாசிம்
6 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 7:25

எதிர்வரும் 2015ம் ஆண்டு ஐனவெரி 08ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதித்தேர்தல் சம்பந்தமான சூடான செய்திகளும் தகவல்களும் இன்று மிகவும் பேசம்படும் விடயமாக திகழ்கிறது.
 
அனைத்து செய்திகளையும் இங்கு ஒரே திரியில் இட்டு எமது கருத்துகளையும் பகிர்வோம் 


Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 8 Jan 2015 - 19:04; edited 1 time in total


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 7:29

வடக்கு கிழக்கு மக்கள் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கின்றனர்!– விக்ரமபாகு கருணாரட்ன

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கின்றார்கள் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் மஹிந்தவிற்கா? அல்லது மைத்திரிக்கா என ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவிற்கு தெளிவாக வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரவளிக்கின்றனர்.


ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவிற்காக வடக்கு கிழக்கில் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


வடக்கு கிழக்கில் தமிழ் மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண ஆதரவளிப்பார்கள் என்பதனை உறுதிபடக் கூற முடியும் என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 7:30

முஸ்லிம் மக்கள் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கின்றனர்!– முஜிபுர் ரஹ்மான்


முஸ்லிம் மக்கள் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு சந்தர்ப்பம் காணப்பட்டது.

எனினும், ஜனாதிபதி மஹிந்த தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முனைப்பு காட்டவில்லை.

பொதுபல சேனா அமைப்பின் ஊடாக இனவாதத்தை தூண்டினார்.
இதனால் முஸ்லிம் மக்கள் கடும் மன வேதனையுடன் இருக்கின்றார்கள்.
இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக இருந்தால் இலங்கையும் இன்னுமொரு மியன்மாராக மாற்றமடையும்.

எனவே முஸ்லிம் மக்களின் ஆதரவு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கேயாகும்.

மஹிந்தவை வெற்றியீட்டச் செய்ய எவரேனும் முஸ்லிம் இணைந்து கொண்டால் அவருக்கு மூளையில் ஏதேனும் பிரச்சினை இருக்கும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவின் ஆதரவு ஜனாதிபதிக்கு வழங்கப்பட உள்ளதாம், முஸ்லிம்களின் வாக்கு யாருக்கு அளிக்கப்படும் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார்.


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 7:32

எதிரணியின் வாக்குறுதிகள் பாலர் வகுப்பின் செயற்பாட்டினை ஒத்தது
அரச ஊழி­யர்கள் தொடர்பில் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சிந்­த­னைகள் அனைத்தும் ஐ.தே.க.வின் கொள்­கையை அடிப்­ப­டை­யாக கொண்­ட­தாகும். மேலும் எதி­ர­ணியின் தேர்தல் வாக்­கு­று­திகள் அனைத்தும் பாலர் வகுப்பின் செயற்­பாட்­டினை ஒத்­ததாகும் என உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன குற்றம் சுமத்­தினார்.
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Jhon-senwirathne
நான் ஒரு போதும் கட்­சி­யி­லி­ருந்து விலக போவ­தில்லை. இதற்கு பிறகு அர­சி­லி­ருந்து எவரும் கட்சி தாவ போவ­து­மில்லை. எதி­ர­ணியின் பிர­சாரப் பணி­க­ளுக்கு விரைவில் சர்­வ­தே­சத்தின் நிதி உத­விகள் கிடைக்­க­பெ­ற­வுள்­ளது என்றும் அவர் சாடினார்.
கொழும்பு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

அரச ஊழி­யர்­க­ளுக்கு பல சலு­கை­களை வழங்கப் போவ­தாக பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பத்­தி­ரிகை விளம்­ப­ரங்­களில் குறிப்­பி­டப்படு­கின்­றன. எதிர்­வரும் 23, 24 ஆம் திக­தி­களில் நடத்­தப்­ப­ட­வுள்ள தபால் மூல வாக்­க­ளிப்­பினை இலக்­காகக் கொண்டே இவ்­வா­றான வாக்­கு­று­திகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.
அத்­தோடு அரச ஊழி­யர்­க­ளுக்கு 10,000 ரூபா சம்­பள உயர்­வினை வழங்­கு­வாக 2010 ஆம் ஆண்டு சரத் பொன்­சேகா வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளையே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் வழங்­கி­யுள்ளார்.

எனினும் 2010 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் போது 2,500 ரூபா சம்­பள உயர்­வினை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்த மஹிந்த ராஜபக் ஷவிற்கே அரச ஊழி­யர்கள் வாக்கு அளித்­தனர். எனவே இம்­மு­றையும் அதே நிலை­மைதான். எனினும் குறித்த 10,000 ரூபாவில் முற்­கொ­டுப்­ப­ன­வாக 5,000 ரூபாவை பெப்­ர­வரி மாதம் வழங்க இருப்­ப­தாக கூறு­கின்­றனர்.
எவ்­வா­றா­யினும் எமது அர­சாங்கம் இம்­முறை வரவு செலவுத் திட்­டத்­தி­னூ­டாக 5000 ரூபா கொடுப்­ப­ன­வு­களை வழங்­கி­ய­துடன் அடிப்­படை சம்­ப­ளத்தை 15000 ரூபா­வாக மாற்­றி­யுள்­ளது.

அத்­தோடு 2005 ஆம் ஜனா­தி­பதி தேர்­தலின் இலங்­கையின் மீள் எழுச்சி என்ற கொள்கை பிர­க­ட­னத்தில் அரச ஊழி­யர்­களின் தொகையை 3 இலட்­ச­மாக குறைக்க திட்­ட­மிட்­டனர். மேலும் அரச நிறு­வ­னங்­களை தனியார் மயப்­ப­டுத்­தவும் முனைந்­துள்­ளனர்.
எனினும் மஹிந்த ராஜபக் ஷ அரச ஊழி­யர்­களின் தொகையை 14 இலச்­ச­மாக அதி­க­ரித்தார். எனவே எதி­ர­ணி­யினர் சிங்­கப்பூர் நாட்டின் கொள்­கையை இங்கே அமுல்­ப­டுத்த பார்க்­கின்­றனர். அரச ஊழி­யர்கள் தொடர்பில் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சிந்­த­னைகள் ஐ.தே.க. வின் கொள்­கையை அடிப்­ப­டை­யாக கொண்­டது. அரச ஊழி­யர்­க­ளுக்கு அதி­க­ளவில் நிவா­ர­ணங்­களை வழங்­கி­யது மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­க­மாகும்.
கட்சி தாவப்­வில்லை
நான் கட்சி தாவ போவ­தாக வதந்­திகள் வெளி­யான வண்ணம் உள்­ளன. எனினும் நான் ஒரு போதும் கட்சி தாவ­போ­வ­தில்லை. அர­சி­லி­ருந்து எவரும் இனிமேல் கட்சி தாவப்­போ­வ­து­மில்லை.இதே­வேளை மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற்­ற­வுடன் நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­மொழி அளித்த வாக்­கு­று­திகள் அனைத்து பாலர் பாட­சா­லையின் செயற்­பாட்­டினை ஒத்­தது. குறித்த வாக்­கு­று­தி­களை எந்த தரு­ணத்­திலும் நிறை­வேற்ற இய­லாது. இவை­ய­ணைத்தும் சர்­வே­சத்தின் விருப்பின் படி அளிக்கும் வாக்­கு­று­தி­க­ளாகும்.
எதி­ர­ணியில் தேர்தல் பிர­சார பணி­க­ளுக்கு விரைவில் சர்­வ­தே­ச­தி­ட­மி­ருந்து நிதி உதவி கிடைக்கப் பெறும்.

மேலும் மைத்­தி­ரி­பால நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமையின் சில அதிகாரங்களை தன்வசம் வைத்து கொள்வேன் என கூறியுள்ளார். இதற்கமைய நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்களை பெறும் நிலைபாட்டியிலேயே அவர் உள்ளார்.அத்தோடு ரணில் விக்கிரமசிங்க உப பிரதமர் பதவியை கொண்டு வருவதாக கூறியுள்ளார். எனவே இலங்கை நாட்டை சீரழிக்க முனையும் சர்வதேச சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகும் என்றார்.


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 7:45

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் புதிதாக அமைக்கப்படும் எமது ஆட்சியில் யுத்தம் ஒன்று ஏற்படவும் புலிகள் மீண்டும் தலைதூக்கவும் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று பொது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Maithri_2
நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிபடுத்தி பசி பட்டினி அவலத்தை போக்கி சட்டத்தின் ஆட்சியைஉறுதிபடுத்தி சிறந்த செயற்திறனான பக்கச்சார்பற்ற அரச சேவையை உருவாக்கி தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி நாட்டை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் அரசியல் ஸ்திரமற்றத்தன்மை எற்படும் என்று கூறுகின்றனர். இந்த நாட்டில் தற்போதுதான் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது. எமது ஆட்சியில் நாட்டில் அரசியல் ஸ்திரத்தை ஏற்பபுடுத்த்த நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்ற பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்ட பொது வேட்பாளர் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அங்கு மேலும் உரையாற்றுகையில்,
மக்கள் ஆதரவு அதிகரிப்பு
பொது வேட்பாளர் என்ற ரீதியில் இன்றைய தினம் எனக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். எதிர்வரும் எட்டாம் திகதி எமது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகவும் வெற்றிகரமான தேர்தல் பிரசார செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் எமக்கு மக்களின் அமோக ஆதரவு கிடைத்துவருகின்றது. அந்த ஆதரவு எதிர்வரும் 8 ஆம் திகதி பாரிய வெற்றியாக பரிணமிக்கும்.
1948 ஆம் ஆண்டிலிருந்து பதவிக்கு வந்த பல அரசாங்கங்கள் நாட்டை அபிவிருத்தி செய்யவும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முயற்சித்தன. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அழித்துவருகின்றது. அரச .வளங்களை ஒரு குடும்பம் அனுபவித்துவருகின்றது.
மக்கள் பதலிளிப்பார்கள்
அதனால் தான் பொது நோக்கத்துடன் நாங்கள் களமிறங்கியுள்ளோம். தர்மத்துடன் வாழ்பவன் தர்மத்தினால் பாதுகாக்கப்படுவான். அதனடிப்படையிலேயே எங்கள் தேர்தல் பயணத்.தையே நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எமது தேர்தல் பயணத்தை தடுப்பதற்கும் இடையூறு செய்வதற்கும் தேர்தல் சட்டங்களை மீறியும் மேலும் பல செயற்பாடுகளையும் மேற்கொண்டும் முயற்சிக்கின்றனர். இவற்றுக்கு எதிர்வரும் எட்டாம் திகதி நாட்டு மக்கள் பதலிளிப்பார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் எதிர்வரும் எட்டாம் திகதி தோற்கடிப்பார்கள்.
குரோதம் வைராக்கியம் இல்லை
எமக்கு என்னதான் தடைகளை ஏற்படுத்தினாலும் எவ்வளவு எதிர்ப்புக்களை செய்தாலும் நாங்கள் யாருக்கும் வைராக்கியம் செய்யமாட்டோம். நாங்கள் யாருக்கும் குரோதமாக செயற்படமாட்டோம். இந்த நாட்டை அகிம்சை வழியில் முன்கொண்டு செல்வோம்.
நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிபடுத்தி பசி பட்டினி அவலத்தை போக்கி சட்டத்தின் ஆட்சியைஉறுதிபடுத்தி சிறந்த செயற்திறனான பக்கச்சார்பற்ற அரச சேவையை உருவாக்கி தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி நாட்டை கட்டியெழுப்புவோம். இதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
புலி வர முடியாது
நாங்கள் எதிர்வரும் எட்டாம் திகதி தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால் நாட்டில் மீண்டும் யுத்தம் வரும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறிவருகின்றது. ஆனால் யுத்தத்தை வெற்றிக்கொண்ட சரத் பொன்சேகா எம்முடன் இருக்கின்றார். எனவே அவர் ஒருபோதும் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கமாட்டார். மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கும் இடமளிக்கமாட்டோம்.
ஐந்து தடவை பதில் பாதுகாப்பு அமைச்சர்
நான் இந்த நாட்டில் ஐந்து தடவைகள் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்துள்ளேன். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்துள்ளேன். புலிகளின் ஐந்து தாக்குதல் முயற்சிகளுக்கு இலக்காகியுள்ளேன். மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1999 ஆம் ஆண்டு புலிகளின் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானார். அவர் அதில் ஒரு கண்ணை இழந்தார். இவ்வாறு பாதிப்புக்களை சந்தித்துள்ள நாங்கள் புலிகளினதும் சர்வதேச சக்திகளினதும் சதி முயற்சிகளுக்கு துணைபோவோமா? இல்லை. ஒருபோதும் அவ்வாறு இடம்பெறமாட்டாது.
பொறுப்புடன் கூறுகின்றோம்
இந்த நாட்டுக்கு பாரிய சேவையாற்றியுள்ள ரணில் விக்ரமசிங்கவும் ஒருபோதும் புலிகள் மீண்டும் தலைதூக்க இடமளிக்கமாட்டார். எனவே இந்த விடயத்தை இங்கு பொறுப்புடன் கூறுகின்றோம். அதாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நீக்கப்பட்டு அமைக்கப்படும் எமது புதிய ஆட்சியில் யுத்தம் ஒன்றும் ஏற்படவும் புலிகள் மீண்டும் தலைதூக்கவும் இடமளிக்கமாட்டோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் அரசியல் ஸ்திரமற்றத்தன்மை எற்படும் என்று கூறுகின்றனர். இந்த நாட்டில் தற்போதுதான் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டை பாராளுமன்றமோ அமைச்சரவையோ நிர்வகிக்கவில்லை. மாறாக ஒரு குடும்பமே நிர்வகிக்கின்றது. "எனவே எமது ஆட்சியில் நாட்டில் அரசியல் ஸ்திரத்தை ஏற்பபுடுத்த்த நடவடிக்கை எடுப்போம்.
விஞ்ஞாபனம்
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எவ்வாறு செயற்பாடுகளை முன்னெடுப்பது என்று குறிப்பிட்டுள்ளோம். 100 நாட்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை எவ்வாறு நீக்குவது அதன் பின்னர் எனது பணி எ்வ்வாறு அமையும்? 100 நாட்களின் பின்னரான அரசாங்கம் எவ்வாறு அமையும் என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தெளிவான முறையில் முன்வைக்கபபட்டுள்ளன. இந்த விவகாரங்களில் இதுவரை நிலவிவந்த குழப்பங்களுக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. இந்த கொள்கை பிரகடனத்தில் உள்ள விடயங்களை முழுமையான நடைமுறைப்படுத்துவேன் என்று உங்கள் முன் வாக்குறுதியளிக்கின்றேன்.
தேர்தல் சட்டங்களை மீறுகின்றனர்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அராசங்கம் தேர்தல் சட்டதிட்டங்களை அப்பட்டமாக மீறிவருகின்றது. ஆனால் அது அவர்களுக்கு தீமையாக அமையப்போகின்றது. நான் இரண்டாவது தடவை ஜனாதிபதியாக வருவதற்காக இம்முறை போட்டியி்டவில்லை. நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தவும் பண்பான சமூகத்தை கட்டியெழுப்பவுமே பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளேன்.
மத நல்லிணக்கம்
பௌத்த மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கு இடையில் நலலிணக்கம் ஏற்படுத்தப்படும. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும். அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை முன்கொண்டு செல்வோம். எமது எதிர்கால அரசாங்கம் சுத்தமான வெளிநாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும். இன்று உலகளவில் எமது நாடு ஓரம்கட்டப்பட்டுள்ளது. எனவே சிறந்த முறையில் இதனை திட்டமிட்டு முன்னெடுப்போம்.
ரணிலின் தியாகம்
என்னை பொதுவேட்பாளராக ஏற்றதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாரிய அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் செய்துள்ளார். இதனை நாம் மறக்கக்கூடாது. அதற்காக நான் எனது நன்றியை தெரிவிக்கின்றேன். மேலும் என்னுடன் கைகோர்த்துள்ள அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
பக்கசார்பாக அரச ஊடகங்கள்
அரச ஊடகங்கள் மிகவும் பக்கச்சார்பான முறையில் செயற்பட்டுவருகின்றன. என்னை கேவலப்படுத்தி சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. எனது குரலை பயன்படுத்தி உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளியிடுகின்றனர். ஆனால் அந்த அரச ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்காக நானங அனுதாபப்படுகின்றேன். அவர்களை நான் வெறுக்கவில்லை. அரச ஊடகங்களில் பணியாறறுகின்றவர்களுக்கு உள்ள அழுத்தங்கள் எனக்குத் தெரியும்.
எனது பழைய குரல்
மேலும் தற்போது நான் முன்னர் பேசிய விடயங்களை ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்துகின்றனர். ஜனாதிபதி தனது வெறறிக்காக எனது குரலை பயன்படுத்துவது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த 10 வருடங்களாக ஜனாதிபதியின் ஆடசி பலமடைய எனது குரல் தேவைப்பட்டது. இந்நிலையில் தற்போதும் எனது குரல் அவர்களுக்கு தேவைப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். அவர்கள் தற்போது எனது குரலை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை பழைய கதைகள் என்று மக்களுக்கு தெரியும். எனது புதிய கதை மற்றும் புதிய கொள்கை குறித்துமக்கள் தெரிந்துகொண்டுள்ளனர்.


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 7:51

மைத்திரியின் தேர்தல் வாக்குறுதிகள்
பொது எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­திரி பால சிறி­சேன நேற்று தனது தேர்தல் விஞ்­ஞா­பனத்­துடன் 100 நாள் வேலைத்­திட்டம் ஒன்றை முன்­வைத்­துள்ளார். அந்த 100 நாள் திட்­டத்தில் செயற்­ப­டுத்­தப்­படும் பொரு­ளா­தார சமூகம் சார் செயற்­பா­டுகளின் விபரம் வருமாறு.
1. அரச ஊழி­யர்களுக்கு 10000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்­குதல் மற்றும் அதன் ஆரம்­ப­மாக உட­ன­ நடை­மு­றைக்கு வரும் வகையில் பெப்­ர­வரி மாத சம்­ப­ளத்­திற்கு 5000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­குதல். அனைத்து கொடுப்­ப­ன­வு­க­ளையும் உள்­ள­டக்கி ஒன்­றி­ணைந்த சம்­பளம் நிர்­ண­யிக்­கப்­பட்­டதன் பின்னர் மிகுதி தொகையுடன் மிகுதி சம்­பள அதி­க­ரிப்பை வழங்­குதல்.
2. மோட்டார் சைக்கிள் வழங்கும் போது அசா­தா­ர­ணத்­திற்கு உள்­ளான அரச ஊழி­யர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்­க­ளுக்கும் நிவாரணம் வழங்குதல்.
3. அர­சியல் அடிமை வேலை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பட்­ட­தா­ரி­களை அரச சேவைக்கு உள்­ளீர்த்து அவர்­களின் தகை­மை­க­ளுக்கு ஏற்ற பதவி உயர்வு திட்­டத்தை ஏற்­ப­டுத்தல்.
4. ஓய்­வூ­தி­ய­தா­ரர்­களின் வேற்­று­மையை அகற்றும் வகையில் அவர்­க­ளுக்கு 3500 ரூபா மாதாந்த மேல­திக கொடுப்­ப­னவை பெற்­றுக்­கொ­டுத்தல்.
5. அரச வங்­கி­களில் உள்ள சிரேஷ்ட பிர­ஜை­களின் நிலை­யான வைப்­புக்­களில் முதல் 10 இலட்­சத்­திற்­காக செலுத்­தப்­ப டும் வட்டியை 15% வரை அதி­க­ரித்தல்.
6. சமுர்த்தி கொடுப்­ப­னவை அதி­கப்­பட்சம் 200 ரூபா வரை அதி­க­ரித்தல்.
7. குழந்­தையை பிர­ச­விக்கும் அனைத்து தாய்­மா­ருக்கும் போச­ணை­மிகு உணவை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக 20000 ரூபா வரை­யான கொடுப்­ப­னவை பெற்­றுக்­கொ­டுத்தல்.
8. அத்­தி­யா­வ­சி­யப்­பொ­ருட்கள் பத்­துக்­காக அறவி­டப்­படும் அதிக வரியை அகற்றி விலையை குறைத்தல். அதற்கு இணை­யா­க­ அத்­தி­யா­வ­சிய உணவு உற்­பத்­தியில் ஈடு­பட்­டுள்ள உள்­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்கை எடுத்தல்.
9. எரி­பொ­ருட்­க­ளினால் அரசு அற­விடும் 4000 கோடிக்கும் அதி­க­மான வரியை அகற்றி, எரிப்­பொ­ருட்­களின் விலையை குறைத்து அதன் பலனை பொது மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுத்தல்.
10. போக்­கு­வ­ரத்து கைத்­தொ­ழி­லுக்கு தேவை­யான ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு பெற்­றுக்­கொ­டுத்து அரசு மற்றும் தனியார் துறையின் பொது போக்­கு­வ­ரத்து சேவையின் வினைத்­தி­றனை உயர்த்த நட­வ­டிக்கை எடுத்தல்.
11. வீட்டு கேஸ் சிலின்­டரின் விலையை 300 ரூபாவால் குறைத்தல்.
12. நெல் கொள்­வ­ன­வுக்­கான உத்­த­ர­வாத விலை ஒரு கிலோ­வுக்கு50 ரூபா வரை அதி­க­ரித்தல்.
13. உரு­ளைக்­கி­ழங்கு ஒரு­கி­லோ­வுக்­கான கொள்­வ­ன­வுக்­கான உத்­த­ர­வாத விலை 80 ரூபா வரை அதி­க­ரித்தல்.
14. பச்சை தேயிலை கொழுந்து ஒரு கிலோ­ வுக்கு 80 – -90 ரூபா வரை­யான மிதக்கும் விலையை பேணுதல்.
15. இறப்­ப­ருக்கு 350 ரூபா மிதக்கும் விலையைப் பேணுதல்.
16. பாற்­பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு ஒரு லீற் றர் பாலுக்கு தற்­போது செலுத்­தப்­படும் 60 ரூபா உத்­த­ர­வாத விலையை 10ரூபா­வால் அதி­க­ரித்தல்.
17. அனைத்து விவ­சாய கடன்களையும் 50%த்தால் கழித்து செலுத்தவுள்ள மிகுதி தொகையை மீளாய்வு செய்து செலுத் துவதற்கு சலுகைக்­காலம் வழங்­குதல்.
18. தற்­போது வழங்­கப்­படும் மண்­ணுக்கும் பயிர்ச்­செய்­கைக்கும் மனி­த­னுக்கும் தீங்கு விளை­விக்கும் தரம் குறைந்த உரத்­திற்­காக உயர் நிலை­யி­லான மற்றும் தரத்­தி­லான உரத்தை வழங்­குதல்.
19. தற்­போது வழங்­கப்­படும் தரம் குறைந்த உரத்­திற்குப் பதிலாக தரத்­தி­லான உரத் தை சிறிய தேயிலை தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுத்தல்.
20. நடுக்­க­டலில் உயி­ரி­ழக்கும் மீன­வ­ருக்­காக பத்து இலட்சம் வரை­யான காப்­பு­று­தி­யினை அரச பங்­க­ளிப்­புடன் பெற்­றுக்­கொ­டுத்தல்.
21. விவ­சா­யி­க­ளுக்கு பயிர்­சேத காப்­பு­று­தி­யினை அரச பங்­க­ளிப்­புடன் பெற்­றுக்­கொ­டுத்தல்.
 
22. விவ­சாய,மீனவ சமூ­கத்­திற்­காக புதிய ஓய்­வூ­திய சம்­பள திட்­டத்தை ஆரம்­பித் தல்.
23. முச்­சக்­கர வண்டி சார­திகள், மேசன் அல்­லது தச்சு, சிறிய வர்த்­தகம் உள்­ளிட்ட தொழிற்­று­றை­களில் ஈடு­பட்டுள் ­ள­வர்­க­ளுக்­காக ஓய்­வூ­திய திட்டம் ஒன்றை ஆரம்­பித்தல்.
24. வெளிநாட்டில் தொழில் புரியும் ஊழி­யர்­க­ளுக்கு ஓய்­வூ­திய திட்டம் ஒன்றை ஆரம்­பித்தல் மற்றும் அவர்­களின் இந்­நாட்டு வதி­யாதோர் கணக்­குக்கு 2.5% வட்­டி­யினை தற்­போது வழங்­கப்­படும் வட்டி வீதத்­திற்கு சேர்த்தல்.
25. மத்­திய கிழக்கு உள்­ளிட்ட வெளிநா­டு­களில் தொழில் புரியும் இலங்­கை­யர்­ களின் குடும்­பத்தை பார்த்­துக்­கொள்­ வ­தற்­காக விஷேட குடும்ப காப்பு வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்தல்.
26. அதி­க­பட்சம் இரண்டு இலட்சம் ரூபா பெறு­மதி வரை அடகு வைத்­துள்ள தங்க நகை­க­ளுக்கு செலுத்த வேண்­டிய அதிக வட்டி மற்றும் தண்ட பணத்தை அகற்­றுதல்.
27. பல்­வேறு நிதி நிறு­வ­னங்­க­ளினால் வழங்­கப்­பட்ட உறுதி, கட­னட்டை திட் டம் மற்றும் பிரமிட் திட்டம் மூலம் ஏமாற்­றத்­திற்கு உள்­ளா­ன­மை­யினால் சிக்­கி­யுள்ள கட­னுக்கு மேல் கடனை அகற்ற தேவை­யான நட­வ­டிக்கை எடுத் தல்.
28. பெண்­க­ளுக்­ எதிரான வன்­முறை, சிறு வர் துஷ்­பி­ர­யோகம் மற்றும் பெண்­க­ளுக்கு எதி­ரான பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­களை கட்­டுப்­ப­டுத்தி பெண்­க­ளுக்கு மற்றும் சிறு­வர்­க­ளுக்கு எமது நாட்டில் சுதந்­தி­ர­மாக வாழும் வகையில் புதிய சட்­டத்தை உரு­வாக்­குதல் மற்றும் சட் ­டத்தை வலு­வாக நடை­மு­றைப்­ப­டுத் தல்.
29. யுத்­தத்தால் வித­வை­­க­ளான அனைத்து சமூக பெண்­க­ளுக்கும் மற்றும் அவர்­களில் தங்கி வாழ்­ப­வர்­க­ளுக்கு விஷேட காப்­புறுதி திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத் தல்.
30. அர­சியல் தீர்­மானம் எடுப்­ப­தற்கு பெண்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிப்­ப­தற்­காக மாகாண நிர்­வாக மற்றும் மாகாண சபை­களில் பெண் அங்­கத்­து­வத்தை குறைந்த பட்சம் 25%மாவது இருத்தல் வேண்டும் என்­ப­தனை சட்­ட­மாக்­குதல்.
31. எமது இளை­ஞர்கள் எதிர்நோக்கும் வேலை­யில்லா பிரச்­சி­னையை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்கும் நோக்கில் உள்­நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் மற்றும் சுய தொழில் பத்து இலட்­சத்தை உரு­வாக்கும் வேலைத்­திட்­டத்தை உரு­வாக்­குதல்.
32. இளைஞர் – யுவ­தி­க­ளுக்கு தாம் விரும் பிய கருத்தை முன்­வைக்­கவும் அதனை தெரி­விக்­கவும் மற்றும் அதனை வினைத்­திறன் மிக்­க­தாக உரு­வாக்க சுதந்­தி­ர­மான இளமை காலத்தை அனு­ப­விக்க உள்ள உரி­மையை உறு­திப்­ப­டுத்தல்.
33. இல­வ­ச­மாக இன்­டர்நெட் பெற்­றுக் ­கொ­டுத்தல். பிரதான இடங்களில் 'வைபை' பெற்றுக்கொடுத்தல்
34. இளைஞர் பாரா­ளு­மன்­றத்­திற்கு பண அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொ­டுத்து இளை ஞர் சமூகம் மற்றும் ஏனைய இளை­ஞர்­ அ­மைப்­புக்­க­ளினால் முன்­வைக்­கப்­படும் இளைஞர் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு செலவு செய்­வ­தற்கு 2015 ஆம் ஆண்­டுக்கு 250 மில்­லியன் ரூபா இளை ஞர் பாரா­ளு­மன்­றத்­திற்கு ஒதுக்­குதல்.
35. கடன் தகவல் பிரிவில் (CRIB) பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்டு கடன் தொல்­லையில் சிக்­கி­யுள்ள சிறிய மற்றும் நடுத்­தர அள­வி­லான வியா­பா­ரிகள் மற்றும் கிரடிட் கார்ட் உரி­மை­யா­ளர்­களை அதி­லி­ருந்து மீட்டு சிறிய நிபந்­த­னை­யு­ட­னான கடன் செலுத்தும் சந்­தர்ப்­பத்தை பெற்­றுக்­கொ­டுத்தல்.
36. நாட்டின் வளர்ச்­சிக்கு அர்ப்­ப­ணிக்கும் உள்­நாட்டு வியா­பார சமூ­கத்­தி­னரை உரு­வாக்­கு­வ­தற்­காக சிறிய மற்றும் நடுத்­தர அள­வி­லான கைத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு சிறிய நிபந்­த­னை­யு­ட­னான இலகு கடன் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தல்.
37. ஏற்­று­ம­தியை அதி­க­ரித்தல் மற்றும் தொழில் வாய்ப்பை அதி­க­ரித்­தலை நோக்­காக கொண்டு GSP+ உத­வியை மீண்டும் பெற்­றுக்­கொ­டுத்தல்.
38. தற்­போது நடாத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் நிதி நிறு­வ­னங்கள் மற்றும் வங்­கியை ஒன்­றி­ணைக்கும் வேலைத்­திட்­டத்தை மீண்டும் நடை­மு­றைக்கு கொண்டு வருதல்.
39. சிறிய கடன் கட்­டுப்­பாடு செய்தல் மற் றும் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு சுயா­தீன அதி­கார சபையை உரு­வாக்­குதல்.
40. சிறிய முயற்­சி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்­காக அரச பணி­ய­கத்தை ஸ்தாபித்தல்
41. முச்­சக்­கர வண்டி துறைக்­காக முச்­சக்­கர வண்டி உரி­மை­யா­ளர்கள்,வங்கி பிர­தி­நி­திகள் உள்­ள­டங்­கிய அரச அலு­வ­ல­கத்தை உரு­வாக்­குதல்.
42. வரவு செலவு திட்­டத்தில் இல­வச சுகா­தா­ரத்­திற்கு தற்­போது ஒதுக்­கப்­பட்­டுள்ள 1.8% வரை­யான தொகையை 3%மாக அதி­க­ரித்தல்.
43. அரச வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சைக்­காக வரும் நோயா­ளிக்கு தேவை­யான அனைத்து மருந்­து­களும் குறை­வில் ­லாமல் வைத்­தி­ய­சா­லை­க­ளி­லேயே வழங்­குதல்.
44. அரச வைத்­தி­ய­சா­லை­களில் அறுவை சிகிச்­சைக்­காக பட்­டி­யலில் இணைத்து உள்ள நோயா­ளி­க­ளி­னதும் அறுவை சிகி­ச்­சை­களை பூர்த்தி செய்ய அவ­சர வேலைத்­திட்டம் ஒன்றை முன்­வைத் தல்.
45. அரச வைத்­தி­ய­சா­லை­களில் வெளி நோயாளர் பிரிவை இரவு 10.00 மணி வைரை திறக்க நட­வ­டிக்கை எடுத்தல்.
46. சிறு­நீ­ரக நோய்க்கு மூல காரணி என சந்­தே­கிக்­கப்­படும் களை­நா­சினி வகை, ஏனைய விவ­சாய இர­சா­யன பொருட்­க­ளுக்கு இடைக்­கால தடை விதித்தல் மற் றும் சிறு­நீ­ரக நோயை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு குறு­கிய கால மற்றும் நீண்ட கால திட்­டத்தை வகுத்து அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்தல்.
47. உணவு, அழ­கு­சா­தன பொருட்கள் மற்றும் சேவை, ஔடதம் போன்ற அனைத்து நுகர்வு பொருட்கள் கொள்­வ­ன­வுக்­காக வலு­வான நிறு­வ­கத்தை ஸ்தாபிக்க நட­வ­டிக்கை எடுத்தல்.
48. ஆயுர்­வேத வைத்­திய சேவையை வலுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்தல்.
49. அனைத்து மேைலத்­தேய, கீைழத்­தேய மற்றும் தேசிய வைத்­திய முறையை சிறந்த முறையில் ஒன்­றி­ணைத்து ஒன்­றி ­ணைந்த சேவை­யினை மக்­க­ளுக்கு வழங்க தேவை­யான நட­வ­டிக்கை எடுத் தல்.
50. ஹெரோயின், கேரல கஞ்சா, டெபா உள்­ளிட்ட அனைத்து போதை­வஸ்­தை யும் குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் முழு­மை­யாக அகற்ற முன்­னு­ரிமை வழங்­கு தல் மற்றும் தற்­போது போதைப்­பொ­ருட்­க­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்ள இளை­ஞர்­களை புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்காக நாட­ளா­விய ரீதியில் உட­னடி செயற்­றிட்­டத்தை வெளிநாட்டு உத­வி­யுடன் முன்­னெ­டுத்தல்.



அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 7:52

51. போதை­வஸ்து வியா­பா­ரி­களை சுற்­றி­வ­ளைப்­ப­தற்­காக ஒன்­றி­ணைந்த விேஷட படை­ய­ணியை உரு­வாக்­குதல்.
52. புகை­யிலை உற்­பத்தி பொதி­களில் பட ரீதி­யான சுகா­தார எச்­ச­ரிக்­கையை 80% வரை அதி­க­ரித்தல்.
53. கெசினோ அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இர த்து செய்தல்.
54. சுங்க வரி செலுத்­தாமல் மேற்­கொள்­ளப்­படும் எதனோல் வியா­பா­ரத்தை கட்­டுப்­ப­டுத்தல்.
55. தற்­போது இல­வச கல்­விக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள 1.7% வரை­யான ஒதுக்­கீட்டை 6% வரை இலக்கை நோக்கி நகர்­தலை ஆரம்­பித்தல்.
56. உயர் கல்வி அமைச்­ச­ரினால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள பல்­க­லைக்­க­ழக அதி­காரத்­ து­வத்தை மானி­யங்கள் ஆணைக்­கு­ழு வின் ஊடாக மீண்டும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுத்து அர­சியல் தீர்­மா­னத்­திற்கு உட்­பட்­டுள்ள பல்­க­லைக்­க­ழ­கத்தை அதி­லி­ருந்து மீட்டல்.
57. பல்­க­லைக்­க­ழக மஹ­ாபொல புல­மைப்­ப­ரி­சிலை ரூபா 5000 வரை அதி­க­ரித்தல்.
58. உயர் தரத்தில் மூன்று பாடங்கள் சித்­தி­ய­டைந்த அனை­வ­ருக்கும் உயர் டிப்­ளோ­மா­அல்­லது பட்­டப்­ப­டிப்பு வரை கல்­வி­கற்க தேவை­யான அவ­கா­சத்தை வழங்­குதல்.
59. பாட­சா­லை­களில் முதலாம் ஆண்­டுக்கு பிள்­ளை­களை இணைத்­துக்­கொள்ளும் போது சாதா­ரண,முறை­யான திட்­டத்தை உரு­வாக்­குதல். முதலாம் ஆண்­டுக்கு அனு­ம­திக்கும் போது தற்­போது அசா­சா­தா­ர­ணத்­திற்கு ஆளா­கி­யி­ருக்கும் பிள்­ளைக்­க­ளுக்கு உத­வி­ய­ளித்தல்.
60. பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்­களை உள்­ளீர்க்கும் போது தற்­போது உள்ள தாம­தத்தை முற்­றாக இல்­லாமல் செய்து முதலாம் தவணை ஆரம்­ப­மாகும் போது அனைத்து பிள்­ளை­க­ளுக்கும் பாட­சாலை அனுமதியினைப் பெற்­றுக் ­கொ­டுத்­தலை சான்­றுப்­ப­டுத்தல்.
61. பாட­சா­லை­களில் சம­யத்தை போதிக் கும் சுற்­று­நி­ருபத்தை அனைத்து பாட­சா­லை­க­ளிலும் செயற்­ப­டுத்தல். அவ் வேலைத்­திட்­டத்தை ஆராய்ந்து பார்ப்­ப­தற்கு அனைத்து மத பிர­தி­நி­தி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தான குழுவை நிய­மித்தல்.
62. சர்­வ­தேச பாட­சா­லை­களை அரச கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்தல்.
63. மீன்­பிடி படகு, வளை மற்றும் படகு எஞ்­சி­னுக்கு தற்­போது விதிக்­கப்­படும் அதிக வரியை அகற்­றுதல்.
64. வெளிநாட்டு மீன்பிடி படகு இலங்கை கடல் எல்­லையை கடப்­பதை கட்­டுப்­ப­டுத்தல்.
65. இறைச்சி ஏற்­று­ம­திக்கு அற்­றுப்­போ­யுள்ள ஐரோப்­பிய சந்­தையை மீண்டும் பெற்­றுக்­கொள்­ளுதல்.
66. காற்று மற்றும் கடலில் ஏற்­படும் அசா­தா­ரண நிலை தொடர்பில் சரி­யான தக­வலை உட­ன­டி­யாக மீன­வ­ருக்கு பெற்­றுக்­கொ­டுக்க கூடிய கால­நிலை அவ­தான வேலைத்­திட்­டத்தை தயா­ரித் தல்.
67. மூடப்­பட்­டுள்ள கால்வாய் கட்­ட­மைப்பை மீண்டும் புனர் நிர்­மாணம் செய்தல்.
68. குளங்­களில் உள்ள சேற்றை அகற்­று­தலை ஆரம்­பித்தல்.
69. தற்­போது புல் வெட்ட, வீதி­களை சுத்­தப்­ப­டுத்த, ஓடை­களை சுத்­தப்­ப­டுத்த பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரை அதி­லி­ருந்து மீட்டு முப்­ப­டையை இரா­ணுவ வேலைக்கு மாத்­திரம் ஈடுப்­ப­டுத்தல்.
70. அர­சி­யல்­ம­ய­மா­கி­யுள்ள பொலிஸ் பதிவி உயர்வு வழங்கும் முறையை நீக்கி வினைத்­திறன்,இய­லுமை,திறமை,அர்ப்­ப­ணிப்பு மற்றும் செயற்­பாட்டின் பிர­கா ரம் பத­வி­உ­யர்வை வழங்கும் வேலைத்­திட்டம் ஒன்றை ஆரம்­பித்தல்.
71. உப பொலிஸ் சேவையின் அதி­கா­ரிகள் ... சேவைக்கு உள்­வாங்­கப்­படும் போது அது வரை சேவையில் ஈடு­பட்­டி­ருந்த அதி­கா­ரி­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்பை நிறை­வு­செய்தல் மற்றும். சேவையின் அதி­கா­ரி­களின் சிரே­ஷ்­டத்­து­வத்தை பாது­காக்க தேவை­யான திட்­டத்தை முன்­னெ­டுத்தல்.
72. அமைச்­சர்கள் மற்றும் அவர்­களின் குடும்­பத்­தி­னரின் பாது­காப்­புக்­காக முப்­ப­டை­யி­னரை ஈடு­ப­டுத்­தலை உட­ன­டி­யாக நிறுத்­துதல் மற்றும் சட்ட முறை­மை­யி­லான பொலிஸ் பாது­காப்பை அவர்­க­ளுக்கு வழங்­குதல்.
73. தோட்­டப்­புற மக்கள் தற்­போது வாழும் வறு­மை­யா­ன ­லயன் அறை வாழ்க்­கை­யி­லி­ருந்து மீட்டு அவர்­க­ளுக்கு காணி உரி­மை­­யுடன் வீட்டு உரி­மையை பெற்­றுக்­கொ­டுத்தல்.
74. பதுளை, நுவ­ரெ­லியா, கண்டி, மாத்­தளை, கேகாலை போன்ற மாவட்­டங்­க ளில் தோட்­டப்­புற மக்­களின் பிள்­ளை­க­ளுக்கு தமிழ் மொழி மூலம் உயர் கல்­வியை தொட­ர­க்கூ­டிய வகையில் வச­தி­யுடன் பாட­சா­லை­களை ஆரம்­பித்தல்.
75. சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தமது வீடுகளில் மற்றும் காணி­களில் பல்­வேறு கார­ணி­க­ளுக்­காக வெளியேற்­றப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு தல்.
76. கொழும்பு நகரில் வீடு மற்றும் காணி அப­க­ரிக்­கப்­பட்ட மக்­களின் அச் சொத்தை மீள் மதிப்­பீடு செய்து அதன் பெறு­ம­திக்கு தற்­போது வழங்­கப்படும் வீட்டு கடனில் கழித்தல்.
77. வீட்டு வச­தி­யின்றி வாழும் இலட்­சக்­க­ணக்­கான மக்­க­ளுக்கு வீட்டு வசதி வழங்கும் வேலைத்­திட்டம் ஒன்றை ஆரம்­பித்தல்.
78. வடக்­கிலும் தெற்­கிலும் ஜன­நா­யக ரீதி­யான சிவில் நிர்­வா­கத்தை செயற்­ப­டுத்தல்.
79. மத ரீதி­யாக பாகு­பா­டுகள் மற்றும் மத ரீதி­யாக வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த சட்ட ரீதி­யான நட­வ­டிக்கை எடுத் தல்.
80. மத வழி­பாட்டு தலங்­க­ளுக்கு தேவை­யான காப்­பு­று­தி­யினை வழங்­குதல்.
81. மத ஒரு­மைப்­பாட்­டுக்­காக செயற்­படும் மற்றும் பிரி­வினை வாதத்­திற்கு எதி­ராக நேர­டி­யாக நட­வ­டிக்கை எடுக்கும் மதத் தலை­வர்­களை உள்­ள­டக்­கிய பிர­தேச மற்றும் தேசிய சபையை ஸ்தாபித்தல்.
82. தொல்­பொருள் நிலை­யங்­களை பாது­காத்­த­லுக்­கான வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்தல்.
83. ஸ்ரீ தலதா மாளிகை உள்­ளிட்ட புண்­ணிய பிர­தே­சங்­களை அண்­டிய பிர­தே­சத்தில் நடத்­தப்­படும் மது­பான சாலை ­களை அவ்­வி­டத்தில் இருந்து அகற்­று­வ­துடன் அவ் புண்­ணிய பூமியை சுற்­றிகார் பந்­தய போட்டி நடத்­து­வதை உட­ன­டி­யாக நிறுத்­துதல்.
84. திட்­ட­மி­டப்­பட்­டுள்ள பௌத்த விகா ரை மற்றும் தேவா­லய சட்­ட­மூ­லத்தில் மாற்­றத்தை கொண்­டு­வ­ருதல்.
85. சம்­பி­ர­தாய பிரி­வென கல்­வியை சர்­வ­தேச மட்­டத்­திற்கு உயர்த்­து­த­லுக்­காக மற்றும் அறி­நெ­றி­பா­ட­சாலை ஆசி­ரி­யர்­களை பயிற்­று­விப்­ப­தற்­காக செயற்­றிட்­டங்­களை ஆரம்­பித்தல்.
86. சர்­வ­தேச பௌத்த பல்­க­லைக்­க­ழ­கத்தை ஆரம்­பிப்­ப­தற்கு தேவை­யான அடித்­த­ளத்தை இடுதல்.
87. மிருக வதையை தடுப்­ப­தற்கு சட்ட ரீதி­யான நட­வ­டிக்கை.
88. பொருளாதார, சமூக அபிவிருத்தி, மனித உரிமை மற்றும் நல்லாட்சி போன்ற துறைகளுக்கு பொருத்தமான மக்கள் அமைப்புகளுக்கு தமது நடவடிக் கையை மேற்கொள்வதற்கு தற்போது உள்ள கட்டுப்பாட்டை அகற்றுதல்.
89. அனைத்து கலைஞர்களின் படைப்பை மதிக்கும் மற்றும் சுயாதீனத்துவத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை ஆரம் பித்தல்.
90. அனைத்து வெகுசன ஊடகவியலாளர் களின் மற்றும் நிறுவனங்களின் சுதந்தி ரத்தை பாதுகாக்கும் குறுகிய மற்றும் நீண்டகால வேலைத்திட்டத்தை ஆரம் பித்தல்.
91. கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை பாதுகாத்தல்.
92. பாராளுமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்தல்.
93. சர்வதேச யுத்த குற்றச்சாட்டுக்கு நீதிமன் றம் உருவாக்கிய ரோம் ஒப்பந்தத்திற்கு இலங்கை கையெழுத்து இடாததனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஏற்படு மாயின் அதனை தேசிய சுயாதீன நீதி மன்றத்தின் கீழ் மேற்கொள்ளுதல்.
94. முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் 43 ஆவது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள் ளிட்ட அரசியல் பழிவாங்கல் மற்றும் தண்டனைக்கு உள்ளானவர்களுக்கு பறி போன பதவிகள் மற்றும் உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொடுத்தல.
95. கௌரவமிக்க வெளிநாட்டு சேவையை மீண்டும் ஸ்தாபித்தல்.
96. தேசிய வனாந்தரமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ள வனாந்தரங்களை பாதுகாத்தல் அதன் எல்லையை பாது காத்தல்.
97. அழிவடைந்து வரும் பிரதேசங்களை பாதுகாத்தல்.
98. அழிவடைந்து வரும் மற்றும் அழி வடைந்த பிரதேசங்களை பாதுகாக்க நவீன விஞ்ஞான முறைமைகளை பயன் படுத்தி அவற்றை மீண்டும் புனருத்தா ரணம் செய்தல்.
99. மிருக சட்டமூலத்தை பயமின்றி மற் றும் கட்சிபேதமின்றி கடுமையாக நடை முறைப்படுத்தல்.
100. அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சுற்றாடல் பாதிப்பு தொடர்பாக முன்னு ரிமை வழங்குதல்.


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 7:58

100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துவிட மைத்திரியால் முடியாது



பகிரங்க விவாதத்துக்கு நாம் தயார்
தேசிய தொழில் வல்லுனர்கள் அமைப்பின் சட்டத்தரணிகள்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியதைப் போன்று 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கமுடியாது. இது தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு பொது எதிரணியினரை அழைப்பதாக தேசிய தொழில் வல்லுனர்களின் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதாயின் இலங்கையில் தற்பொழுது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். இவை அனைத்தையும் 100 நாட்களுக்குள் செய்ய முடியாது. போலியான உத்தரவாதங்களை வழங்கி மக்களை ஏமாற்றுவதற்கு பொது எதிரணியினர் முயற்சிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தேசிய தொழில் வல்லுனர்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊட கவியலாளர் சந்திப்பு நேற்றுமுன்தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலை மையகத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணிகளே இவ்வாறு கூறினர்.
100 நாட்களுக்குள் இதனை சாதிக்க முடியாது என்பதை எம்மால் நிரூபிக்க முடியும். முடிந்தால் இது தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு பொது எதிரணிக்கு ஆதரவு வழங்கும் சட்டத்தரணிகளுக்கு சவால் விடுப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய தொழில் வல்லுனர்களின் அமைப்பின் சட்டம் தொடர்பான இணைப்பாளர் சட்டத்தரணி சந்தன அமரசேகர தெரிவித் தார்.
ஆட்சிக்கு வந்ததும் 24 மணித்தியாலங் களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதாக மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இது சாத்தியமற்றதொன்று.
அரசியலமைப்பில் இதற்கு இடமில்லை. அவ்வாறு பிரதமர் ஒருவருக்கு தனது அதிகாரங்களை ஜனாதிபதி வழங்குவ தாயின், ஜனாதிபதியாகவுள்ள நபர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் உள்ளவராக இருக்க வேண்டும் அல்லது வெளிநாடு சென்றிருக்க வேண்டும் அல்லது வேறு காரணங்கள் இருக்க வேண்டும். இதில் எந்தவொரு காரணமும் இன்றி பிரதமருக்கு அதிகாரங்களை வழங்கும் அதிகாரம் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
100 நாட்களுக்குள் அதனைச் செய்வேன் இதனைச் செய்வேன் என போலியான உறுதிமொழிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். இதில் காணப்படும் போலித் தன்மையை மக்களுக்குப் புலப்படுத்தி அவர்களைத் தெளிவுபடுத்த பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பை மாற்றுவதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். அது மட்டுமன்றி மாற்றப்படவிருக்கும் அரசியலமைப்பின் திருத்தம் தொடர்பில் பொதுஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதும் அவசியம். இவ்வாறான நிலையில் 100 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் அவற்றை நிறைவேற்றுவது சாத்தியமற்றவிடயமாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளிலேயே பொது எதிரணியினர் இறங்கியிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி கெளசல்ய நவரட்ண கூறினார்.


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 8:03

அம்பாறை, அக்கரைப்பற்றில் இன்று ஜனாதிபதி : கோலாகல ஏற்பாடு

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை அம்பாறைக்கு வருகிறார். இதனால் அம்பாறை நகரமே அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.
இன்று (சனிக்கிழமை) காலை அம்பாறை நகருக்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு வீதியில் திரண்டு நின்று வரவேற்பளிக்கவும் பல விரிவான ஏற் பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாவட்ட தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் பீ. தயாரத்ன, பிரதி அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெறவிருக்கும் இப்பிரசார மக்கள் கூட்டம் அம்பாறை வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்த நாயக்க, அமைச்சர் அதாவுல்லா, அமைச்சர் தினேஷ் குணவர்தன, சிரியாணி விஜேவிக்கிரம உட்பட பல அமைச்சர் களும் கலந்து கொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பி.ப. 2.00 மணிக்கு அக் கரைப்பற்றில் நடைபெறும் பிரசார கூட்டத்திலும் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவும் உள்ளார்.


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 8:04

யாழ். நலன்புரி நிலையங்களில் உள்ளவர்கள் மிக விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள்

* நான் சொன்னதைச் செய்யும் தலைவர் வேறு தலைவர்களை நம்பி ஏமாற வேண்டாம்
* எமது உள்நாட்டு பிரச்சினைகளை சர்வதேச நாடுகள் தீர்க்க முடியாது
* தேர்தல் வெற்றியின் பின் உடனடி தீர்வுகள் காணப்படும்
யாழ். நலன்புரி மக்களை ஜனாதிபதி நேரில் சந்தித்து உறுதி


யாழ்ப்பாணத்தில் கடந்த 24 வருடங்களாக நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.


வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் செயற்திட்டத்தின் கீழ் இந்த மக்களையும் மீளக்குடியமர்த்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அந்த மக்களின் தலைவர்கள் சிலரின் செயற்பாட்டினால் அம்முயற்சி பயனற்றுப் போனதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அந்த தலைவர்கள் இதனை சர்வதேசப் பிரச்சினையாகக் காட்டி செயற்பட்ட போதும், இது சர்வதேசப் பிரச்சினையல்ல, இது ஒரு உள்நாட்டுப் பிரச்சினையே என்பதையும் ஜனாதிபதி தெளிவுபடு த்தினார். எமது உள்நாட்டுப் பிரச்சினையை சர்வதேச நாடுகள் தீர்க்க முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றிபெற்று இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நலன்புரி முகாமில் வாழ்ந்து வரும் மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
1999 ஆம் ஆண்டிலிருந்து இந்த மக்கள் மீள் குடியமர்த்தப்படாமல் நலன்புரி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்ற போதும், அந்த மக்களின் தலைவர்கள் இதில் தலையிட்டு இவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை.
மழைக்காலங்களில் சம்பந்தப்பட்ட நலன்புரி முகாம் நீரில் மூழ்கி பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக அந்த மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். உடனடியாக அதனைக் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி அந்த மக்களுக்கு அதற்குரிய வசதிகளை செய்து கொடுக்குமாறு வட மாகாண ஆளுனர் ஜீ. ஏ. சந்திரசிறிக்கு பணிப்புரை விடுத்தார். தாம் சொல்வதைச் செய்கின்ற தலைவர் என்றும் ஏனைய தலைவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அரச அதிகாரிகளும் இதன்போது உடனிருந்தனர். 


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by சுறா Sat 20 Dec 2014 - 9:54

எனக்கு இவையெல்லாம் படிக்க நேரம் கிடையாது. ஆனால் தமிழக மக்களில் ஒருமித்த பிரார்த்தனை என்னவென்றால் மீண்டும் சுனாபானா ரா.ப ஆட்சிக்கு வரக்கூடாது. அவரே எல்லா இடங்களிலும் புலம்புறமாதிரி கரண்டு சேர் தான் அவருக்கு ஹிஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha Sat 20 Dec 2014 - 13:16

அடேங்கப்பா!  சூப்பர் திரி!

இலங்கை தேர்தல் களம் சேனையிலும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டதா?

ம்ம் பதியுங்கள் பதியுங்கள். அனைத்து தரப்பு செய்திகளையும் பதியுங்கள்.  நாங்கள் இங்கே வந்து படித்து தெரிந்து கொள்கின்றோம். 

தமிழர் தேசிய கூட்டணி தேர்தலை புறக்கணிக்க சொல்கின்றதாமோ?  இருப்பதை எல்லாம் பறித்தது போதாது என ஒட்டு போடும் உரிமையையும்  தமிழருக்கு இல்லாமல் போக செய்ய ஏதேனும் துட்டு கிட்டு வாங்கி இருப்பார்களோ?

5 வருட ஜனாதிபதி ஆட்சியை நீக்கி விட்டு சுவிஸ் போல் ஒரு வருட  ஜனாதிபதி ஆட்சி யை கொண்டு வாங்கப்பா! நாடும் வளரும் நாமும் வளர்வோம். 

அதுக்கு முன்னாடி.. புலம் பெயர்ந்தவர்களுக்கான வாக்களிக்கும் உரிமையை   நிறுத்த இரட்டை குடியுரிமையை நிறுத்தி இருக்கும்  மகிந்தவை என்னன்னு நாலு வார்த்தை நச்சுன்னு கேளுங்க? 

இப்போதைய நிலையில் நானும் என் பசங்களும் இலங்கையர் இல்லைப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 13:32

ஆமாம் அக்கா ஒரு வருட ஆட்சிமுறையில் கண்டிப்பாக திறமையானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது காரணம் கிடைக்கின்ற ஒரு வருடத்தில் சிறப்பாக இருந்தால்தான் அடுத்த வருடம் ஆட்சி செய்யலாம் என்ற பயம் இருக்கும்.  
மாறும் அத்தனையும் மாறும் என்று நம்ப முடிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha Sat 20 Dec 2014 - 16:05



இது எப்படி இருக்கு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 21 Dec 2014 - 7:48

ராஜபக்ஷவின் தேர்தல் கொள்கை பிரகடனம் நாளை.!
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) 10845901_10152413876761467_6989383274636789674_n_0ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் கொள்கை பிரகடனம்  நாளை  22ம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது
 மஹிந்த சிந்தனை முக்கால நோக்கு என்ற தொனிப் பொருளில் இம்முறை கொள்கைப்பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் முற்பகல் 11 மணியளவில் தேர்தல் கொள்கைப்பிரகடனம் வெளியிடப்படவுள்ளது.
பெளத்த மகாநாயக்க தேரர்கள் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
2005 ம் ஆண்டில் மஹிந்த சிந்தனை  2010 ம் ஆண்டில் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு இம்முறை  2015 ஆண்டில் மஹிந்த சிந்தனை முக்கால நோக்கு என்ற அடிப்படையில் கொள்கை பிரகடனம் வெளியிடப்பட உள்ளது
பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேன வியாழனன்று விகார மகாதேவி  பூங்காவில் வைத்து தனது தேர்தல் கொள்கை பிரகடனத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 21 Dec 2014 - 7:49

நாமல் ராஜ­பக்ஷ உப ஜனா­தி­பதி போல் செயற்­ப­டு­கிறார் : ஹிரு­ணிகா
ஜனா­தி­ப­தியின் புதல்­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ உப ஜனா­தி­பதி போன்று செயற்­ப­டு­வ ­தாக குற்றம் சாட்­டி­யுள்ள மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் ஹிருணிகா பிரே­மச்­சந்­திர அமைச்­சர்கள் பலர் அவரை "சேர்" என அழைத்த சந்­தர்ப்­பங்­களும் உள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார்.
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Hirunika-premachandra
எதிர்க்­கட்சித் தலைவர் காரி­யா­லயத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­கவி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,
தற்­போது சமூக வலைத்­த­ளங்­களை பார்க்கும் போது இளைஞர், யுவ­திகள் அர­சியல் ரீதி­யாக தெளிவான நிலையில் இருக்­கின்­றார்கள் என்­பது வெளிப்­ப­டை­யா­கின்­றது. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலை விடவும் இம்­ முறை 95சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான இளைஞர், யுவ­தி­க­ளுக்கு உண்மை நிலைமை புரிந்­துள்­ளது. அத்­துடன் அவர்கள் அர­சாங்­கத்தின் மாயைக்குள் வீழ்ந்­தி­ருக்­க­வில்லை என்­பது புலப்­பட்­டுள்­ளது.
அர­சாங்கம் என்­பது வேறு. அரச நிறு­வ­னங்கள் என்­பது வேறு. அரச நிறு­வ­னங்கள் மக்கள் சார்­பாக செயற்­ப­டு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டதே தவி­ரவும் மாறும் அர­சாங்­கங்­க­ளுக்­கேற்ப செயற்­ப­டு­வ­தற்கு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை.
ஆனால் தற்­போது பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் அர­சாங்க நிறு­வ­னங்­களின் பிர­தான கணக்­கா­ளர்­க­ளுடன் விசேட சந்­திப்­பொன்றை ஏற்­பாடு செய்து அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்­க­ளுக்­கான செல­வீ­னத்தைக் குறைத்து திறை­சேரி நிதி யை ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கென மீதப்­ப­டுத்­து­மாறு கூறி­யுள்­ளார். இவ்­வா­றான செயற்­பா­டொன்று கடந்த காலங்­களில் இடம்­பெற்­றி­ருக்­கவில்லை. பல வரு­டங்­க­ளாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் செயற்­பட்ட அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் கள் 2010ஆம் ஆண்டு தெரிவு செய்­யப்­பட்ட அமைச்­சரின் கீழ் இருக்கும் பொரு ­ளா­தார அமைச்­சிடம் வேலைத்­திட்­டங்­க­ளுக்­காக கோர­வேண்­டிய சோக நிலைமை காணப்­ப­டு­கின்­றது.
இம்­முறை தேர்தல் அறி­விப்பைச் செய்­த­பின்னர் ஜனா­தி­பதி எம்­முடன் அல­ரி­மா­ளி­கையில் கலந்­து­ரை­யா­டினார். தேர்தல் தொடர்­பாக கூறி­ய­போது எந்த ஒரு அமைச்­சரும் வாய்­தி­றக்­காது மௌன­மா­கவே இருந்­தனர். தொடர்ந்து எனது அரு­கி­லிருந்த ராஜித சேனா­ரட்ன கடந்த தேர்தல் அறி­விக்­கப்­ பட்­ட ­போது அனை த்து அமைச்­சர்­களும் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்தி ஆர­வா­ரித்­தி­ருந்­ததாக கூறினார்.
ஜனாதி­பதியே உங்­க­ளு­டைய பிரச்­சி­னையை கூறுங்கள் எனக்­கோ­ரிய­ போதும் அவ­ருக்கு முன்னால் தமது கருத்­துக்­களை முன்­வைக்­காது இருந்­தனர். காரணம் அவர் கள் அச்­சத்­துடன் இருக்­கின்­றார்கள்.
இன்று இளைய சமு­தாயம் பற்றி நாம் சிந்­தித்தால் இந்த நாட்டில் ஒரே­யொரு இளைஞர் மட்­டுமே இருக்­கின்றார். அவர் வேறு யாரு­மல்ல நாமல் ராஜபக்ஷ. இவர் பல்வேறு தீர்மானங்களை எடுப்பார். ஜனாதிபதி எடுக்க வேண்டிய முடிவைக் கூட எடுப்பார். ஏறக்குறைய உப ஜனாதிபதி போன்றே செயற்படுகின்றார். பல அமைச்சர்கள் அவரை "சேர்" என அழைத்த சந்தர்ப்பங்களை நான் நேரில் கண்டுள்ளேன் என்றார்.


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 21 Dec 2014 - 7:52

மைத்திரியின் பிரச்சார மேடை மீது தாக்குதல்! 4 பேர் காயம்: ரணில் செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் சம்பவம்

பதுளை மாவட்டம் ஹப்புத்தளையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரசிங்க அந்த இடத்திற்கு செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
கூட்டத்தை ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ ஒழுங்கு செய்திருந்தார்.
ஹப்புத்தளை நகர சபையின் தலைவரது சகோதரர்களும் அவரது ஆதரவாளர்களும் இந்த தாக்குதலை நடத்தியதாக ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த கொடிகள் அகற்றப்பட்டு மேடை சேதமாக்கப்பட்டது.
தாக்குதலை நடத்திய உள்ளூர் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக பொலிஸார் தாக்குதலை வேடிக்கை பார்த்தனர்.
இந்த தாக்குதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் செனரத் ஜயசூரிய உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Sl_20122014_1


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Sl_20122014_2


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Sl_20122014_3


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 21 Dec 2014 - 7:55

மைத்திரிபாலவுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு பேராசிரியர் கோரிக்கை!
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Dr.Kumar-David1
மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்ற வாக்கியம் நேரடியாக சேர்க்கப்படாவிட்டால், மைத்திரிபாலவுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
பேராசிரியர் குமார் டேவிட், இந்தக் கோரிக்கையை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினரிடமும் மைத்திரிபாலவை ஆதரிக்கும் ஏனைய தரப்பினரிடமும் விடுத்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதி வழங்கப்படவில்லை. என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை ஒரு காட்டிக் கொடுப்பாகவே தாம் கருதுவதாக குமார் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில், மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கும் தரப்புக்கள் மத்தியில் இணக்கமின்மை நிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 21 Dec 2014 - 9:11

 முஸ்லிம் கட்சிகள் !சரியான நேரத்தில் பிழையான முடிவு

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சித் தாவல்களும் பேரம் பேசல்களும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு போகிறது. இம்முறை புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மையினர் காணப்படுகின்றனர். இதில் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் பிரதான பங்குதாரர்களாக உள்ளனர். அதனால்தான் இரு பிரதான வேட்பாளர்களும் இவ்விரு கட்சிகளுக்கும் தொடர்ச்சியான அழைப்பு விடுக்கின்றனர். இவ்விருவரில் யாரை ஆதரிப்பது என்பதில் இரு கட்சிகளும் இதுவரையில் சரியான தீர்வெடுக்காத ஒரு நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றத்திற்கான அழைப்பினை பகிரங்கமாக விடுக்கின்ற அதேவேளை, தமிழ் மக்கள் பட்ட இன்னல்களுக்கு தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தினை தமிழ் மக்களை சந்தித்து காய்நகர்த்தி வருகின்றமை ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கூடுவதும் கலைவதும் வாக்குவாதப்படுவதும் இறுதியில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் கலைந்து செல்வதுமான செய்திகள் அண்மைக்காலமாக பத்திரிகைகளை அலங்கரிக்கின்ற அதேவேளை, கட்சித் தொண்டர்களையும் அபிமானிகளையும் ஆத்திரமூட்டுகின்ற விடயமாகவும் மாறியுள்ளது. இது முஸ்லிம் காங்கிரஸின் முதுகெலும்பில்லாத தன்மையைக் காட்டுகின்றது. தேர்தல் வியாபாரத்தில் டொலர்கள் பரிமாறப்படுவதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபோவதும் ஆசியாவின் ஆச்சரியமான நாட்டில் புதிய விடயமல்ல. ஆனால் இதில் வரலாற்றில் இடம்பிடித்த கட்சியாக மு. காங்கிரஸ் சாதனை படைத்துள்ளது. அவ்வாறு கட்சித் தாவியவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக முதலைக் கண்ணீருடன் தனது பிரதேச அபிவிருத்தி பற்றிப் பேசுவது இன்று நேற்றுள்ள கதையல்ல. மறைந்த தலைவர் அஷ்ரப் காலத்திலிருந்து வருகின்ற ஒரு மரபாகும். வாழையடி வாழையாக நடந்துவரும் இந் நிகழ்வுதான் இன்று கட்சிக்குள் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. இதனை நன்கு உணர்ந்து கொண்ட தலைமைப்பீடம் கட்சித் தாவலை தடைசெய்யும் முகமாக உலமாக்கள் முன்னிலையில் பாராளுமன்ற, மாகாண, நகர, பிரதேச சபை உறுப்பினர்களிடம் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டது மாத்திரமல்லால் யாரும் யாரையும் தனிப்பட்டமுறையில் சந்திப்பதும் பேட்டிகொடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனை மீறியும் கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியை கருவறுக்கின்ற நிலை இல்லாமல் இல்லை. இவர்களுக்கான பதிலை வாக்காளப் பெருமக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. முஸ்லிம் காங்கிரஸின் நிலை இவ்வாறு இருக்க ஆளும் கட்சியில் முடிசூடா மன்னர்களாக வலம் வரும் ஏனைய முஸ்லிம் தலைமைகள் அரசியல் சாணக்கியம் பற்றிப் பேசுகின்றனர். அற்ப சுகபோக வாழ்கைக்காக நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டுக் கொண்டு முட்டிபோட்டு ஜனாதிபதி துதிபாடும் படலத்தில் ஊது குழலாக நகர்வலம் வருகின்றனர். இதுதான் இவர்களது சாணக்கியம். இவர்கள் பாராளுமன்றத் தேர்தல் மிக விரைவில் வரும் என்பதை மறந்துவிட்டார்கள் போல. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எப்பவும் போல தனது ஆதரவாளர்களை கூட்டி நடனமாடிவிட்டு ஜனாதிபதியிடம் சென்று கை கூப்புவது ஒன்றும் புதிய விடயமல்ல அதைத்தான் இம்முறையும் செய்திருக்கிறார்கள். தனக்கு நெருக்கமானவர்களை மட்டும் அழைத்து மஹிந்த துதி பாடிவிட்டு நாம் யாரை ஆதரிப்பது என வினவிவிட்டு மஹிந்தவுக்கு ஆதரவானவர்கள் கையை உயர்த்துங்கள் என தனது கையையும் உயர்த்திக் கொண்டார். அங்கிருந்தவர்கள் மன்னர் எவ்வழியே அவ்வழியே நாமும் என ஆமா சாமி போட்டனர். அதிலும் சுவாரஷ்யமான விடயம் சினிமாக்களில் வருவது போன்று ஒரு நாள் முதல்வர் அல்லது மந்திரி என்ற பாணியில் ஒரு குறுகிய கால பாராளுமன்ற உறுப்புரிமையை தனது கட்சியைச் சார்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலிக்கு பெற்றுக் கொடுத்திருப்பதுதான். கல்குடா மக்கள் விரும்பாத போதும் ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல் என்பதை அறிந்தும் அமீர் அலி  பதவியை ஏற்றிருப்பது தலைமை விசுவாசமா? அல்லது பொக்கட் சாணக்கியமா? என அவருக்கு வாக்களித்த மக்கள் வெறுப்புக்குள்ளாகியுள்ளனர். மறுபக்கத்தில் தேசிய (பிரதேச) காங்கிரஸின் தலைவர் எப்போதும் அமைதி காக்கும் அற்புத மனிதர். எத்தனை பள்ளிகள் உடைக்கப்பட்டாலும் முஸ்லிம்களின் உரிமை மறுக்கப்பட்டாலும் உயிர்கள் காவுகொள்ளப்பட்டாலும் சொத்துகள் சேதமாக்கப்பட்டாலும் தனது முடிவில் எந்த மாற்றமும் மேற்கொள்ளமாட்டார். காரணம் தானும் ஒரு குட்டி குடும்ப ஆதிக்கத்தின் குறுந்தலைவரல்லவா?  அதனால் மக்கள் நலனை விட குடும்ப நலனே மேலானது என நினைப்பதில் தவறில்லை. அரசில் இருக்கும் ஏனைய முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப்  பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை என்பதால் நேரடியாக விடயத்துக்கு வருவோம். இவர்கள் அனைவரும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் என்பதை மக்கள் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதை மறந்துவிட்டார்கள். ஆனால் மக்கள் இவர்களை விட அரசியல் சாணக்கியம் மிக்கவர்களாக உள்ளார்கள். இவர்கள் கூட்டிக் கழித்துப் பார்ப்பதற்கு முன்னர் இவர்கள் அடையப்போகும் வரப்பிரசாதத்தை மக்கள் எடைபோட்டுவிட்டனர். அரசியல் தலைமைகளது இந்நடவடிக்கைகளைப் பார்க்கும் போது மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் வார்த்தை நினைவுக்கு வருகிறது. "சரியான நேரத்தில் எடுக்கின்ற பிழையான முடிவும் பிழையான நேரத்தில் எடுக்கின்ற சரியான முடிவும் கட்சியையும் சமூகத்தையும் பிழையாக வழிநடத்திவிடும்'. உண்மையில் இவ்வாசகத்துக்கு உரித்தான மு.கா. ஏனைய முஸ்லிம் தலைமைகளும் இதனைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று அரசில் இருக்கக்கூடிய சிங்களத் தலைவர்கள் அரசாங்கத்தின் ஊழல், மோசடி, அடக்கு முறை, இன விரோதப்போக்கு என்பவற்றை சுட்டிக்காட்டி அரசாங்கத்திலிருந்து வெளியேறி பொது எதிரணியில் ஒன்றிணைந்து ஆட்சிமாற்றம் வேண்டி நிற்கின்றபோது, முஸ்லிம் கடும் போக்கு, பள்ளிகள் உடைப்பு, முஸ்லிம் பெண்கள் பர்தா விடயம், முஸ்லிம் வர்த்தகம் சூறையாடப்படல், முஸ்லிம் தனியார் சட்டம் கேள்விக்கு உட்படுதல், வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் கருத்தில் கொள்ளப்படாமை, முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல், உயிர்ச் சேதம், ஏன் அல் குர்ஆனையே கேவலப்படுத்துகின்ற பொதுபலசேனா போன்ற அமைப்புகளை அரவணைத்து ஊக்கமும் சக்தியும் கொடுக்கின்ற அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆதரிக்கிறார்கள் என்றால் முஸ்லிம் தலைமைகளிடத்தில் எங்கோ கோளாறு இருக்கின்றது என்றுதானே அர்த்தம்.  இன்று இலங்கையிலுள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற இன, மத, பேதத்திற்கு அப்பால் அனைத்து மக்களும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றவேளையில் முஸ்லிம் தலைமைகள் மட்டும் அரசியல் சாணக்கியம் பற்றிப் பேசுவது எந்தவகையில் நியாயமானது? இவர்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்? இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள்? ஆனால் இம்முறை மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 22 Dec 2014 - 13:11

ரிஷாத் மைத்திரிக்கு ஆதரவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு  ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Rishad-Bathiudeen1
பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி  பொது எதிரணியின் ஜனதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.
இவர்கள் தற்போது  எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து தமது ஆதரவினை தெரிவிததுள்ளனர்.
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Rishath
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Rishad-Bathiudeen2
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Rishad-Bathiudeen3
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Rishad-Bathiudeen


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha Mon 22 Dec 2014 - 14:24

பதிவுகளை கவனியுங்கள் ஹாசிம். 

பதிவு பந்தியாய் மொத்தமாய்  குவிவது போல் இருப்பது படிக்க ஆர்வம் தரவில்லைப்பா. அதை விட படங்கள் தெரியவில்லை... வெறும் பெட்டி பெட்டியாய் தான் தெரியிது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 22 Dec 2014 - 14:49

படம் எனக்கு நன்றாக தெரிந்தது அதனால் கவனிக்கவில்லை பந்திகளைக் கவனிக்கிறேன் அவசரப் பதிவு அதனால் திருத்த முடியவில்லை


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha Mon 22 Dec 2014 - 14:56

ம்ம் எனக்கு படம் தெரியல்லை. நேற்றும் அந்த வெள்ளப்பதிவில் தெரியாமல் தான் இருந்தது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 22 Dec 2014 - 17:03

Nisha wrote:ம்ம் எனக்கு படம் தெரியல்லை. நேற்றும் அந்த வெள்ளப்பதிவில் தெரியாமல் தான் இருந்தது.
அப்படியா எனக்கும் வேறுசிலர் போடும் படங்கள் தெரிவதில்லை ஆனால் றூமுக்கு சென்று பார்த்தால் நன்றாக தெரியும் அதனால்தான் கவனிக்க வில்லை


அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha Tue 23 Dec 2014 - 2:48

மைத்ரியின் தேர்தல் அறிக்கையில் ஏழைகள் வாழ்வுக்கு என்ன இருக்கிறது? பார்வையில் பட்டவை!
-------------------------------------------------------
- அத்தியாவசிய 10 உணவு பொருட்களுக்கான விலைக் குறைப்பு.
- சமுர்தி வழி கிடைக்கும் பணம் இரட்டிப்பாக கிடைக்க செய்வது
- அரசு ஊழியர்களது ஊதியம் ரூபா 5'000- 10'000 வரை உயர்த்துவது
- விவசாய கடனை 50 சதவீதம் இல்லாமல் செய்வது.
- அரச வைத்தியசாலை ஓபீடீக்களை இரவு 10 மணி வரை திறக்க வைப்பது.
- குழந்தை பிறப்பொன்றின் போது குடும்பத்துக்கு ரூபா 20'000 சன்மானமாக வழங்குவது.
- பாடசாலை குழந்தைகளை சேர்ப்பதில் உள்ள சிக்கல்களை கழைவது.
- உயர்தர மாணவர்களை பாதுகாக்க ஒரு முறைமையை ஏற்படுத்துவது
- வெளிநாடுகளில் பணி புரிவோருக்காக ஓய்வுதிய திட்டம் ஒன்றை வழங்குவது.
- அரச ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரமாக்குவது.
- எண்ணை விலையை குறைப்பது
- ஊடகவியல் சுதந்திரத்தை உண்டாக்குவது.
- அனைத்து நகரங்களிலும் வைபை இணைய வசதியை இலவசமாக வழங்குவது.
- அனைத்து மக்களது இன - மத - கலாச்சாரங்களை தம் விருப்பம் போல பேண வழி செய்வது ஆகியன கண்ணில் படுகின்றன. ( எனவே இலங்கை வாழ் அனைவருக்கும் எனும் போது - ஒவ்வொரு மத - இனம் என பிரிக்காமல் விட்டுள்ளார்கள்)
இன்னும் உண்டு. இவை இறுகிப் போயுள்ள முழு சமூகத்தின் மூச்சு விடுவதற்கு எனக் கொள்ளலாம்.

  பேஸ்புக்கில் அஜீவன்

நான் ஏழைகளுக்கான விடயங்களை மட்டுமே மொழி பெயர்த்தேன். ஊழல்கள் தொடர்பாக ஒரு இலாகாவை உருவாக்கி தண்டனை அளிக்க இருப்பதாக நேற்றைய 'சட்டன' நிகழ்ச்சியில் சம்பிக்க தெளிவுபடுத்தினார். இன -மத - நல்லணக்கம் ஒன்று குறித்தும் பேசினார். அனைத்து மக்களும் என சொல்லும் போது பாகுபடுத்த தேவையில்லை என்பதை சொன்னார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்) Empty Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum