சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

சாப்பிடுவதற்க்கு மட்டுமா காய், பழங்கள். Khan11

சாப்பிடுவதற்க்கு மட்டுமா காய், பழங்கள்.

2 posters

Go down

சாப்பிடுவதற்க்கு மட்டுமா காய், பழங்கள். Empty சாப்பிடுவதற்க்கு மட்டுமா காய், பழங்கள்.

Post by ஹனி Sun 19 Dec 2010 - 19:23

சாப்பிடுவதற்க்கு மட்டுமா காய், பழங்கள். 1_93

அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையே நம் சமைலறை தானே. வெறும் ருசியாக சமையல் செய்து சாப்பிட்டால் மட்டும் போதாது. சமைக்க உபயோகப்படுத்தும் காய்கறிகளைக் கொண்டும், சாப்பிடும் பழங்களைக் கொண்டுமே நம்மை அழகுபடுத்திக் கொள்ளலாம்.
‘‘ப்யூட்டி பார்லர் செல்ல எனக்கு நேரமில்லை, பணம் செலவழக்க என்னால் முடியாது, செயற்கைப் பொருட்களை உபயோகித்தால் என் முக அழகு கெட்டு விடும்’’ என்று எண்ணுபவர்களுக்காக இந்த அத்தியாயம்.
இயற்கையான பல பொருட்களை நாங்களும் அழகு நிலையங்களில் உபயோகப்படுத்துகிறோம். அதே பொருட்களை நீங்களும் உபயோகித்து சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்கலாம்.
அதற்கான டிப்ஸ் இதோ முட்டை கோசை வேக வைத்து, அந்த நீரில் முகம் கழுவினால், பளிச்சென்று இருக்கும். (ஒரு சிலருக்கு பச்சையாக உபயோகப்படுத்துவது சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும்)
கேரட் சாற்றுடன் பால் 2 டீ ஸ்பூன் கலந்து முகத்தில் தேய்க்கலாம். இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது குறிப்பாக உலர் சருமத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.
உருளைக் கிழங்கை பச்சையாகத் துருவி, அதன் சாற்றை சருமத்தில் பூசும்பொழுது, சருமத்திற்கு குளிர்ச்சியும் பளபளப்பும் கிடைக்கும்.
அகத்திக் கீரையை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசவும், 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பிரகாசமாக இருக்கும். இதை வாரத்தில் ஒரு முறை செய்யலாம்.



பர பிரச்சினைக்கும், கண் அடியில் உள்ள கருவளையத்தைப் போக்கவும், உருளைக் கிழங்கு சாற்றில் பஞ்சை நனைத்துத் தேய்த்து வரலாம்.
வெள்ளரிக்காய் நிற மேம்பாட்டிற்காகவும், தேன் உங்களது நிறம் கருமையடையாமலும், இளநீர் உஷ்ணத்திலிருந்தும், உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்.
முகத்தில் அதிகமாக வேர்க்குரு இருந்தால் உருளைக் கிழங்கு சாறு, தர்பூசணி சாறு, நுங்கு, இளநீர் ஆகியவற்றை அடிக்கடி தடவி வந்தால் வேர்க்குரு மறையும்.

அதி மதுரத்தை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு அதை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசலாம். அல்லது பாலுடன் சேர்த்து முகத்தில் பூசலாம்.
நமது சருமத்திற்கு பி.காம்ப்ளக்ஸ் அவசியமானது. பருவினால் கூடிய தழும்பைத் தடுக்க ஈஸ்ட்டும், அதிமதுரப் பவுடரும் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் தழும்பு மறையும்.
தக்காளி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது. அதிலுள்ள சிலிகான் சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும். தக்காளி ஜூஸ் இரத்த விருத்திக்கு உகந்தது. இதில் வைட்டமின் ‘சி’ உள்ளதால் தோலில் தடவி பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால் பளபளப்பு கிடைக்கும்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சாப்பிடுவதற்க்கு மட்டுமா காய், பழங்கள். Empty Re: சாப்பிடுவதற்க்கு மட்டுமா காய், பழங்கள்.

Post by ஹனி Sun 19 Dec 2010 - 19:25

(தக்காளி சேர்த்தால் சருமத்தில் அரிப்பு ஏற்படுவதாக உணர்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் தக்காளி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்)
வெயில் காலத்தில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய தர்பூசணியில் 90 நீர்ச்சத்து இருக்கிறது. இதை சாப்பிடுவதும் உடலுக்க நல்லது.
தர்பூசணி சாற்றுடன் (2 ஸ்பூன்) முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் பூசிக் கழுவினால் குளிர்ச்சியாக இருக்கும்.
எண்ணெய் சருமத்தைக் கொண்டர்வகள் ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறை அப்படியே முகத்தில் தடவக் கூடாது. அதனுடன் நீர் கலந்து தேய்க்கலாம்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன், பால் சிறிது கலந்து 5லிருந்து 20 நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் கழுவலாம்.
வெள்ளரிக்காய், தர்பூசணிச் சாறை சம அளவில் (1 ஸ்பூன்) எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.
எலுமிச்சம் பழச் சாறுடன் கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சேர்த்துப் பூசினால் முகம் பளபளப்பாகும். (சாதாரண விரலி மஞ்சள் சிலருக்கு அலர்ஜியாகி தோலில் அரிப்பை ஏற்படுத்தும். இதேபோல் முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் சிட்ரஸ் கலந்த பழ வகைகளைப் பூசுவதைத் தவிர்க்கவும். அவர்கள் எந்த விதமான அழகு சம்பந்தப்பட்ட பலமான சிகிச்சையையும் எடுக்கக் கூடாது.

கேவோலின் பவுடர் ஒரு டீ ஸ்பூன், ஆரஞ்சுச் சாறு ஒரு டீஸ்பூன், சிறிது நிர் கலந்து பூசினால், எண்ணெய் வழியும் முகம் ஃப்ரெஷ்ஷான தோற்றத்துடன் இருக்கும்.
பழ வகைகளை முகத்தில் பூசிக் கழுவலாம். ஆனால் எல்லாப் பழங்களையும் உபயோகப்படுத்த முடியாது.
மஞ்சள் வாழைப்பழம் உலர் சருமத்திற்கு நல்லது. வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிது பால் அல்லது பால் பவுடர் முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.
ஆப்பிளை வேக வைத்து தோலை நீங்கி, உள்ளிருக்கும் கூழை முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.
எண்ணெய்ப் பசை சருமத்திற்கு அன்னாசிப் பழம் சாறுடன் பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் போடவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின் மகம் கழுவினால் பளிச் சென்றிருக்கும்.
பேரீச்சம் பழத்தைப் பால் அல்லது வெந்நீரில் ஊற வைக்கவும். அதை விழுதாக்கி அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தேய்க்கவும். (முடி இருக்கும் இடத்தைத் தவிர்த்து விடவும்.) 15லிருந்து 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவவும். இது சிறந்த ப்ளீச்சாகவும் செயல்படுகிறது.


பட்டர் ஃப்ரூட் எனப்படும் அவகோடா பழத்தினுள் இருக்கும் கூழை முகத்தில் தடவினால், முகம் பிரகாசமாக இருக்கும்.
பப்பாளி நல்ல நிறத்தைக் கொடுக்கக் கூடியது. ஆனால் உடலில் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள் அடிக்கடி இதை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
சரியான வேளையில், சரியான முறையில் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் 25 சதவீதம் அரிசி வகை இருக்க வேண்டும். மீதமுள்ள 75 சதவீதம் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் மற்றும் இதர சத்துக்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் காய்கறி, பழங்கள், கீரை வகைகளில் கிடைக்கின்றன.
நார்ச் சாத்துள்ள உணவு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கிழங்கு வகைகள், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், கொழுப்பு, இனிப்பு நிறைந்த பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிருங்கள். பிறகென்ன எப்பொழுதுமே நீங்கள் அழகு ராணிகளாகவும், அழகு ராஜாக்களுமாகத் திகழ்வீர்கள்.

ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சாப்பிடுவதற்க்கு மட்டுமா காய், பழங்கள். Empty Re: சாப்பிடுவதற்க்கு மட்டுமா காய், பழங்கள்.

Post by நிலா Sun 19 Dec 2010 - 19:39

:”@: :”@:
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

சாப்பிடுவதற்க்கு மட்டுமா காய், பழங்கள். Empty Re: சாப்பிடுவதற்க்கு மட்டுமா காய், பழங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum