Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
பற்களைப் பலப்படுத்த..
Page 1 of 1
பற்களைப் பலப்படுத்த..
என் வயது 63. மூன்று கடைவாய்ப் பற்கள் கூசுகின்றன. பல் மற்றும் ஈறு தேய்மானம் இருப்பதால் அந்தப் பற்களை எடுத்துவிடுவது நல்லது என்று பல் மருத்துவர் கூறுகிறார். சொத்தை இல்லாததால் நான் பல்லை எடுக்க விரும்பவில்லை. எனக்குச் சர்க்கரையும் இரத்தக் கொதிப்பும் உள்ளது. இந்த உபாதை ஏற்படக் காரணம் என்ன? எப்படிக் குணப்படுத்தலாம்?
"போதக கபம்' எனும் உமிழ்நீர், வாயினுள்ளே எப்போதும் கசிந்து கொண்டேயிருக்கும் ஒரு நீர் ஊற்றாகும். இந்த நீர், நாம் சாப்பிடும் உணவிலுள்ள காரம், புளிப்பு, சூடு போன்றவற்றால் வாயின் உட்புற ஜவ்வுகளில் புண் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையுடையது. இதற்கு நேர்மாறாக, இரைப்பையில் உள்ள பித்தத் திரவம், சூடும், வேக வைக்கும் தன்மையும் கொண்டது. இந்தப் பித்தத்திலுள்ள சூட்டைக் கட்டுப்படுத்துவதற்காகவே, வாயிலுள்ள உமிழ்நீர் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கிறது.
பற்கள் திடமாகவும் ஈறுகள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும், இந்த போதக கபமும், வயிற்றிலுள்ள பித்தத் திரவமும் சரியான நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளாலும் உணவு வகைகளாலும் உங்களுடைய வாயிலுள்ள உமிழ்நீர் வலுவிழந்திருக்கக் கூடும். அப்போது, இரைப்பையின் பித்தத் திரவத்திலுள்ள புளிப்பு, வாய்ப் பகுதியைத் தாக்கினால் வாய் வேக்காடு, நாக்குப் புண், பல் கூச்சம், வாய்நாற்றம், பற்களின் இடுக்குகளில் காரை படிதல், சீழ் தங்குதல் போன்ற உபாதைகள் ஏற்படக் கூடும். அதனால் உமிழ்நீரையும், அதிலுள்ள சக்தியைப் பாதுகாக்கவும் ஆயுர்வேதம் கசப்பு, துவர்ப்பு உவர்ப்புமிக்க பொருட்களைக் கொண்டு பல் துலக்க வேண்டும் என்று கூறுகிறது.
அந்த வகையில் எருக்கு, ஆல், கருங்காலி, புங்கு, மருது, மா, வேலம் போன்றவற்றின் குச்சிகளைப் பரிந்துரை செய்கிறது. இரவின் தூக்கத்தினால், உமிழ்நீர் கோளங்கள் சிறிது ஓய்வு பெறுவதால், பித்த வேகத்தை மறுநாள் காலையில் வாய் உலர்வு மற்றும் சிறிது கசப்பின் மூலமாகவும் உணரலாம். கை, கால் கழுவி வாயை நீரால் கொப்பளித்ததும், கோளங்கள் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. அப்போது துவர்ப்பும் கசப்பும் வாயிலுள்ள கபத்தையும் பித்தத்தையும் அகற்றவும், உரைப்பு அவற்றை நெகிழச் செய்யவும் உதவுகின்றன. அந்த வகையில் "தசனகாந்தி' எனும் பல்பொடியைக் கொண்டு காலை இரவு பல் தேய்த்து வர, பல் கூச்சத்திலிருந்து நீங்கள் விரைவில் விடுபடலாம்.
எலும்புகளின் வலுவானது சர்க்கரையின் உபாதையினால் குறையக் கூடும். அதனால் எலும்புகளை வலுப்படுத்தும் கோதுமை, பூண்டு, பச்சைப் பயறு, முருங்கை இலை, கொண்டைக் கடலை சுண்டல், பிரண்டைத் துவையல் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்கவும். எலும்புகளின் ஒரு கழிவான பற்கள் இதுமாதிரியான உணவு வகைகளால் வலுப்படும் என்பதால் உங்கள் உபாதை குறையக் கூடும்.
வெளிப்புறத்திலே மிகக் கடினமான காங்கிரீட் பூச்சு (தந்தவல்கம்), உள்புறத்திலே மிக மென்மையான நரம்பு மண்டலம் அமைந்த ஜவ்வு (தந்த மஜ்ஜா) என்ற அமைப்புடன் கூடிய பற்களை வலுப்படுத்தும் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய அரிமேதஸ் தைலத்தை நீங்கள் இரவில் படுக்கும் முன் ஒரு ஸ்பூன் வாயிலிட்டு, நன்றாகக் கொப்பளித்துத் துப்பி வர, பல் கூச்சம் உபாதை விரைவில் மட்டுப்படும். பற்களின் மேல் புளிப்பு, இனிப்பு கலந்த பொருள் சிறிது நேரம் தங்கியிருந்தாலும் சிறிது சிறிதாகப் பற்களின் கவசம் நொறுங்க ஆரம்பித்துவிடும். அப்போது உட்புற நரம்பு மண்டலம் பாதிப்படையும். அதை இந்தத் தைலம் கெடாமல் பாதுகாத்துவிடும். உணவுப் பொருளைச் சாப்பிட்டதும் வாயை நன்றாகக் கழுவவும்.
"போதக கபம்' எனும் உமிழ்நீர், வாயினுள்ளே எப்போதும் கசிந்து கொண்டேயிருக்கும் ஒரு நீர் ஊற்றாகும். இந்த நீர், நாம் சாப்பிடும் உணவிலுள்ள காரம், புளிப்பு, சூடு போன்றவற்றால் வாயின் உட்புற ஜவ்வுகளில் புண் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையுடையது. இதற்கு நேர்மாறாக, இரைப்பையில் உள்ள பித்தத் திரவம், சூடும், வேக வைக்கும் தன்மையும் கொண்டது. இந்தப் பித்தத்திலுள்ள சூட்டைக் கட்டுப்படுத்துவதற்காகவே, வாயிலுள்ள உமிழ்நீர் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கிறது.
பற்கள் திடமாகவும் ஈறுகள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும், இந்த போதக கபமும், வயிற்றிலுள்ள பித்தத் திரவமும் சரியான நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளாலும் உணவு வகைகளாலும் உங்களுடைய வாயிலுள்ள உமிழ்நீர் வலுவிழந்திருக்கக் கூடும். அப்போது, இரைப்பையின் பித்தத் திரவத்திலுள்ள புளிப்பு, வாய்ப் பகுதியைத் தாக்கினால் வாய் வேக்காடு, நாக்குப் புண், பல் கூச்சம், வாய்நாற்றம், பற்களின் இடுக்குகளில் காரை படிதல், சீழ் தங்குதல் போன்ற உபாதைகள் ஏற்படக் கூடும். அதனால் உமிழ்நீரையும், அதிலுள்ள சக்தியைப் பாதுகாக்கவும் ஆயுர்வேதம் கசப்பு, துவர்ப்பு உவர்ப்புமிக்க பொருட்களைக் கொண்டு பல் துலக்க வேண்டும் என்று கூறுகிறது.
அந்த வகையில் எருக்கு, ஆல், கருங்காலி, புங்கு, மருது, மா, வேலம் போன்றவற்றின் குச்சிகளைப் பரிந்துரை செய்கிறது. இரவின் தூக்கத்தினால், உமிழ்நீர் கோளங்கள் சிறிது ஓய்வு பெறுவதால், பித்த வேகத்தை மறுநாள் காலையில் வாய் உலர்வு மற்றும் சிறிது கசப்பின் மூலமாகவும் உணரலாம். கை, கால் கழுவி வாயை நீரால் கொப்பளித்ததும், கோளங்கள் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. அப்போது துவர்ப்பும் கசப்பும் வாயிலுள்ள கபத்தையும் பித்தத்தையும் அகற்றவும், உரைப்பு அவற்றை நெகிழச் செய்யவும் உதவுகின்றன. அந்த வகையில் "தசனகாந்தி' எனும் பல்பொடியைக் கொண்டு காலை இரவு பல் தேய்த்து வர, பல் கூச்சத்திலிருந்து நீங்கள் விரைவில் விடுபடலாம்.
எலும்புகளின் வலுவானது சர்க்கரையின் உபாதையினால் குறையக் கூடும். அதனால் எலும்புகளை வலுப்படுத்தும் கோதுமை, பூண்டு, பச்சைப் பயறு, முருங்கை இலை, கொண்டைக் கடலை சுண்டல், பிரண்டைத் துவையல் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்கவும். எலும்புகளின் ஒரு கழிவான பற்கள் இதுமாதிரியான உணவு வகைகளால் வலுப்படும் என்பதால் உங்கள் உபாதை குறையக் கூடும்.
வெளிப்புறத்திலே மிகக் கடினமான காங்கிரீட் பூச்சு (தந்தவல்கம்), உள்புறத்திலே மிக மென்மையான நரம்பு மண்டலம் அமைந்த ஜவ்வு (தந்த மஜ்ஜா) என்ற அமைப்புடன் கூடிய பற்களை வலுப்படுத்தும் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய அரிமேதஸ் தைலத்தை நீங்கள் இரவில் படுக்கும் முன் ஒரு ஸ்பூன் வாயிலிட்டு, நன்றாகக் கொப்பளித்துத் துப்பி வர, பல் கூச்சம் உபாதை விரைவில் மட்டுப்படும். பற்களின் மேல் புளிப்பு, இனிப்பு கலந்த பொருள் சிறிது நேரம் தங்கியிருந்தாலும் சிறிது சிறிதாகப் பற்களின் கவசம் நொறுங்க ஆரம்பித்துவிடும். அப்போது உட்புற நரம்பு மண்டலம் பாதிப்படையும். அதை இந்தத் தைலம் கெடாமல் பாதுகாத்துவிடும். உணவுப் பொருளைச் சாப்பிட்டதும் வாயை நன்றாகக் கழுவவும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» பற்களைப் பாதுகாப்பது எப்படி?
» ஈரலை பலப்படுத்த.
» புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்க சதி : நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு.
» தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்
» உக்ரைன் ராணுவத்தை பலப்படுத்த டிரோன் ராணுவம் திட்டம் – 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி
» ஈரலை பலப்படுத்த.
» புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்க சதி : நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு.
» தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்
» உக்ரைன் ராணுவத்தை பலப்படுத்த டிரோன் ராணுவம் திட்டம் – 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|