Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
கனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமானது: திமுக பொதுக்குழு தீர்மானம்
2 posters
Page 1 of 1
கனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமானது: திமுக பொதுக்குழு தீர்மானம்
கோவை: கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழி 20 சதவீத பங்குக்கு உரியவர் என்ற முறையில் அதை ஒரு குற்றமாக கற்பித்து கனிமொழியும், நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஜாமீனில் வருவதைக் கூட சிபிஐ கடுமையான ஆட்சேபித்து, இத்தனை நாட்கள் சிறையிலே வைத்திருப்பது இயற்கை நியதிக்கும், நியாயங்களுக்கும் இந்த வழக்கின் சூழ்நிலைகளுக்கும் புறம்பானது. பாரபட்சமானது என்று திமுக பொதுக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கோவை சிங்காநல்லூரில் திமுக செயற் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இன்று பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட-மாநில செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் செயற் குழுவில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. பின்னர் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
-அதிமுக அரசின் பொய் வழக்குகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.கழகம் அறப்போர் நடத்தும். பொய் வழக்கு போட்டு, பழிவாங்கும் நோக்கோடு செயல்படும் அதிமுக அரசை கண்டித்து ஆகஸ்டு 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தப்படும்.
-மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க வேண்டும்.
-திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரை என்று நான்கு இடங்களில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் புதிதாக கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன. ஆனால் திமுக அரசு செய்த அனைத்துப் பணிகளையும் உருவில்லாமல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்படும் அதிமுக அரசு, தேசிய அறிவுசார் ஆணையம் அறிவித்திருக்கும் அடிப்படைப் பரிந்துரைகளுக்கும் மாறாக, அதிக எண்ணிக்கையில் உயர் கல்விக்கான பல்கலைக் கழகங்களைத் தொடங்கி விட்டால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்து விடாது என்று கூறிக்கொண்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாகச்சுமை மிகுந்த பழைய நிலைக்கே கொண்டு வர முடிவெடுத்திருப்பதாகச் சொல்வது மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர் கல்வியின் தரத்தையும், ஆராய்ச்சியின் தரத்தையும் நாசமாக்கி அழித்திடும் தவறான முயற்சி என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
-தமிழக அரசின் சார்பில் விரைவில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில், தமிழக அரசு 4200 கோடி ரூபாய்க்கு புதிய வரிவிதிப்பு செய்ததும், ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தார், ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ஒரு காரணத்தைக் காட்டி அதன் மீதான வரியை ரத்து செய்வதாக அறிவித்ததும்- இந்த ஆட்சியாளர்களின் அவசரப்பட்ட முடிவுகள் என்று இப்பொதுக்குழு கண்டிப்பதோடு, எஞ்சியவற்றின் மீது உயர்த்தப்பட்ட வரிகளையும் கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.
-கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழி 20 சதவீத பங்குக்கு உரியவர் என்ற முறையில் அதை ஒரு குற்றமாக கற்பித்து கனிமொழியும், நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஜாமீனில் வருவதைக் கூட சிபிஐ கடுமையான ஆட்சேபித்து, இத்தனை நாட்கள் சிறையிலே வைத்திருப்பது இயற்கை நியதிக்கும், நியாயங்களுக்கும் இந்த வழக்கின் சூழ்நிலைகளுக்கும் புறம்பானது. பாரபட்சமானது.
-ஆ.ராசாவும், தயாநிதி மாறனும் நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று சொல்லி பதவி விலகி இருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு விரைவில் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என பொதுக்குழு நம்புகிறது.
-மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ள கலைஞரின் நிலைப்பாட்டை இப்பொதுக் குழு ஏற்று வலியுறுத்துகிறது.
-புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை பயன்படுத்த வேண்டும். இந்த புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
இவை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை சிங்காநல்லூரில் திமுக செயற் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இன்று பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட-மாநில செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் செயற் குழுவில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. பின்னர் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
-அதிமுக அரசின் பொய் வழக்குகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.கழகம் அறப்போர் நடத்தும். பொய் வழக்கு போட்டு, பழிவாங்கும் நோக்கோடு செயல்படும் அதிமுக அரசை கண்டித்து ஆகஸ்டு 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தப்படும்.
-மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க வேண்டும்.
-திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரை என்று நான்கு இடங்களில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் புதிதாக கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன. ஆனால் திமுக அரசு செய்த அனைத்துப் பணிகளையும் உருவில்லாமல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்படும் அதிமுக அரசு, தேசிய அறிவுசார் ஆணையம் அறிவித்திருக்கும் அடிப்படைப் பரிந்துரைகளுக்கும் மாறாக, அதிக எண்ணிக்கையில் உயர் கல்விக்கான பல்கலைக் கழகங்களைத் தொடங்கி விட்டால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்து விடாது என்று கூறிக்கொண்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாகச்சுமை மிகுந்த பழைய நிலைக்கே கொண்டு வர முடிவெடுத்திருப்பதாகச் சொல்வது மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர் கல்வியின் தரத்தையும், ஆராய்ச்சியின் தரத்தையும் நாசமாக்கி அழித்திடும் தவறான முயற்சி என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
-தமிழக அரசின் சார்பில் விரைவில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில், தமிழக அரசு 4200 கோடி ரூபாய்க்கு புதிய வரிவிதிப்பு செய்ததும், ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தார், ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ஒரு காரணத்தைக் காட்டி அதன் மீதான வரியை ரத்து செய்வதாக அறிவித்ததும்- இந்த ஆட்சியாளர்களின் அவசரப்பட்ட முடிவுகள் என்று இப்பொதுக்குழு கண்டிப்பதோடு, எஞ்சியவற்றின் மீது உயர்த்தப்பட்ட வரிகளையும் கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.
-கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழி 20 சதவீத பங்குக்கு உரியவர் என்ற முறையில் அதை ஒரு குற்றமாக கற்பித்து கனிமொழியும், நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஜாமீனில் வருவதைக் கூட சிபிஐ கடுமையான ஆட்சேபித்து, இத்தனை நாட்கள் சிறையிலே வைத்திருப்பது இயற்கை நியதிக்கும், நியாயங்களுக்கும் இந்த வழக்கின் சூழ்நிலைகளுக்கும் புறம்பானது. பாரபட்சமானது.
-ஆ.ராசாவும், தயாநிதி மாறனும் நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று சொல்லி பதவி விலகி இருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு விரைவில் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என பொதுக்குழு நம்புகிறது.
-மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ள கலைஞரின் நிலைப்பாட்டை இப்பொதுக் குழு ஏற்று வலியுறுத்துகிறது.
-புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை பயன்படுத்த வேண்டும். இந்த புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
இவை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமானது: திமுக பொதுக்குழு தீர்மானம்
இது எல்லாம் அரசியலில் சகஜம் .
இது அரசியல் சதுரங்கம்!
இது அரசியல் சதுரங்கம்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|