by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
புனித ரமழானை வரவேற்போம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
புனித ரமழானை வரவேற்போம்
இஸ்லாத்தின் மூன்றாம் கடமையாம் புனித நோன்பு, வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்பது முஸ்லிமான ஆண், பெண், ஆகிய இருபாலர் மீது நோன்பு நோற்பது கடமையாகும். ரமழான் என்ற அறபுச் சொல் பாவங்களை சுட்டெரித்தல் என்று பொருள் தருகிறது. எனவே பாவவிடுதலை, விமோசனம் பெற இந்த நோன்பை சுபசோபனம் கூறி வரவேற்போமாக.
அல்லாஹ் கூறுகின்றான் :-
விசுவாசிகளே! நீங்கள் இறையச்சமுடையோராக ஆவதற்காக உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. (2 : 185)
ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக்கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோக்க வேண்டும். (அல்குர்ஆன் 2 : 185)
ரமழான் மாதம் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்நோன்பு கடமையாக்கப்பட்டதாகவும் இவ்வாறு நோன்பு நோற்பதன் மூலம் இறையச்சமுடையோராக ஆகமுடியும் என்றும் இவ்வசனங்கள் எடுத்தியம்புகின்றன.
நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையோராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம் (2 : 183)
உடல் ஆரோக்கியம் பேணப்படுகின்றது. பசி எத்தகையது என்பது உணரப்படுகிறது. இவ்வாறு சிலர் காரணம் கூறுவர். நோன்பினால் இந்தப் பயன்களெல்லாம் இருக்கலாம். (ஸல்) அவர்களும் இந்த நோக்கத்தை விளக்கியுள்ளார்கள்.
யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.
அறி : அபூஹுரைரா (ரலி) (நூல்கள் : புகாரி, அஹ்மத், அபூதாவுத், திருமிதி, இப்னு மாஜா)
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் அவரிடம் முட்டால்தனமாக நடந்தால், நடந்துகொண்டால் நான் நோன்பாளி என்று அவர் கூறிவிடட்டும்.
(அறி : அபூஹுரைரா (ரலி)) (நூல் : திர்மிதி)
நிச்சயமாக நோன்பு ஒரு வணக்கமாகும். அதற்குப் பல பயன்களுமுள்ளன. அவற்றிலிருந்து சில :-
நோன்பானது குடல் நோய் சிரமத்திலிருந்து ஓய்வை நல்கி, அளவிற்கு அதிகமானவற்றை கரையவும் வைத்து, உடலைப் பலப்படுத்தியும் வைக்கிறது. மேலும் அது அநேக நோய்களுக்கு பயனுள்ளதாகவும் உள்ளது.
நோன்பானது, மனதைச் சுத்தப்படுத்தி நன்மை செய்தல், ஒழுங்குற எதையும் செய்தல், கீழ்ப்படிதல், சகித்துக்கொள்ளுதல், தூய எண்ணத்துடன் செயல்படுதல் ஆகியவற்றுக்கு அம்மனதை பழக்கப்படுத்துகிறது. நோன்பாளருக்கு அவரது சகோதரர்களுக்கு மத்தியில் சமத்துவத்தை அது உணர்த்துகிறது.
ஆகவே, அவர் அவர்களுடன் நோன்பு வைத்து அவர்களுடன் நோன்பும் திறக்கிறார். பொதுவான இஸ்லாமிய ஒருமைப்பாட்டையும் அது உணர வைக்கிறது. இன்னும் பசியைப் பற்றியும் அவர் உணர்ந்து அதனால் பசித்திருப்போர் மற்றும் தேவையுடையோரான தன் சகோதரர்களை அவர் அரவணைத்துக்கொள்கிறார்.
நோன்பு அங்கீகரிக்கப்பட்டதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க பின்வருபவற்றைக் கடைப்பிடித்தல் நன்று.
* தொழுகையைப் பேணிக்கொள்ளுதல்
* நற்குணமுடையவராக இருத்தல்
* விளையாட்டாகக் கூட தரக்குறைவான பேச்சைப் பேசாதிருத்தல்
* நோன்பு திறக்கும்போது அளவுகடந்து உணவில் விரயம் செய்துவிடல்
* நற்குணங்களைப் பாழ்படுத்தி நோன்புடன் முரண்படும் செய்கைகளை விடல்
* சுற்றத்தார், குடும்பத்தினர்களுக்கு ஸகாத், ஸதக்கா போன்ற தருமங்களை கொடுத்துதவல்.
அல்லாஹ்வை நினைவுகூர்தல் உ+ம் : குர்ஆன் ஓதுதல், திக்ரு முதலியவற்றில் ஈடுபடல்.
* ஐங்காலத் தொழுகை, தராவீக் தொழுகை, கியமுல்லை, நபில் போன்ற தொழுகைகளை இமாம் ஜமாஅத்துடன் தொழுதல்.
ரமழான் பிரவேசித்துவிட்டால் வானத்தின் வாயல்கள் திறக்கப்பட்டுவிடும் நரகத்தின் வாயல்கள் அடைக்கப்பட்டு விடும். ஷைத்தானுக்கு விலங்கிடவும்படும்.
(நபி மொழி) (புஹாரி – முஸ்லிம்)
ரமழான் வந்துவிட்டால் சுவனத்தின் வாயல்கள் திறக்கப்பட்டுவிடும் எனவும், மற்ற அறிவிப்பில் ‘அருள்வாயல்கள் திறக்கப்பட்டுவிடும் எனவும் வந்துள்ளது. (புகாரி, முஸ்லிம்)
இம்மாதத்தின் சிறப்பு பற்றி : நோன்பாளியின் வாயின் வாடை கஸ்தூரியை விட சிறந்தது. இம்மாதத்தில் ஒரு நபில் தொழுகை தொழுதால் ஒரு பர்ழு தொழுத நன்மையும் ஒரு பர்லு தொழுதால் எழுபது பர்லு தொழுத நன்மையும் கிடைக்கும். ரமழான் மாதத்தில் சுவர்க்கம் அலங்கரிக்கப்படுகிறது. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புனித ரமழானை வரவேற்போம்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
» ரமழானை வரவேற்போம்
» ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1
» ரமழானை வரவேற்போம் ! பகுதி -2
» அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
|
|