சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1) Khan11

ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1)

4 posters

Go down

ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1) Empty ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1)

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 18:11

லறீனா அப்துல் ஹக்

ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா என்ற பொதுவான கேள்வி பலரிடையே எழுவதுண்டு. பெண்களில் அனேகர் திருமணமான பின்னர் தமது கணவரின் பெயரைத் தம் பெயரோடு இணைத்து திருமதி 'இன்னார்' என்று அடையாளப்படுத்திக் கொள்வதை நாம் நடைமுறையில் காண்கின்றோம். 'அது கூடாது' என்று சிலரும் 'இல்லை, கூடும்' என்று சிலரும் சொல்வதை நாம் செவியுற்றுள்ளோம்.

ஒரு பெண் தனது கணவனின் பெயரை இணைத்து அழைக்கக்கூடாது. மாறாக, தனது தந்தையின் பெயரை இணைத்தே அழைத்தல் வேண்டும் என்று கூறுவோர் தமது கூற்றுக்கு ஆதாரமாக,

''அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்' என்றுதான் அல் குர்ஆன் கூறுகின்றது" என்று நிறுவுகின்றனர்.

ஆனால், இந்த அல்குர்ஆன் வசனத்தை முழுமையாகவும், அதற்கு முந்தைய வசனத்தோடு சேர்த்தும் பார்ப்பதோடு மட்டுமின்றி, அந்த இறைவசனங்கள் அருளப்பட்ட பின்னணியை விளக்கும் ஹதீஸ்களையும் பற்றி சற்று விரிவாக ஆராய்ந்து பார்ப்போம்.
"எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கிவிடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப் பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான். இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்." (அல் குர்ஆன் 33:4)

"(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச்சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும். ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர். (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை. ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்." (அல் குர்ஆன் 33:5)
இந்த வசனங்கள் குறித்து இப்னு கஸீர் குறிப்பிடும் பொழுது, அறியாமைக் காலத்தில் வளர்ப்புப் பிள்ளைகளைத் தமது சொந்தப் பிள்ளையாகவே கருதி வந்ததோடு, வளர்ப்புத் தந்தையின் பெயரோடு இணைத்தே அப்பிள்ளை அழைக்கப்படும் வழக்கமும் இருந்துவந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூட தமது வளர்ப்பு மகனான ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை, ஸைத் பின் ஹாரிதா என்பதற்குப் பதிலாக, 'ஸைத் பின் முஹம்மத்' என்றே அழைத்து வந்தார்கள். இந்த நடைமுறையை மாற்றுமுகமாகவே வளர்ப்புப் பிள்ளைகள் தமது உண்மையான தந்தையரின் பெயர்களோடு இணைத்து அழைக்கப்படுவதே நீதமானது என்ற மேற்படி வசனங்கள் அருளப்பட்டன என்கின்றார். பின்வரும் ஹதீஸ்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1) Empty Re: ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1)

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 18:12

1.) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியாரான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள். .

"இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான அபூ ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு சாலிமைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கினார்கள். அவருக்குத் தம் சகோதரரின் மகளான ஹிந்த் பின்த் வலீத் இப்னு உத்பாவைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸைதை வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போன்று (சாலிமை, அபூ ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வளர்ப்பு மகனாக்கிக் கொண்டார்கள்.) மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவரின் வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைப்பதும் அவரின் சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) ஆக்கும் பழக்கமும் இருந்து வந்தது. 'வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள்' என்னும் (அல் குர்ஆன் 33:05) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்தப் பழக்கம் நீடித்தது.) "

''பிறகு (அபூ ஹுதைஃபாவின் துணைவியார்) சஹ்லா (பின்த் சுஹைல் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள்...'' என்று (தொடங்கும்) ஹதீஸை (அறிவிப்பாளர் அபுல் யமான் ரஹ்மதுல்லாஹி அவர்கள்) முழுமையாகக் கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண்: 4000)
2.) அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.

"வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்' எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை 'ஸைத் இப்னு முஹம்மத்' (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம். (ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண்: 4782)

3.) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்.
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா இப்னு உத்பா ரளியல்லாஹு அன்ஹு, (பாரசீகரான மஅகில் என்பவரின் புதல்வர்) சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கினார்கள். மேலும், அவருக்குத் தம் சகோதரர் வலீத் இப்னு உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டது போல் (சாலிமை அபூஹுதாஃபா ரளியல்லாஹு அன்ஹு வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்கள்.

மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவரின் வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும், அவரின் சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது.

எனவே, 'நீங்கள் (வளர்த்த) அவர்களை அவர்களின் (உண்மையான) தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடம் மிக நீதியாக இருக்கிறது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்களுடைய மார்க்கச் சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க சிநேகிதர்களாகவும் இருக்கிறார்கள்'' எனும் (அல் குர்ஆன் 33:5 வது) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது.)

பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களின் சொந்தத் தந்தையாருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகிதராகவும் மார்க்கச் சகோதரராகவும் ஆனார்.

பிறகு, அபூஹுதைஃபா இப்னு உத்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் சாலிமை (எங்களுடைய) பிள்ளையாகவே கருதிக்கொண்டிருந்தோம். (வளர்ப்பு மகனான) அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (திருக்குர்ஆன் 33:5 வது) வசனத்தை அருளிவிட்டான்'' என்று தொடங்கும் ஹதீஸை (அறிவிப்பாளர் அபுல் யமான் இப்னு ஹகம் ரஹ்மதுல்லாஹி அலைஹி முழுமையாகக்) கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண்: 5088)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1) Empty Re: ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1)

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 18:13

அதுமட்டுமன்றி, இத்தகைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியரை அவர்கள் விவாக விலக்குச் செய்துவிடும் பட்சத்தில், அந்த வளர்ப்புத் தந்தையர் அப்பெண்களை மணப்பது பிழையாகக் கருதப்பட்டுவந்த அறியாமைக்கால நடைமுறையை மாற்றியமைத்து, அவ்வாறு வளர்ப்பு மகனிடமிருந்து விவாகவிலக்குப் பெற்ற பெண்ணை வளர்ப்புத் தந்தை மறுமணம் புரிவது ஆகுமானதாகும் என்ற சட்டத்தை விளக்கும் வசனங்களும் மேற்படி வளர்ப்புமகன் பற்றிய வசனங்களோடு தொடர்புடையவையே. அவை வருமாறு:
"(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள்புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: 'அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாகவிலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்' என்றுசொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடையமனத்தில் மறைத்து வைத்திருந்தீர். ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன். ஆகவே, ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம்செய்வித்தோம். ஏனென்றால், முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்துகொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்." (அல் குர்ஆன் 33:37)

"நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை. இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும்- இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.' (அல் குர்ஆன் 33:38)

"'(இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள். அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள். அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள். ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்." (அல் குர்ஆன் 33:39)
"முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார். மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்." (அல் குர்ஆன் 33:40)

இனி, ஒரு பெண் கட்டாயமாகத் தன் தந்தையின் பெயரை இணைத்துத்தான் அழைக்கப்படவேண்டுமா? அப்படி இல்லாமல் தன் கணவரின் பெயரை இணைப்பது இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகுமா?

இந்தக் கேள்விகளுக்கு உரிய பதிலை அல்குர்ஆனில் தேடிப்பார்த்தபோது, பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் என் பார்வையில் பட்டன:
3. ஸூரத்துல்ஆல இம்ரான்;(இம்ரானின் சந்ததிகள்)

"இம்ரானின் மனைவி 'என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்' என்று கூறியதையும்- " (அல் குர்ஆன் 3:35)
28. ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்)

"இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி ('இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள். நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும். அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்' என்று சொன்னார். இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை." (அல் குர்ஆன் 28:9)
66. ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)

"நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான். இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர். எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரை விட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை. இன்னும், 'நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்' என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது." (அல் குர்ஆன் 66:10)

"மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவர் 'இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித்தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.' (அல் குர்ஆன் 66:11)

"மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார். நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்). இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்." (அல் குர்ஆன் 66:12).


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1) Empty Re: ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1)

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 18:13

எனவே, மேற்படி வசனங்களை வைத்துப் பார்க்கும்போது, அல்லாஹ் தஆலா ஒரு பெண்ணை இன்னாருடைய மகள் என்றும் அழைக்கக்கற்றுத் தந்துள்ள அதேவேளை, இன்னாருடைய மனைவி என்று அழைப்பதையும் எமக்குக் கற்றுத் தந்துள்ளான். எனவே, ஆராய்ந்து பார்க்கும்போது, இந்த இரண்டு முறைகளில் எதைக் கைக்கொண்டாலும் அல்லாஹ்வின் பார்வையில் குற்றமாகாது என்றே என் சிற்றறிவுக்கு எட்டுகின்றது. (அல்லாஹ்வே ஞானமிக்கவன்.) அதேவேளை, கட்டாயம் பெண்ணொருத்தி இன்னாரின் மகள் என்றல்லாமல் இன்னாரின் மனைவி என வழங்கப்படுவது மார்க்க அடிப்படையில் பிழையானது என்ற கருத்துக்கு ஆதாரமாக ஏதேனும் அல்குர், அல் ஹதீஸ் ஆதாரங்கள் இருக்குமாயின் தயைகூர்ந்து அவற்றைப் பகிர்ந்துகொண்டு எமக்குத் தெளிவு ஏற்பட உதவுமாறு கண்ணியத்துக்குரிய குழும சகோதரர்களிடம் பணிவன்போடு வேண்டுகின்றேன்.

அல்லாஹ் எமக்குத் தந்த அறிவு அதிகமதிகம் விசாலமாகி, இருமைக்கும் பயன்தருமாறு அதனைப் பயன்படுத்துவதற்கு அருளாளன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக! ஆமீன்.

பிற்குறிப்பு: அப்துல் ஹக் என்பது என்னுடைய தந்தையின் பெயராகும்.

அன்புடன்,

இஸ்லாமிய சகோதரி,

லறீனா அப்துல் ஹக்.

நன்றி நீடூர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1) Empty Re: ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1)

Post by ஹம்னா Sun 31 Jul 2011 - 20:22

##* ##* ##* :”@:


ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1) Empty Re: ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1)

Post by முனாஸ் சுலைமான் Sun 31 Jul 2011 - 20:25

://:-: ://:-: :!@!:





:here:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1) Empty Re: ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1)

Post by kalainilaa Sun 31 Jul 2011 - 22:42

##* :”@:

இஸலாம் என்பது மார்க்கம் .நபிகளின் வழி !.இது எக் காலத்துக்கும் பொருந்தும்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1) Empty Re: ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1)

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 23:11

:”@: :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1) Empty Re: ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா? (1)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum