Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
தனக்குத் தானே பழுது நீக்கும் இதயம்!
4 posters
Page 1 of 1
தனக்குத் தானே பழுது நீக்கும் இதயம்!
தனக்குத் தானே பழுது நீக்கும் இதயம்!
இதயம் தனக்குத் தானே பழுது நீக்கிக்கொள்ளும் முறையை இங்கிலாந்து ஆய்வாளர் பால் ரைலி கண்டுபிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
இது தொடர்பாக, எலியின் இதயத்தில் அவர் ஆய்வு செய்துள்ளார். அதில், ஸ்டெம் கலத்தை இடம்மாற்றம் செய்வ தன் மூலம், சேதம் அடைந்த கலங்கள் தாங்களாகவே தங்களைச் சீர்படுத்திக் கொள்ளச் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.
இந்த ஆய்வு ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. இதை மனிதர்களுக்கு நடைமுறைப்படுத்தச் சில ஆண்டுகள் ஆகலாம் என்றபோதும் இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். எதிர்காலத்தில், மாரடைப்பு போன்றவற்றால் இதயத்தில் பாதிப்பு ஏற்படும்போது இம்முறை மூலம் அதைச் சீர்படுத்தலாம். அதற்கான தூண்டுதலுக்காகவும் ஒழுங்குபடுத்துவதற்காகவும் சிறிது மருந்து எடுத்துக்கொண்டால் போதும்.
தற்போது மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தால், மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒட்சிசன் பற்றாக்குறையால் இதயத் திசுக்கள் இறந்தால் அதைச் சரி செய்ய முடியாத நிலையே இன்றும் இருக்கிறது. இறந்த கலங்களின் அளவு அதிகரிக்கும்போது, உடம்புக்குப் போதுமான இரத்தத்தைச் செலுத்த முடியாமல் இதயம் செயலிழக்கிறது.
பாதிக்கப்பட்ட திசுக்களை உயிர்ப் பிக்க தற்போது விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் கள். ஆனால் இப்போதைக்கு, இதயம் செயலிழக்கும் நிலையை அடைந்தவர் கள் செயற்கை உபகரணத்தையோ, மாற்று இதயத்தையோதான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட திசுக்கள் மீண்டும் தாங்களாகவே சரி செய்யும் முயற்சியில் தான் ஆய்வாளர் ரைலியின் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, இதயத்தின் வெளி அடுக்கான பெரிகார்டியத்தில் காணப் படும் குறிப்பிட்ட கலங்களை அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
விண்வெளியில் நம் உயரம் கூடும்
பூமியில் இருக்கும் நமது உடலின் கீழ் பகுதிகளுக்கு இரத்தம் சீராகப் பாய்வதற்கு பூமியின் ஈர்ப்பு சக்தியும் ஒரு காரணம்.
சிறிது நேரம் தலைகீழாக நின்றாலும் தலைப்பகுதிக்கு இரத்தம் ‘குப்’பென்று பாய்வதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். விண்கலம் பூமியைச் சுற்றிவரும் உயரத்தில் ஈர்ப்பு சக்தி மிகவும் குறைவு. அதன் விளைவாக எடையற்ற நிலை ஏற்படுகிறது.
அப்படிப்பட்ட எடையற்ற நிலையில் விண்வெளி வீரர்களின் கால் பகுதி களுக்கு இரத்தம் ஓட்டம் குறைகிறது. தவிர விண்வெளி வீரர்களால் புவியீர் ப்பற்ற நிலையில் பூமியில் செல்வது போல நடந்துசெல்ல முடியாது. விண் கலத்துக்குள்ளாக அவர்கள் அந்தரத்தில் மிதந்து செல்கின்றனர். நடப்பதில்லை என்பதால் கால் தசைகளுக்கு வேலை இருப்பதில்லை. அதனால் கால்கள் சூம்புகின்றன. தொடைப் பகுதியின் சுற்றளவு குறைகிறது.
அதே சமயத்தில் உடலின் மேல் பகுதியில் உடல் திரவங்கள் அதிக அளவில் தேங்க ஆரம்பிக்கின்றன. அதனால் உடலின் மேல் பகுதிகள் பெருத்துவிட்டது போலாகின்றன. மார்புப் பகுதியில் இரத்தம் அதிகளவில் தங்க ஆரம்பிக்கிறது. முதுகெலும்பில் வளையம் வளையமாக அமைந்த எலும்புகளுக்கு இடையே உள்ள பகுதிகளில் இரத்தம் தங்குவதால் வளைய எலும்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று சற்று தள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக விண்வெளி வீரர்களின் உயரம் ஓரிரு அங்குலம் அதிகரிக்கிறது. ஆனால் அவர்கள் பூமிக்குத் திரும்பிய சில நாட்களில் இரத்த ஓட்டம் பழைய நிலைக்கு வரும். அவர்கள் மீண்டும் பழைய உயரத்தைப் பெற்றுவிடுவார்கள்.
இதயம் தனக்குத் தானே பழுது நீக்கிக்கொள்ளும் முறையை இங்கிலாந்து ஆய்வாளர் பால் ரைலி கண்டுபிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
இது தொடர்பாக, எலியின் இதயத்தில் அவர் ஆய்வு செய்துள்ளார். அதில், ஸ்டெம் கலத்தை இடம்மாற்றம் செய்வ தன் மூலம், சேதம் அடைந்த கலங்கள் தாங்களாகவே தங்களைச் சீர்படுத்திக் கொள்ளச் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.
இந்த ஆய்வு ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. இதை மனிதர்களுக்கு நடைமுறைப்படுத்தச் சில ஆண்டுகள் ஆகலாம் என்றபோதும் இது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். எதிர்காலத்தில், மாரடைப்பு போன்றவற்றால் இதயத்தில் பாதிப்பு ஏற்படும்போது இம்முறை மூலம் அதைச் சீர்படுத்தலாம். அதற்கான தூண்டுதலுக்காகவும் ஒழுங்குபடுத்துவதற்காகவும் சிறிது மருந்து எடுத்துக்கொண்டால் போதும்.
தற்போது மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தால், மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒட்சிசன் பற்றாக்குறையால் இதயத் திசுக்கள் இறந்தால் அதைச் சரி செய்ய முடியாத நிலையே இன்றும் இருக்கிறது. இறந்த கலங்களின் அளவு அதிகரிக்கும்போது, உடம்புக்குப் போதுமான இரத்தத்தைச் செலுத்த முடியாமல் இதயம் செயலிழக்கிறது.
பாதிக்கப்பட்ட திசுக்களை உயிர்ப் பிக்க தற்போது விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் கள். ஆனால் இப்போதைக்கு, இதயம் செயலிழக்கும் நிலையை அடைந்தவர் கள் செயற்கை உபகரணத்தையோ, மாற்று இதயத்தையோதான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட திசுக்கள் மீண்டும் தாங்களாகவே சரி செய்யும் முயற்சியில் தான் ஆய்வாளர் ரைலியின் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, இதயத்தின் வெளி அடுக்கான பெரிகார்டியத்தில் காணப் படும் குறிப்பிட்ட கலங்களை அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
விண்வெளியில் நம் உயரம் கூடும்
பூமியில் இருக்கும் நமது உடலின் கீழ் பகுதிகளுக்கு இரத்தம் சீராகப் பாய்வதற்கு பூமியின் ஈர்ப்பு சக்தியும் ஒரு காரணம்.
சிறிது நேரம் தலைகீழாக நின்றாலும் தலைப்பகுதிக்கு இரத்தம் ‘குப்’பென்று பாய்வதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். விண்கலம் பூமியைச் சுற்றிவரும் உயரத்தில் ஈர்ப்பு சக்தி மிகவும் குறைவு. அதன் விளைவாக எடையற்ற நிலை ஏற்படுகிறது.
அப்படிப்பட்ட எடையற்ற நிலையில் விண்வெளி வீரர்களின் கால் பகுதி களுக்கு இரத்தம் ஓட்டம் குறைகிறது. தவிர விண்வெளி வீரர்களால் புவியீர் ப்பற்ற நிலையில் பூமியில் செல்வது போல நடந்துசெல்ல முடியாது. விண் கலத்துக்குள்ளாக அவர்கள் அந்தரத்தில் மிதந்து செல்கின்றனர். நடப்பதில்லை என்பதால் கால் தசைகளுக்கு வேலை இருப்பதில்லை. அதனால் கால்கள் சூம்புகின்றன. தொடைப் பகுதியின் சுற்றளவு குறைகிறது.
அதே சமயத்தில் உடலின் மேல் பகுதியில் உடல் திரவங்கள் அதிக அளவில் தேங்க ஆரம்பிக்கின்றன. அதனால் உடலின் மேல் பகுதிகள் பெருத்துவிட்டது போலாகின்றன. மார்புப் பகுதியில் இரத்தம் அதிகளவில் தங்க ஆரம்பிக்கிறது. முதுகெலும்பில் வளையம் வளையமாக அமைந்த எலும்புகளுக்கு இடையே உள்ள பகுதிகளில் இரத்தம் தங்குவதால் வளைய எலும்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று சற்று தள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக விண்வெளி வீரர்களின் உயரம் ஓரிரு அங்குலம் அதிகரிக்கிறது. ஆனால் அவர்கள் பூமிக்குத் திரும்பிய சில நாட்களில் இரத்த ஓட்டம் பழைய நிலைக்கு வரும். அவர்கள் மீண்டும் பழைய உயரத்தைப் பெற்றுவிடுவார்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தனக்குத் தானே பழுது நீக்கும் இதயம்!
:”@: :”@:ஜிப்ரியா wrote:அறியாத தகவல்.அறியத் தந்தமைக்கு நன்றி..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தனக்குத் தானே பழுது நீக்கும் இதயம்!
இது எனக்கு புதிய தகவல்தான் மருத்துவ உலகில் மனிதன் இன்னும் சாதனைகளைப் படைக்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|