Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
பீதியை ஏற்படுத்தும் மனிதர்கள் நடமாட்டம்: சந்தேகத்தின் பேரில் 20 இற்கும் அதிகமானோர் நையப்புடைப்பு
4 posters
Page 1 of 1
பீதியை ஏற்படுத்தும் மனிதர்கள் நடமாட்டம்: சந்தேகத்தின் பேரில் 20 இற்கும் அதிகமானோர் நையப்புடைப்பு
பீதியை ஏற்படுத்தும் மனிதர்கள் நடமாட்டம்:
சந்தேகத்தின் பேரில் 20 இற்கும் அதிகமானோர் நையப்புடைப்பு
எம். எஸ். பாஹிம், பிராந்திய நிருபர்கள்
மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தினார் கள் என்ற சந்தேகத்தின் பேரில் 20 ற்கும் அதிகமானவர்கள் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்கிட மானவர்களின் நடமாட்டம் தொடர்பாக பொய் வதந்திகள் பரப்பப் பட்டதால் மக்கள் குழப்பம டைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
மர்ம மனிதன் என்ற பெயரில் அப்பாவி மக்களை தாக்குவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கூறினார்.
சில பகுதிகளில் மர்ம மனிதர் என்ற பெயரில் அப்பாவிகள் கூட தாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை பொய் வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இருவர் கொலை
இதேவேளை அப்புத்தளை தொட்டால கலை பகுதியில் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்ட இருவரினதும் பிரேத பரிசோதனை நேற்று நடைபெற்றது. இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதவான் விசாரணையின் போது இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. சடலங்கள் இதுவரை அடையாளங் காணப்படாததால் அவை பதுளை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சந்தேகத்தின்பேரில் பொதுமக்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட இருவர் ஆபத்தான நிலையில் அப்புத்தளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. மாவத்தகம
மாவத்தகம தெல்பொலவத்தை பகுதியில் சந்தேகத்தின் பேரில் இருவர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இறக்காமம் பகுதியிலும் இவ்வாறே சந்தேகத்துக்கிடமான இருவர் நேற்று முன்தினம் இரவு பிடிபட்டுள்ளதோடு இவர்கள் யானை கணிப்பீட்டிற்காக வந்தவர்கள் என அறிவிக்கப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு பொலிஸாரும் இராணுவத்தினரும் ஸ்தலத்துக்கு விரைந்தனர். ஆனால் நீண்ட நேரம் குழப்ப நிலை நீடித்ததாக அறிவிக்கப்படுகிறது.
பொத்துவில்
பொத்துவிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் வெட்டப் பட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கல்முனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.
இவ்வாறு மக்களை தாக்குவோரை மடக்கிப் பிடிக்க பொத்துவில் பிரதேச தவிசாளரின் தலைமையில் விழிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை
குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் கையை மறைந்திருந்த ஒருவர் பிடித்த சம்பவத்தினால் சம்மாந்துறை பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
குறித்த நபர் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து கொண்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளதோடு பொலிஸ் நிலையம் மீது கல்லெறிந்து தாக்கியுள்ளனர்.
இதனால் இரு பொலிஸார் சிறு காயங்களுக்குள்ளானார்கள். ஆனால் அவ்வாறு எந்த மர்ம மனிதரும் பொலிஸ¤க்குள் வரவில்லை என பொத்துவில் பொலிஸ் பொறுப்பதிகாரி தகநாயக்க கூறினார்.
கல்குடா
வாழைச்சேனை பிரதேசத்தில் கப்பல் ஹாஜியார் வீதியில் வீடு ஒன்றின் வளவு ஒன்றுக்குள் நேற்று முந்தினம் இரவு (11.08.2011) 10.45 மணியளவில் நபர் ஒருவர் ஊடுருவிய சம்பவத்தையடுத்து வாழைச்சேனைப் பிரதேச மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக் காணப்பட்டனர்.
கந்தளாய்
திருகோணமலை 91 ஆம் கட்டையில் (கிரிஸ் மனிதன்) சந்தேகத்துக்கு இடமான நபர் ஒருவரை பிரதேச வாசிகள் மடக்கிப் பிடித்து கந்தளாய்ப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இவரை 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
வாழைச்சேனை
ஓட்டமாவடி வாழைச்சேனை பிரதேசங்களில் சந்தேகத்துக்கிடமான மனிதனின் நடமாட்டத்தால் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை அடுத்து நேற்று இது தொடர்பான விசேட கூட்டம் ஓட்டமாவடி மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் மா அதிபர், வாழைச்சேனை பொலிஸ் நிலைய உதவி பொலீஸ் அத்தியட்சகர், இராணுவத் தளபதிகள் மற்றும் கல்குடா பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் உலமா சபை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அசம்பாவிதம் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது.
குச்சவெளி
இறக்ககண்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய எட்டுப் பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.
காரைதீவு
காரைதீவுப் பகுதிக்குள் வியாழனிரவு சந்தேகத்துக்கிடமாக மனிதனின் நடமாட்டம் காணப்பட்டதனால் அங்கு பதற்றம் நிலவியது.
மக்கள் வீதியில் இறங்கி தேடுதலில் ஈடுபட்டனர். முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் இணைந்து கம்பு, தடி, கத்தியுடன் இத் தேடுதலை நள்ளிரவு வரை மேற்கொண்டிருந்தனர். எவரும் பிடிபடவில்லை.
ஹொரவப்பொத்தான நகரிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் சந்தேகத்துக்கிடமான மனிதனின் நடமாட்டம் உள்ளதாகவும் இது இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த சில தினங்களாக ஓலுகஸ்கடவல, மொரகேவ, மரதன்கடவல, திறப்பன்கடவல, வெளிமுவபொத்தான ஆகிய பிரதேசங்களில் இனம் தெரியாத நபர்கள் என்று வீடுகளுக்கு சென்று பயமுறுத்துவதாகவும் தெரிய வருகின்றது.
(கல்குடா தினகரன், குச்சவெளி தினகரன், வாழைச்சேனை விசேடம், காரைதீவு குறூப் , கல்நேவ தினகரன், ஏறாவூர் குறூப், கல்முனை குறூப், பதுளை தினகரன் விசேடம், சம்மாந்துறை மேற்கு தினகரன், மாளிகைக்காடு குறூப், சம்மாந்துறை தினகரன், சம்மாந்துறை கிழக்கு தினகரன், பொத்துவில் தினகரன், பெரிய நீலாவணை தினகரன்)
சந்தேகத்தின் பேரில் 20 இற்கும் அதிகமானோர் நையப்புடைப்பு
எம். எஸ். பாஹிம், பிராந்திய நிருபர்கள்
மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தினார் கள் என்ற சந்தேகத்தின் பேரில் 20 ற்கும் அதிகமானவர்கள் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்கிட மானவர்களின் நடமாட்டம் தொடர்பாக பொய் வதந்திகள் பரப்பப் பட்டதால் மக்கள் குழப்பம டைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
மர்ம மனிதன் என்ற பெயரில் அப்பாவி மக்களை தாக்குவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கூறினார்.
சில பகுதிகளில் மர்ம மனிதர் என்ற பெயரில் அப்பாவிகள் கூட தாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை பொய் வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இருவர் கொலை
இதேவேளை அப்புத்தளை தொட்டால கலை பகுதியில் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்ட இருவரினதும் பிரேத பரிசோதனை நேற்று நடைபெற்றது. இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதவான் விசாரணையின் போது இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. சடலங்கள் இதுவரை அடையாளங் காணப்படாததால் அவை பதுளை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சந்தேகத்தின்பேரில் பொதுமக்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட இருவர் ஆபத்தான நிலையில் அப்புத்தளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. மாவத்தகம
மாவத்தகம தெல்பொலவத்தை பகுதியில் சந்தேகத்தின் பேரில் இருவர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இறக்காமம் பகுதியிலும் இவ்வாறே சந்தேகத்துக்கிடமான இருவர் நேற்று முன்தினம் இரவு பிடிபட்டுள்ளதோடு இவர்கள் யானை கணிப்பீட்டிற்காக வந்தவர்கள் என அறிவிக்கப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு பொலிஸாரும் இராணுவத்தினரும் ஸ்தலத்துக்கு விரைந்தனர். ஆனால் நீண்ட நேரம் குழப்ப நிலை நீடித்ததாக அறிவிக்கப்படுகிறது.
பொத்துவில்
பொத்துவிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் வெட்டப் பட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கல்முனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.
இவ்வாறு மக்களை தாக்குவோரை மடக்கிப் பிடிக்க பொத்துவில் பிரதேச தவிசாளரின் தலைமையில் விழிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை
குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் கையை மறைந்திருந்த ஒருவர் பிடித்த சம்பவத்தினால் சம்மாந்துறை பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
குறித்த நபர் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து கொண்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளதோடு பொலிஸ் நிலையம் மீது கல்லெறிந்து தாக்கியுள்ளனர்.
இதனால் இரு பொலிஸார் சிறு காயங்களுக்குள்ளானார்கள். ஆனால் அவ்வாறு எந்த மர்ம மனிதரும் பொலிஸ¤க்குள் வரவில்லை என பொத்துவில் பொலிஸ் பொறுப்பதிகாரி தகநாயக்க கூறினார்.
கல்குடா
வாழைச்சேனை பிரதேசத்தில் கப்பல் ஹாஜியார் வீதியில் வீடு ஒன்றின் வளவு ஒன்றுக்குள் நேற்று முந்தினம் இரவு (11.08.2011) 10.45 மணியளவில் நபர் ஒருவர் ஊடுருவிய சம்பவத்தையடுத்து வாழைச்சேனைப் பிரதேச மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக் காணப்பட்டனர்.
கந்தளாய்
திருகோணமலை 91 ஆம் கட்டையில் (கிரிஸ் மனிதன்) சந்தேகத்துக்கு இடமான நபர் ஒருவரை பிரதேச வாசிகள் மடக்கிப் பிடித்து கந்தளாய்ப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இவரை 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
வாழைச்சேனை
ஓட்டமாவடி வாழைச்சேனை பிரதேசங்களில் சந்தேகத்துக்கிடமான மனிதனின் நடமாட்டத்தால் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை அடுத்து நேற்று இது தொடர்பான விசேட கூட்டம் ஓட்டமாவடி மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் மா அதிபர், வாழைச்சேனை பொலிஸ் நிலைய உதவி பொலீஸ் அத்தியட்சகர், இராணுவத் தளபதிகள் மற்றும் கல்குடா பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் உலமா சபை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அசம்பாவிதம் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது.
குச்சவெளி
இறக்ககண்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய எட்டுப் பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.
காரைதீவு
காரைதீவுப் பகுதிக்குள் வியாழனிரவு சந்தேகத்துக்கிடமாக மனிதனின் நடமாட்டம் காணப்பட்டதனால் அங்கு பதற்றம் நிலவியது.
மக்கள் வீதியில் இறங்கி தேடுதலில் ஈடுபட்டனர். முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் இணைந்து கம்பு, தடி, கத்தியுடன் இத் தேடுதலை நள்ளிரவு வரை மேற்கொண்டிருந்தனர். எவரும் பிடிபடவில்லை.
ஹொரவப்பொத்தான நகரிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் சந்தேகத்துக்கிடமான மனிதனின் நடமாட்டம் உள்ளதாகவும் இது இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த சில தினங்களாக ஓலுகஸ்கடவல, மொரகேவ, மரதன்கடவல, திறப்பன்கடவல, வெளிமுவபொத்தான ஆகிய பிரதேசங்களில் இனம் தெரியாத நபர்கள் என்று வீடுகளுக்கு சென்று பயமுறுத்துவதாகவும் தெரிய வருகின்றது.
(கல்குடா தினகரன், குச்சவெளி தினகரன், வாழைச்சேனை விசேடம், காரைதீவு குறூப் , கல்நேவ தினகரன், ஏறாவூர் குறூப், கல்முனை குறூப், பதுளை தினகரன் விசேடம், சம்மாந்துறை மேற்கு தினகரன், மாளிகைக்காடு குறூப், சம்மாந்துறை தினகரன், சம்மாந்துறை கிழக்கு தினகரன், பொத்துவில் தினகரன், பெரிய நீலாவணை தினகரன்)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பீதியை ஏற்படுத்தும் மனிதர்கள் நடமாட்டம்: சந்தேகத்தின் பேரில் 20 இற்கும் அதிகமானோர் நையப்புடைப்பு
தப்பித்தவறி தெரியாத இடத்துக்கு போனா நமக்கும் இதே கதிதானோ...!!!
Re: பீதியை ஏற்படுத்தும் மனிதர்கள் நடமாட்டம்: சந்தேகத்தின் பேரில் 20 இற்கும் அதிகமானோர் நையப்புடைப்பு
இச்சம்பவங்களைப் பார்க்கும் போது பெரும் ஆபத்தில் கொண்டு விடும் போல் இருக்கிறது அரசு முனைந்து சரியான நடவெடிக்கை எடுக்கணும் இல்லையேல் மீண்டும் ஒரு அவலம் உருவாகலாம்
Re: பீதியை ஏற்படுத்தும் மனிதர்கள் நடமாட்டம்: சந்தேகத்தின் பேரில் 20 இற்கும் அதிகமானோர் நையப்புடைப்பு
எதுக்கும் கெப் கழட்டிட வேண்டாம் அப்றம்பர்ஹாத் பாறூக் wrote: தப்பித்தவறி தெரியாத இடத்துக்கு போனா நமக்கும் இதே கதிதானோ...!!!
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Similar topics
» பிரேஸில் கடும் வெள்ளம் : 500 இற்கும் அதிகமானோர் பலி
» சந்தேகத்தின் பேரில் 200 பேர் கைது
» யுவதியிடம் சல்லாபம்: நீலப்படம் காண்பித்ததால் இளைஞர் ஒருவர் பிலியந்தலையில் நையப்புடைப்பு
» பீதியை கிளப்பும் பிரசாரத்திற்கு காரணம்
» பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பீதியை களைவது அரசின் பொறுப்பு
» சந்தேகத்தின் பேரில் 200 பேர் கைது
» யுவதியிடம் சல்லாபம்: நீலப்படம் காண்பித்ததால் இளைஞர் ஒருவர் பிலியந்தலையில் நையப்புடைப்பு
» பீதியை கிளப்பும் பிரசாரத்திற்கு காரணம்
» பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பீதியை களைவது அரசின் பொறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|