சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

எண்ணெய் வளம் உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை பொருளாதாரத்தில் தன்னிறைவு Khan11

எண்ணெய் வளம் உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை பொருளாதாரத்தில் தன்னிறைவு

Go down

எண்ணெய் வளம் உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை பொருளாதாரத்தில் தன்னிறைவு Empty எண்ணெய் வளம் உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை பொருளாதாரத்தில் தன்னிறைவு

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 0:08

எண்ணெய் வளம் உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை பொருளாதாரத்தில் தன்னிறைவு
கெய்ன் லங்கா நிறுவனம் நம்பிக்கை
மகேஸ்வரன் பிரசாத்
மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வள ஆய்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எண்ணெய் வள இருப்புத் தொடர்பான உண்மையான, முழுமையான தகவல்களை 2012 ஆம் ஆண்டிலேயே வெளிபடுத்த முடியும் என்று அகழ்வுப்பணியில் ஈடுபட்டுள்ள கெய்ன் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது

எண்ணெய் வளத்தை அறிந்துகொள்வத ற்கான அகழ்வுப் பணிகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டன. இந்த அகழ்வுப் பணிகளுக்காக சீனாவின் தயாரிப்பான அதிநவீன அகழ்வுக் கப்பல் பயன்படுத்தப்படுகிறது. ‘சிக்கு’ என்ற பெயருடைய சகல வசதிகளையும் கொண்ட இந்த அதிநவீன கப்பல் ஆழ்கடலில் நங்கூரமிட்டு அகழ்வுப் பணிகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுத்து வருவதாக இந்தியாவிலிரு ந்து இலங்கை வந்த இந்த நிறுவனத்தின் உயரதிகாரியொருவர் தினகரனுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டார்.

தற்போது அகழ்வுப் பணிகளின் ஆரம்பகட்டம் இடம்பெற்று வருவதனால் தற்போதைக்கு தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், தமது நிறுவனம் எண்ணெய் அகழ்வுப் பணிகளில் இந்தியாவில் முதன்மை நிலையில் இருந்து வருவதாகக் கூறினார்.

தங்களுக்கு ஆழ்கடலிலும், நிலத்திலும் எண்ணெய் அகழ்வுகளை மேற்கொள்ளும் திறமை இருக்கிறது என்றும், பல்தேசங்களைச் சேர்ந்த இத்துறை நிபுணர்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே எண்ணெய் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் கெய்ன் இந்தியா நிறுவனமே இலங்கையில் இந்த அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. ராஜஸ்தானிலுள்ள பாலைவனத்தில் தாம் மேற்கொண்ட எண்ணெய் அகழ்வுப் பணிகள் மகத்தான வெற்றியீட்டியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், அங்கு தினமும் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பீப்பாய் எண்ணெய் அகழ்ந்தெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் தொழில் பற்றி விரிவான விளக்கமளித்த அவர், எண்ணெய் வளம், ஆழ்கடலுக்குக் கீழும், நிலத்துக்கடியிலும் இருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓரளவு எண்ணெய் வளமே இருக்கும். எனவே தாங்கள் அதனைச் சார்ந்துள்ள பகுதிகளில் எண்ணெய் அகழ்வுகளை மேற்கொண்டு அப்பிரதேசத்திலிருந்து நிரந்தரமாக ஆகக்கூடியளவு எண்ணெய்யை அகழ்ந்தெடுக்க முடியும் என்று கூறினார்.

மன்னார் வளைகுடா பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்க ப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இப்பிரதேசங்களில் எண்ணெய் வளம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை பொருளாதார ரீதியில் தன்னி றைவு அடையும் நிலைக்கு உயர்ந்துவிடுவது உறுதியென்றும் அவர் கூறினார். தாங்கள் பூர்வாங்க ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அரசாங்க உயரதிகாரிகள், இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற எமது நிறுவனத்திடம் அதற்கான பொறுப்பை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஓரிடத்தில் எண்ணெய் வளம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் தாம் அத்துடன் நின்றுவிடாமல் அதனை அண்மித்த ஆள்கடல் பிரதேசத்தில் எண்ணெய் அகழ்வுகளை தொடர்ந்து இலங்கைக்கு நிரந்தரமாக மசகு எண்ணெய்யை பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்புடைய வகையில் பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

எண்ணெய் வளம் நிரந்தரமாக வற்றிவிடும் ஒரு வளமல்ல. அகழ்வுப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும்போது எண்ணெய் வளம் பல்லாண்டு காலத்துக்குத் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று அவர் கூறினார். அகழ்வுப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு மன்னார் சார்ந்த கடல்பிரதேசத்தில் எண்ணெய் வளத்தை பெற்றுக்கொடுக்கக் கூடிய தொழில்நுட்பத்திறன் தங்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த வாரம் ஆரம்பமான அகழ்வுப் பணியில் 60ற்கும் மேற்பட்ட இந்திய நிபுணர்களும், இலங்கை நிபுணர்களும் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அந்த அதிகாரி, எண்ணெய் அகழ்வுப் பணிகளில் நீண்ட அனுபவம் கொண்ட தமது நிறுவனம் இலங்கையிலும் சிறப்பான முறையில் எண்ணெய் அகழ்வுப் பணிகளிலும் ஈடுபட எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்.

மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் அது இலங்கைக்கு பொருளாதார ரீதியில் பலமாக அமையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum