சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Khan11

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

+9
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
arull
நண்பன்
ஹம்னா
Inudeen
kalainilaa
முனாஸ் சுலைமான்
கலைவேந்தன்
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 12:14

First topic message reminder :

நண்பர்களே..

நான் எழுதப்போகும் முதல் திரில்லர் தொடர்கதை கொல்லத்துடிக்குது மனசு.!

கதையை வாசித்து நிறை குறைகளை தயங்காமல் எழுதினால் மேலும் என்னை சரி செய்து கொள்வேன்.

தொடங்கலாமா..?




Last edited by கலைவேந்தன் on Sun 18 Sep 2011 - 13:33; edited 14 times in total
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down


கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by கலைவேந்தன் Mon 5 Sep 2011 - 20:33

அப்துல்லாஹ் wrote:உங்க கதைய படிச்சதும் உங்களின் இன்னொரு பரிமாணம் மனதுக்குள் பளிச்சிட்டது... அது தான் உங்களின் கதை சொல்லும் பாங்கு நல்ல ஒரு கதைசொல்லி நீங்கள்... நயமாக அழைத்துச் செல்கிறீர்கள்....கதையின் போக்கும் கையாளும் நுட்ப மிகு வார்த்தைகளும் அரூமை தொடருங்கள் கலை சார்... :!+:

அமைதியான நண்பரின் அருமையான பாராட்டுக்கு மிக்க நன்றி..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by kalainilaa Mon 5 Sep 2011 - 20:37

கலைவேந்தன் wrote:
அப்துல்லாஹ் wrote:உங்க கதைய படிச்சதும் உங்களின் இன்னொரு பரிமாணம் மனதுக்குள் பளிச்சிட்டது... அது தான் உங்களின் கதை சொல்லும் பாங்கு நல்ல ஒரு கதைசொல்லி நீங்கள்... நயமாக அழைத்துச் செல்கிறீர்கள்....கதையின் போக்கும் கையாளும் நுட்ப மிகு வார்த்தைகளும் அரூமை தொடருங்கள் கலை சார்... :!+:

அமைதியான நண்பரின் அருமையான பாராட்டுக்கு மிக்க நன்றி..!

இது தானே கலையின் கலை வண்ணம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by கலைவேந்தன் Mon 5 Sep 2011 - 21:01

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 8

’’ நாற்பது சதவீதமா ...? ’’ - வாயைப் பிளந்தான் மாணிக்கம். ‘’ இது பத்தி ஐயாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கனும் விக்னேஷ் சார்..’’ - என்று பரிதாபமாக விழித்தான்.

‘’ அட கவலைப்படாதீங்க சார்... நான் சும்மா தமாஷுக்கு சொன்னேன். வேலை முடித்த பிறகு என் ஃபீஸ் என்ன என்பதையும் என்னென்ன வகையில் செலவினங்கள் என்பதையும் பில் அனுப்புவேன். அதை கொடுத்தால் போதும். கோடிக்கணக்கா வாங்கி உங்களைப்போல நெருப்பை வயித்தில் கட்டி அலையனுமா நான்..’’ - குறும்புடன் விக்னேஷ் கூறும் போது அவனைப் பெருமிதமாக விழுங்கிவிடுவதைப் போல பார்த்தாள் வசந்தி.

‘’ சரி சரி ... எனக்கு சில விவரங்கள் வேண்டுமே.. ‘’ - என்று மாணிக்கத்திடம் சீரியசான முகத்துடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ கேளுங்க சார்.. ‘’ - உண்மையில் மாணிக்கத்தின் மனதில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுவிட்டான் விக்னேஷ். இப்போது இருக்கும் நெருக்கடியில் பாதிக்குப் பாதி கிடைத்தாலே கூட சரியென்று சொல்லி இருபபார் ஆ ஆறுமுகம். இந்த நிலையில் முன்பே சொன்னபடி திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல தான் அவர்களின் நிலை இருந்தது.

நினைத்து இருந்தால் போலீசின் உதவியோடும் சைபர் க்ரைம் போலீசார் உதவியோடும் செயலில் இறங்கி பிரச்சினையைத் தீர்த்து இருக்கலாம். ஆனால் இப்போது தேர்தல் நெருக்கத்தில் இருக்கும் நிலையில் போலீசார் இவருக்கு நன்றியுடன் உண்மையுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. மேலும் தேர்தலுக்குள் இந்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஏற்கனவே இந்தியா முழுக்க கறுப்புப்பணத்திற்கு எதிரான முழ்க்கம்வேறு வலுப்பட்டு இருக்கும் நிலையில் இருப்பதை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலை.

இத்தகைய இக்கட்டில் விக்னேஷ் கேட்ட தொகையைக் கொடுக்க தயாராக இருந்தார்கள் தான். இருப்பினும் விக்னேஷின் இந்த நேர்மையும் பேராசைப்படாத இயல்பும் மாணிக்கத்துக்கு இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று வியக்க வைத்தது.

’’ முதல்ல என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க... முதன்முதலில் இப்படி ஒரு தொகை ட்ரான்ஸ்ஃபர் செய்யபப்ட்டதை எப்போ கண்டு பிடிச்சீங்க...? இதுக்கும் முன் இப்படி நடந்து இருக்கா..? - விக்னேஷ்.

‘’ இல்லை சார். இன்னைக்கு காலையில் அமைச்சர் என்னை அழைத்து விவரம் சொன்னப்பதான் எனக்கும் தெரியும். ‘’ - மாணிக்கம்.

‘’ மொத்தம் எத்தனை கோடி கணக்கில் இருந்தது..? ’’ - விக்னேஷ்.

இந்த கேள்விக்கு பதில்சொல்ல சற்று தயங்கினான் மாணிக்கம். அவன் கண்கள் ஒருமுறை வசந்தியைப் பார்த்துவிட்டு தாழ்ந்தன.

‘’ இதோ பாருங்க மாணிக்கம்.. டாக்டர் மற்றும் வக்கீல்கள்கிட்ட மாத்திரம் இல்லை. எங்களைப்போன்ற டிடெக்டிவ் கிட்டயும் எதையும் மறைக்கக்கூடாது. நான் முன்பே சொல்லிட்டேன். ரகசியம் காக்கப்படும்னு. நீங்க நம்பித்தான் ஆகனும். வேற வழியும் இல்லை. ‘’ - விக்னேஷின் வார்த்தைகள் திட்டவட்டமாக வந்தன.

’’ உண்மைதான் சார் ... மொத்தம் 3300 கோடிகள். ‘’ - தயக்கத்துடன் மெல்லிய குரலில் சொன்னான் மாணிக்கம்.

‘உய்ய்ய்ய்ய்’ - வியப்பான சீழ்க்கை ஒலி கிளம்பியது விக்னேஷிடமிருந்து.

வசந்தியோ மயங்காத குறையாய் கண்கள் இடுங்க புன்னகைத்தாள்.

’’ ஓகே ஓகே... இந்த தொகைஅளவும் கணக்கு விவரங்களும் யாருக்கெல்லாம் தெரியும்..? - விக்னேஷ் தொடர்ந்து கேட்டான்.

’’ கண்டிப்பா எங்க ரெண்டு பேருக்குத்தான் தெரியும். ‘’ - மாணிக்கத்தின் கண்கள் தாழ்ந்தன.

‘’ கம் ஆன் மாணிக்கம் சார்... கண்டிப்பா நீங்க எதையோ மறைக்கிறீங்க.நீங்க அனுபவிப்பது யாரோ ஒரு கலைநுணுக்க நிபுணர் நிர்மாணித்த எழில் கூடத்தைத் தான். சொல்லுங்க ... அந்த டெக்னீஷியன் - அந்த மூனாவது ஆள் - யாரு..? எங்க இருக்கார்..? ‘’- விக்னேஷின் திறமை மாணிக்கம் சொல்லத்தயங்கிய விஷயத்தைச் சட்டென வெளிக்கொணர்ந்தது.

நாம் லேசுப்பட்ட ஆள்கிட்ட வரலை. மிகச்சிறந்த மனோதத்துவ நிபுணர் கிட்ட வந்து இருக்கோம் என்பதை உணர்ந்த மாணிக்கத்துக்கு கண்டிப்பா இதைக் கண்டுபிடிச்சு துப்பு துலக்கத்தான் போகிறான் விக்னேஷ் என்பதை நொடியில் உறுதிப்படுத்திக்கொண்டு விட்டான்.

‘’’ ஆமாம் விக்னேஷ்.. ( ஓரளவு நட்புணர்வு வந்துவிட்டு இருந்தது. எனவே சாரைத் தவிர்த்தான் மாணிக்கம். ) நீலமேகம்னு ஒருத்தர். அவர் பன்னாட்டு வங்கிகளின் இண்டர்நேஷனல் ஏஜண்ட். அவர் சிங்கப்பூரில் ஒரு வங்கியில் பத்து வருடங்கள் பி ஆர் ஓ ஆக இருந்து விட்டு தமிழகம் வந்துவிட்டார். அவர் சில பல நிழலான அமைச்சர்களுக்கு வெளிநாட்டு வங்கிகளின் பி ஆர் ஓ ஆக இருந்து வந்தார். ..’’ - நிறுத்திய மாணிக்கம் ‘’ குடிக்க தண்ணீர் கிடைக்குமா..? ‘’- என்றான்.

உடனே வசந்தி அடுத்த அறையில் இருந்த குட்டி ஃப்ரிட்ஜிலிருந்து குளிர்ந்த நீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

குடித்து ஆசுவாசப்பட்டுக்கொண்ட மாணிக்கத்துக்கு அந்த ஏசி அறையிலும் வியர்த்தது.

விக்னேஷ் வியக்கவில்லை. ஏனென்றால் இது போன்ற மல்டிக்ரோர்ஸ் விவகாரத்தில் மனம் பரபரத்ததிலும் வியர்த்ததிலும் வியப்பில்லை தானே..?

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் மாணிக்கம் தொடர்ந்தான்.

‘’ அவர் தான் அமைச்சர் ஆறுமுகத்துக்கு கார்ப்பரேட் அக்கவுண்ட் ஓபன் செய்து கிட்டத்தட்ட 18 நாட்கள் எங்கள் இருவருக்கும் ட்ரெயினிங் கொடுத்தார். கொடுக்கல் வாங்கல் ஹவாலா பணம் மாற்றல் முதலான அனைத்து நுணுக்கங்களும் கற்றுத்தந்தார்.அது நடந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகப்போகிறது.’’ - நிறுத்தினான் மாணிக்கம்.

‘’ ம்ம்ம் ... அப்படியானால் உங்கள் மூன்று பேருக்கும் இந்த கணக்கு தொடர்பான அனைத்து விவகாரங்களும் தெரியும் இல்லையா..? ‘’ - கேள்வியை கேட்டுவிட்டு மாணிக்கத்தின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான் விக்னேஷ்.

‘’ ஆமாம் விக்னேஷ்... இன்ஃபாக்ட் அவர்தான் வாய்ஸ் ரெகக்னிஷன் முறையில் பல லேயர் செக்யூரிட்டியுடன் கணக்கை ஆபரேட் செய்யவைத்தார். ‘’ - இப்போது ஓரளவுக்கு சகஜப்பட்டு விட்டிருந்தான் மாணிக்கம்.

இவர்கள் உரையாடலில் எந்த ருசியும் காட்டாதது போல் சில ஃபைகளை திறந்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தாலும் அத்தனையையும் ஒரு தலை சிறந்த உளவாளியைப்போல கவனித்துக்கொண்டு இருந்தாள் வசந்தி.

’’ மிஸ்டர் மாணிக்கம்.. ஒருவேளை இந்த வேலையை அந்த நீலமேகம் செய்து இருக்கலாமில்லையா...? நீங்கள் சொன்னதை வைச்சுப் பார்க்கும் போது இந்த 200 கோடி சிங்கப்பூர் வங்கிக்கு மாற்றப்பட்டு இருக்கு. மேலும் மிகவும் சாதுரியமான முறையில் இந்த வேலை செய்து இருக்காங்க.. நீலமேகம் முன்பே சிங்கையில் இருந்ததைக் குறிப்பிட்டு இருக்கீங்க... அப்படி பார்க்கும் போது இது ரெண்டும் ரெண்டும் நாலு என்பது போல் பொருந்தலையா...? ‘’ - விக்னேஷ் இதைக் கூறி தானே அதை நம்பாதவன் போல லேசாக சிரித்தும் கொண்டான்.

’’ இல்லை விக்னேஷ்... கண்டிப்பாக இல்லை.என்னால் நிச்சயம் உறுதியாக கூற முடியும்.. ‘’ - மாணிக்கத்தின் குரலில் உறுதி இருந்தது.

‘’ எப்படி நிச்சயமாக உங்களால் சொல்ல முடியுது..?’’ - விக்னேஷின் முகத்தில் கேள்விக்குறி.

‘’ காரணம் ... வந்து ... நீலமேகம் இறந்துட்டார்... ‘’ - மாணிக்கத்தின் குரலில் பதட்டம் துலங்கியது.


துடிப்புகள் தொடரும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by kalainilaa Mon 5 Sep 2011 - 21:30

கடந்த தேர்தலில் கொண்ட பதட்டம் செயலும் இதில் அடக்கம்.
கதையோடு,செல்லும் பதட்டம் ,அடுத்து என்ன வருமோ என்ற எண்ணம் !இது தான் உங்கள் சிறப்பு!கலைக்குள் ,புதிய உதயத்தை
காணுகிறேன் .அடுத்து படிக்க காத்திருக்கிறேன்!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Sep 2011 - 7:04

இத்திரி நான் இன்னும் படிக்கவில்லை நேரம் எனக்கு இடம் தரவில்லை எட்டு அங்கம் சென்றும் ஒரு அங்கமேனும் இருந்து படித்திட முடியாத நிலை அதனால்தான் பின்னூட்டமிடவும் சிக்கலில் தவிக்கிறேன் தொடருங்கள் நேரம் கிடைக்கும் போது படித்திட முயல்கிறேன் நன்றி


கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by கலைவேந்தன் Tue 6 Sep 2011 - 20:35

kalainilaa wrote:கடந்த தேர்தலில் கொண்ட பதட்டம் செயலும் இதில் அடக்கம்.
கதையோடு,செல்லும் பதட்டம் ,அடுத்து என்ன வருமோ என்ற எண்ணம் !இது தான் உங்கள் சிறப்பு!கலைக்குள் ,புதிய உதயத்தை
காணுகிறேன் .அடுத்து படிக்க காத்திருக்கிறேன்!

கலையே கலையின் கலையை கலையாமல் கலையுடன் பாராட்ட இயலும் என்பதை உணரவைத்த தோழருக்கு நன்றி..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by கலைவேந்தன் Tue 6 Sep 2011 - 20:36

நேசமுடன் ஹாசிம் wrote:இத்திரி நான் இன்னும் படிக்கவில்லை நேரம் எனக்கு இடம் தரவில்லை எட்டு அங்கம் சென்றும் ஒரு அங்கமேனும் இருந்து படித்திட முடியாத நிலை அதனால்தான் பின்னூட்டமிடவும் சிக்கலில் தவிக்கிறேன் தொடருங்கள் நேரம் கிடைக்கும் போது படித்திட முயல்கிறேன் நன்றி

நேரமுடன் ஒத்திசைந்து நேயமுடன் வாசிக்க நேசமுடன் ஹாசிம்மைக் கேட்டுக்கொள்கிறேன்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by கலைவேந்தன் Tue 6 Sep 2011 - 20:38

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 9

மாணிக்கத்தின் அந்த பதிலை எதிர்பார்த்திருந்த விக்னேஷுக்கு அது வியப்பளிக்கவில்லை தான். ஆனால் அவரகளின் உரையாடல்களைக் கண்டு கொள்ளாதது போல் கவனித்துக்கொண்டிருந்த வசந்திக்கு அது அதிர்ச்சியை அளித்தது. பிறந்ததுமுதல் பணப் பற்றாக்குறையைப் பார்த்திராத வசந்திக்கு பணத்தின் மீது பற்றும் இல்லை. அந்த மனநிலையில் இருக்கும் வசந்திக்கு பணத்திற்காக கொலையும் செய்துவிட்டார்களா பாவிகள் என்ற வருத்தம் அவள் முகத்தில் துல்லியமாகத் தெரிந்தது.

’’ கொன்றே விட்டீர்களா நீலமேகத்தை..? ‘’ - முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் விக்னேஷ் வினவினான்.

‘’ இல்லை விக்னேஷ்.. நாங்கள் கொல்லவில்லை. அவருக்கு மாரடைப்பு வந்தது.இயற்கையான மரணம் தான் ‘’ என்ற மாணிக்கம் நடந்ததை விரிவாகக் கூறலானான்.

‘’ நீலமேகம் எலலா அரசியல் வாதிகளுக்குமே நிழலான குருவாக இருந்து வந்தார். முறைகேடான முறையில் லைசன்ஷியேட் மற்றும் தொழிற்சாலை அனுமதி என்று பலவகைகளில் அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் கையூட்டுகள் அன்பளிப்புகள் அதீதமாக இருக்கும். அப்படிப்பட்ட பணத்தை - அதுவும் கோடிக்கணக்கான பணத்தை - இந்திய வங்கிகளிலோ அல்லது இந்திய சொத்துக்களிலோ முதலீடு செய்து வைத்தால் அரசியல் வாதிகளுக்குப் பெரும் பிரச்சினை வரும் என்பதால் பல வருடங்களாக இதற்கு என்ன வழி என்பதை யோசித்துக்கொண்டு இருந்த அரசியல் வாதிகளுக்கு நீலமேகம் போன்ற வெளி நாட்டு வங்கிகளின் ஏஜண்ட்கள் வரப்பிரசாதமாக அமைந்தனர். ’’ - இடையில் குறுக்கிடாமல் அமைதியாகக்கேட்டுக்கொண்டு இருந்தான் விக்னேஷ்.

மாணிக்கம் தொடர்ந்தான்.

’’ இந்தியாவில் இது போன்ற ஏஜண்ட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவர்கள் பல மாநிலங்களில் பரவலாக இருக்கிறார்கள். இவர்கள் தோற்றத்தில் மிகச்சாதாரணமாக இருப்பார்கள். பெயருக்கு எந்த கம்பெனியிலாவது லீகல் அட்வைசர் அல்லது பொதுஜன தொடபாளர்களாக விளங்குவார்கள். ஏன் இந்தியாவில் ஒரு சில பத்திரிகை ஆசிரியர்கள் கூட இந்த வேலையைச் செய்து வருகிறார்கள்.’’ - சற்று நிறுத்தி விக்னேஷின் முகத்தைப்பார்த்து ‘’ தயவு செய்து அவங்க எல்லாம் யார் யாருன்னு கேட்டுடாதீங்க.. இது எல்லாம் டாப் சீக்ரெட். நான் இதை வெளியிட்டதாக சந்தேகம் வந்தாலும் என்னை தீர்த்துக்கட்டி விடுவார்கள். ’’- என்ற மாணிக்கத்தின் முகத்தில் மரண பயம் தெளிவாகத் தெரிந்தது.

‘’ இல்லை. கேட்கமாட்டேன். தொடருங்க மாணிக்கம். ‘’ - விக்னேஷ் ஊக்குவித்தான். அவனுக்கு இதெல்லாம் அதிக வியப்பைத் தரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. வியப்பின் உச்சிக்கு போனவள் வசந்தி மட்டும் தான்.

மாணிக்கம் விவரிக்க விவரிக்க ஏற்கனவே சிவந்த அழகான வசந்தியின் முகம் வியப்பில் இன்னும் சிவந்து அவளது அழகை அதிகரிக்கச்செய்தது. இத்தனை சுவாரசியத்திலும் வசந்தியின் முகத்தில் மாறிமாறி வரும் அழகியல் மாற்றங்களைக் கவனிக்கத் தவறவில்லை விக்னேஷ்.

இதை எல்லாம் கவனிக்காத மாணிக்கம் தொடர்ந்தான்.

‘’ அப்படிப்பட்ட எஜண்ட்களில் ஒருவர் தான் நீலமேகம். இவர் முன்பே பத்து வருடங்கள் சிங்கப்பூரில் இருந்த அனுபவம் இவருக்கு கை கொடுத்தது. ஸ்விஸ் வங்கிகளில் எலலாவற்றிலும் இவருக்கு பரிச்சயம் இருந்தாலும் இவர் அதிகம் டீல் செய்வது என்னவோ ஏபிஎஸ் பேங்க் தான். இவர் நினைத்தால் ஒரே நாளில் வங்கிக்கணக்கு துவக்கவும் உடனடி ட்ரான்சாக்சன் செய்து தரவும் இயலும்.

எங்க மந்திரி ஆறுமுகம் இவரைப்பற்றி கேள்விப்பட்டதும் இவரை தன் வீட்டுக்கே வரவழைத்து இது சம்பந்தமான சந்தேகங்கள் கேட்டார். அவரது ஹை டெக் லேப்டாப்பிலேயே நீலமேகத்தை கணக்கு துவக்க வழி கேட்டார். இத்தனைக்கும் அமைச்சர் ஒரு முறை கூட ஸ்விட்சர்லாந்து போனது இல்லை. வீட்டிலிருந்தபடியே எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.பதினெட்டு நாட்கள் அமைச்சர் வீட்டுல தங்கி எல்லா வழிமுறைகளையும் சொல்லிக்கொடுத்தார்.

ஒரு முறை கணக்கு துவங்குவது தான் கடினம். மேலும் அந்த அக்கவுண்ட்டிலிருந்து பணம் இன்னொரு பெனிஃபிசரிக்கு அனுப்புவதும் கடினம். நீலமேகம் அதில் சில சிக்கலான வாய்ஸ் கீ எண்ட்ரி செய்து வைத்தார். அதன்படி அமைச்சர் அல்லது நான் எங்கள் சொந்தக்குரலால் சில கோடிங்கு களைச் சொல்லி ட்ரான்சாக்ட் செய்ய வேண்டிய முறைப்படி அமைத்து தந்தார்.

அதற்குப்பிறகு தாராளமாக பல லைசன்ஷியேட் கார்ப்போரேட் பர்மிட்கள் மூலம் கிடைத்த நூறு இருநூறு கோடிகள் எல்லாம் அமைச்சர்கணக்கில் போடப்பட்டு வந்தது.’’’ - கொஞ்சம் நிறுத்தி நிதானித்துக் கொண்டான் மாணிக்கம்.

எல்லாவற்றியும் கவனமாகக் கேட்டுக்கொண்ட விக்னேஷ் .’’ அதெல்லாம் சரி ..நீலமேகம் எப்படி இறந்தார்..? ‘’ - என்று கேள்வி போட்டான்.

’’ இப்படி எல்லாம் நீலமேகம் செய்து தந்தாலும் ஆறுமுகம் அவரை நம்பவில்லை. எங்கே தனது ரகசியங்களை வெளியிட்டு விடுவாரோ என்று அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மறுத்தார். நீலமேகம் எவ்வளவொ சத்தியம் செய்தும் அவரை வெளியில் விட மறுத்தார். நானும் சொன்னேன் இது கிட்நாப்பிங் கேஸ் ஆகிடும் ஐயா... வேண்டாம் அவரை விட்டு விடுஙக்ள். அவர் அப்படி எதுவும் செய்ய நினைத்தால் அவரை நாம் கவனித்துக்கொள்ளலாம் என்று ஆசுவாசம் தந்த பிறகு வெளியில் விட சம்மதித்தார்.’’

‘’ இப்படி மிரட்டப்பட்டதால் நீலமேகம் மனதளவில் மருண்டு போய் ஆறுமுகம் ஐயா கொடுத்த இரண்டு கோடி ரூபாய் கேஷைக்கூட ( அவருக்கு ஃபீஸ் ) வாங்க மறுத்து தன் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு சென்றுவிட்டார். பிறகு அவரிடமிருந்து சில மாதங்கள் தகவலும் இல்லை. கடந்த மூன்று மாதங்கள்முன் சென்னைக்கு வந்து சென்றதாகவும் ஹார்ட் அட்டாக் வந்து சில நாட்களில் மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும் செய்தி வந்தது. ஆனால் எங்க ஐயாமேல் பத்திரிகைகளின் சந்தேகங்கள் கறுப்புப்பண விவகாரங்கள் குறித்து செய்திகள் வெளி வந்த சமயம் என்பதால் அவரைப்போய் பார்க்க பயந்து நாங்கள் செல்லவில்லை. இதான் விக்னேஷ் நடந்தது. இதில் எந்த பொய்யும் நான் கூறவில்லை ’’ - என்று மாணிக்கம் கூறினான்.

‘’ சரி மாணிக்கம் .. எனக்கு நீங்க கண்டுபிடிச்ச டிரான்சாக்‌ஷன் ரெஃபரென்ஸ் நம்பர் இதெல்லாம் கொஞ்சம் தர முடியுமா..? - விக்னேஷ் கேட்டுக்கொண்டு இருந்தபோது மாணிக்கத்தின் மொபைல் ஒலித்தது.

‘’ ம்ம்ம் சொல்லுங்கய்யா.. நான் விக்னேஷ் ஆபீசில் தான் பேசிக்கிட்டிருக்கேன்... என்னது ...? ஐயோ... இது எப்போ ஐயா...? அடக்கடவுளே...நீஙக் கவலைப்படாதீங்கய்யா.. உடல் நலம் கவனம்.. ‘’

- பேசிமுடித்த மாணிக்கம் , ‘’ விக்னேஷ், இன்னொரு 250 கோடி ட்ரான்ஸ்ஃபர் ஆகி இருக்குதாம்... இம்முறை லண்டன் கணக்குக்கு .. ’’ - என்று பதட்டத்துடன் கூறினான்..!

துடிப்புகள் தொடரும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by kalainilaa Tue 6 Sep 2011 - 21:22

பதட்டம் இங்கும் தான் !நல்ல விறுவிறுப்பு .தொடரில் கதைக்காக,
உங்கள் உழைப்பு தெரிகிறது .செய்திகளை சேகரித்து ,படித்த கதை ,படிக்க இனிமை .புதுமை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by கலைவேந்தன் Thu 8 Sep 2011 - 18:23

மிக்க நன்றி கலைநிலா மற்றும் ஹாசிம்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by கலைவேந்தன் Thu 8 Sep 2011 - 18:25

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 10

ன்னும் 250 கோடி கணக்கிலிருந்து ஸ்வாஹா ஆனதைக்கேட்டு விக்னேஷ் அதிக வியப்படையவில்லை. மாணிக்கம் தான் தன் குடியே மூழ்கினதைப்போல தலைகவிழ்ந்து கிடந்தான்.

‘’ என்ன மாணிக்கம் சார்...? நீங்க இன்னும் உங்க அக்கவுண்ட்டை லாக் செய்யலையா.? அல்லது பாஸ்வேர்டை மாத்தலையா..? சேகர் சுப்ரமணியம்னு எனக்கு தெரிந்த பேங்கர் எனக்கு சொல்லி இருக்கார். மாதம் ஒருமுறை கணக்கை மாற்றி லாகின் மற்றும் ட்ரான்சாக்சன் பாஸ்வேர்டை மாற்றனும் அடிக்கடி சொல்லுவார். நீங்க ஏன் அதை செய்யலை...? ‘’ - விக்ரம் அமைதியாகக் கேட்டான்.

‘’ முயற்சி செய்தோமுங்க... ஐபி லாக் செய்யப்பட்டு இருக்கு. அக்செஸ் மட்டும் ஆகுது. ஆனா பாஸ்வேர்ட் சேஞ்ச் ஆப்ஷன் டிசேபிள் செய்யப்பட்டு இருக்கு. நாங்க எவ்வளவு முயற்சி செய்தும் எங்க இன்னொரு பிரைமரி அக்கவுண்ட்டுக்கு இந்த அமௌண்ட்டை ட்ரான்ஃபர் செய்ய முடியவே இல்லை. ப்யூர் ஹாக்கிங் இது. ‘’ - மாணிக்கம் சோர்ந்த முகத்துடன் நிராசையுடன் சொன்னான்.

‘’ என்னது ..? பிரைமரி அக்கவுண்ட்டா...? அது என்ன ...? விளக்கமா சொல்லுங்க... ‘’ - முதன்முறையாக தனது சிமிழ் போன்ற சிவந்த உதடுகளைத் திறந்து வசந்தி கேட்டாள்.

மாணிக்கம் வசந்தியை ஒரு முறை பார்த்துவிட்டு சொன்னான்.

‘’ பொதுவா ஸ்விஸ்ல மொத்தம் 400 க்கும் மேல வங்கிகள் இருந்தாலும் ஒரு சில வங்கிகள் தான் மிகப்பெரியவை. உதாரணத்துக்கு யூபிஎஸ் ( யூனியன் பேங்க் ஆஃப் ஸ்விட்சர்லாண்ட் ) மற்றும் சி பி எஸ் (கிரெடிட் ஸ்யூஸ்ஸெ க்ரூப்) இந்த ரெண்டு வங்கிதான் மிகப்பெரியது. பொதுவா இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அண்டர்வேர்ல்ட் டான்கள் அனைவரும் இந்த இரண்டில் தான் பெரும்பாலும் தங்கள் கணக்கை வைத்து இருப்பாங்க.நம்பர்ட் அக்கவுண்ட் அப்படின்னு சொல்லுவாங்க.. அக்செஸ் நம்பருக்கு அவங்க ஒரு கிலோ சுத்த தங்கத்திலானான அக்செஸ் கீ தருவாங்க.. அப்படி ஓபன் செய்பவங்க பிரைமரி மற்றும் சப் அக்கவுண்ட் வைச்சுக்கலாம். எப்போது வேணும்னாலும் தங்கள் கணக்கில் தொகையை மாற்றிக் கொள்ளலாம். பாதுகாப்பு கருதி இந்த வசதி தந்து இருக்காங்க. ‘’ - மாணிக்கம் கொஞ்சம் நிறுத்திவிட்டு தன் பர்சில் வைத்திருந்த சிறிய புகைப்படம் ஒன்றைக் காட்டினான்.

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Swiss-bank-account-8

அதைக்கண்டதும் வசந்தியின் முகம் வியப்பால் மலர்ந்து இன்னும் அழகு பெற்றது.

விக்னேஷ் அதைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் மாணிக்கத்திடம் கொடுத்தான்..

‘’ இன்னைக்கு காலை அமைச்சர் அந்த ட்ரான்சாக்சனைக் கண்டு பிடிச்சதும் என்னிடம் அழைத்துக் காட்டியதும் நாங்க முதலில் செய்ய முயன்றது அக்கவுண்ட் லாக் தான். ஆனா அதை லாக் செய்ய முடியாதபடியும் பாஸ்வேர்ட் மாற்றும் வாய்ப்பில்லாத படியும் முடக்கப்பட்டு இருக்கு. ஆனா ஆச்சரியம் என்ன என்றால் அக்சேஸ் கோட் மற்றும் பாதுப்பாப்பு சமாச்சாரங்கள் எல்லாமே மாற்றப்படவே இல்லை.இதனால் ரெண்டு பிரச்சினை எழும்..’’ - என்று கூறிவிட்டு விக்னேஷின் முகத்தைப் பார்த்தான் மாணிக்கம்.

மேல சொல்லுங்க என்று சைகையால் காட்டிய விக்னேஷ் லேசாக கண்களை இடுக்கிக்கொண்டு யோசித்தான். அவன் அப்படி அரைக்கண் மூடினால் பிறருக்கு தூங்குவது போல் தோன்றினாலும் அதன் உண்மையான பொருள் வசந்தி மட்டுமே அறிவாள். தீவிரமாக சிந்திக்கும் போது விக்னேஷின் கண்கள் இடுங்கி அரைத்தூக்கம் போல் தென்படும்.

இதை எல்லாம் அறியாத மாணிக்கம் தொடர்ந்தான்.

‘’ முதல் பிரச்சினை என்ன என்றால் பாஸ்வேர்ட் மாற்றும் போது சிறிய தவறுகள் கூட கணக்கை முடக்கிவிடும் ஆபத்து உள்ளது. அதனால் இதைக் கையாள்பவன் மாற்றாமல் இருக்கிறான். அதே சமயம் நாங்க மாத்திடுவோம்னு நினைச்சு அந்த ஆப்ஷனை டிசேபிள் செய்து இருக்கான். இதை முதல் அக்செஸ் போது செய்து இருக்கிறான். அதனால் எங்களால் அதை மீண்டும் எனேபிள் செய்ய முடியவில்லை.

இரண்டாவது பிரச்சினை என்ன என்றால் கணக்கின் பாஸ்வேர்ட் மாற்றாமல் நாங்கள் பேங்குக்கு புகார் செய்தாலும் அதை வங்கி ஏற்காது. ஏன்னா எங்களுக்கு முதல் இன்ஸ்ட்ரக்‌ஷன் என்னன்னா எந்த நெருக்கடியிலும் அக்செஸ் கோடை மாற்றிவிடனும் என்பது தான். அது செய்யாமல் இழப்பிற்கு வங்கியின் உதவி நாடினால் பயன் எதுவும் இல்லை.

இதை எல்லாம் நல்லா தெரிஞ்சு வைச்சு இருக்கும் கில்லாடி தான் இதை செய்கிறான்.’’ - என்று முடித்தான் மாணிக்கம்.

‘’ செய்கிறாள் என்று கூட எடுக்கலாம் இல்லையா ‘’ - புன்னகைத்தான் விக்னேஷ்.

‘’ என்ன சொல்றீங்க விக்னேஷ்..? ‘’ - பீதியில் முகம் வெளுத்தது மாணிக்கத்துக்கு.

‘’ பயப்படாதீங்க .. பாசிபிளிட்டியைச் சொன்னேன் ’’ - ஆசுவாசம் அளித்தான் விக்னேஷ்.

‘’ இனி என்ன செய்யலாம் விக்னேஷ்... நீங்க தான் இதை எபப்டியாவது சால்வ் செய்யனும்... ‘’ - எழுந்து கெஞ்சாத குறையாக விக்னேஷின் கைகளைப் பிடித்து வேண்டுகோள் விடுத்தான் மாணிக்கம்.

’’ மாணிக்கம் ஒரு விஷயம் கவனிச்சீங்களா...? இந்த வேலை செய்பவன் நிதானமாக ஒவ்வொரு முறையும் ஒரு நாட்டுக்கு அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர் செய்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கிறான். ஆனால் எல்லா பணமும் ஒரு கணக்குக்கு போகாமல் வெவ்வேறு அக்கவுண்ட்டுக்கு மாற்றுவது ஏன்..? அப்படியானால் அவனுக்கு எத்தனை நாட்டில் வங்கியில் கணக்கு இருக்க வேண்டும்..? இது ஒரு வேளை தீவிர வாதிகள் வேலையாகக் கூட இருக்கலாம். ஒரு மிகப்பெரிய கும்பலின் வேலையாகவும் இருக்க வாய்ப்பு இருக்கு. மேலும் உங்க ஒருத்தர் கணக்கிலிருந்து தான் எடுக்கிறான் என்றும் நிச்சயமாகக் கூற முடியாது....ம்ம்ம்... நான் சில வேலைகளை முடித்து இன்று மாலை 6 மணி சுமாருக்கு அமைச்சர் வீட்டுக்கு வரேன். எனக்கு அந்த லேப்டாப்பைப் பார்க்கனும்.சில விவரங்கள் சேகரிக்கனும்.. அதுக்கும் முன் நீலமேகம் முகவரி கொடுத்துட்டு போங்க நான் உங்களை சந்திச்சதும் இன்றிரவே நீலமேகம் ஊரான கும்பகோணம் போகிறேன்.’’ - சந்திப்பு முடிந்தது என்று சொன்னது போல எழுந்தான் விக்னேஷ்.

’’ அதுக்குள் இன்னொரு முறை பணம் எடுத்தான்னா...? - மாணிக்கத்தின் நியாயமான கவலை ( சுப்ரமணியம் சேகரின் கவலையும் கூடத்தான் . ) அவனைப் படர்ந்தது

‘’ பயப்படாதீங்க... 24 மணி நேரத்துல ஸ்விஸ் பேங்குல இருந்து இரண்டு ட்ரான்சாக்‌ஷனுக்கு மேல் செய்ய இயலாது. சிறப்பு அனுமதி பெற்றுஇருந்தால் ஒழிய.. இது உங்களுக்கு தெரியாதா ...? ‘’ - விக்னேஷ் கேள்விக்குறியுடன் மாணிக்கத்தைப் பார்த்தான்.

‘’ தெரியும் விக்னேஷ்... ஆனா... ஐயாக்கு அந்த அனுமதி உண்டு .. ‘’ - கவலையில் அவன் முகம் பொலிவிழந்தது.

’’அப்படின்னா இறைவனை வேண்டிக்கோங்க... நான் மந்திரவாதி இல்லை. குறைந்த பட்சம் எனக்கு 24 மணி நேரம் அவசியம் ..'' என்று கூறி அவனுக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டு ..வசந்தியிடம் ‘’’ வசந்தி லேப்டாப்பை ஆன் செய்து வை. இதோ வரேன் என்று கூறிவிட்டு வெளியில் வந்து மாணிக்கம் சென்ற காரின் வழியை கவனித்தான். அவன் முகம் சந்தேகத்தால் இறுகியது.

துடிப்புகள் தொடரும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 20:46

அழகான் கதைக்கு ஏற்ற விரிப்பாய் களம் .காலத்துக்கு ஏற்ற வகையில் ,நவீனத்தோடு ,கரு .வியப்பாக இருப்பது,கதைக்கு வலு!

தொடருங்கள் தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by கலைவேந்தன் Fri 9 Sep 2011 - 21:18

நன்றி நண்பரே.. ஜீ மெயிலில் இணைத்துவிட்டீர்களா..?
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 11

Post by கலைவேந்தன் Sun 11 Sep 2011 - 21:56

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 11

மாணிக்கம் வெளியில் சென்றதும் விரைந்து அவனைப் பின் தொடர்ந்து சென்ற விக்னேஷ் அவன் காரில் ஏறும்முன் வெளியில் காத்துக்கொண்டு இருந்த ஒரு பெண்ணும் காரில் ஏறியதைப் பார்த்தான். அவன் மனதில் பல வித யோசனைகள் தோன்றின.

சொன்னதை உடனே செய்யும் பணிவுமிக்க சகதர்மிணியைப் போல இவன் கேட்டதும் லேப்டாப்பை ஆன் செய்து இணையத்தையும் இணைத்து அவன் முன் மேஜைமீது வைத்தாள் வசந்தி.

தனது சேரில் அமர்ந்து கொண்ட விக்னேஷ் வசந்தியையும் பக்கத்தில் இருந்த இன்னொரு சேரில் அருகில் அமர்த்திக்கொண்டான்.

‘’ வசந்தி.. நீ ஒரு வங்கியில் கணக்கு வைத்துக் கொண்டால் என்ன விதமாக பாஸ்வேர்ட் அமைத்துக் கொள்வாய்.? ‘’ - தொடர்பில்லாமல் அவன் கேட்ட கேள்விக்கு கண்களை அகல விரித்து குழ்ந்தைத் தனமாகச் சிரித்தாள்.

‘’ ம்ம்ம்... எனக்கு பிடிச்ச ஜாஸ்மின் பூவை பாஸ்வேர்டாக வைப்பேன். .’’ - இனிய குரலில் பதிலளித்தாள்.

‘’ சரி ... ஒரு ஆளின் பெயரை பாஸ்வேர்டாக வைக்கனும் என்றால் என்ன பெயர் வைப்பாய்..? ’’- குறும்புடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ விக்னேஷ் மை டியர் அல்லது மை டியர் விக்னேஷ் என்று வைப்பேன். ‘’ - தயக்கமின்றி பதில் வந்தது வசந்தியிடம்.

விக்னேஷின் கவனம் அவள் சொன்னதில் லேசாக அசைந்தாலும் அவன் கண்கள் லேசாக இடுங்கி மங்கியது.

சட்டென ‘’ வசந்தி... நீ உடனே எனக்கு ஒரு தகவல் விசாரிச்சு சொல்லனும். செய்வியா ?‘’ - என்று கேட்டான்.

‘’ சொல்லுங்க விக்னேஷ்.. ‘’ - விக்னேஷ் எது செய்யப்பணித்தாலும் புன்முறுவலுடன் உடனே மகிழ்ச்சியுடன் செய்வது வசந்தியின் சுபாவம்.

‘’ அமைச்சர் ஆறுமுகம் மற்றும் மாணிக்கத்துக்கு தம் மனைவியர் தவிர வேற பெண் தொடர்பு இருப்பதா கேள்விப்பட்டு இருக்கேன். அவங்க யாரு என்ன விவரம்னு தெரியனும்.’’ - விக்னேஷ் அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே இதைச் சொன்னான்.

'' இப்படி ஒருவேலை தரேன்னு நீ ஒன்னும்நினைக்கலையே வசந்தி..? ‘’ - மனதில் வேதனயுடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ இல்லை விக்னேஷ்.இதுவும் நம் தொழிலுக்கு மிக அவசியமான வேலைன்னு தெரியுமே... மேலும் நீங்க சொல்லி எதையாவது தட்டியதுண்டா நான்..? ‘’ - வசந்தியின் அழகான கண்களைச் சந்திக்க திடமின்றி தலைகுனிந்தான் விக்னேஷ்.

.வசந்திக்கு் விவரம் சொல்லி சேகரிக்க வேண்டிய செய்திகளைப் பற்றி விவரித்துக்கூறி அனுப்பியபின் ஸ்விஸ்வங்கியின் அடிப்படை விடயங்களைக் குறித்து சில குறிப்புகள் தேடி எடுத்துக் கொண்டான். மாலை ஐந்து மணி ஆன பின் பக்கத்து நாயர் கடையில் இருந்து வந்த டீயைக் குடித்துவிட்டு தன் டி வி எஸ் ஸ்டார் சிட்டியை எடுத்துக் கொண்டு மந்திரியின் வீட்டுக்கு போனான்.

மந்திரியின் பங்களா ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சற்றும் குறையவில்லை. மிக உயரமான அழகிய பி ஓ பி கூரையும் அதில் விலை உயர்ந்த சாண்டிலியர்களும் உயர்தர தேக்கிலான தளவாடப் பொருட்களும் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய கூடமும் அதன் நடுவில் அழகான மாடிப்படிகளும் கண்களைக் கவர்ந்தன.

உயர் தர திரைச்சீலைகளும் அழகிய வேலைப்பாடுகளுடன் சுவர்ச்சித்திரங்களும் ஆறுமுகம் எப்படிப்பட்டவராயிருப்பினும் கலை நுணுக்கம் அறிந்தவர் என்பதைக் காட்டிக்கொண்டு இருந்தன.

விக்னேஷ் வருவது முன்பே அறிந்திருந்த செய்தி என்பதால் அவனை அழைத்து அமரச்செய்து உயர்ந்தவகை குளிர் பானமும் அளிக்கப்பட்டு மரியாதையுடன் நடத்தப்பட்டான். ’’ ஐயா பூஜையில் இருக்காரு.. பத்து நிமிடத்தில் வந்துடுவாரு. மாணிக்கம் ஐயாவும் இப்ப வந்துடுவாங்க ’’ - என்று சொல்லிவிட்டு பவ்யமாக ஒதுங்கினர் பணியாட்கள்.

மாணிக்கம் வெளியிலிருந்து வரவும் ஆறுமுகம் மாடிப்படியில் இறங்கி வரவும் மிகச்சரியாக இருந்ததைப் பார்த்த விக்னேஷ் இது அதிசயப்புரிதலா இல்லை ஒருவருக்கொருவர் தகவல் தொடர்பின் விளைவா என்று வியந்தபோது அவனை மேலே தனது பிரைவேட் ஹாலுக்கு அழைத்துச்சென்றார் ஆறுமுகம்.பணியாட்களுக்கு சில சைககளைச் செய்துவிட்டு மாணிக்கமும் அவர்களுடன் மேலே விரைந்தான்.

அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் லேப்டாப்பில் தாம் கண்ட விஷயங்களை விவரித்தார்.

இரண்டு பணமாற்றமும் செய்யப்பட்ட சிங்கப்பூர் வங்கி மற்றும் லண்டன் வங்கி விவரங்களையும் விக்னேஷ் குறிப்பெடுத்துக்கொண்டான்.

திடீரென்று விக்னேஷ் கேட்ட கேள்வி இருவரையும் திடுக்கிட வைத்தது.


துடிப்புகள் தொடரும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by lafeer Mon 12 Sep 2011 - 5:23

தொடரட்டும் நன்றி நன்பரே
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by ஹம்னா Mon 12 Sep 2011 - 9:10

ரொம்பவும் விரு விருப்பாக செல்கிறது கதை.


கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by கலைவேந்தன் Mon 12 Sep 2011 - 20:20

மிக்க நன்றி லஃபீர் மற்றும் ஹம்னா..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by கலைவேந்தன் Mon 12 Sep 2011 - 20:23

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி ‍ 12.

விக்னேஷ் அப்படி ஒரு கேள்வி கேட்பானென்று எதிர்பார்க்கவில்லை இருவரும்.

இத்தனைக்கும் அமைதியாகத்தான் விக்னேஷ் கேட்டான், ‘’ உங்களுக்கு ஏதாவது ஆனால் ஸ்விஸ் வங்கியில் இருக்கும் எல்லாப் பணமும் யாருக்குச் சேரும்..? ‘’ - விக்னேஷ் கேட்டது மிகப்பெரிய சிக்கலான கேள்வி.

இருவருமே தமது பணத்திற்கு மிகத்தெளிவாக வாரிசுகளை அறிவித்து இருந்தார்கள். தமது அதிகாரப் பூர்வமான மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் பெரும் பங்கையும் அதாவது எழுபத்தைந்து சதவீதமும் ரகசிய உறவுகளுக்கு இருபத்தைந்து சதவீதமும் தெளிவாக வாரிசுரிமைப் பத்திரம் எழுதி வங்கிகளுக்கு அளித்திருந்தனர். இதை எப்படி விக்னேஷுக்கு தெரிவிப்பது..? பின்னாளில் சிக்கல் ஏற்பட ஏதுவாகிவிடுமே என்ற கவலை அவர்களை சிந்திக்க வைத்தது.

மாணிக்கம் தான் அதிர்ச்சியிலிருந்து தெளிந்தான்.

‘’ பொதுவாக வங்கிகளுக்குரிய வாரிசுமைப் பங்கீடுகள் ஸ்விஸ் வங்கிகளுக்கும் உண்டு. அதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும். கணக்காளர்கள் தங்கள் வாரிசுகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கும் பட்சத்தில் வங்கியே உரியவர்களுக்கு பிரித்து வழங்கிவிடும்.இதில் சிறப்பு என்ன என்றால் எத்தனை இருந்தது யாருக்கு என்ன பங்கு என்பதை விரிவாக அனைவருக்கும் அறிவிக்காமல் பொது வக்கீல் முன்னிலையில் அவரவர்களுக்குச் சேரவேண்டிய தொகையை மட்டும் அறிவித்து வழங்கிவிடும். இதற்கென தனிக் கட்டணம் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டுவிடும்.’’ - மாணிக்கம் விவரித்தான்.

‘’ ஒரு வேளை உங்களுக்கு எதுவும் ஆனது வங்கிகளுக்கு தெரியாமல் போய்விடும் நிலையில்.. என்னவாகும்..? வாரிசுகளுக்கும் உங்கள் பங்கீடு பற்றிய தெளிவு இல்லாதிருக்கும் பட்சத்தில்..’’ - என்று இழுத்தான் விக்னேஷ்.

‘’ உண்மைதான். வாரிசுகள் யாரென்பது வங்கிகளின் ஊழியர்களுக்கு அறியப்படாமல் இருக்கும். கணக்காளர் இறந்த செய்தி உரிய முறையில் அவர்களுக்கு அறிவிக்கப்படவேண்டும். இதற்காக வருடம் ஒருமுறை உயிருடன் இருப்பதாகப் பிரமாணம் ஒன்றை கணக்காளர்கள் அளிக்க வேண்டும். அவ்வாறு பிரமாணம் கிடைக்காத சூழலில் பத்து வருடங்கள் கழிந்தபின் கணக்காளர் இறந்ததாகக் கருதி வாரிசு உயிலைப்பிரித்து யாருக்குச் சேரவேண்டுமோ அவரவருக்குப் பங்கிட்டு அளிக்கப்படும். ஒரு வேளை வாரிசு தெரிவிக்கப்படாமல் மறைந்துவிடும் கணக்காளர்களின் கணக்குகளை பத்து வருடங்கள் வரை உரியவர் க்ளெய்ம் செய்யாத நிலையில் அவை டார்மெண்ட் அக்கவுண்ட்ஸ் (Dormant accounts ) * எனப்படும் தர்மக்கணககாக மாறி வங்கிகளுக்கே உரிமையாகிவிடும். ’’ - மாணிக்கம் விவரமாகக் கூறினான்.

’’ அப்படியா ... ? ‘’ - என்று வியந்தான் விக்னேஷ்.

‘’ ஆமாம். இது போன்ற டார்மெண்ட் கணக்குகளின் மூலமாக ஸ்விஸ் வங்கிகளில் குவிந்துகிடக்கும் அனாமதேயச் சொத்துகள் பல ஆயிரம் ட்ரில்லியன்களைத் தொடும். இந்தியாவில் இருந்து மட்டும் இது போன்ற தொகை ஐம்பதினாயிரம் கோடிகளுக்கும் மேல் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ‘’ - மாணிக்கத்தின் இந்த வார்த்தைகள் விக்னேஷின் மனதை வேதனைப்படுத்தின.

‘’ ஓ இத்தனை சிரமம் இருக்கா இதுல..? இப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்து பணம் சேர்த்து என்ன தான் செய்யப்போறீங்க..? பொசுக்குன்னு நீங்க போயிட்டா எல்லாம் போச்சு தானே..? ‘’ - விக்னேஷின் வார்த்தைகளில் வேதனை நிறைந்த விரக்தி தெரிந்தது. ‘’ மேலும் இந்தியாவின் ஏழை மக்களின் உழைப்பில் வந்த கோடிக்கணக்கான பணம் இப்படி ஒரு அன்னிய நாட்டில் தர்மக்கணக்காக மாறி கொள்ளை போகவேண்டுமா...? இதுக்கெல்லாம் விடிவே வராதா ? ‘’ - விக்னேஷ் நெகிழ்ந்து போய் குரல் தழுதழுக்கக் கூறினான்.

’’ சரி ஐயா... இன்னைக்கு இரவே நான் கும்பகோணம் புறப்படுகிறேன். நீலமேகம் பற்றி விசாரித்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். எனக்கு ஃப்ளைட் ஏற்பாடும் செய்து கும்பகோணத்தில் தங்குவதற்கு ஏற்பாடும் செய்துவிடுங்க.. - என்றான் விக்னேஷ்.

‘’ அதெல்லாம் நீங்க சொன்னதுமே மாலையே ஏற்பாடு செய்துட்டேன் விக்னேஷ். இரவு 11 மணிக்கு திருச்சி வரை ஃப்ளைட்டுக்கு ஏற்பாடு செய்துட்டேன். திருச்சி விமான நிலையத்தில் உங்களுக்காக இன்னோவா கார் தயாரா இருக்கு,. சரியா ஆறுமணிக்கு கும்பகோணம் ஹோட்டல் ராயாஸ் ல செக் இன் செய்றீங்க..’’ - விவரங்களை ஒப்புவித்தான் மாணிக்கம்.

விக்னேஷ் நிஜமாகவே மாணிக்கத்தின் ஏற்பாட்டையும் சுறுசுறுப்பையும் கண்டு அதிசயித்தான். ஆறுமுகத்தின் சாய்ஸ் மிகவும் சரிதான் என்று மனதுக்குள் முடிவு செய்துகொண்டான்.

’’ சரி ..இப்ப மணி ஒன்பது ஆகுது. இப்ப புறப்பட்டா சரியா இருக்கும். நீங்க கவலைப்படாதீங்க. அதிக பட்சம் அவன் இன்னொரு ட்ரான்சாக்‌ஷன் செய்துகொள்ள முடியும். அதற்குள் பிரச்சினையை சால்வ் செய்துவிடலாம்.நான் புறப்படறேன் ‘’ - விக்னேஷ் விமான நிலையம் செல்லும் வழியில் வசந்தியை தொடர்பு கொண்டான். தான் கும்பகோணம் செல்லும் விவரத்தை அறிவித்துவிட்டு அவள் சேகரித்த விவரத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டான். இருவரின் அந்தரங்க உறவுப்பெண்கள் கணிணித்துறையில் பூஜ்யம் என்பதை அறிந்து அவர்கள் மேலிருந்த ஐயத்தை நினைவிலிருந்து அழித்தான்.

திட்டமிட்டபடி கும்பகோணம் சென்று ஹோட்டல் ராயாவில் செக் இன் செய்து அலுப்புத் தீர குளித்துவிட்டு அருமையான டீயைக் குடித்துவிட்டு நீலமேகம் வீட்டுக்குச் சென்றான்.

நீலமேகத்தின் மனைவி பார்வதியம்மாளிடம் தான் அவரது க்ளையண்ட் ரங்கசாமியின் மகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது மறைவுக்கு துக்கம் விசாரித்தான் விக்னேஷ்.

தனது தந்தைக்கான சில ஆவணங்கள் நீலமேகம் அறையில் வைத்திருந்ததாகவும் பார்வதியம்மாள் அனுமதித்தால் அந்த டாகுமெண்ட்ஸைத் தேடிக்கொள்வதாகவும் கூறினான்.

பார்வதியம்மாள் நடுங்கியவாறே கேட்டாள், ‘’ நீங்க அமைச்சர் ஆறுமுகம் ஆள் இல்லையே..? ‘’

துடிப்புகள் ... தொடரும்..!


* Dormant accounts
As with anything that's "secret," you have to deal with what happens when one of the few people who know about it die. Accounts whose owners die without having passed on information to others concerning the existence of the account become dormant after a period of time. The account can be passed on to heirs but that becomes difficult if no one knows about it and the bank doesn't know you've died.

Your banker could try to search for you, but that would "spill the beans" so to speak. After 10 years of no contact, however, the bank has a legal obligation to search for you. If they can't find you, or if they learn you have died, they will search for your heirs. If they can't find any heirs, they will report the account to the Swiss banking ombudsman, an official who represents the public by investigating complaints made by individual citizens.

Therefore, it's important to take some measures to make sure your money goes to people you want it to. For example, give the banker another contact person that he can contact if he doesn't hear from you for a specific period of time (that person still doesn't have to know about the account). Or, you could have information about the account stored in a special envelope to only be opened when you die [Source: Swiss-Bank-Accounts.com].
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by kalainilaa Mon 12 Sep 2011 - 21:19

வங்கி பற்றிய விபரமும் ,அதை கையாளும் நிலைகளும் ,அழகாய் சொன்ன விதம் கண்டேன் வியந்தேன் தோழரே .கதைக்கு கரு மட்டுமல்ல ,அதை சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளையும் .கணக்கில் கொண்டு கருத்தோடு கையாளும் திறமைக்கு ஒரு சபாஷ் .பாராட்டுக்கள் தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by lafeer Tue 13 Sep 2011 - 5:31

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 517195 கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 517195 கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 741156
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by இன்பத் அஹ்மத் Tue 13 Sep 2011 - 10:57

சுவாரசியமான தொடராக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 517195
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by கலைவேந்தன் Fri 16 Sep 2011 - 16:30

மிக்க நன்றி நண்பர்களே..
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 13

Post by கலைவேந்தன் Fri 16 Sep 2011 - 16:32

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 13


பார்வதி அம்மாளின் நடுக்கமான பயந்த கேள்வி விக்னேஷின் மனதை உலுக்கிவிட்டது.

தெரிந்து கொண்ட செய்திகளை விட தெரியாத பல சம்பவங்கள் நீலமேகம் குடும்பத்தை மிகவும் உலுக்கியுள்ளது என்பதை உணர்ந்த விக்னேஷ், ‘’ இல்லை அம்மா.. நான் நீலமேகம் ஐயாவால் பயனடைந்த ஒருவரது மகன். அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வந்துஇருக்கிறேன். ‘’ என்றான்.

’’ உள்ளே வாங்க தம்பி..’’ - அன்புடன் அழைத்த பார்வதி அம்மாள் அவனை அமரவைத்து குடிக்க சூடான காபி கொண்டு வந்து தந்தார்.

‘’ சொல்லுங்க தம்பி.. உங்களுக்கு என்ன தெரியனும்..? ‘’ - பார்வதியம்மாளும் இன்னொரு சேரில் உட்கார்ந்து கொண்டு நிதானமாகக்கேட்டார். விக்னேஷின் குற்றமற்ற முகம் அவருக்குள் நம்பிக்கை வளர்த்திருந்தது.

‘’ நீங்க நீலமேகம் ஐயா பத்தி விவரமா சொல்லுங்கம்மா...’’ - கனிவுடன் விசாரித்தான்.

‘’ அவர் ஒரு பத்து வருடம் சிங்கப்பூர்ல இருந்து நிறைய சம்பாதித்து கும்பகோணத்தில் செட்டில் ஆகனும்னு தான் திரும்பி வந்தார் தம்பி.ஆனா இங்கே வந்ததும் அவரைத் தேடி நிறைய பேரு வர ஆரம்பிச்சாங்க.. பெரிய பெரிய கார்ல அரசியல்வாதிங்க அண்டர்வேர்ல்ட் டானுங்க மும்பையில இருந்தும் தேடி வர ஆரம்பிச்சாங்க. நான் ஓரளவு தெரிஞ்சுகிட்டது என்னன்னா அவர்களுக்கும் வெளி நாட்டு வங்கிக்கும் இவர் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தார் என்பது தான்.’’ - கொஞ்சம் நிறுத்தினார் பார்வதி அம்மாள்.

‘’ மும்பையில இருந்து என்றால் தமிழர்களா இல்லை வட நாட்டாரா..? ‘’ - விக்ரம் கிடைத்த இடைவெளியில் கேட்டான்.

‘’ எல்லாம் கலந்து இருந்தாங்க தம்பி.. இங்கே வசதிப்பட்டு வரலைன்னு சென்னைக்கு இவரே அடிக்கடி போயிடுவார். அங்க நட்சத்திர ஹோட்டலில் அவருக்கு தங்குறதுக்கு வசதி எல்லாம் செய்து கொடுத்தாங்க.. என்ன வேலையோ தெரியலை தம்பி ... ஆனா அவர் கையில் காசு நிறைய புழங்கிச்சு.. லட்சக்கணக்கில் சில சமயம் கோடிக்கணக்கில் கூட புரண்டுச்சு. அப்போதான் கும்பகோணத்திலயும் திருச்சியிலும் வீடுகள் ஃபார்ம் ஹவுஸ் எல்லாம் வாங்கிப்போட்டார்.’’ - அவரது குரலில் ஏக்கப்பெருமூச்சு காணப்பட்டதை அறிந்து விக்னேஷ் குறுக்கிட்டான், ‘’ ஏன்ம்மா... இப்ப அந்த சொத்துகள் எல்லாம் இல்லையா...? ‘’

‘’ இல்லைப்பா... எல்லாம் இந்த திருமுக அரசாங்கத்துல கேஸ் போட்டு எல்லாம் பறிமுதல் செய்துட்டாங்க.. அப்ப இடிஞ்சு போனவர் தான்.. அப்புறம் எழவே இல்லை.. எழவு தான் இருந்திச்சு..! ‘’ - அவரது குரலில் அளப்பரிய சோகம் இருந்தது.

ஆக இந்த அரசின் திட்டமிட்ட பறிமுதல் அதான் அவை என்பதும், அதற்கு முக்கிய காரணம் ஆற்காடு ஆறுமுகம் போன்றோர் என்பதையும் புரிந்து கொண்டான் விக்னேஷ்.

‘’ இந்த வீடு அப்பறம் என் அக்கவுண்ட்ல அவர் போட்டுவைச்சு இருந்த 25 லட்ச ரூபாய் மட்டும்தான் மிஞ்சிச்சு தம்பி.. அதுல வரும் வட்டியில தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். எனக்கு குழந்தைகளும் இல்லை. என் காலம் வரை வாழ்ந்துட்டு என் வழிபார்த்து போயிடுவேன். ஆனா எங்களை இந்த கதிக்கு ஆளாக்கி என் கணவர் சாவுக்கு காரணமா இருந்தவங்களை கடவுள் தான் தண்டிக்கனும் தம்பி..’’ - முடித்த பார்வதி அம்மாள் தனது கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.

‘’ அம்மா , அவர் உபயோகித்த கணிணி மற்றும் அவரது டைரி எதாவது இருக்கா ? ‘’ என்று கேட்டான் விக்னேஷ்.

’’ அவர் போனபின் அவர் அறை எதையும் கலைக்காம அவரது நினைவா வைச்சு இருக்கேன் தம்பி..கொஞ்சமெல்லாம் போலீஸ் அள்ளிக்கிட்டு போச்சு.. மிச்சம் இருப்பதை பூட்டி வைச்சு இருக்கேன் தம்பி ‘’ - என்றவள் எழுந்து அந்த அறையைத் திறந்து விட்டாள்.

அறை மிகவும் சுத்தமாக இருந்தது. ஒரு உயர் தர லேப்டாப்பும் நூற்றைம்பது சிடிக்கள் அடங்கிய சிலிண்டர் வடிவ சிடி கேஸும் சில பல காகிதங்கள் மட்டுமே அவரது மேஜை மேல் இருந்தது.

‘’ என்னமோ தெரியாது தம்பி .. இந்த லேப்டாப்பையும் சிடிக்களையும் மட்டும் போலீஸ் சோதனைககு கண்ல தென்படாம மறைச்சு வைக்கச்சொல்லி என்னிடம் தந்தார். சுவாமிலையில் என் தங்கை வீட்டில் கொஞ்சநாள் மறைச்சு வைச்சு இருந்தேன். அவர் இறக்கும் முன் அந்த லேப்டாப்பில் தான் என்ன என்னமோ டைப் செய்துகிட்டு இருந்தார். அப்படியே இடிஞ்சு போய் சாய்ந்தவர் தான்... மிஞ்சலை தம்பி. ‘’ - அவரது கண்களில் இமாலய சோகம் இருந்தது.

’’அது என்னமோ தம்பி உங்களைப்பாத்தாஎனக்கு ஒரு பிள்ளை இருந்து இருந்தா எப்படி இருப்பானோ அப்படி தோணுது. உன் கிட்ட எல்லாம் சொல்லி அழனும் போல இருந்திச்சு..’’ - கண்களைத் துடைத்துக் கொண்டார்.

‘’ கண்டிப்பா ... இனி என் வாழ்நாள் முழுக்க உங்க பிள்ளையாவே என்னை நினைச்சுக்கோங்க அம்மா.. எனக்கும் தாயில்லை. உங்கள் மேல் எனக்கும் தாய்ப்பாசம் ஏற்பட்டுடுச்சு.. ‘’ - விக்னேஷின் வார்த்தைகளில் சத்தியம் நிறைந்திருந்தது.

‘’ அம்மா .. நான் இந்த லேப்டாப்பையும் சிடிக்களையும் கொஞ்ச நாள் என்னுடன் வைச்சு இருக்கப்போறேன். ஒரு மாதத்தில் நான் மீண்டும் வந்து எல்லாம் திருப்பித்தரேன். அனுமதிப்பீங்களா..? கண்டிப்பா என் செயல்களால் நீலமேகம் ஐயாவின் ஆதமா சாந்தி அடையும். என்னை நீங்க நம்பித் தரலாம் ..’’ என்று அன்புடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ எடுத்துக்கோங்க தம்பி.. நான் உங்களை நம்பறேன். என் பிள்ளை எனக்கு துரோகம் செய்யமாட்டான் என்னும் நம்பிக்கை இருக்கு..’’ - என்றவள் அவனை லேப்டாப்பை கவனிக்கச்சொல்லிவிட்டு அவசரமாக தோசையும் சட்டினியும் மணக்க மணக்க தயாரிக்கச் சென்று விட்டார் பார்வதி அம்மாள்.

லேப்டாப்பைத் திறந்த விக்னேஷ் அதில் பொதிந்திருந்த சாரங்களை - நீல மேகத்தின் குறிப்புகளை - சுரங்கத்தை - புதையல்களை - இந்தியாவின் தலைவிதியை - ஒவ்வொன்றாய்ப் பார்த்து வியந்தான்.


துடிப்புகள் தொடரும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by இப்ஹாம் Fri 16 Sep 2011 - 17:15

இன்னும் இன்னும் இவை போன்ற கவர்ச்சியான கதைகளை பதிவிடுங்கள் அருமையாக உள்ளது
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 17:24

ரொம்பவும் விரு விருப்பாக செல்கிறது உங்களின் கதை தொடர் ஆர்வமாக படிக்கிறோம் நாங்கள் தொடரட்டும் உங்களின் எழுத்து நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14 - Page 2 Empty Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum