Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14
+9
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
arull
நண்பன்
ஹம்னா
Inudeen
kalainilaa
முனாஸ் சுலைமான்
கலைவேந்தன்
13 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14
First topic message reminder :
நண்பர்களே..
நான் எழுதப்போகும் முதல் திரில்லர் தொடர்கதை கொல்லத்துடிக்குது மனசு.!
கதையை வாசித்து நிறை குறைகளை தயங்காமல் எழுதினால் மேலும் என்னை சரி செய்து கொள்வேன்.
தொடங்கலாமா..?
நண்பர்களே..
நான் எழுதப்போகும் முதல் திரில்லர் தொடர்கதை கொல்லத்துடிக்குது மனசு.!
கதையை வாசித்து நிறை குறைகளை தயங்காமல் எழுதினால் மேலும் என்னை சரி செய்து கொள்வேன்.
தொடங்கலாமா..?
Last edited by கலைவேந்தன் on Sun 18 Sep 2011 - 13:33; edited 14 times in total
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14
மிக்க நன்றி இஃப்ஹாம்..
நன்றி சம்ஸ் தம்பி..!
நன்றி சம்ஸ் தம்பி..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14
கொல்லத் துடிக்குது மனசு – பகுதி -14
குறைந்த நேரத்தில் பார்வதி அம்மாளுக்கு விக்னேஷை மிகவும் பிடித்ததற்கான காரணம் விக்னேஷுக்குத் தெரியவில்லை.
மனிதமனத்துக்கு ஒரு விசித்திரமான குணமுண்டு. யாரையாவது முதல் முறை பார்த்த பின் சட்டென்று மனதுக்கு மிகவும் பிடித்துவிடும். அதற்குக் காரணம் என்ன என்பதைஉணர முடியாது. அதே சமயம் ஒரு சிலரை முதல் பார்வையிலேயே சுத்தமாகப் பிடிக்காமல் போய்விடுவதும் உண்டு.
பார்வதி அம்மாளுக்கும் அதே மனநிலைதான் எனினும் அவளின் ஆழ்மனதில் பதிந்து விட்ட இளம்வயது நண்பன் ( இவள் மட்டும் மனதுக்குள் காதலித்திருந்தாள். ) ஒருவனுடைய முகச்சாடையில் விக்னேஷ் இருந்ததால் தானோ என்னவோ அவனிடம் மிகவும் அன்புடன் பேசிப் பரிவுடன் உபசரித்தாள்.
பரபரப்பாய் அவனுக்காக தோசையும் தேங்காய்ச்சட்டினியும் மணம் மிக்க தோசைப்பொடியும் வைத்து அன்புடன் பரிமாறினாள். நீலமேகத்தைப் பற்றி மேலும் பேசிக்கொண்டே விக்னேஷும் தமது சொந்த இல்லத்தில் பழகுவது போலப் பேசிப்பழகினான்.
சிற்றுண்டியை முடித்ததும் ’’ சரிம்மா நான் கிளம்புகிறேன். இனி அடிக்கடி கும்பகோணம் வருவேன். உங்களுக்கு யாரும் இல்லை என்று மனதில் எந்த கவலையும் வேண்டாம். நான் இருக்கேன்.’’ என்று கூறிப்புறப்படும் சமயம், ‘’ தம்பி உங்கள் போன் நம்பரும் முகவரியும் குறிச்சுக் கொடுங்க ‘’ என்ற பார்வதி அம்மாள் ஒரு காகிதத்துண்டைஎடுத்து விக்னேஷிடம் நீட்டினாள்.
'என்னிடம் விசிட்டிங் கார்ட் இருக்கும்மா '' -என்றவன் தனது பர்சில் இருந்து கார்டை எடுத்துக் கொடுத்தவன் பார்வதி அம்மாள் நீட்டிய காகிதம் வித்தியாசமாய் இருக்கவே கையில் வாங்கிப் பார்த்தான்.
அது ஒரு கொரியர் கம்பெனியின் மெமோ ரசீது.
ஃப்ளாஷ் ஃபாஸ்ட் கொரியர் நிறுவனத்தில் இருந்து வீட்டுக்கு வருகை தந்து இல்லம் தாழிட்டு இருந்ததற்கான நினைவுறுத்தும் காகிதம்.
’’ ஏன்மா..? நாலைந்து மாதம்முன் எதுவும் கொரியர் வந்ததா..? ‘’ – விக்னேஷ் கேட்டான்.
‘’ தெரியாதுப்பா.. நான் மனம் சரியில்லாம அவங்க போயிட்ட வேதனையில என் தங்கை வீட்டுக்கு திருச்சிக்குப்போயிருந்தேன். அங்க ஒரு மாதம் இருந்துட்டு வந்தப்ப. வீட்டுக்குள் இந்த காகிதம் கிடந்தது. கதவு இடுக்கு வழியா போட்டு இருந்தாங்க.’’ – சோகமுடன் பார்வதி அம்மாள் கூறினாள்.
’’ இது கொரியர் டெலிவரிக்கு வந்து வீடு பூட்டி இருந்ததாக ரிமைண்ட் செய்யும் நோட்டீஸ் அம்மா. நீங்க வந்தபின் அந்த கொரியர் பத்தி விசாரிக்கலையா..? ‘’ – எதையோ யோசித்தவாறு விக்னேஷ் கேட்ட கேள்வி பார்வதி அம்மாளுக்கு மீண்டும் தன் கணவன் நினைவைக் கொண்டு வந்து கண்ணீர் திரண்டது.
‘’ ஹூம் .. அவரே போயிட்ட பின் எது பத்தியும் கவலைப்பட என்ன இருக்குப்பா..? ‘’ – என்றவள் அவன் காபி குடித்துவைத்த கப் சாசரைக் கொண்டு சமையலறைக்குப் போனாள்.
அந்த கொரியர் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டு இருந்ததைக் கண்டறிந்த விக்னேஷ் அந்த மெமோ காகிதத்தைப் பத்திரப்படுத்திக் கொண்டான்.
‘’ சரிம்மா நான் புறப்படறேன் ’’ என்று பார்வதி அம்மாளை வணங்கிப் புறப்பட்டவனை பார்வதி அம்மாள் ’’ ஏன்ப்பா லேப்டாப் கொண்டு போவதாக சொன்னாயே ‘’ என்று நினைவு படுத்தினாள்.
‘’ இல்லைம்மா.. தேவையான தகவல்களை நான் சேகரித்துக்கொண்டு விட்டேன். ‘’ என்றவன் தன்னிடமிருந்த பாக்கெட் ஹார்ட் டிஸ்கைக் காட்டினான்.
’’ சரிப்பா அடிக்கடி வந்துபோங்க தம்பி ‘’ என்று விடைகொடுத்தாள் பார்வதி அம்மாள்.
தனது அறைக்கு வந்தவன் தனது லேப்டாப்பில் அனைத்துத் தகவல்களையும் பத்திரப்படுத்திக் கொண்டு வசந்தியைத் தொடர்பு கொண்டு தான் அடுத்த நாள் காலை சென்னை வருவதைக் கூறிவிட்டு அவளிடம்சில விவரங்களைக் கேட்டு அறிந்துகொண்டான்.
தான் மிகவும் எதிர்பாராத பல வியப்பான தகவல்கள் கிடைத்த திருப்தியில் நிம்மதியாக உறங்கிய விக்னேஷ் அதிகாலையில் ஹோட்டலைச் செக் அவுட் செய்து திருச்சிக்குச் சென்று அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு காலை எட்டு மணி அளவில் சென்னை வந்தடைந்தான்.
தனது அறைக்குச் சென்று குளித்து ஃப்ரெஷ் ஆகி தனது அலுவலகத்திற்கு வந்தவன் என்றும் இல்லாத பேரழகுடன் புதிய உடையில் நாணமும் புன்முறுவலும் அழகு சேர்க்க வசந்தி இவனை வரவேற்றாள்.
’’என்ன இன்னைக்கு எதுவும் விசேஷமா வசந்தி..? ’’ - அவள் அழகைக் கவனித்தும் கவனியாத பாவனையுடன் கேட்டான் விக்னேஷ்.
‘’ இன்னைக்குஎன் பிறந்த நாள்னு தெரியாதா விக்னேஷ் ..? ‘’ - ஏமாற்றம் வசந்தியின் குரலில் தெரிந்தது.
‘’ ஓ ஐயாம் சாரி வசந்தி...மெனிமோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே .. ‘’ - என்றவன் அவள கன்னத்தைத் தட்டி கண்ணடித்துப் புன்னகைத்தான்.
‘’ அவ்வளவு தானா ...? பரிசெதுவும் இல்லையா ...? ‘’ - வசந்தியின் குரல் சன்னமாக ஒலித்தது.
தான் விரும்பும் ஒருவன் தன் பிறந்த நாளை மறந்து விடும் சோகமும் அறிந்த பின்னும் ஒரு சின்ன மலராவது பரிசாக அளிக்க மறந்தால் பெண்ணின் மனம் எத்தனை வேதனைப்படும் என்பதை நாமும் ஒரு பெண்ணாகப் பிறந்தால் தான் உணரமுடியும்..
ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்டாள் வசந்தி.
‘’ அட என் செல்லம் வசந்தி... நான் நினைச்சால் உனககு நாற்பதினாயிரம் கோடி ரூபாய் உனக்கு பிறந்த நாள் பரிசாகத்தரமுடியும் .. தெரியுமா ..? - என்ற விக்னேஷ் அவளைப்பார்த்து மீண்டும் கண் சிமிட்டினான்.
வியப்பால் அதிர்ந்தாள் வசந்தி.
துடிப்புகள் ..தொடரும்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 14
எப்படி அடைகிறான் அந்தனை பணம் என்று கேள்வியோடு காத்திருக்கச் செய்கின்ற தொடர் அருமையான ஆழுமை கததையில் கருவின் விருத்தி கொண்டு செல்லும் விதம் ரசனை மிக்கதாக இருக்கிறது தொடருங்கள் அண்ணா மறு பகுதிக்காக காத்திருக்கிறேன்
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» மந்திரி பகுதி 2
» இந்தியத் தலைவர்களைக் கொல்லத் திட்டமா... புலிகளின் கண்டனமும், மறுப்பும்!
» அழகுக்காட்சி பகுதி 02
» விபத்துப் பகுதி
» சிறந்த புகைப்படக்காட்சி பகுதி 02
» இந்தியத் தலைவர்களைக் கொல்லத் திட்டமா... புலிகளின் கண்டனமும், மறுப்பும்!
» அழகுக்காட்சி பகுதி 02
» விபத்துப் பகுதி
» சிறந்த புகைப்படக்காட்சி பகுதி 02
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|