சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50  Khan11

Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50

3 posters

Go down

Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50  Empty Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50

Post by நண்பன் Thu 8 Sep 2011 - 17:26

Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50  Potta-potti-50-50-666


'சென்னை-28', 'வெண்ணிலா கபடி குழு' வரிசையில் கிரிக்கெட் விளையாட்டை கருவாக கொண்டு உருவாகியுள்ள படம்.

தேனியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ஏகப்பட்ட சொத்துக்களுக்கு வாரிசாக
இருக்கிறார் கதாநாயகி ஹரிணி. அவருக்கு கொடைவாணன், கொலைவாணன் என்று இரண்டு
முறைமாமன்கள். இரண்டு முறை மாமன்கள் என்பதால் யாருக்கு பெண் என்று போட்டி
நடக்கிறது. எந்த விஷயம் என்றாலும் முட்டிகொள்ளும் இவர்கள், கல்யாண
விஷயத்திலும் முட்டிக்கொள்கிறார்கள். வழக்கம் போல் ஊர் பெரியவர்கள் ஏதாவது
போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பெண்ணை திருமணம் செய்து
வைக்கலாம் என்று யோசனை சொல்கிறார்கள். அப்போது சிறுவன் ஒருவன் "எத்தனை
நாளைக்குத்தான் ரேக்ளா ரேஸையும், மாடு பிடிப்பதையும் வைப்பிங்க. கிரிக்கெட்
போட்டி வைத்து அதுல வெற்றி பெறுபவனுக்கு பெண்ணை கொடுங்கப்பா" என்று சொல்ல,
அதற்கு ஹரிணியும் சம்மதம் தெரிவிக்கிறார்.

கிரிக்கெட்டுக்கும், ஃபுட் பாலுக்கும் வித்தியாசம் தெரியாத இவர்களில்
ஒரு குழுவினர் நிஜ கிரிக்கெட் வீரரான சடகோபன் ரமேஷை கிராமத்திற்கு கடத்திக்
கொண்டு வந்து தங்களுக்கு கிரிக்கெட் கற்றுத் தரச் சொல்கின்றனர். இவர்கள்
எப்படி கிரிக்கெட் கற்றுகொண்டு வெற்றிபெறுகிறார்கள், ஹரிணி யாரை திருமணம்
செய்து கொண்டார் என்பதை கிரிக்கெட்டுடன், முழுநீள நகைச்சுவையை கலந்து
கொடுத்திருப்பதுதான் இப்படத்தின் கதை.

நிஜத்தில் இதுவெல்லாம் நடக்கிற கதையா என்ற ஆராய்ச்சிக்கு செல்வதற்கு
எல்லாம் இயக்குநர் ரசிகனுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. திரைக்கதையில்
அப்படியொரு விறுவிறுப்பு. இதற்காக இயக்குநர் யுவ்ராஜை பாராட்டியாக
வேண்டும்.

கிரிக்கெட் கோச்சராக வருகிறார் சடகோபன் ரமேஷ். கிரிக்கெட் ஆட மட்டுமில்ல
நடிக்கவும் வரும் என்பதை நிரூபித்திருக்கிறார். இவரைப் போன்று இன்னொரு
கோச்சராக வரும் மயில்சாமி காமெடி சாமியாராகியிருக்கிறார். லிப்ட் கேட்டு
சடகோபன் ரமேஷுடன் காரில் வரும் மயில்சாமி இந்திய கிரிக்கெட் வீரர்களை
எல்லாம் மாமன் மச்சான் என்று உறவுமுறை சொல்லிக் கொண்டு சிரிப்பைக்
கிளப்புகிறார். இவர் கிராமத்து ஆளுங்களுக்கு கிரிக்கெட் சொல்லித்தரும்
இடங்கள் முக்கியமாக BALL பற்றி பாடம் எடுப்பது செம காமெடி.

கொடைவாணனாக வருகிறவரும் அவர் நண்பராக வரும் அவதாரமும் புதுமுகமாம்.
புதுமுகம்னு வெளிய சொல்லிராதீங்கப்பு... இருவருமே தமிழ்சினிமாவுக்கு புதிய
அவதாரங்கள்தான். இவங்க இரண்டு பேரு நடிப்பையும் பார்த்தா 40 படம் நடிச்ச
மாதிரியில்ல இருக்கு... பின்னி பெடல் எடுத்திருக்காங்க. ஒரு அப்பாவி
வெள்ளந்தி கேரக்டரை இதைவிட மேலாக யாராலும் பண்ணமுடியுமாங்கிறது
சந்தேகம்தான். அண்ணே உங்க மாமா பொண்ணை கடத்திட்டு போயி
முடிச்சுருங்கண்ணே... என்கிற அல்லக்கையிடம், அடப்பாவி கொலை பண்ண சொல்றியா
என்று புரிஞ்சுக்கிற அளவுக்கு நல்லவராக இருக்கிறார் கொடைவாணன். அந்த பொண்ணை
கட்டிப் புடிச்சுருங்கண்ணே என்றால், ம்ஹூம் எனக்கு பயத்துல கக்கூஸ்
வந்திரும் என்றெல்லாம் பம்முகிறார். அசாத்திய பாடி லாங்குவேஜ் சகிதம் இவர்
படுத்தி எடுக்கையில் தியேட்டரே கதி கலங்கிப் போகிறது.

கொடைவாணனுடன் வருகிற அவதாரம் இருக்கிறாரே... அப்பப்பா... இந்த அவதாரத்தை
எங்கதான் கண்டுபிடிச்சாங்களோ... நிமிடத்திற்கு நிமிடம் சிரிக்க வெச்சு
பஞ்சர் ஆக்குகிறார். என்ன ஒரு டயலாக் பிரசன்டேஷன்.

கொலைவாணனாக நடித்திருப்பவர் நல்லாவே நடித்திருந்தாலும், அவரது நடிப்பு கொஞ்சம் அப்பப்போ இது நடிப்புங்கிற மாதிரி உறுத்துது.

கொலைவாணனும் கொடைவாணனும் யாருக்காக மல்லுக்கட்டுகிறார்களோ அந்த தேவதை
வேடத்தில் புதுமுகம் ஹரிணி. ஹரிணி கிடைப்பாங்கன்னா அவங்க ரெண்டு பேரு
மட்டுமில்ல யாரு வேணும்னாலும் மல்லுக்கட்டுவாங்க பாஸ். குழந்தைத்தனமான
முகம், கண்களாலே பேசிவிடும் ஹரிணி நம்மை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுகிறார்.

ஒரு பாடலுக்கு வெள்ளைக்காரிகள் சகிதம் ஆட்டம் போட்டிருக்கிறார் டைரக்டர் யுவ்ராஜ்.

படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியாகட்டும், ஒவ்வொரு
கதாபாத்திரமாகட்டும் ரசிகர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை மனதில்
கொண்டு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் யுவ்ராஜ், அதனுடன் மலைகளும்,
மரங்களும் எவ்வளவு முக்கியம் என்ற ஒரு மெசஜ்சையும் நமக்கு
சொல்லியிருக்கிறார். அதுவும் சடகோபன் ரமேஷ் ஒரு காட்சியில், "மலைகளும்,
மரங்களும் இல்லையென்றால் மழை இருக்காது. மழை இல்லையென்றால் விவசாயம்
இருக்காது. இப்படியே போனா, ஏர் கலப்பையை எக்ஸிபிஷன்லையும், பள்ளி, தவளை
போன்றவற்றை அறிவியல் புத்தகத்துலயும்தான் பாக்கணும்" என்று பேசும் வசனம்
சிந்திக்க வைக்கும் வசனமாக இருக்கிறது.

ரன்னுக்காக ஓடும் காட்சிகளில் மூச்சிரைக்கும் சத்தத்தை மட்டும் விட்டு
பின்னணி இசையை ஒலிக்கவிடாமல்.... இது போலவே சில இடங்களில் பின்னணி இசைக்கு
வேலை இல்லாமல் அந்த இடத்தையும் நன்றாகவே ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்
இசையமைப்பாளர் அருள்தேவ். பாடல்கள் கேட்கலாம் ரகம். கோபி அமர்நாத்தின்
ஒளிப்பதிவு, ஓப்பனிங் காட்சியிலேயே சபாஷ் போட வைத்து இறுதிக் காட்சிவரை
மனதில் ஓவியமாக பதிகிறது.

இப்படி ஒரு படத்தை யுவ்ராஜுடன் இணைந்து தயாரித்த முரளிராமனுக்கு தனியே
நன்றி சொல்ல வேண்டும். எளிய கதைக்கருதான் என்றாலும், அதை காமெடி கலந்த
காட்சிகளாக்கி, கிராமத்தி பின்னணியோடு கிரிக்கெட்டும் கலந்து
கொடுத்திருக்கிறார் யுவ்ராஜ். நீண்ட நாளைக்குப் பிறகு முழுநீள காமெடிப்
படம் பார்த்த திருப்தியை நமக்கு போட்டி போட்டுக் கொண்டு தந்திருக்கிறது
இந்த 'போட்டா போட்டி'

போட்டா போட்டி - சென்ச்சூரி!






நடிகர்கள்
சடகோபன் ரமேஷ், ஹரிணி, மயில்சாமி, சிவம், கணேஷ், உமர்
இசை
அருள் தேவ்
இயக்கம்
யுவ்ராஜ்
தயாரிப்பு
வி. முரளி ராமன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50  Empty Re: Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50

Post by Atchaya Thu 8 Sep 2011 - 17:27

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50  Empty Re: Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50

Post by பர்ஹாத் பாறூக் Thu 8 Sep 2011 - 18:38

சடகோபன் ரமேஷ் நடிப்பு சூப்பர்
படத்தோடு சேர்ந்தே காமெடி கலக்கல்..
கொடைவாணனாக வருகிறவரும் அவர் நண்பராக வருபவரும் புதுமுகம் என்று இந்த விமர்சனம் பார்த்த பின்பே தெரியுது அவங்க நடிப்பு ரொம்ப நாள் நடிச்சு அனுபவப்பட்டதா தெரியுது..

கிரேசி மோகனின் காமெடி வசனங்கள் போன்று இந்தப்படத்திலும் இருப்பது பிளஸ்..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50  Empty Re: Potta Potti 50 50- போட்டா போட்டி 50 50

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum