Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 10:19 am
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 12:23 am
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 12:10 am
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 12:08 am
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 12:04 am
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 8:02 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 7:50 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 2:27 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 2:19 pm
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 11:23 am
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 10:32 am
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
சூரிய ஒளி அரிய மருந்தாக அமைகின்றது
Page 1 of 1
சூரிய ஒளி அரிய மருந்தாக அமைகின்றது
மனித வாழ்க்கையுடன் இயற்கை எவ்வாறு பின்னி பிணைந்துள்ளது என்பது வியப்பை ஏற்படுத்துகின்றது.
அந்த வகையில் இயற்கையின் அற்புதமான கொடை நோய் நிவாரணியாகவும் திகழ்கின்றது.
சிறுவயதில் ஏற்படும் ஆஸ்துமா(மூச்சுத்தடை) நோய்க்கு சூரிய ஒளி அரிய மருந்தாக அமைகின்றதென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உயிர்ச்சத்து டி பொதுவாக சூரிய ஒளியிலிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றது.
வெலன்சியன் ஆய்வாளர்களினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சூரிய ஒளிக்கும் ஆஸ்துமா நோய்க்கும் இடையிலான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் சூரிய ஒளி உடலில் பட்டால் புற்று நோயைக் கூட ஏற்படுத்தக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது.
எனினும் முற்று முழுதாக சூரிய ஒளியை நிராகரிப்பதும் ஆபத்துக்களை ஏற்படுத்தும். சூரிய ஒளியினால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆராய்ந்து சமநிலையாக பேணுவதே புத்திசாதூரியமானது என ஆஸ்துமா நோய் தொடர்பான முன்னணி ஆய்வாளர் அல்பர்ட்டோ அர்னிடொ பென்னா தெரிவித்துள்ளார்.
மனித உடலுக்கு தேவையான 90 வீதமான உயிர்ச்சத்து டி சூரிய ஒளியின் மூலம் உடலுக்கு கிடைக்கப்பெறுகின்றது. ஆஸ்துமா நோயாளிகளின் உடலில் உயிர்ச்சத்து டி குறைந்தளவிலேயே காணப்படும். வடக்கு ஸ்பெய்ன் போன்ற குளிரான பிரதேசங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் ஆஸ்துமா நோயினால் அதிகம் அவதியுறுகின்றனர்.
ஸ்பெய்னின் முக்கியமான ஒன்பது நகரங்களில் 45,000 சிறுவர் மற்றும் இளைஞர்களிடம் ஆஸ்துமா தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தொடர்பான தரவுகள் சர்வசே பயோமெட்ரியல் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணியாக காலநிலை மாற்றத்தை குறிப்பிடுகின்றனர். போதியளவு உயிர்ச்சத்து டி கிடைப்பதற்கு சூரிய ஒளி மிகவும் அவசியமானது. ஆஸ்துமா, கசம் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த உயிர்ச்சத்து டி மிகவும் இன்றியமையாதது என ஆய்வாளர் அர்னிடொ பென்னா தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் 20 முதல் 30 நிமிடங்கள் சூரிய ஒளியை பெற்றுக் கொள்வது போதியளவு உயிர்ச்சத்து டி யைப் பெற்றுக்கொள்ள வழிகோலும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குளிர்காலங்களில் சில நாடுகளில் போதியளவு சூரிய வெளிச்சம் கிடைக்காது. எனவே இவ்வாறானவர்கள் செயற்கை உயிர்ச்சத்து டி பெற்றுக்கொள்ள வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Re: சூரிய ஒளி அரிய மருந்தாக அமைகின்றது
ஆஸ்துமா என்றால் என்ன ?
ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களின் சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் கண்ட சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ உதாரணமாக புகை, தூசி போன்றவை செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.
இப்படி சுவாசக்குழாய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. சுவாசக் குழாய்கள் சுருங்குவதால், அதன் வழியாக காற்றுச் சென்றுவரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது.
இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை, இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகமாகக் காணப்படும்.
ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய்கண்டவர்கள் பலர் இந்த நோயினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். எனினும், ஒருசில நேரங்களில் நோயின் தாக்கம் இருக்கும். அப்போது உரிய மருத்துவம் செய்து கொண்டு மற்றவர்களை போல சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக்குழாய்களில் மிக அதிகமான அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை. (உம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்). இது போன்ற சந்தர்ப்பத்தில், அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது.
எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து, முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். எதனால் ஆஸ்துமா வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பதனையும், அறிந்து கொள்ள வேண்டும். மருத்துவரும் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, உட்கொள்ள வேண்டிய மருந்துகளை பரிந்துரைப்பார்.
Re: சூரிய ஒளி அரிய மருந்தாக அமைகின்றது
நோயின் காரணங்கள்
நாம் சுவாசிக்கும் காற்று உட்பட சுற்றுச்சூழலில் காணப்படுகிறது சில பொருட்கள், ஆஸ்துமா வியாதிக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புக்குளை கொண்டு வருகிறது. ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வா பொருட்கள், எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தொற்று போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும் ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.
பொது வகையான அலர்ஜின்ஸ் (ஒவ்வா பொருட்கள்)
1. மிருகங்களின் (உடலின் மேல்) உள்ள பொடுகு (தோலில், முடியில் மற்றும் இறகுகளிலிருந்து வருபவை)
2. தூசி மற்றும் தூசியில் உள்ள சிறு பூச்சி (வீடுகளில் இருக்கும் தூசியில் காணப்படுபவை)
3. கரப்பான்பூச்சி
4. மரங்கள் மற்றும் புல்களிலிந்து வரும் மகரந்தத்தூள்
5. மேல் பூசு பொருட்கள் - பெயின்ட், டிச்டம்பர் போன்றவை
6. சிகரட் புகை
7. காற்றில் காணப்படும் மாசுப்பொருட்கள்
8. குளிர்ந்த காற்று அல்லது தட்பவெப்பநிலை மாற்றம்
9. வண்ணப்பூச்சுப் பொருள் மற்றும் சமைக்கும் பொழுது வரும் வாசனை
10. நருமண மூட்டப்பட்ட பொருட்கள்
11. கடுமையான மன உணர்வுகளை வெளிப்படுத்துதல் ( அழுதல் அல்லது சிரித்தல்)
12. ஆஸ்பரின் மற்றம் பீட்டா பிளாக்கர்ஸ் எனப்படும் மருந்துகள்
13. உணவில் சல்பைட்ஸ் போன்ற பொருட்கள் (உலர்ந்த பழவகைகளில் அல்லது மதுபான வகைகள் ( திராட்சை மது)
14. வயிறு மற்றும் உணவுக்குழாய் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஆஸ்த்துமாவின் அறிகுறிகளை, பாதிப்புகளை அதிகப்படுத்தி, மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும்.
15. இராசாயனப் பொருட்கள் மற்றும் தூசிப் பொருட்கள்.
16. நோய்தொற்றுதல்
17. குடும்ப பின்னணி
18. குழந்தைகள் புகையிலையில் இருந்து வரும் புகையை சுவாசிக்க நேரிடும் போது, ஆஸ்துமா வருகிறது.
19. ஒரு கர்ப்பிணிப் பெண், புகையிலையிலிருந்து வரும் புகையினை சுவாசிக்க நேரிடும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு எளிதில் ஆஸ்துமா வருகிறது.
19. உடற்பருமனாகுதல், பிற சுகாதாரக் கேடுகள் ஆஸ்துமா மற்றும் வியாதியோடு தொடர்புடையவைகளாக இருக்கலாம்.
நோயின் அடையாள அறிகுறிகள்
மூச்சுத்தினறல் - திடீரென சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற பாதிப்புக்குள்ளாகுதல், இது அடிக்கடி ஏற்படுதல்
இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பாதிப்பு மோசமாகுதல்
குளிர்ச்சியான பகுதிக்கு செல்லும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது நிலைமை மோசமாகுதல் மற்றும் நெஞ்செரிச்சல் காணப்படும். பின்னர் தானாகவே மறைந்துவிடும்
மருந்து உட்கொள்ளும் போது மூடிய சுவாசக்குழாய்கள் திறந்து சுகமாகுதல்
இருமல் அல்லது சளியுடன் கூடிய இருமல்
சாதாரணமாக வேலைகள் செய்யும்போது மூச்சு இறைப்பினால் உடல்நிலை மோசமாகுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
பரிசோதனைகள்
எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (பி.எப்.டி.) போன்ற பரிசோதனைகள் மூலம் ஆஸ்துமாவைக் கண்டறியலாம்.
காய்ச்சலை அளப்பதற்கு தர்மாமீட்டர் உள்ளது போல், ஆஸ்துமாவிற்கும் பீக்ப்ளே மீட்டர் என்னும் ஒரு கருவி உள்ளது. இதனைப் பயன்படுத்தி ஒரு நுரையீரல் எவ்வளவு சீராக காற்றை வெளியே விடுகிறது என்பதை அளவெடுக்கலாம்.
சிகிச்சை முறை
சரியான சிகிச்சை முறையினால், ஆஸ்துமாவை சுலபமாக குணப்படுத்த முடியும். குணப்படுத்த முடியும் என்பது சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு, இன்ஹேலர் பேருதவி புரியும். கையடக்க இன்ஹேலரை எப்போதும் உடன் வைத்துக் கொள்ளலாம். பிரச்சினை ஏற்படும்போது அதனை நேரடியாக நுரையீரலுக்குள் உட்சுவாசித்துக் கொண்டு இயல்பாக சுவாசிக்க முயற்சி செய்யலாம். முடியும்.
எதுவாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரையின்படியே செய்ய வேண்டும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|