சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்! Khan11

சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்!

3 posters

Go down

சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்! Empty சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்!

Post by gud boy Sat 1 Oct 2011 - 19:23

சிறுநீரக மண்டலம்-இதயம், மூளைக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம்வாய்ந்த அத்தியாவசிய உறுப்பு. உடம்பின் ஒட்டுமொத்த திரவக் கழிவுகளையும் சுத்திகரித்து வெளியேற்றும் துப்புரவுத் தொழிற்சாலை. உடலிலுள்ள செல்களுக்குத் தேவையான புரதத்தை ரத்தம்தான் எடுத்துச் செல்கிறது.

செல்கள் புரதத்தை பயன்படுத்தியது போக எஞ்சிய கழிவுகள், நைட்ரஜன் அடங்கிய யூரியாவாக மாறி ரத்தத்தில் கலக்கிறது. இவற்றைப் பிரித்தெடுத்து, வெளியேற்றுவதுதான், சிறுநீரக மண்டலத்தின் முக்கியபணி. சிறுநீரகம் (கிட்னி), உள்சிறுநீரக வெளியேற்று குழாய் (யுரேட்டர்), சிறுநீர்ப்பை (பிளாடர்), வெளிசிறுநீரக குழாய் (யுரித்ரா), நரம்பு மண்டலம் ஆகிய ஐந்தும் ஒருங்கிணந்ததுதான், சிறுநீரக மண்டலம்.

கிட்னி:

அதாவது சிறுநீரகத்தைத்தான் ஆங்கிலத்தில், `கிட்னி' என்று அழைக்கிறார்கள். கழிவுமண்டலத்தின் முக்கிய மந்திரி, இதுதான். ஒரு சிறுநீரகத்தின் எடை, 180 கிராம். 12 செ.மீ. நீளம், 87 செ.மீ. அகலம் உடையது. சிறுநீரகம் என்றாலே `உயிரணுக்களை உற்பத்தி செய்யும் விரை' என்றுதான் நம்மில் நிறையபேர் நினைத்துகொண்டு இருக்கிறார்கள்.

அப்படியல்ல. இறைவன் மிகப்பெரியவன்.அதனால்தான் மனிதனைப் படைக்கும்போதே, முக்கியமான உறுப்புகளை இரண்டாகப் படைத்தான். கண்கள் இரண்டு, காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என இரண்டு உறுப்புகள் இருப்பதைப்போல், ஒவ்வொரு மனிதருக்கும் தலா இரண்டு சிறுநீரகங்கள் உண்டு.

இது அவரைவிதையின் வடிவத்தில் உடலுக்குள் இருக்கும் உள்ளுறுப்பு. நமது அடிவயிற்றின் பின்புறத்தில் பெருங்குடலுக்கு மேல் பகுதியில், முதுகுத் தண்டின் வலது-இடதுபுறமாக அமைந்துள்ளது. சிறுநீரகத்தில் சுமார் 10 லட்சம்வரையில் `நெப்ரான்கள்' (அடிப்படை நுண்தமனி சிறுநீரக சுத்திகரிப்பு அலகு) உண்டு.

நமது உடம்பில் சேரும் அசுத்த ரத்தத்தில் இருந்து யூரியா போன்ற கழிவுகளை அகற்றி, உடம்பை பரிசுத்தமாக மாற்றும் உன்னதபணியைச் செய்வது இந்த நெப்ரான்கள்தான்!

ரத்த சுத்திகரிப்பு:

சிறுநீரகத்தின் பணிகள் என்ன?

உடம்பின் இருதயத்தில் இருந்த ரத்தம், தமனிகளின் வழியாக நெப்ரானை வந்தடைகிறது. இங்கு ரத்தத்தின் திரவப்பகுதியான பிளாஸ்மா, குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், பொட்டாசியம், குளோரைட், ஆகியவை வடிகட்டப்படுகிறது. எஞ்சிய ரத்தம், நெப்ரானிலுள்ள குளோமெரூலஸ் பகுதிக்கு வந்துசேர்கிறது.

இதில் போடோசைட்ஸ் செல்கள் வடிகட்டியாக செயல்படுகிறது. நெப்ரானிலுள்ள குளோமெரூலசுக்குள் எளிதில் விளங்கிக்கொள்ளமுடியாத ரசாயன மாற்றங்களுக்கு உட்படும் ரத்தம், இறுதியில், `ட்யூபிள்' என்கிற நுண்குழாய்களில் வந்து சேருகிறது.

இங்கேயும் ஒரு இறுதிகட்ட சோதனை உண்டு. அதாவது, ரத்தத்தில் உடலுக்கு தேவைப்படும் சத்துகளும், விடுதலை தாகத்தோடு இருக்கலாமே? உடலிலுள்ள சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற அவசியமான சத்துகளின் அளவை கணக்கெடுக்கிறது, சிறுநீரகம். இவை போதுமான அளவில் இல்லையெனில், `உங்களின் சேவை இன்னும் தேவை' என்று `டயலாக் அடித்துவிட்டு, அவற்றை மீண்டும் ரத்தத்தில் கலக்க செய்கிறது.

சரியான அளவில் இருந்தால், `போனால் போகட்டும் போடா' என்கிற பாட்டோடு, தண்ணீரில் நீர்க்கசெய்து வழியனுப்பி வைத்துவிடுகிறது. இப்படியாக சிறுநீரகத்தின் பணிகளை சொல்லப்போனால் இது அறிவியல் பாடப்புத்தகம் ஆகிவிடும் என்பதால், இந்த அளவோடு நிறுத்திக்கொள்வோம்.

ரசாயண தொழிற்சாலை:

சிறுநீரகத்தின் செயல்பாட்டை நன்கு உணர்ந்தவர்கள், இதை ஒரு `ரசாயண தொழிற்சாலை' என்றே வருணிப்பார்கள். அதாவது, சிறுநீரகங்கள் ஒவ்வொருநாளும் 200 குவார்ட்ஸ் (.946 லிட்டர்) ரத்தத்தை வடிகட்டி, 2 குவார்ட்ஸ் அளவுக்கு அதிகப்படியான நீரையும் கழிவுப்பொருட்களையும் பிரித்தெடுக்கிறது. இவைதான் சிறுநீராக மாறி வெளியாகிறது.

அடுத்தது, உள்சிறுநீரக குழாய் (யூரிட்டர் டியூப்). சிறுநீரகத்தை சிறுநீரகப்பையுடன் ஒன்றிணைக்கும் கழிவுநீர் வாய்க்கால்'.மூன்றாவது, சிறுநீர்ப்பை. சிறுநீரகத்தில் இருந்து உள்சிறுநீர்க்குழாய் வாயிலாக `படைதிரண்டு' வரும் திரவக்கழிவுகள், இங்குதான் சேகரமாகிறது. உங்களின் மூளை `கெட் அவுட்' என்று கட்டளையிடும் வரையில் அந்த வேண்டாத பொருளை சேமித்து வைக்கவேண்டிய கட்டாயம் சிறுநீர்ப்பைகளுக்கு உண்டு.

கடைசியாக, வெளி சிறுநீரக குழாய்(யூரித்ரா). சிறுநீர்ப்பையில் தேங்கி நிற்கும் கழிவுகளை உடம்பில் இருந்து அடியோடு அப்புறப்படுத்தும் குழாய். பொதுவாக, வெளி சிறுநீரக குழாய் அமைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. இது பெண்களுக்கு வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு-பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது.

நரம்பு மண்டலம்:

சிறுநீர் மண்டலத்தில் நரம்பு மண்டலத்தின் பணி மிகவும் முக்கியமானது. இது சிறுநீர்ப்பையில் பல்வேறு சிறப்பான பணிகளைச் செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் மூலம் துளித்துளியாக சிறுநீர்ப்பைக்கு கொண்டுவந்து சேர்க்க உத்திரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடைய செய்து சிறுநீரை தேக்கிவைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் மூளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளை செய்வது நரம்பு மண்டலமே.

அட்ரினல் சுரப்பி:

இதுதவிர, கிட்னிகளுக்கு மேல்பகுதியில் இருக்கும். அட்ரினல் சுரப்பிகளும், சிறுநீர்ப்பையின் வாய்ப்பகுதியில் இருக்கும் புராஸ்டேட் சுரப்பியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உடம்பில் நீர்ச்சத்து, உயிர்ச்சத்துகளை கண்காணிப்பது, ரத்த அழுத்தம்-ரத்தக்குழாய்களை பராமரிப்பது ஆகிய பணிகளை செய்வது, அட்ரினல் சுரப்பிதான். தேவைப்படும் நேரத்தில் மனிதனின் இதயவேகத்தை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட சுரப்பி இது.

புராஸ்ட்டேட் சுரப்பி:

றுநீர் வெளியேற்றத்தை இயங்குநிலையில் வைத்திருக்கும் சுரப்பி. சிறுநீர்ப்பையின் (பிளாடர்) கீழ்புறத்தில் யூரித்திராவைச் சுற்றி அமைந்துள்ளது. இது ஆண்களிடம் மட்டுமே காணப்படுகிற உறுப்பு! புரஸ்டேட்டில் இருந்து புரஸ்டாடிக் அமிலம் சுரக்கிறது. இதுதான் பிளாடரின் செயல்பாடுகள், சிறுநீர்பை நிறைவை மூளைக்கு தெரியப்படுத்தி வெளியேற்றுவது ஆகிய பணிகளை செய்கிறது.

`தசாவதார' சிறுநீரகம்:

இதயம் தொடர்ந்து துடிப்பது போலவே சிறுநீரகமும் இடைவிடாமல் வடிகட்டும் பணியை செய்கிறது. `ரத்தத்தில் கழிவுப்பொருட்களையும், அதிகப்படியான திரவங்களையும் வெளியேற்றுவதே சிறுநீரகங்களின் வேலை' என்று நிறையபேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல. சிறுநீரகம் தனிநபர் ராணுவம் மட்டுமல்ல, தசாவதானியும்கூட. இது ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளையும் செய்து முடிக்கிறது.

எப்படி தெரியுமா?

சிறுநீரகத்தின் பயன் `மூச்சா' போவதோடு முடிந்துவிடுவதில்லை. உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான சில பணிகளிலும் சிறுநீரகம் முக்கிய பங்காற்றுகிறது. அதாவது, உடலிலுள்ள தேவையற்ற மருந்துப்பொருட்களை வெளியேற்றுவது, ரத்தத்தை சுத்திகரிப்பது, உடம்பின் நீர் மற்றும் அமிலப்பொருளை சீரானஅளவில் வைத்திப்பது திரவங்களின் சமநிலையை பராமரிப்பது.

ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும் ஹார்மோனையும், ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும், எலும்புகளின் உறுதிக்கு பயன்படும் ஹார்மோனையும் சுரக்கசெய்வது உள்ளிட்ட பணிகளில் சிறுநீரகம் தீவிரமாக பங்கேற்கிறது.

சிறுநீரக நோய்கள்:

நமது உடலமைப்பு `மெட்டாபாலிசத்தில்' உணவு ஜீரணம், தன்மயமாதல் சிறப்பாக நடைபெற, எஞ்சியவை வேர்வை, மலம், சிறுநீராக முழுவதும் வெளியேற வேண்டும். இல்லையெனில் பிரச்சினைதான். கழிவுகள் வெளியேற்றப்படாமல் சேர்ந்துகொண்டே இருந்தால் நம் உடல் வேண்டாத கழிவுகளின் குப்பைக் கூடையாகிவிடும்.

உடலை பொறுத்தவரையில் கழிவுகள் என்பவை விஷப்பொருட்கள். அவை ரத்தத்தில் சேர சேர உடல் முழுமையாக சீரழிந்துவிடும். சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரை கொண்டு செல்லும் உள் சிறுநீர்குழாய்களிலோ (யுட்ரஸ்), அல்லது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை உடம்புக்கு வெளியே கொண்டு செல்லும் வெளிசிறுநீர் குழாய்களிலோ (யுரித்ரா) அடைப்பு ஏற்படலாம்.

உள்சிறுநீர்குழாய்களில் ஒரு பக்கம் அடைப்பு வந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதில்லை. ஆனாலும் சிறுநீரகபாதையில் அடைப்பு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கையில் வலி, முக்கி முக்கி சிறுநீர் கழித்தல், அடிவயிற்றில் வலி ஆகிய பிரச்சினைகள் உருவாகும்.

கல்லடைப்பு:

சிறுநீரக மண்டலத்தில் அடைப்பு உருவானால் சிறுநீர் கழிப்பதில் சிரமநிலை, கல்லடைப்பு, நிரந்தர-தற்காலிக சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகி, கடைசியில் இறக்கநேரிடும்.

சிறுநீர் கடுப்பு:

சிறுநீர் கழிப்பதில் சிரமநிலை, சிறுநீர்ப்பாதையில் முள் சொருகியது போல வலி எடுத்தல், சொட்டுச் சொட்டாக நீர் வெளியேறுதல் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

நீரக கல்லடைப்பு:

சிறுநீரகத்தில் கழிவுநீருடன் சோடியம், யூரியா, கால்சியம், ஆக்சலேட் போன்ற தாதுக்கழிவுகள் உண்டு. இவை நாளடைவில் உறைந்து கெட்டிப்படுவதால் கல்லடைப்பு வருகிறது. அடிவயிற்றில் தீராத வலி, சிறுநீருடன் ரத்தம் கலந்துபோவது, மூச்சுத்திணறல், வாந்தி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள்.

சிறுநீரக செயலிழப்பு:

சிறுநீரக செயலிழப்பில் லேசான சிறுநீரகசெயலிழப்பு, அதிக சிறுநீரக செயலிழப்பு என்று 2 வகைகள் உண்டு. ரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2 மி.கி.புள்ளிக்கு கீழே இருந்தால், அது லேசான சிறுநீரக செயலிழப்பு. ரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளிகளில் இருந்தால், அதிக செயலிழப்பு.

இது லேசான சிறுநீரகசெயலிழப்பின் அடுத்தகட்ட நிலைதான். சிறுநீரில் புரத ஒழுக்கு, உயர்ரத்த அழுத்தம், கை-கால்-உடல் வீக்கம், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் ஆகியவைதான், இரண்டுக்கும் முக்கிய அறிகுறிகள். ரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 6 மி.கி.க்கு மேல் இருந்தால். சிறுநீரில் புரதசத்து அதிகளவில் வெளியேறுவது, முக்கிய அறிகுறி.

அடைப்பு:

சிறுநீரக செயலிழப்பு பல்வேறு காரணங்களால் வருகிறது. அதாவது சிறுநீர் மண்டலத்தில் தமனி-கிட்னி, கிட்னி-யுரேட்டர், யுரேட்டர்-பிளாடர், பிளாடர்-யுரித்ரா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இணைப்பு குழாயின் கழுத்ததுப் பகுதியிலோ, அல்லது உள்ளுறுப்புகளிலோ கட்டி அல்லது வீக்கம் வந்தால், சிறுநீர் வெளியேற்றத்தில் தடை வரும்.

அதே மாதிரி சிறுநீரகத்துக்கு மேலிருக்கும் அட்ரினல் சுரப்பி, சிறுநீர்ப்பைக்கு அருகிலிருக்கும் புராஸ்டேட் சுரப்பி ஆகிய இரண்டில் வீக்கம் தென்பட்டாலும் சிறுநீர்தடை பிரச்சினை உருவாகும். மலச்சிக்கல் அதிகமானால் புரஸ்டேட் கிளான்ட், பிளாடர் அதிக அழுத்தம் அடைந்து சிறுநீரகத் தடை ஏற்படும்.

தண்ணீர் மருந்து:

சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு ஒரே அருமருந்து, தண்ணீர்தான். சிறுநீரில் அமிலம்-ïரியாவை நீர்க்கச் செய்து வெளியேற்றும் தன்மை, குடிநீருக்கு உண்டு. அதிகாலையில் எழுந்தவுடன் ஓரிரு டம்ளர் நீர் அருந்திப் பழகுங்கள். வீட்டுக்குள் படியும் தூசி-குப்பை, கழிவுகளை எவ்வாறு பெருக்கி, கழுவி சுத்தப்படுத்துகிறோமோ, அதேமாதிரி நமது உள்ளுறுப்புகளும் கழிவு மண்டல பாதைகளும் நீரால் கழுவப்பட வேண்டும்.

நமது உடலில் 70 விழுக்காடு நீர் இருக்க வேண்டும். மனித உடம்பின் செரிமானம், கழிவுகளை வெளியேற்றுதல் உள்ளிட்ட அத்தியாவசிய இயக்கத்துக்கு தினந்தோறும் 2 லிட்டர்வரை தண்ணீர் தேவை. இதில் பற்றாக்குறை வந்தால், சிறுநீரக நோய்கள் `அழையா விருந்தாளியாக' உடம்புக்குள் வந்து குடியேறிவிடும்.

சிறுநீர் கடுப்பை பொறுத்தவரையில், சர்வரோக நிவாரணி-தண்ணீர் மட்டும்தான். இரவில் வெந்தயத்தை ஊறவிட்டு, அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால், சிறுநீர் கடுப்பு போயே போச்!

கிளினிங் ஏஜெண்ட்:

நமது கழிவு மண்டலத்தில் யூரிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், ஆக்ஸாஸிக் அமிலம் அதிகரிக்கும் தருணங்களில், கிட்னி செயல்பாடுகள் தடைபடலாம். சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். சிறுநீரக கல்லடைப்பில் உருவாகும் வலி, மிகவும் கொடுமையானது. அதாவது இது முதுகின் மேல்புறம்-விலா எலும்புகள் முடியுமிடத்தில் உண்டாகும்.

நம்மில் பலர் சரியான நேரத்தில், சரியான முறையில் தேவையான நீர் குடிக்காமல் போவதால் சிறுநீர் கழிவு மண்டலம் அதிக வெப்பமடைந்து சிறுநீர் அடர்த்தி யூரியாவால் மிகுந்து கிட்னியின் செயல்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கிறது. சிறுநீரகத்தில் சிறுநீர்உறைதலை கட்டுப்படுத்துவதற்காக பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின்-சி, வைட்டமின்-பி6 ஆகிய நுண்ணூட்டச்சத்துக்களும் யூரியா-உப்பு கழிவுகளுடன் கூடவே இருக்கும்.

இதில் குறைபாடு வைந்தால்தான், பிரச்சினை தலைதூக்கும். காலையில் காபி, டீக்குப் பதில் நீர் குடித்தால் அதுவே மிக அருமையான கிளினிங் ஏஜெண்டாக செயல்புரியும். அதிக யூரிக் அமிலத்தை நீர்த்து வெளியேற்றும். சிறுநீரக கல்லடைப்பில் 90 சதம் குணமாககூடியவைதான்.

ஆரம்பநிலையில் இருந்தால் மருந்து-மாத்திரைகளோடு, போதிய அளவுக்கு தண்ணீர் குடித்து வந்தாலே போதும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் வெளியேறலில் வலி, அதிக வியர்வை, சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேற்றம், வெளியேறும் சமயம் வலி, மஞ்சள் கலராகுதல், வெள்ளையாகவும், இரத்த சிவப்பாகவும் வந்தால் நமது கழிவு மண்டலத்தை கவனிக்க வேண்டும்.

மருத்துவ சோதனை:

சிறுநீரக கல்லடைப்பு முற்றியிருந்தாலும் பரவாயில்லை. நோயாளியை `எக்ஸ்ட்ரா கார்ப்பொரல் லித்தோ-டிரிப்ஸி' பரிசோதனைக்கு உட்படுத்தினால் சிறுநீரக பாதையில் தேங்கும் கற்கள், அதிர்வலைகளால் பொடிப்பொடியாக வெளியேறிவிடும்.

* தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்லது.

* போதிய அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

* பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முடிந்தவரையிலும் தவிர்க்கலாம்.

* அவித்த காய்கறி, பருப்பு உணவுகளை சாப்பிடலாம்.

* உணவில் உப்பு-இனிப்பை குறைக்கவும். இறைச்சி-பாலை தவிருங்கள்.

சிறுநீரக கல்லடைப்பு இருப்போர் மருந்து-மாத்திரையோடு மேற்கண்ட உணவுமுறைகளையும் கடைபிடித்து வந்தால் கல்லடைப்பு மட்டுமின்றி அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும்.

சிறுநீரக கட்டி:

ஆரோக்கிய மனிதர் சிறுநீர் பி.எச். அளவு 4.3 முதல் 8 பி.எச். வரை இருக்கலாம். அதற்குமேல் இருந்தால், இது சிறுநீர் வியாதிக்கு (இன்பெக்ஷன்ஸ்) அபாய மணியோசை என்று அர்த்தம். சிறுநீரில் நைட்ரஜன், புïரைன் உணவுகளின் செறிவு மிகுந்திருந்தால், உச்ச அமிலமாகும்.

கால்சியம், பாஸ்பேட் செறிவால், சிறுநீர் காரநிலையை பெறும். இரண்டுமே மோசமானவை. சிறுநீர் சிறப்பாக வெளியேறாவிடில் கழிவுகள் தேங்கி தோல் அரிப்பு, நமைச்சல், கட்டி, வீக்கம் உருவாகலாம். சிறுநீரில் அமிலம், ïரியா மிகுந்தால் நமைச்சல், அரிப்பு உருவாகி சிறுநீர் வெளியேறும் பகுதியை தேய்த்தோ, சொரிந்து விடவோ கை செல்லும்.

சர்க்கரை, உப்பு மிகுந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உடல் தேவை இருக்கும். எக்ஸ்ரே, இண்ட்ரா வீனஸ் பைலோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்று சிறுநீரகங்கள், மண்டல உறுப்புகள் பல நேரம் சோதிக்கப்படுகின்றன. தற்சமயம் லித்தோடிரிப்ஸி மூலம் அதிர்வலைகளைச் செலுத்தி கற்களை உடைத்துப் பவுடராக்கி வெளியேற்றப்படுகிறது.

சிறுநீரக யோகா::: சிறுநீரகப் பிணிகளை, தன்மைகளை இரத்த பிளாஸ்மா கரோட்டீன் மூலம் அறியலாம். மற்றும் பயாப்சி, ரேனோகிராபி, ரேனோகிராம் மூலமாக சிறுநீரக செயல்பாடுகள் தன்மை, அளவுகளை, பிணிகளின் தாக்கங்களை அறியலாம். சிறுநீரில் நாள் ஒன்றுக்கு 40 கிராம் புரோட்டினும், 12 கிராம் நைட்ரோஜனும் மிகுந்தால் டயாலிஸிஸ் தேவைப்படும்.

அடிக்கடி டயாலிஸிஸ் செய்பவர்கள் விரைவில் மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும். "தர்பூசணியால் மஞ்சள் நிற சிறுநீர் மாறும். முந்திரி பழத்தால் சிறுநீர் எரிச்சல் குறையும். எலுமிச்சையால் சிறுநீர் கடுத்தல் மறையும். நெல்லியால் நல்ல நலம் கிட்டும்'' என்கிறது, இயற்கை மருத்துவம். வஜ்ராசனம் சிறுநீர் கழிவு மண்டலங்கள் சிறப்பாக உதவிடுகின்றன.

சர்வாங்காசனம், ஹலாசனம், நவாசனம், பாதஹஸ்தாசனம் போன்றவைகளையும் செய்து வரலாம். "சிறுநீரில் உள்ள யூரியாவில் இருக்கும் நைட்ரஜன், செடிகளுக்கு அருமையான எரு. சிலரது தோல்நோய்களுக்கு சிறுநீரை தடவுவது பண்டைய இந்திய மருத்துவத்தில் உள்ளது.

ரோமானியர்கள் சிறுநீரை பிளீச்சிங் செய்யும் பொருளாக பயன்படுத்தி உள்ளனர். பாக்டீரியாக்களை கொல்லும் குணம் சிறுநீருக்கு உண்டு என்பதால், இது காயங்களுக்கு ஆன்டிசெப்டிக் மருந்தாககூட பயன்பட்டிருக்கிறது'' என்கிறது, பழங்கால மருத்துவ புத்தகங்கள்.

டயாலிசிஸ்:

லேசான சிறுநீரகபாதிப்பு நோயாளிகள் ரத்தஅழுத்த கட்டுப்பாடு, மருந்து-மாத்திரைகள், ஆகாரமாற்றம் ஆகியவற்றை கடைபிடித்துவந்தால் பாதிப்பின் அதிகரிப்பு மட்டுப்படும். அதிக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்படுவோர், சிறுநீரக மருந்து- மாத்திரைகளுடன் ரத்தவிருத்தி, எலும்பு வளர்ச்சிக்கான மருந்துகளையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

சிறுநீரகம் முற்றிலுமாக செயலிழந்தால் முகவீக்கம், கால் வீக்கம், வாந்தி, சிறுநீரில் புரதம் ஒழுகுதல், அதிக ரத்த அழுத்தம், சோர்வு, அசதி, தலைசுற்றல், சிறுநீர் மிகவும் குறைவாக வெளிப்படுதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் தோன்றும். இத்தகைய நோயாளிகளுக்கு கிட்னியின் ஒட்டுமொத்த செயல்திறன் 10 சதத்துக்கும் கீழே வந்துவிடும். இதோடு, ரத்த அளவும் மிகவும் குறைந்துவிடும். இதற்கு டயாலிசிஸ் சிகிச்சைதான், ஒரே வழி.

`டயாலிசிஸ்' என்றால் என்ன?

மனிதனின் உடம்புக்குள் சிறுநீரகம் செய்யவேண்டிய பணிகளை, மருத்துவ சாதனங்களின் வாயிலாக உடம்புக்கு வெளியே செய்வது `டயாலிசிஸ்' . அதாவது நோயாளியின் உடம்பில் இரண்டு ரத்தநாள இணைப்புகளை தேர்வுசெய்வார்கள். இதில் மருத்துவ சாதனம் பொருத்தப்படும்.

நோயாளியின் உடம்புக்குள் ஓடும் ரத்தத்தை முதலாவது ரத்தநாள இணைப்பின் வாயிலாக உறிஞ்சி, சுத்திகரித்து அடுத்த இணைப்பில் நல்ல ரத்தத்தை செலுத்துவார்கள். இதனால் நோயாளியின் சிறுநீரக ஆரோக்கியம் நிலை நிறுத்தப்படுகிறது.

குறைந்த கட்டணம்:

சிறுநீரக நிரந்தர செயலிழப்பு உடையவர்கள் வாரத்துக்கு 2 தடவைகள் வீதம் டயாலிசிஸ் செய்யவேண்டும். ஆனாலும் தனியார் மருத்துவமனைகளில் ரத்த சுத்திகரிப்பு செய்வதற்கு, மாதந்தோறும் ரூ.20 ஆயிரம்வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சை தரப்படுவது நடைமுறையில் உள்ளது.

குறிப்பாக சென்னை மாநகராட்சி சார்பில் நுங்கம்பாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில், குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் பகுப்பாய்வு மையம் சிறப்பாக இயங்கி வருகிறது. சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்து தவிப்போர், ஆரம்ப நிலையிலேயே டயாலிசிஸ் சிகிச்சைக்கு வசதியாக, உடம்பில் ரத்தநாளஇணைப்பு அறுவைசிகிச்சைக்கு தயாராகி விடுங்கள். இதோடு ஈரலை பாதிக்கும் ஹெபடைடிஸ்-டீ தடுப்பூசியையும் போட்டுக்கொள்வது நல்லது.

என்ன செய்யவேண்டும்?

டயாலிசிஸ் செய்வோர் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள்:

உங்களுக்கு கொடுக்கப்பட்ட தண்ணீரின் அளவுக்கேற்ப ஊட்டச்சத்துமிக்க பால், சூப், பாயசம் போன்ற திரவங்களாக குடிக்க முயற்சி செய்யுங்கள். டீ, காப்பி, குளிர்பானங்கள் வேண்டாமே. தாகமான நேரத்தில் எலுமிச்சை பழத்தை வெட்டி சப்பலாம், அல்லது குளிர்ந்த நீரை வாயில்விட்டு கொப்பளித்து துப்பிவிடவேண்டும், விழுங்கக் கூடாது.

மாத்திரை-மருந்துகளை குறைந்த நீரில் சாப்பிடுங்கள். சூடான உணவு திரவங்களை தவிர்க்கவும். உடம்பை முடிந்தவரை குளிர்ச்சியாக வைத்திருக்கவும். நிரந்தர சிறுநீரக செயலிழப்பு என்பது மெல்ல மெல்ல படிப்படியாகதான் ஏற்படுகிறது. ஆரம்பநிலையில் கண்டறிந்தால் குணப்படுத்துவது சுலபம். காலம்கடந்தபிறகு கண்டறிந்தால், மருத்ததுவரால்கூட கிட்னி பாதிப்பை சரிசெய்ய முடியாது.

இதை சாதாரணமாக உடனே கண்டு பிடித்துவிட முடியாது. நோய் முற்றிப்போன நிலையில்கூட அதற்கான அறிகுறிகள் ஏதும் வெளிப்படாமல் இருப்பதுதான், சிறுநீரகசெயலிழப்பு நோயின் மோசமானதன்மை! ஒரு சிறுநீரகம் முழுவதுமாக செயலிழந்தாலும்கூட, எஞ்சிய மற்றொன்று தொடர்ந்து செயல்படுவதால் இந்த நிலை.

நோய் முற்றியோருக்கு சிறுநீரகங்களை ஸ்கேன் செய்து பார்த்தால் மாங்காய் அளவு இருக்கவேண்டிய இடத்தில் சுருங்கிப்போன் பீன்ஸ் விதை அளவு மட்டுமே சிறுநீரகங்கள் இருக்கும்.

நோய்களின் காரணி:

மனித உடலின் ஆதாரசுருதியாக திகழும் சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக உள்ளது. சிறுநீரகம் பழுதையடுத்து ரத்தஅழுத்தம் உள்பட உடலின் பல செயல்பாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும். உள்சிறுநீர்குழாய்களின் அடைப்புக்கு முக்கிய காரணம், சிறுநீரக கற்கள்தான். முதுகு-வயிற்றில் அதிக வலி, சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் ரத்தம் வருதல் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

சிறுநீர்ப்பையின் அடியில் உள்ள ப்ராஸ்டேட் சுரப்பி வீங்கி சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறுவதை தடைசெய்யும். எலும்பு மஜ்ஜையில் இருந்து ரத்தசிவப்பணுக்களை உண்டாக்க உதவும் எரித்ரோபாயிட்டின் என்கிற நொதியை சிறுநீரகங்களே உற்பத்தி செய்கின்றன.

சிறுநீரக செயலிழப்பால் இரத்த சோகை உண்டாகும். எலும்புகளை உறுதியாக வைத்திருக்கும் கால்சிட்ரியால் என்கிற சத்தையும் சிறுநீரகமே உற்பத்தி செய்கிறது. சிறுநீரக செயலிழப்பால் எலும்புகள் பலமிழக்கும். சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது 12 மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலை.

ஆண்டுக்கொரு முறை மைக்ரோ ஆல்புமின் பரிசோதனை செய்துபார்த்தால், சிறுநீரக கோளாறை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும். ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அர்த்தம். 100 மில்லி ரத்தத்தில் 20-40 மிலி.வரை யூரியா இருக்கலாம்.

நோயாளியின் ரத்தத்தில் கிரியாட்டினைன், புரதம் அதிகம் இருப்பது தெரிந்தால், உடனே இ-ஜி-எப்-ஆர் (எஸ்டிமேட்டட் க்ளோமரூலர் பில்ட்ரேசன் ரேட்) பரிசோதனை செய்து பார்த்து சிறுநீர் வடிகட்டியின் செயல்திறனை அறிந்தபின், அதற்கேற்றபடி நிலைகளை வகுத்துகொண்டு அவற்றிற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளலாம்.

சிறுநீரக தானம்:

நீரக நோயாளிகளுக்கு பொட்டாசியமும் புரதமும் முக்கிய எதிரிகள். சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, வாழை, இளநீர், சத்து பானங்களை சாப்பிடக்கூடாது. சிறுநீரகங்களுக்கு கொழுப்பும் எதிரியாகும். கொழுப்பு சிறுநீர் வடிகட்டிகளுக்கு தேவையான ரத்தவோட்டத்தை தடைசெய்யும்.

எனவே உணவில் கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். சோடியம், பொட்டாசியம், புரதம், கொழுப்பு கட்டுப்பாடுகளோடு தண்ணீர் அதிகம் குடித்துவந்தால் பிரச்சினை தீர்ந்தது. நம் உடல் ஆரோக்கியமாக இயங்க ஒரு சிறுநீரகமே போதுமானது.

ஆகவே, எவரும் தாராளமாக சிறுநீரகதானம் தரலாம். நோயாளிக்கு கிட்னி தானம் தர, நெருங்கிய நண்பரோ, உறவினரோ தயாராக இருந்தால் பிரச்சினை இல்லை. இதுதவிர தானம் தருபவரின் ரத்தவகையும், தானம் பெறுபவரின் ரத்தவகையும் ஒரே பிரிவாக இருக்கவேண்டும். முன்பின் தெரியாதவர் கிட்னி தானம் செய்வதை அரசு தடை செய்துவிட்டது.

நிரந்தர சிறுநீரக செயலிழப்பால் அவதிப்படுவோர் உடனடியாக ஏதாவதொரு ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியாது.

கிட்னி பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

* உடம்பில் சர்க்கரை-உப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். ரத்தஅழுத்தத்தை 130/130-க்கு கீழ் வைத்திருக்க வேண்டும்.

* ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக சிறுநீரக பரிசோதனை செய்யவேண்டும்.

* அசைவ உணவை குறையுங்கள். உயர்ரத்தஅழுத்தம், நீரிழிவு ஆகியவை இதயம், மூளை போன்று சிறுநீரகங்களையும் பாதிக்ககூடியவை.

* புகைப்பிடித்தல், புகையிலை உபயோகித்தல் சிறுநீரகங்களை பாதிக்கும். தவிர்க்கவும்.

* சிறிய வலிகளுக்குகூட மருந்து கடையில் வலிமாத்திரை சாப்பிடுவோருக்கு நாளடைவில் சிறுநீரகங்கள் செயலிழக்க வாய்ப்புண்டு.

* கழிவு மண்டலங்களின் செயல்களில் சிக்கல் உருவானால் வாழ்வின் கடைசிக் கட்டம் வரை குழப்ப நிலை நீடிக்கும்.

உண்ணா நோன்பு:

நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையைவிட குறைவாக சுரக்கும். இதனால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடுதலாகிறது. இதை வெளியேற்ற சிறுநீரகங்கள் அதிக வேலை செய்யவேண்டியுள்ளது. இதனால்தான் அவை கூடிய சீக்கிரமே செயலிழக்கிறது. சிறுநீரக நோயாளிகளுக்கு தண்ணீருக்கு அடுத்தபடியாக உயரிய மருந்து-உண்ணா நோன்பு.

வாரத்தில் ஒருநாள் அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடுவதுபோல் நமது வயிறு, குடல், கழிவு மண்டலங்களுக்கு நல்ல ஓய்வு தேவை. உண்ணாவிரதம் இருப்பதால், நம் உடம்பிலுள்ள ஒட்டுமொத்த ரத்தமும், கழிவு மண்டல சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சிறுநீரகக் கழிவுகள் விரைவில் வெளியேற வாய்ப்பு கிட்டுகிறது.

உண்ணாவிரதத்துடன் சூரிய சக்தி குளியலும் எடுத்தால், உடம்பின் திரவக் கழிவுகள் வியர்வையாக வெளியேறிவிடும். இதனால் சிறுநீரகங்களுக்கு போதுமான ஓய்வு கிட்டும். வேலைப் பளுவும் குறைகிறது.

வருமுன் காக்கலாம்:

உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகமாகி வருகிறது என்பது உண்மைதான். ஆனாலும் சிறுநீரகத்தை பற்றிய விவரங்களும், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் பலரும் சரியாக அறிந்து வைத்திருப்பதாக தெரியவில்லை. உலகத்தில் 10 விழுக்காடு பேர் சிறுநீரகப் பிணிகளால் அவதிப்படுகின்றனர்.

இதில் பெரும்பாலானோர் இளைய தலைமுறையினர் என்பதுதான் வேதனையிலும் வேதனை. சிறுநீரகநோய்க்கான சிகிச்சையே வலி மிகுந்ததாக, மனஅழுத்தம் தருவதாக அமைந்திருக்கிறது. சிகிச்சையுடன் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் இயல்பான வாழ்க்கைமுறையை தலைகீழக புரட்டிபோட்டு விடுகின்றன.

சிறுநீரக நோய் என்கிற அசுரனுக்கு ஏழை-பணக்காரன் பேதம் இல்லை. சிறுநீரகங்கள் பழுதடைந்தபிறகான வாழ்க்கைக்கும் நரகவாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசமில்லை என்கிறார்கள், அனுபவஸ்தர்கள். சிறுநீரக கோளாறு ஏற்பட்டால் மரணம்தான் இறுதிமுடிவு என்று எண்ண வேண்டாம்.

கிட்னி, கிட்னிபணிகள், பாதிப்புகளை முழுமையாக அறிந்துகொண்டால் வருமுன் காக்கலாம். வந்தபின்னரும் உயிர்காக்கலாhttps://2img.net/r/ihimg/photo/my-images/36/9e6f96ab5c5d4406b1e47f5.jpg/
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்! Empty Re: சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்!

Post by gud boy Sat 1 Oct 2011 - 19:25

kiwi boy wrote:சிறுநீரக மண்டலம்-இதயம், மூளைக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம்வாய்ந்த அத்தியாவசிய உறுப்பு. உடம்பின் ஒட்டுமொத்த திரவக் கழிவுகளையும் சுத்திகரித்து வெளியேற்றும் துப்புரவுத் தொழிற்சாலை. உடலிலுள்ள செல்களுக்குத் தேவையான புரதத்தை ரத்தம்தான் எடுத்துச் செல்கிறது.

செல்கள் புரதத்தை பயன்படுத்தியது போக எஞ்சிய கழிவுகள், நைட்ரஜன் அடங்கிய யூரியாவாக மாறி ரத்தத்தில் கலக்கிறது. இவற்றைப் பிரித்தெடுத்து, வெளியேற்றுவதுதான், சிறுநீரக மண்டலத்தின் முக்கியபணி. சிறுநீரகம் (கிட்னி), உள்சிறுநீரக வெளியேற்று குழாய் (யுரேட்டர்), சிறுநீர்ப்பை (பிளாடர்), வெளிசிறுநீரக குழாய் (யுரித்ரா), நரம்பு மண்டலம் ஆகிய ஐந்தும் ஒருங்கிணந்ததுதான், சிறுநீரக மண்டலம்.

கிட்னி:

அதாவது சிறுநீரகத்தைத்தான் ஆங்கிலத்தில், `கிட்னி' என்று அழைக்கிறார்கள். கழிவுமண்டலத்தின் முக்கிய மந்திரி, இதுதான். ஒரு சிறுநீரகத்தின் எடை, 180 கிராம். 12 செ.மீ. நீளம், 87 செ.மீ. அகலம் உடையது. சிறுநீரகம் என்றாலே `உயிரணுக்களை உற்பத்தி செய்யும் விரை' என்றுதான் நம்மில் நிறையபேர் நினைத்துகொண்டு இருக்கிறார்கள்.

அப்படியல்ல. இறைவன் மிகப்பெரியவன்.அதனால்தான் மனிதனைப் படைக்கும்போதே, முக்கியமான உறுப்புகளை இரண்டாகப் படைத்தான். கண்கள் இரண்டு, காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என இரண்டு உறுப்புகள் இருப்பதைப்போல், ஒவ்வொரு மனிதருக்கும் தலா இரண்டு சிறுநீரகங்கள் உண்டு.

இது அவரைவிதையின் வடிவத்தில் உடலுக்குள் இருக்கும் உள்ளுறுப்பு. நமது அடிவயிற்றின் பின்புறத்தில் பெருங்குடலுக்கு மேல் பகுதியில், முதுகுத் தண்டின் வலது-இடதுபுறமாக அமைந்துள்ளது. சிறுநீரகத்தில் சுமார் 10 லட்சம்வரையில் `நெப்ரான்கள்' (அடிப்படை நுண்தமனி சிறுநீரக சுத்திகரிப்பு அலகு) உண்டு.

நமது உடம்பில் சேரும் அசுத்த ரத்தத்தில் இருந்து யூரியா போன்ற கழிவுகளை அகற்றி, உடம்பை பரிசுத்தமாக மாற்றும் உன்னதபணியைச் செய்வது இந்த நெப்ரான்கள்தான்!

ரத்த சுத்திகரிப்பு:

சிறுநீரகத்தின் பணிகள் என்ன?

உடம்பின் இருதயத்தில் இருந்த ரத்தம், தமனிகளின் வழியாக நெப்ரானை வந்தடைகிறது. இங்கு ரத்தத்தின் திரவப்பகுதியான பிளாஸ்மா, குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், பொட்டாசியம், குளோரைட், ஆகியவை வடிகட்டப்படுகிறது. எஞ்சிய ரத்தம், நெப்ரானிலுள்ள குளோமெரூலஸ் பகுதிக்கு வந்துசேர்கிறது.

இதில் போடோசைட்ஸ் செல்கள் வடிகட்டியாக செயல்படுகிறது. நெப்ரானிலுள்ள குளோமெரூலசுக்குள் எளிதில் விளங்கிக்கொள்ளமுடியாத ரசாயன மாற்றங்களுக்கு உட்படும் ரத்தம், இறுதியில், `ட்யூபிள்' என்கிற நுண்குழாய்களில் வந்து சேருகிறது.

இங்கேயும் ஒரு இறுதிகட்ட சோதனை உண்டு. அதாவது, ரத்தத்தில் உடலுக்கு தேவைப்படும் சத்துகளும், விடுதலை தாகத்தோடு இருக்கலாமே? உடலிலுள்ள சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற அவசியமான சத்துகளின் அளவை கணக்கெடுக்கிறது, சிறுநீரகம். இவை போதுமான அளவில் இல்லையெனில், `உங்களின் சேவை இன்னும் தேவை' என்று `டயலாக் அடித்துவிட்டு, அவற்றை மீண்டும் ரத்தத்தில் கலக்க செய்கிறது.

சரியான அளவில் இருந்தால், `போனால் போகட்டும் போடா' என்கிற பாட்டோடு, தண்ணீரில் நீர்க்கசெய்து வழியனுப்பி வைத்துவிடுகிறது. இப்படியாக சிறுநீரகத்தின் பணிகளை சொல்லப்போனால் இது அறிவியல் பாடப்புத்தகம் ஆகிவிடும் என்பதால், இந்த அளவோடு நிறுத்திக்கொள்வோம்.

ரசாயண தொழிற்சாலை:

சிறுநீரகத்தின் செயல்பாட்டை நன்கு உணர்ந்தவர்கள், இதை ஒரு `ரசாயண தொழிற்சாலை' என்றே வருணிப்பார்கள். அதாவது, சிறுநீரகங்கள் ஒவ்வொருநாளும் 200 குவார்ட்ஸ் (.946 லிட்டர்) ரத்தத்தை வடிகட்டி, 2 குவார்ட்ஸ் அளவுக்கு அதிகப்படியான நீரையும் கழிவுப்பொருட்களையும் பிரித்தெடுக்கிறது. இவைதான் சிறுநீராக மாறி வெளியாகிறது.

அடுத்தது, உள்சிறுநீரக குழாய் (யூரிட்டர் டியூப்). சிறுநீரகத்தை சிறுநீரகப்பையுடன் ஒன்றிணைக்கும் கழிவுநீர் வாய்க்கால்'.மூன்றாவது, சிறுநீர்ப்பை. சிறுநீரகத்தில் இருந்து உள்சிறுநீர்க்குழாய் வாயிலாக `படைதிரண்டு' வரும் திரவக்கழிவுகள், இங்குதான் சேகரமாகிறது. உங்களின் மூளை `கெட் அவுட்' என்று கட்டளையிடும் வரையில் அந்த வேண்டாத பொருளை சேமித்து வைக்கவேண்டிய கட்டாயம் சிறுநீர்ப்பைகளுக்கு உண்டு.

கடைசியாக, வெளி சிறுநீரக குழாய்(யூரித்ரா). சிறுநீர்ப்பையில் தேங்கி நிற்கும் கழிவுகளை உடம்பில் இருந்து அடியோடு அப்புறப்படுத்தும் குழாய். பொதுவாக, வெளி சிறுநீரக குழாய் அமைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. இது பெண்களுக்கு வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு-பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது.

நரம்பு மண்டலம்:

சிறுநீர் மண்டலத்தில் நரம்பு மண்டலத்தின் பணி மிகவும் முக்கியமானது. இது சிறுநீர்ப்பையில் பல்வேறு சிறப்பான பணிகளைச் செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் மூலம் துளித்துளியாக சிறுநீர்ப்பைக்கு கொண்டுவந்து சேர்க்க உத்திரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடைய செய்து சிறுநீரை தேக்கிவைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் மூளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளை செய்வது நரம்பு மண்டலமே.

அட்ரினல் சுரப்பி:

இதுதவிர, கிட்னிகளுக்கு மேல்பகுதியில் இருக்கும். அட்ரினல் சுரப்பிகளும், சிறுநீர்ப்பையின் வாய்ப்பகுதியில் இருக்கும் புராஸ்டேட் சுரப்பியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உடம்பில் நீர்ச்சத்து, உயிர்ச்சத்துகளை கண்காணிப்பது, ரத்த அழுத்தம்-ரத்தக்குழாய்களை பராமரிப்பது ஆகிய பணிகளை செய்வது, அட்ரினல் சுரப்பிதான். தேவைப்படும் நேரத்தில் மனிதனின் இதயவேகத்தை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட சுரப்பி இது.

புராஸ்ட்டேட் சுரப்பி:

றுநீர் வெளியேற்றத்தை இயங்குநிலையில் வைத்திருக்கும் சுரப்பி. சிறுநீர்ப்பையின் (பிளாடர்) கீழ்புறத்தில் யூரித்திராவைச் சுற்றி அமைந்துள்ளது. இது ஆண்களிடம் மட்டுமே காணப்படுகிற உறுப்பு! புரஸ்டேட்டில் இருந்து புரஸ்டாடிக் அமிலம் சுரக்கிறது. இதுதான் பிளாடரின் செயல்பாடுகள், சிறுநீர்பை நிறைவை மூளைக்கு தெரியப்படுத்தி வெளியேற்றுவது ஆகிய பணிகளை செய்கிறது.

`தசாவதார' சிறுநீரகம்:

இதயம் தொடர்ந்து துடிப்பது போலவே சிறுநீரகமும் இடைவிடாமல் வடிகட்டும் பணியை செய்கிறது. `ரத்தத்தில் கழிவுப்பொருட்களையும், அதிகப்படியான திரவங்களையும் வெளியேற்றுவதே சிறுநீரகங்களின் வேலை' என்று நிறையபேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல. சிறுநீரகம் தனிநபர் ராணுவம் மட்டுமல்ல, தசாவதானியும்கூட. இது ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளையும் செய்து முடிக்கிறது.

எப்படி தெரியுமா?

சிறுநீரகத்தின் பயன் `மூச்சா' போவதோடு முடிந்துவிடுவதில்லை. உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான சில பணிகளிலும் சிறுநீரகம் முக்கிய பங்காற்றுகிறது. அதாவது, உடலிலுள்ள தேவையற்ற மருந்துப்பொருட்களை வெளியேற்றுவது, ரத்தத்தை சுத்திகரிப்பது, உடம்பின் நீர் மற்றும் அமிலப்பொருளை சீரானஅளவில் வைத்திப்பது திரவங்களின் சமநிலையை பராமரிப்பது.

ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும் ஹார்மோனையும், ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும், எலும்புகளின் உறுதிக்கு பயன்படும் ஹார்மோனையும் சுரக்கசெய்வது உள்ளிட்ட பணிகளில் சிறுநீரகம் தீவிரமாக பங்கேற்கிறது.

சிறுநீரக நோய்கள்:

நமது உடலமைப்பு `மெட்டாபாலிசத்தில்' உணவு ஜீரணம், தன்மயமாதல் சிறப்பாக நடைபெற, எஞ்சியவை வேர்வை, மலம், சிறுநீராக முழுவதும் வெளியேற வேண்டும். இல்லையெனில் பிரச்சினைதான். கழிவுகள் வெளியேற்றப்படாமல் சேர்ந்துகொண்டே இருந்தால் நம் உடல் வேண்டாத கழிவுகளின் குப்பைக் கூடையாகிவிடும்.

உடலை பொறுத்தவரையில் கழிவுகள் என்பவை விஷப்பொருட்கள். அவை ரத்தத்தில் சேர சேர உடல் முழுமையாக சீரழிந்துவிடும். சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரை கொண்டு செல்லும் உள் சிறுநீர்குழாய்களிலோ (யுட்ரஸ்), அல்லது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை உடம்புக்கு வெளியே கொண்டு செல்லும் வெளிசிறுநீர் குழாய்களிலோ (யுரித்ரா) அடைப்பு ஏற்படலாம்.

உள்சிறுநீர்குழாய்களில் ஒரு பக்கம் அடைப்பு வந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதில்லை. ஆனாலும் சிறுநீரகபாதையில் அடைப்பு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கையில் வலி, முக்கி முக்கி சிறுநீர் கழித்தல், அடிவயிற்றில் வலி ஆகிய பிரச்சினைகள் உருவாகும்.

கல்லடைப்பு:

சிறுநீரக மண்டலத்தில் அடைப்பு உருவானால் சிறுநீர் கழிப்பதில் சிரமநிலை, கல்லடைப்பு, நிரந்தர-தற்காலிக சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகி, கடைசியில் இறக்கநேரிடும்.

சிறுநீர் கடுப்பு:

சிறுநீர் கழிப்பதில் சிரமநிலை, சிறுநீர்ப்பாதையில் முள் சொருகியது போல வலி எடுத்தல், சொட்டுச் சொட்டாக நீர் வெளியேறுதல் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

நீரக கல்லடைப்பு:

சிறுநீரகத்தில் கழிவுநீருடன் சோடியம், யூரியா, கால்சியம், ஆக்சலேட் போன்ற தாதுக்கழிவுகள் உண்டு. இவை நாளடைவில் உறைந்து கெட்டிப்படுவதால் கல்லடைப்பு வருகிறது. அடிவயிற்றில் தீராத வலி, சிறுநீருடன் ரத்தம் கலந்துபோவது, மூச்சுத்திணறல், வாந்தி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள்.

சிறுநீரக செயலிழப்பு:

சிறுநீரக செயலிழப்பில் லேசான சிறுநீரகசெயலிழப்பு, அதிக சிறுநீரக செயலிழப்பு என்று 2 வகைகள் உண்டு. ரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2 மி.கி.புள்ளிக்கு கீழே இருந்தால், அது லேசான சிறுநீரக செயலிழப்பு. ரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளிகளில் இருந்தால், அதிக செயலிழப்பு.

இது லேசான சிறுநீரகசெயலிழப்பின் அடுத்தகட்ட நிலைதான். சிறுநீரில் புரத ஒழுக்கு, உயர்ரத்த அழுத்தம், கை-கால்-உடல் வீக்கம், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் ஆகியவைதான், இரண்டுக்கும் முக்கிய அறிகுறிகள். ரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 6 மி.கி.க்கு மேல் இருந்தால். சிறுநீரில் புரதசத்து அதிகளவில் வெளியேறுவது, முக்கிய அறிகுறி.

அடைப்பு:

சிறுநீரக செயலிழப்பு பல்வேறு காரணங்களால் வருகிறது. அதாவது சிறுநீர் மண்டலத்தில் தமனி-கிட்னி, கிட்னி-யுரேட்டர், யுரேட்டர்-பிளாடர், பிளாடர்-யுரித்ரா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இணைப்பு குழாயின் கழுத்ததுப் பகுதியிலோ, அல்லது உள்ளுறுப்புகளிலோ கட்டி அல்லது வீக்கம் வந்தால், சிறுநீர் வெளியேற்றத்தில் தடை வரும்.

அதே மாதிரி சிறுநீரகத்துக்கு மேலிருக்கும் அட்ரினல் சுரப்பி, சிறுநீர்ப்பைக்கு அருகிலிருக்கும் புராஸ்டேட் சுரப்பி ஆகிய இரண்டில் வீக்கம் தென்பட்டாலும் சிறுநீர்தடை பிரச்சினை உருவாகும். மலச்சிக்கல் அதிகமானால் புரஸ்டேட் கிளான்ட், பிளாடர் அதிக அழுத்தம் அடைந்து சிறுநீரகத் தடை ஏற்படும்.

தண்ணீர் மருந்து:

சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு ஒரே அருமருந்து, தண்ணீர்தான். சிறுநீரில் அமிலம்-ïரியாவை நீர்க்கச் செய்து வெளியேற்றும் தன்மை, குடிநீருக்கு உண்டு. அதிகாலையில் எழுந்தவுடன் ஓரிரு டம்ளர் நீர் அருந்திப் பழகுங்கள். வீட்டுக்குள் படியும் தூசி-குப்பை, கழிவுகளை எவ்வாறு பெருக்கி, கழுவி சுத்தப்படுத்துகிறோமோ, அதேமாதிரி நமது உள்ளுறுப்புகளும் கழிவு மண்டல பாதைகளும் நீரால் கழுவப்பட வேண்டும்.

நமது உடலில் 70 விழுக்காடு நீர் இருக்க வேண்டும். மனித உடம்பின் செரிமானம், கழிவுகளை வெளியேற்றுதல் உள்ளிட்ட அத்தியாவசிய இயக்கத்துக்கு தினந்தோறும் 2 லிட்டர்வரை தண்ணீர் தேவை. இதில் பற்றாக்குறை வந்தால், சிறுநீரக நோய்கள் `அழையா விருந்தாளியாக' உடம்புக்குள் வந்து குடியேறிவிடும்.

சிறுநீர் கடுப்பை பொறுத்தவரையில், சர்வரோக நிவாரணி-தண்ணீர் மட்டும்தான். இரவில் வெந்தயத்தை ஊறவிட்டு, அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால், சிறுநீர் கடுப்பு போயே போச்!

கிளினிங் ஏஜெண்ட்:

நமது கழிவு மண்டலத்தில் யூரிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், ஆக்ஸாஸிக் அமிலம் அதிகரிக்கும் தருணங்களில், கிட்னி செயல்பாடுகள் தடைபடலாம். சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். சிறுநீரக கல்லடைப்பில் உருவாகும் வலி, மிகவும் கொடுமையானது. அதாவது இது முதுகின் மேல்புறம்-விலா எலும்புகள் முடியுமிடத்தில் உண்டாகும்.

நம்மில் பலர் சரியான நேரத்தில், சரியான முறையில் தேவையான நீர் குடிக்காமல் போவதால் சிறுநீர் கழிவு மண்டலம் அதிக வெப்பமடைந்து சிறுநீர் அடர்த்தி யூரியாவால் மிகுந்து கிட்னியின் செயல்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கிறது. சிறுநீரகத்தில் சிறுநீர்உறைதலை கட்டுப்படுத்துவதற்காக பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின்-சி, வைட்டமின்-பி6 ஆகிய நுண்ணூட்டச்சத்துக்களும் யூரியா-உப்பு கழிவுகளுடன் கூடவே இருக்கும்.

இதில் குறைபாடு வைந்தால்தான், பிரச்சினை தலைதூக்கும். காலையில் காபி, டீக்குப் பதில் நீர் குடித்தால் அதுவே மிக அருமையான கிளினிங் ஏஜெண்டாக செயல்புரியும். அதிக யூரிக் அமிலத்தை நீர்த்து வெளியேற்றும். சிறுநீரக கல்லடைப்பில் 90 சதம் குணமாககூடியவைதான்.

ஆரம்பநிலையில் இருந்தால் மருந்து-மாத்திரைகளோடு, போதிய அளவுக்கு தண்ணீர் குடித்து வந்தாலே போதும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் வெளியேறலில் வலி, அதிக வியர்வை, சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேற்றம், வெளியேறும் சமயம் வலி, மஞ்சள் கலராகுதல், வெள்ளையாகவும், இரத்த சிவப்பாகவும் வந்தால் நமது கழிவு மண்டலத்தை கவனிக்க வேண்டும்.

மருத்துவ சோதனை:

சிறுநீரக கல்லடைப்பு முற்றியிருந்தாலும் பரவாயில்லை. நோயாளியை `எக்ஸ்ட்ரா கார்ப்பொரல் லித்தோ-டிரிப்ஸி' பரிசோதனைக்கு உட்படுத்தினால் சிறுநீரக பாதையில் தேங்கும் கற்கள், அதிர்வலைகளால் பொடிப்பொடியாக வெளியேறிவிடும்.

* தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்லது.

* போதிய அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

* பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முடிந்தவரையிலும் தவிர்க்கலாம்.

* அவித்த காய்கறி, பருப்பு உணவுகளை சாப்பிடலாம்.

* உணவில் உப்பு-இனிப்பை குறைக்கவும். இறைச்சி-பாலை தவிருங்கள்.

சிறுநீரக கல்லடைப்பு இருப்போர் மருந்து-மாத்திரையோடு மேற்கண்ட உணவுமுறைகளையும் கடைபிடித்து வந்தால் கல்லடைப்பு மட்டுமின்றி அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும்.

சிறுநீரக கட்டி:

ஆரோக்கிய மனிதர் சிறுநீர் பி.எச். அளவு 4.3 முதல் 8 பி.எச். வரை இருக்கலாம். அதற்குமேல் இருந்தால், இது சிறுநீர் வியாதிக்கு (இன்பெக்ஷன்ஸ்) அபாய மணியோசை என்று அர்த்தம். சிறுநீரில் நைட்ரஜன், புïரைன் உணவுகளின் செறிவு மிகுந்திருந்தால், உச்ச அமிலமாகும்.

கால்சியம், பாஸ்பேட் செறிவால், சிறுநீர் காரநிலையை பெறும். இரண்டுமே மோசமானவை. சிறுநீர் சிறப்பாக வெளியேறாவிடில் கழிவுகள் தேங்கி தோல் அரிப்பு, நமைச்சல், கட்டி, வீக்கம் உருவாகலாம். சிறுநீரில் அமிலம், ïரியா மிகுந்தால் நமைச்சல், அரிப்பு உருவாகி சிறுநீர் வெளியேறும் பகுதியை தேய்த்தோ, சொரிந்து விடவோ கை செல்லும்.

சர்க்கரை, உப்பு மிகுந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உடல் தேவை இருக்கும். எக்ஸ்ரே, இண்ட்ரா வீனஸ் பைலோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்று சிறுநீரகங்கள், மண்டல உறுப்புகள் பல நேரம் சோதிக்கப்படுகின்றன. தற்சமயம் லித்தோடிரிப்ஸி மூலம் அதிர்வலைகளைச் செலுத்தி கற்களை உடைத்துப் பவுடராக்கி வெளியேற்றப்படுகிறது.

சிறுநீரக யோகா::: சிறுநீரகப் பிணிகளை, தன்மைகளை இரத்த பிளாஸ்மா கரோட்டீன் மூலம் அறியலாம். மற்றும் பயாப்சி, ரேனோகிராபி, ரேனோகிராம் மூலமாக சிறுநீரக செயல்பாடுகள் தன்மை, அளவுகளை, பிணிகளின் தாக்கங்களை அறியலாம். சிறுநீரில் நாள் ஒன்றுக்கு 40 கிராம் புரோட்டினும், 12 கிராம் நைட்ரோஜனும் மிகுந்தால் டயாலிஸிஸ் தேவைப்படும்.

அடிக்கடி டயாலிஸிஸ் செய்பவர்கள் விரைவில் மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும். "தர்பூசணியால் மஞ்சள் நிற சிறுநீர் மாறும். முந்திரி பழத்தால் சிறுநீர் எரிச்சல் குறையும். எலுமிச்சையால் சிறுநீர் கடுத்தல் மறையும். நெல்லியால் நல்ல நலம் கிட்டும்'' என்கிறது, இயற்கை மருத்துவம். வஜ்ராசனம் சிறுநீர் கழிவு மண்டலங்கள் சிறப்பாக உதவிடுகின்றன.

சர்வாங்காசனம், ஹலாசனம், நவாசனம், பாதஹஸ்தாசனம் போன்றவைகளையும் செய்து வரலாம். "சிறுநீரில் உள்ள யூரியாவில் இருக்கும் நைட்ரஜன், செடிகளுக்கு அருமையான எரு. சிலரது தோல்நோய்களுக்கு சிறுநீரை தடவுவது பண்டைய இந்திய மருத்துவத்தில் உள்ளது.

ரோமானியர்கள் சிறுநீரை பிளீச்சிங் செய்யும் பொருளாக பயன்படுத்தி உள்ளனர். பாக்டீரியாக்களை கொல்லும் குணம் சிறுநீருக்கு உண்டு என்பதால், இது காயங்களுக்கு ஆன்டிசெப்டிக் மருந்தாககூட பயன்பட்டிருக்கிறது'' என்கிறது, பழங்கால மருத்துவ புத்தகங்கள்.

டயாலிசிஸ்:

லேசான சிறுநீரகபாதிப்பு நோயாளிகள் ரத்தஅழுத்த கட்டுப்பாடு, மருந்து-மாத்திரைகள், ஆகாரமாற்றம் ஆகியவற்றை கடைபிடித்துவந்தால் பாதிப்பின் அதிகரிப்பு மட்டுப்படும். அதிக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்படுவோர், சிறுநீரக மருந்து- மாத்திரைகளுடன் ரத்தவிருத்தி, எலும்பு வளர்ச்சிக்கான மருந்துகளையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

சிறுநீரகம் முற்றிலுமாக செயலிழந்தால் முகவீக்கம், கால் வீக்கம், வாந்தி, சிறுநீரில் புரதம் ஒழுகுதல், அதிக ரத்த அழுத்தம், சோர்வு, அசதி, தலைசுற்றல், சிறுநீர் மிகவும் குறைவாக வெளிப்படுதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் தோன்றும். இத்தகைய நோயாளிகளுக்கு கிட்னியின் ஒட்டுமொத்த செயல்திறன் 10 சதத்துக்கும் கீழே வந்துவிடும். இதோடு, ரத்த அளவும் மிகவும் குறைந்துவிடும். இதற்கு டயாலிசிஸ் சிகிச்சைதான், ஒரே வழி.

`டயாலிசிஸ்' என்றால் என்ன?

மனிதனின் உடம்புக்குள் சிறுநீரகம் செய்யவேண்டிய பணிகளை, மருத்துவ சாதனங்களின் வாயிலாக உடம்புக்கு வெளியே செய்வது `டயாலிசிஸ்' . அதாவது நோயாளியின் உடம்பில் இரண்டு ரத்தநாள இணைப்புகளை தேர்வுசெய்வார்கள். இதில் மருத்துவ சாதனம் பொருத்தப்படும்.

நோயாளியின் உடம்புக்குள் ஓடும் ரத்தத்தை முதலாவது ரத்தநாள இணைப்பின் வாயிலாக உறிஞ்சி, சுத்திகரித்து அடுத்த இணைப்பில் நல்ல ரத்தத்தை செலுத்துவார்கள். இதனால் நோயாளியின் சிறுநீரக ஆரோக்கியம் நிலை நிறுத்தப்படுகிறது.

குறைந்த கட்டணம்:

சிறுநீரக நிரந்தர செயலிழப்பு உடையவர்கள் வாரத்துக்கு 2 தடவைகள் வீதம் டயாலிசிஸ் செய்யவேண்டும். ஆனாலும் தனியார் மருத்துவமனைகளில் ரத்த சுத்திகரிப்பு செய்வதற்கு, மாதந்தோறும் ரூ.20 ஆயிரம்வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சை தரப்படுவது நடைமுறையில் உள்ளது.

குறிப்பாக சென்னை மாநகராட்சி சார்பில் நுங்கம்பாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில், குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் பகுப்பாய்வு மையம் சிறப்பாக இயங்கி வருகிறது. சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்து தவிப்போர், ஆரம்ப நிலையிலேயே டயாலிசிஸ் சிகிச்சைக்கு வசதியாக, உடம்பில் ரத்தநாளஇணைப்பு அறுவைசிகிச்சைக்கு தயாராகி விடுங்கள். இதோடு ஈரலை பாதிக்கும் ஹெபடைடிஸ்-டீ தடுப்பூசியையும் போட்டுக்கொள்வது நல்லது.

என்ன செய்யவேண்டும்?

டயாலிசிஸ் செய்வோர் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள்:

உங்களுக்கு கொடுக்கப்பட்ட தண்ணீரின் அளவுக்கேற்ப ஊட்டச்சத்துமிக்க பால், சூப், பாயசம் போன்ற திரவங்களாக குடிக்க முயற்சி செய்யுங்கள். டீ, காப்பி, குளிர்பானங்கள் வேண்டாமே. தாகமான நேரத்தில் எலுமிச்சை பழத்தை வெட்டி சப்பலாம், அல்லது குளிர்ந்த நீரை வாயில்விட்டு கொப்பளித்து துப்பிவிடவேண்டும், விழுங்கக் கூடாது.

மாத்திரை-மருந்துகளை குறைந்த நீரில் சாப்பிடுங்கள். சூடான உணவு திரவங்களை தவிர்க்கவும். உடம்பை முடிந்தவரை குளிர்ச்சியாக வைத்திருக்கவும். நிரந்தர சிறுநீரக செயலிழப்பு என்பது மெல்ல மெல்ல படிப்படியாகதான் ஏற்படுகிறது. ஆரம்பநிலையில் கண்டறிந்தால் குணப்படுத்துவது சுலபம். காலம்கடந்தபிறகு கண்டறிந்தால், மருத்ததுவரால்கூட கிட்னி பாதிப்பை சரிசெய்ய முடியாது.

இதை சாதாரணமாக உடனே கண்டு பிடித்துவிட முடியாது. நோய் முற்றிப்போன நிலையில்கூட அதற்கான அறிகுறிகள் ஏதும் வெளிப்படாமல் இருப்பதுதான், சிறுநீரகசெயலிழப்பு நோயின் மோசமானதன்மை! ஒரு சிறுநீரகம் முழுவதுமாக செயலிழந்தாலும்கூட, எஞ்சிய மற்றொன்று தொடர்ந்து செயல்படுவதால் இந்த நிலை.

நோய் முற்றியோருக்கு சிறுநீரகங்களை ஸ்கேன் செய்து பார்த்தால் மாங்காய் அளவு இருக்கவேண்டிய இடத்தில் சுருங்கிப்போன் பீன்ஸ் விதை அளவு மட்டுமே சிறுநீரகங்கள் இருக்கும்.

நோய்களின் காரணி:

மனித உடலின் ஆதாரசுருதியாக திகழும் சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக உள்ளது. சிறுநீரகம் பழுதையடுத்து ரத்தஅழுத்தம் உள்பட உடலின் பல செயல்பாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும். உள்சிறுநீர்குழாய்களின் அடைப்புக்கு முக்கிய காரணம், சிறுநீரக கற்கள்தான். முதுகு-வயிற்றில் அதிக வலி, சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் ரத்தம் வருதல் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

சிறுநீர்ப்பையின் அடியில் உள்ள ப்ராஸ்டேட் சுரப்பி வீங்கி சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறுவதை தடைசெய்யும். எலும்பு மஜ்ஜையில் இருந்து ரத்தசிவப்பணுக்களை உண்டாக்க உதவும் எரித்ரோபாயிட்டின் என்கிற நொதியை சிறுநீரகங்களே உற்பத்தி செய்கின்றன.

சிறுநீரக செயலிழப்பால் இரத்த சோகை உண்டாகும். எலும்புகளை உறுதியாக வைத்திருக்கும் கால்சிட்ரியால் என்கிற சத்தையும் சிறுநீரகமே உற்பத்தி செய்கிறது. சிறுநீரக செயலிழப்பால் எலும்புகள் பலமிழக்கும். சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது 12 மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலை.

ஆண்டுக்கொரு முறை மைக்ரோ ஆல்புமின் பரிசோதனை செய்துபார்த்தால், சிறுநீரக கோளாறை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும். ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அர்த்தம். 100 மில்லி ரத்தத்தில் 20-40 மிலி.வரை யூரியா இருக்கலாம்.

நோயாளியின் ரத்தத்தில் கிரியாட்டினைன், புரதம் அதிகம் இருப்பது தெரிந்தால், உடனே இ-ஜி-எப்-ஆர் (எஸ்டிமேட்டட் க்ளோமரூலர் பில்ட்ரேசன் ரேட்) பரிசோதனை செய்து பார்த்து சிறுநீர் வடிகட்டியின் செயல்திறனை அறிந்தபின், அதற்கேற்றபடி நிலைகளை வகுத்துகொண்டு அவற்றிற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளலாம்.

சிறுநீரக தானம்:

நீரக நோயாளிகளுக்கு பொட்டாசியமும் புரதமும் முக்கிய எதிரிகள். சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, வாழை, இளநீர், சத்து பானங்களை சாப்பிடக்கூடாது. சிறுநீரகங்களுக்கு கொழுப்பும் எதிரியாகும். கொழுப்பு சிறுநீர் வடிகட்டிகளுக்கு தேவையான ரத்தவோட்டத்தை தடைசெய்யும்.

எனவே உணவில் கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். சோடியம், பொட்டாசியம், புரதம், கொழுப்பு கட்டுப்பாடுகளோடு தண்ணீர் அதிகம் குடித்துவந்தால் பிரச்சினை தீர்ந்தது. நம் உடல் ஆரோக்கியமாக இயங்க ஒரு சிறுநீரகமே போதுமானது.

ஆகவே, எவரும் தாராளமாக சிறுநீரகதானம் தரலாம். நோயாளிக்கு கிட்னி தானம் தர, நெருங்கிய நண்பரோ, உறவினரோ தயாராக இருந்தால் பிரச்சினை இல்லை. இதுதவிர தானம் தருபவரின் ரத்தவகையும், தானம் பெறுபவரின் ரத்தவகையும் ஒரே பிரிவாக இருக்கவேண்டும். முன்பின் தெரியாதவர் கிட்னி தானம் செய்வதை அரசு தடை செய்துவிட்டது.

நிரந்தர சிறுநீரக செயலிழப்பால் அவதிப்படுவோர் உடனடியாக ஏதாவதொரு ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியாது.

கிட்னி பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

* உடம்பில் சர்க்கரை-உப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். ரத்தஅழுத்தத்தை 130/130-க்கு கீழ் வைத்திருக்க வேண்டும்.

* ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக சிறுநீரக பரிசோதனை செய்யவேண்டும்.

* அசைவ உணவை குறையுங்கள். உயர்ரத்தஅழுத்தம், நீரிழிவு ஆகியவை இதயம், மூளை போன்று சிறுநீரகங்களையும் பாதிக்ககூடியவை.

* புகைப்பிடித்தல், புகையிலை உபயோகித்தல் சிறுநீரகங்களை பாதிக்கும். தவிர்க்கவும்.

* சிறிய வலிகளுக்குகூட மருந்து கடையில் வலிமாத்திரை சாப்பிடுவோருக்கு நாளடைவில் சிறுநீரகங்கள் செயலிழக்க வாய்ப்புண்டு.

* கழிவு மண்டலங்களின் செயல்களில் சிக்கல் உருவானால் வாழ்வின் கடைசிக் கட்டம் வரை குழப்ப நிலை நீடிக்கும்.

உண்ணா நோன்பு:

நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையைவிட குறைவாக சுரக்கும். இதனால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடுதலாகிறது. இதை வெளியேற்ற சிறுநீரகங்கள் அதிக வேலை செய்யவேண்டியுள்ளது. இதனால்தான் அவை கூடிய சீக்கிரமே செயலிழக்கிறது. சிறுநீரக நோயாளிகளுக்கு தண்ணீருக்கு அடுத்தபடியாக உயரிய மருந்து-உண்ணா நோன்பு.

வாரத்தில் ஒருநாள் அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடுவதுபோல் நமது வயிறு, குடல், கழிவு மண்டலங்களுக்கு நல்ல ஓய்வு தேவை. உண்ணாவிரதம் இருப்பதால், நம் உடம்பிலுள்ள ஒட்டுமொத்த ரத்தமும், கழிவு மண்டல சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சிறுநீரகக் கழிவுகள் விரைவில் வெளியேற வாய்ப்பு கிட்டுகிறது.

உண்ணாவிரதத்துடன் சூரிய சக்தி குளியலும் எடுத்தால், உடம்பின் திரவக் கழிவுகள் வியர்வையாக வெளியேறிவிடும். இதனால் சிறுநீரகங்களுக்கு போதுமான ஓய்வு கிட்டும். வேலைப் பளுவும் குறைகிறது.

வருமுன் காக்கலாம்:

உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகமாகி வருகிறது என்பது உண்மைதான். ஆனாலும் சிறுநீரகத்தை பற்றிய விவரங்களும், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் பலரும் சரியாக அறிந்து வைத்திருப்பதாக தெரியவில்லை. உலகத்தில் 10 விழுக்காடு பேர் சிறுநீரகப் பிணிகளால் அவதிப்படுகின்றனர்.

இதில் பெரும்பாலானோர் இளைய தலைமுறையினர் என்பதுதான் வேதனையிலும் வேதனை. சிறுநீரகநோய்க்கான சிகிச்சையே வலி மிகுந்ததாக, மனஅழுத்தம் தருவதாக அமைந்திருக்கிறது. சிகிச்சையுடன் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் இயல்பான வாழ்க்கைமுறையை தலைகீழக புரட்டிபோட்டு விடுகின்றன.

சிறுநீரக நோய் என்கிற அசுரனுக்கு ஏழை-பணக்காரன் பேதம் இல்லை. சிறுநீரகங்கள் பழுதடைந்தபிறகான வாழ்க்கைக்கும் நரகவாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசமில்லை என்கிறார்கள், அனுபவஸ்தர்கள். சிறுநீரக கோளாறு ஏற்பட்டால் மரணம்தான் இறுதிமுடிவு என்று எண்ண வேண்டாம்.

கிட்னி, கிட்னிபணிகள், பாதிப்புகளை முழுமையாக அறிந்துகொண்டால் வருமுன் காக்கலாம். வந்தபின்னரும் உயிர்காக்கலாhttps://2img.net/r/ihimg/photo/my-images/36/9e6f96ab5c5d4406b1e47f5.jpg/
சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்! 9e6f96ab5c5d4406b1e47f5
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்! Empty Re: சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்!

Post by முனாஸ் சுலைமான் Sat 1 Oct 2011 - 19:26

நம்மில் பலர் சரியான நேரத்தில், சரியான முறையில் தேவையான நீர் குடிக்காமல் போவதால் சிறுநீர் கழிவு மண்டலம் அதிக வெப்பமடைந்து சிறுநீர் அடர்த்தி யூரியாவால் மிகுந்து கிட்னியின் செயல்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கிறது. சிறுநீரகத்தில் சிறுநீர்உறைதலை கட்டுப்படுத்துவதற்காக பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின்-சி, வைட்டமின்-பி6 ஆகிய நுண்ணூட்டச்சத்துக்களும் யூரியா-உப்பு கழிவுகளுடன் கூடவே இருக்கும்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்! Empty Re: சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 1 Oct 2011 - 19:35

முனாஸ் சுலைமான் wrote:நம்மில் பலர் சரியான நேரத்தில், சரியான முறையில் தேவையான நீர் குடிக்காமல் போவதால் சிறுநீர் கழிவு மண்டலம் அதிக வெப்பமடைந்து சிறுநீர் அடர்த்தி யூரியாவால் மிகுந்து கிட்னியின் செயல்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கிறது. சிறுநீரகத்தில் சிறுநீர்உறைதலை கட்டுப்படுத்துவதற்காக பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின்-சி, வைட்டமின்-பி6 ஆகிய நுண்ணூட்டச்சத்துக்களும் யூரியா-உப்பு கழிவுகளுடன் கூடவே இருக்கும்.

@. @. @. அருமையான பதிவு


சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்! Empty Re: சிறுநீரகம் காப்போம்: சிறப்பாக வாழ்வோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum