சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Yesterday at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Yesterday at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

அசைவம் உண்பது பாவமா..? Khan11

அசைவம் உண்பது பாவமா..?

Go down

அசைவம் உண்பது பாவமா..? Empty அசைவம் உண்பது பாவமா..?

Post by gud boy Wed 12 Oct 2011 - 19:28

அசைவம் உண்பது பாவமா..?

விலங்குகளைக் கொல்வது என்பது கொடிய செயல் எனும் போது முஸ்லீம்கள் ஏன் அசைவ உணவுகளை விரும்பி உண்கிறார்கள்..? அதனால் தான் அவர்கள் வன்முறையில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அந்த கருத்து உண்மையா..? அதைப்பற்றி இங்கே காண்போம். அதற்கு முன்பு அசைவத்தை மனிதர்கள் உண்ணலாமா என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.
இது முஸ்லீம்களை குறை சொல்ல பயன்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று. நான் ஏற்கனவே சொன்னது போல் இஸ்லாம் தர்க்க ரீதியிலும், விஞ்ஞான ரீதியிலும் தன் கொள்கையை விளக்கி அதன் பரிசுத்தத்தை நிலைநாட்டுகிறது. அதே வழியில் மேலே உள்ள குற்றச்சாட்டிற்கும் நான் பொருத்தமான விளக்கத்தை அளிக்கிறேன்.

உணவில் சைவம் என்பது இப்போது Vegetarianism என்ற பெயரில் உலகளவில் பேசப்பட்டுவரும் ஒரு விஷயம். அவர்கள் விலங்குகளை கொல்வதற்கு எதிராகவும், அவற்றின் உரிமை பற்றியும் பேசுகிறார்கள். அவர்கள் இறைச்சி உண்பது பற்றியும், அசைவ உணவுகள் பயன்படுத்துவது பற்றியும் விலங்குகளின் உரிமைகளுக்கு எதிரான விஷயம் என்ற வகையில் பேசி வருகிறார்கள்.

உயிர்களின் மீது கருணை, ஆதரவு காட்டுவதை இஸ்லாம் வரவேற்கிறது. அதே நேரம் இந்த உலகம், அதிலுள்ள குறிப்பிட்ட ஜீவராசிகள், தாவரங்கள் மனித குலத்தின் பயன்பாட்டிற்காக படைக்கப்பட்டது என்பதையும் மறுக்காமல் நிலைநாட்டுகிறது. இந்த உலகத்தில் மனிதனின் பயன்பாட்டிற்கு கிடைக்கும் அனைத்தும் இறைவனின் ஆசியுடன் கூடிய பரிசு ஆகும். ஒரு சில விஷயங்களை பட்டியலிட்டு "அப்படியா" என்று கேட்குமளவுக்கு ஆச்சரியப்படுத்தி விடுகிறேன்.

1. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? ஒரு முஸ்லீம் அசைவத்தை தொட்டுக்கூட பார்க்காத சைவனாக தன் வாழ்நாள் முழுதும் எந்த ஒரு ஆட்சேபணையும் இல்லாமல் இஸ்லாத்தில் இருக்க முடியும். அவனுக்கு அசைவ உணவு என்பது கட்டாயப்படுத்தப்படவில்லை. அதே நேரம் (ஒரு குறிப்பிட்ட இஸ்லாம் தடுக்கும் பறவை, விலங்கினங்களை தவிர) மற்ற விலங்குகளை கொண்ட அசைவ உணவு உண்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது

2. இறைச்சி உணவு மனித உடம்புக்கு சக்தியை கொடுக்கக்கூடியது. அது தான் உடம்புக்கு தேவையான புரோட்டினுக்கு ஆதாரமாக இருக்கிறது. இறைச்சியில் அமினோ அமிலத்தை உள்ளடக்கிய 8 வகையான அடிப்படை மூலங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இறைச்சியில் இரும்புச்சத்து, நியாசின், விட்டமின் B1-ம் கூட அமைந்துள்ளன.

3. மனிதன் இறைச்சி உண்ணலாம் என்பதை இறைவன் கொடுத்த உடலில் உள்ள பற்களின் அமைப்பில் இருந்தே அறியலாம். நீங்கள் சைவத்தை உணவாக உட்கொள்ளும் விலங்குகள் (எ.கா) பசு, ஆடு, ஒட்டகம் ஆகியவற்றை கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். அவற்றிற்கு பற்கள் அமைப்பு ஒத்திருக்கும். அது மட்டுமல்லாமல் சைவ உணவிற்கு ஏற்ற வகையில் கடவாய் பற்கள் தட்டையாக அமைந்திருக்கும். இதுவே அசைவத்தை உண்ணும் புலி, சிங்கம், சிறுத்தை போன்றவற்றின் பற்களை அமைப்பை கண்டால் அவைகளின் அசைவ உணவு பழக்கத்திற்கேற்ப மாமிசத்தை குத்திக்கிழித்து உண்ண ஏதுவாக நீண்ட, கூர்மையான கோரைப்பற்கள் இருக்கும். மனிதனின் பற்களைக்கண்டால் இருவகையான பற்களையும் கொண்ட அமைப்பாக இருக்கும். இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம், நாம் இருவகையான உணவையும் உண்ணலாம் என்பதை.

4. பற்களின் அமைப்பு மட்டுமல்ல, விலங்குகளின் ஜீரண அமைப்பை எடுத்துக் கொள்வோம். சைவ உணவு உண்ணும் விலங்கு அசைவத்தை உண்ணாது. அதே போல் அசைவ உணவு உண்ணும் விலங்கு சைவத்தை உண்ணாது (அதைத்தான் நம் முன்னோர்கள் புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது என்றார்கள்..!!). அப்படி தின்றால் ஜீரண மண்டலத்தில் சிக்கல் ஏற்பட்டு அவை உயிரிழக்க நேரிடும். ஆனால், மனிதன் இரு வகையான உணவை உண்டாலும் ஜீரணிக்க கூடிய ஜீரண மண்டலம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது அசைவம் கூடாது என்று சொல்வது பொருத்தமாக இருக்காது.

5. இந்து மதத்தில் பெரும் எண்ணிக்கையில் அசைவத்தை உண்ணாதவர்கள் உள்ளார்கள். குறிப்பாக இந்து மதத்தின் குறிப்பிட்ட பிரிவைச்சேர்ந்த ஜைனர்கள், பிராமணர்கள் அசைவத்தை உண்பது தன் மதத்திற்கு எதிரானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. இந்து மதம் அசைவம் உண்ண அனுமதித்திருக்கிறது என்பது உண்மை. அதை இந்துக்களின் புனித நூலிலிருந்தே என்னால் எடுத்துச் சொல்ல முடியும். உதாரணத்திற்கு சில:

(அ) இந்து சமய சட்ட நூலான மனு ஸ்மிருதியில் அத்தியாயம் 5, பகுதி 30 -ல் கீழே உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

"The eater who eats the flesh of those to be eaten does nothing bad, even if he does it day after day, for God himself created some to be eaten and some to be eater."

(ஆ) அதே நூலில் அதே அத்தியாயம் 5, பகுதி 31-ல் சொல்லப்படுகிறது..

"Eating meat is right for the sacrifice, this is traditionally known as a rule of the gods."

(இ) அதே அத்தியாயம் 5, பகுதி 39 மற்றும் 40 -ல்...

"God himself created sacrificial animals for sacrifice, ...., therefore killing in a sacrifice is not killing."

(ஈ) மஹாபாரதத்தில் அனுஷாஷன் பர்வா அத்தியாயம் 88 பகுதியில் பீஷ்மருக்கும் யுதிஷ்திடருக்கும் நடைபெறும் உரையாடலில் இறந்த முன்னோர்களின் ஆன்மாக்களை திருப்திபடுத்த எந்த வகையான உணவுகளை படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. அதன் ஆங்கில வடிவம் கீழே:

"Yudhishthira said, "O thou of great puissance, tell me what that object is which, if dedicated to the Pitiris (dead ancestors), become inexhaustible! What Havi, again, (if offered) lasts for all time? What, indeed, is that which (if presented) becomes eternal?"

"Bhishma said, "Listen to me, O Yudhishthira, what those Havis are which persons conversant with the rituals of the Shraddha (the ceremony of dead) regard as suitable in view of Shraddha and what the fruits are that attach to each. With sesame seeds and rice and barely and Masha and water and roots and fruits, if given at Shraddhas, the pitris, O king, remain gratified for the period of a month. With fishes offered at Shraddhas, the pitris remain gratified for a period of two months. With the mutton they remain gratified for three months and with the hare for four months, with the flesh of the goat for five months, with the bacon (meat of pig) for six months, and with the flesh of birds for seven. With venison obtained from those deer that are called Prishata, they remaingratified for eight months, and with that obtained from the Ruru for nine months, and with the meat of Gavaya for ten months, With the meat of the bufffalo their gratification lasts for eleven months. With beef presented at the Shraddha, their gratification, it is said , lasts for a full year. Payasa mixed with ghee is as much acceptable to the pitris as beef. With the meat of Vadhrinasa (a large bull) the gratification of pitris lasts for twelve years. The flesh of rhinoceros, offered to the pitris on anniversaries of the lunar days on which they died, becomes inexhaustible. The potherb called Kalaska, the petals of kanchana flower, and meat of (red) goat also, thus offered, prove inexhaustible.

அப்படியென்றால் முன்னோர்களை திருப்தி படுத்த சிவப்பு இறைச்சி கொண்ட ஆடுகளையும் படைக்க வேண்டும் என்று கூறப்படுவதை தெரிந்து கொள்ளலாம். என் மொழிபெயர்ப்பின் மூலம் அதன் பொருள் மாறிவிட வாய்ப்புள்ளது என்பதால் மேலே உள்ளவற்றை நான் ஆங்கிலேயத்திலேயே கொடுத்துள்ளேன். நான் கொடுத்துள்ளது சரிதானா என்பதை மன்றத்தின் சிறந்த இந்து மத ஆன்மீகவாதியான திரு. சிவசேவகன் அவர்கள் படித்து தன் விளக்கத்தை அளிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவர் ஒரு சைவர் என்பதால் அவர் சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.

7. இந்துத்துவம் என்பது பல கூறுகளாக பிரிந்து தன் சமய நூல்கள் சொல்லும் விஷயங்களை பின்பற்றமுடியாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. உதாரணத்திற்கு இந்து சமயத்தில் அசைவம் உண்ணலாம் சமய நூல்களில் சொல்லப்பட்டிருந்தாலும் அவர்கள் தன்னுடைய சுய விருப்பத்திற்காக பிராமண, ஜைன பிரிவுகளை சேர்ந்த இந்துக்களும், தன் மதத்தை நேசிப்பதாக சொல்லும் பல இந்துக்களும் சைவத்தை மட்டும் உண்ணுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக இன்னும் சில கருத்துக்களை எழுத உள்ளேன்.

உயிர்களை கொல்லக்கூடாது என்பது தான் சைவத்தை வற்புறுத்துவதின் நோக்கம் என்றால் சைவர்கள் உண்ணும் தாவரங்கள் மட்டும் உயிர் இல்லையா..? இன்றைய விஞ்ஞானம் தாவரங்களுக்கும் உயிர் உள்ளதை நிரூபித்துவிட்டது. அதனால் தான் அவைகள் வளர்கின்றன, பூக்கின்றன, காய்க்கின்றன, நம்மைப்போல் இனப்பெருக்கமும் செய்கின்றன. உயிர்களை உணவுக்காக கொல்லாமல் மனிதன் வாழ்வது என்பது நடைமுறைச்சாத்தியம் இல்லை.

உடனே நம்மவர்கள் தாவரங்களுக்கு விலங்குகளைப்போல் ஐந்தறிவு கிடையாது, மிகக்குறைந்த அறிவே இருப்பதால் கொல்வது தவறில்லை என்று தர்க்கம் செய்வார்கள். அந்த தர்க்க ரீதியிலேயே அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுடைய காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத சகோதரன் (மூன்றறிவுடன்) இருக்கிறார். அவர் யாராவது ஒருவரால் கொல்லப்பட்டால் மூன்றறிவு மனிதனைத்தானே கொன்றான் என்று தண்டனையை குறைக்கச் சொல்லி நீதி மன்றத்தில் சொல்வீர்களா..? அப்படி நீங்கள் சொன்னாலும் சட்ட கேட்காது. அறிவு குறைந்த அப்பாவியை கொன்றதற்காக அந்த குற்றவாளிக்கு உண்மையான தண்டனையை விட கொடுமையான தண்டனை கொடுக்கத்தான் பரிந்துரைப்பார்கள். அதனால் தாவரங்களின் குறைந்த அறிவு பற்றிய வாதம் இங்கு எடுபடாது.

சிலரோ, நம்மை போல் தாவரங்களுக்கு வலியும், வேதனையும் கொல்லும் போது இல்லை. அதனால் அது குற்றம் இல்லை என்று விஞ்ஞானம் வழியாக சொல்வார்கள். யார் சொன்னது அப்படி..? உயிர் என்று வரும் போது வலி என்பது பொதுவாகிவிடும். இன்றைய விஞ்ஞானம் தாவரங்களுக்கும் வலியை உணர்கின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவைகள் துன்புறுத்தப்படும் போது நம்மைப் போலவே சத்தமிட்டு அழுகின்றன. இதென்ன கதை என்கிறீர்களா..? கதையல்ல ஐயா.. அறிவியல் உண்மை..!! மனிதனின் உடல் செயல்பாடுகளில் ஏகப்பட்ட குறைபாடுகள் உண்டு. அதில் ஒன்று தான் இயற்கையாக அமைந்த கேட்கும் திறனில் உள்ள குறைபாடும்.

மனிதக்காதின் கேட்கும் திறனானது ஒலி 20 ஹெர்ட்ஸ் கீழோ அல்லது 20,000 ஹெர்ட்ஸ் மேலோ போகும் போது கேட்க இயலாது. ஒரு நாய் 40,000 ஹெர்ட்ஸ் வரை மனிதனை விட கூடுதலாக கேட்க முடியும். அதனால் தான் அருகில் நிற்கும் நமக்கு கேட்காத அந்த நாய் எஜமானனின் விசில் ஒலி நாய்க்கு கேட்டு ஓடுகிறது. அமெரிக்காவில் ஒருவர் கண்டுபிடித்த ஒரு சாதனம் தாவரங்களின் ஒலியை மனிதர்களின் கேட்கும் திறனுக்கு ஒத்துபோகும் படி செய்கிறது. அதை அவர் பயன்படுத்திய போது தாவரங்கள் நீரில்லாமல் இருக்கும் போது அதற்காக அவை அழுவதை தெரிந்து கொள்ள முடிந்தது. நாம் ஒரு தாவரத்தை பார்ப்பதின் மூலம் அதன் தோற்றத்தின் அடிப்படையில் அதன் சந்தோஷம், வேதனையை தெரிந்து கொள்கிறோம். ஆனால், தற்போதைய கண்டுபிடிப்புகள் தாவரம் சந்தோஷம், வேதனையினால் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் தெரிந்து கொள்ள உதவுகின்றன.

உலகில் உள்ள எல்லோரும் சைவத்தை மட்டும் உண்டால் அது விலங்குகளின் கூடுதல் இனப்பெருக்கத்திற்கு வழி செய்துவிடும். அதை பராமரிப்பதில், விவசாயத்தை, நம்மை விலங்குகளிடமிருந்து காப்பதில் பெரும்பிரச்சினை ஏற்படும். இதை தடுக்க இறைவனால் அருளப்பட்ட பரிசே அசைவ உணவு என்பது. அதுமட்டுமல்ல எல்லோரும் சைவ உணவு உண்டால் காய்கறிகளின் தேவை அதிகமாகி, உற்பத்தி சமநிலைப்படாமல் அதன் விலைகள் விண்ணை நோக்கி உயர்ந்து விடும். அசைவ உணவின் விலை அதளபாதாளத்திற்கு தாழ்ந்து விடும். இதையா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்..?

நான் இங்கு எழுதியிருப்பவை அனைத்தும் குற்றம்சாட்டும் முயற்சி அல்ல. நான் செய்வது தவறில்லை என்பதை உங்களைக் கொண்டே நிரூபிக்கும் தன்னிலை விளக்கம். அவ்வளவே..!!

source: http://idhayampesukirathu.blogspot.com/
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum