சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

ஊழல் ரகசியங்களை வெளியிடுவோரை பாதுகாக்க புதிய சட்டம் : பிரதமர் மன்மோகன் சிங் தகவல்  Khan11

ஊழல் ரகசியங்களை வெளியிடுவோரை பாதுகாக்க புதிய சட்டம் : பிரதமர் மன்மோகன் சிங் தகவல்

Go down

ஊழல் ரகசியங்களை வெளியிடுவோரை பாதுகாக்க புதிய சட்டம் : பிரதமர் மன்மோகன் சிங் தகவல்  Empty ஊழல் ரகசியங்களை வெளியிடுவோரை பாதுகாக்க புதிய சட்டம் : பிரதமர் மன்மோகன் சிங் தகவல்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 15 Oct 2011 - 5:29

"அரசு நிர்வாகத்தில், ஒளிவுமறைவற்ற தன்மையை உறுதி செய்ய, தகவல் பெறும் உரிமை மிகவும் பயனுள்ள ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. அதே நேரத்தில், ஊழல் குறித்த ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்துவோரைப் பாதுகாக்க, அடுத்த சில மாதங்களில், சட்டம் கொண்டு வரப்படும்'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மத்திய தகவல் ஆணையத்தின் இரண்டு நாள் மாநாடு, டில்லியில் நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம், தங்களின் நிர்வாகத்தில் சிலர் அத்துமீறி நுழைவதாக, அரசில் உள்ள சில பிரிவினர் நினைக்கின்றனர். அதனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். எந்தச் சூழ்நிலையிலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்படாது. அரசு நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்ற தன்மையை உறுதி செய்யவும், மற்றும் பொறுப்புடைமையை அதிகரிக்கவும், தகவல் பெறும் உரிமை, ஒரு பயனுள்ள கருவியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என, அரசு விரும்புகிறது. அதே நேரத்தில், தகவல் பெறும் உரிமை, வேண்டுமென்றே அரசின் நிர்வாகத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடாது. எனவே, இந்த விஷயத்தில், மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டியது அவசியம். பொது நிர்வாகத்திடம் உள்ள குறைவான வளம், குறிப்பிட்ட கால அளவு மற்றும் தகவல்களை வெளியிடுதல் இடையே, ஒரு சரி சமமான நிலையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும், தகவல் பெறும் உரிமையானது, நேர்மையைச் சீர்குலைப்பதாக அமையக்கூடாது. ஊழல் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடுவோரைப் பாதுகாப்பதற்கான சட்டம், அடுத்த சில மாதங்களில் இயற்றப்படும். இதன் மூலம், பொது நிர்வாகத்தில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துவோருக்கு எதிராக, வன்முறைத் தாக்குதல்கள் நடக்காமல் தடுக்கப்படும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் குவிவதைத் தடுக்க, விதி விலக்கு அல்லாத பிரிவின் கீழ் வரக்கூடிய தகவல்களை எல்லாம், அரசு நிர்வாகத்தினர் பகிரங்கமாக வெளியிட வேண்டும். தகவல் கேட்டு விண்ணப்பங்கள் வரும் வரை காத்திருக்காமல், அரசு நிர்வாகத்தினரே, தானாக முன்வந்து தகவல்களை வெளியிட்டால், அரசு நிர்வாகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் ஏராளமான நேரம் மிச்சமாகும். தகவல் அறியும் உரிமை சட்டம் வந்த பிறகு, அதிகாரிகள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது. எந்தவொரு கோப்பிலும் கையெழுத்திடுவதற்கு முன், நிறைய பயப்படுகின்றனர். அவ்வாறு கையெழுத்துப் போட்டால், அது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியே வந்துவிடுகிறது என நினைப்பதே அதற்கு காரணம். அதிகாரிகள் மத்தியில் ஏற்படும் தயக்கம் காரணமாக அரசாங்க நிர்வாகம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்நிலையை மாற்ற, ஏதாவது செய்திட முடியுமா என்றும் ஆராய்ந்து அதற்குரிய தீர்வை காண வேண்டும். இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.


ஊழல் ரகசியங்களை வெளியிடுவோரை பாதுகாக்க புதிய சட்டம் : பிரதமர் மன்மோகன் சிங் தகவல்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum