Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
5-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தே.மு.தி.க.
4 posters
Page 1 of 1
5-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தே.மு.தி.க.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நிறைய புதிய உண்மைகளை
வெளிப்படுத்தி உள்ளது. அதில் முதன்மையான முதல் உண்மை என்னவென்றால் ஆட்டம்
போட்ட சில கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு பலம் உள்ளது என்பது
வெட்ட வெளிச்சமாகி விட்டதுதான்.
உள்ளாட்சி
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி விட்ட நிலையில் அ.தி.மு.க. அசைக்க
முடியாத, தமிழக மக்கள் மனதில் ஆலமரம் போல வேரூன்றி நிற்கும் கட்சி என்பது
உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 10 மாநகராட்சிகள், 89 நகராட்சிகளை கைப்பற்றி
உள்ளதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் எல்லா திசைகளிலும், எல்லா ஊர்களிலும்,
அ.தி.மு.க. பலம் பொருந்தியதாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வை
பொறுத்த வரை எந்த உதிரி கட்சிகளின் தயவும் தேவையே இல்லை. அ.தி.மு.க.வின்
வாக்கு வங்கி, தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவதை உள்ளாட்சி தேர்தல்
முடிவுகள் சுட்டிக்காட்டி உள்ளன. பா.ம..க ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற
கட்சிகளுக்கு இவ்வளவு நாளும் உயிர் மூச்சு கொடுத்து வந்ததே அ.தி.மு.க.தானோ
என்று நினைக்கும் அளவுக்கு மக்கள் அ.தி.மு.க. பக்கம் அணி திரண்டுள்ளனர்.
எனவே இனி எதிர்காலத்தில் நடக்க உள்ள தேர்தல்களின்போது சில கட்சிகள் “பேரம்”
பேச முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த
வகையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சில கட்சிகளுக்கு பாடம் புகட்டி
உள்ளன. சில கட்சிகள் தங்கள் உயரம் என்ன என்பது தெரியாமலேயே இஷ்டத்துக்கு
துள்ளிக் குதித்தன. அவர்களுக்கு சம்மட்டி அடி விழுந்துள்ளது. .
அ.தி.மு.க.வுக்கு அடுத்தப் படியாக உள்ளாட்சி அமைப்புகளில் அதிகபட்ச இடங்களை
தி.மு.க. கைப்பற்றி உள்ளது. தி.மு.க.வுக்கு உள்ள வாக்கு வங்கிகளில் எந்த
சேதாரமும் ஏற்படவில்லை. இதன்மூலம் தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க.,
தி.மு.க. ஆகிய இரண்டு திராவிட இயக்கங்களுக்கே மக்கள் முன்னுரிமை
கொடுத்துள்ளனர்.
இந்த இரு கட்சிகளுக்கும்
நாங்கள்தான் மாற்று சக்தியாக உள்ளோம் என்று தே.மு.தி.க. கட்சி தலைவர்
விஜயகாந்த் கூறி வந்தார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அதை ஏற்கவில்லை என்பதை
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தே.மு.தி.க.வுக்கு இந்த
தேர்தலில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த தோல்வி, தமிழ்நாட்டில்
அடிமட்ட மக்களிடம் தே.மு.தி.க.வுக்கு அமைப்பு ரீதியாக எந்த பலமும் இல்லை
என்பதை காட்டுகிறது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த
சட்டசபை தேர்தலுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது உண்மை என்று தெரியும். கடந்த
மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தபோது அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க.
கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29
இடங்களில் வென்றது. அதோடு எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்று தி.மு.க.வை
பின்னுக்குத் தள்ளியது. இதைப் பார்த்த மக்களுக்கு தே.மு.தி.க.வும் பெரிய
கட்சிதான் என்ற மன உணர்வு உருவானது.
ஆனால் அந்த
உணர்வு ஐந்தே மாதங்களில் நொறுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க.வும் மற்ற சிறு
கட்சிகளை போல போடு கருப்பட்டி கட்சிதான் என்ற யதார்த்த நிலை இந்த தேர்தலில்
தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சற்று ஆழமாக சிந்தித்தால் கடந்த
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற தே.மு.தி.க.தான் ஏணிப்படியாக
இருந்தது என்ற வாதம் அடிபட்டு போய் உள்ளது. அதற்கு மாறாக அ.தி. மு.க.வுடன்
கூட்டணி வைக்காவிட்டால் விஜயகாந்த் கட்சிக்கு 29 இடங்களில் வெற்றி
கிடைத்திருக்குமா என்ற கேள்விதான் பிரதானமாக எழுந்துள்ளது. அந்த அளவுக்கு
இந்த தேர்தலில் தே.மு.தி.க. சாயம் வெளுத்து விட்டது.
கடந்த
2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது தே.மு.தி.க. வுக்கு 72
நகரசபை கவுன்சிலர்கள், 229 நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள், 250 ஊராட்சி
ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் கிடைத்தனர். இந்த தடவை மாநகராட்சிகளில்
தே.மு.தி.க. மிகப்பெரும் வெற்றியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தே.மு.தி.க.வுக்கு படு தோல்வியே மிஞ்சியுள்ளது. 10 மாநகராட்சிகளில்
தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, அந்த கட்சித் தொண்டர்களால்
ஜீரணிக்க முடியாதபடி உள்ளது.
சென்னை, மதுரை,
திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 8
மாநகராட்சிகளில் தே.மு.தி.க. போட்டியிட்டது. கோவை, வேலூர், ஆகிய இரண்டு
மாநகராட்சியையும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு விட்டுக்
கொடுத்திருந்தது. தே.மு.தி.க. போட்டியிட்ட 8 மாநகராட்சிகளில் சென்னை,
மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் மட்டுமே, அந்த
கட்சியால் 3-வது இடத்தை பிடிக்க முடிந்தது. நெல்லை, திருச்சி, தூத்துக்குடி
ஆகிய மூன்று மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க.வுக்கு
பிறகு 4-வது இடத்தைத்தான் தே.மு.தி.க. வால் பெற முடிந்தது.
மாநகராட்சி
மேயர் பதவி போட்டியில் சென்னையில் மட்டும்தான் தே.மு.தி.க.வுக்கு ஒரு
லட்சத்துக்கும் கூடுதலான ஓட்டு கிடைத்துள்ளது. மற்ற மாநகராட்சிகளில் சில
ஆயிரம் ஓட்டுக்களைத்தான் தே.மு.தி.க.வால் பெற முடிந்தது. மாநகராட்சி
கவுன்சிலர்களும் தே.மு.தி.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை.
10 மாநகராட்சிகளிலும் சேர்த்து தே.மு.தி.க.வுக்கு வெறும் எட்டே எட்டு
கவுன்சிலர்கள்தான் கிடைத்துள்ளனர். கடந்த 2006 தேர்தலில் தே.மு.தி.க. 10
மாநகராட்சி கவுன்சிலர்களை வைத்திருந்தது.
சென்னை
மாநகராட்சியில் 200 கவுன்சிலர்களில் ஒரு இடம், திருச்சி மாநகராட்சியில் 65
இடங்களில் ஒரு இடம் கோவை மாநகராட்சியில் 100 இடங்களில் ஒரு இடம், நெல்லை
மாநகராட்சியில் 55 இடங்களில் ஒரு இடம், திருப்பூர் மாநகராட்சியில் 60
இடங்களில் இரண்டு இடம், வேலூர் மாநகராட்சியில் 60 இடங்களில் இரண்டு இடம்
கிடைத்துள்ளன. அதுவும் திருப்பூர், கோவை, வேலூர், மாநகராட்சிகளில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு கிடைத்ததால்தான் அந்த இடங்கள் தே.மு.
தி.க.வுக்கு கிடைத்தன என்று தெரிய வந்துள்ளது.
100
வார்டுகள் கொண்ட மதுரை மாநகராட்சியில் தே.மு.தி.க.வால் ஒரு கவுன்சிலர்
இடத்தை கூட பெற முடியவில்லை. இத்தனைக்கும் மதுரை மாநகராட்சி விஜயகாந்தின்
பூர்வீக ஊராகும். சொந்த ஊரிலேயே விஜயகாந்த் கட்சிக்கு படு தோல்வி
கிடைத்துள்ளது. கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சியில் 9
கவுன்சிலர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேலம், ஈரோடு,
தூத்துக்குடி மாநகராட்சிகளிலும் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் கூட
கிடைக்கவில்லை.
இதே சோகம் நகர சபைகளிலும்
தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 125 நகரசபைகளில் கூடலூர்,
பல்லடம் ஆகிய 2 நகர சபைகளில் மட்டுமே தே.மு. தி.க. வெற்றி பெற்றுள்ளது.
இந்த இரு நகரசபைகளிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உதவியால்தான் தே.மு.தி.க.
வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் ஒட்டு மொத்த
முடிவுகளை அலசி ஆய்வு செய்ததில் அ.தி.மு.க. முதல் இடத்தில் உள்ளது.
தி.மு.க. இரண்டாவது இடத்தில் உள்ளது. சுயேச்சைகள் அதிக இடங்களில் நின்று
3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
காங்கிரசுக்கு 4-வது
இடம் கிடைத்துள்ளது. தே.மு.தி.க. 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
நகரசபை கவுன்சிலர்கள், டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி இடங்களில்
நாங்கள் 2006-ம் ஆண்டை விட இப்போது அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்
என்று தே.மு.தி.க. தலைவர்கள் சொல்கிறார்கள். இது அவர்களுக்கு அவர்களே
சொல்லிக் கொள்ளும் ஆறுதல் வார்த்தைகளாகத்தான் இருக்கும். மொத்தத்தில்
தே.மு.தி.க. மீது இருந்த மாயை விலகி உள்ளது.
உள்ளாட்சித்
தேர்தலில் இந்த தடவை விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் ஊர், ஊராக
சென்று தீவிர பிரசாரம் செய்தனர்.இருவரும் அ.தி.மு.க., தி.மு.க.வை கடுமையாக
சாடினார்கள். தே.மு.தி.க. மட்டுமே சொன்னதை செய்யும். ஒரு தடவை வாய்ப்பு
தாருங்கள் என்று கேட்டனர். ஆனால் தமிழக மக்கள் தே.மு.தி.க.வை கண்டு
கொள்ளவில்லை. கேப்டன் பொறுப்பை கொடுக்க வாக்காளர்கள் தயங்குகிறார்கள் என்ற
உண்மை தே.மு.தி.க.வுக்கு தற்போது உறுதி பட உணர்த்தப்பட்டுள்ளது.
மாலை மலர்
வெளிப்படுத்தி உள்ளது. அதில் முதன்மையான முதல் உண்மை என்னவென்றால் ஆட்டம்
போட்ட சில கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு பலம் உள்ளது என்பது
வெட்ட வெளிச்சமாகி விட்டதுதான்.
உள்ளாட்சி
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி விட்ட நிலையில் அ.தி.மு.க. அசைக்க
முடியாத, தமிழக மக்கள் மனதில் ஆலமரம் போல வேரூன்றி நிற்கும் கட்சி என்பது
உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 10 மாநகராட்சிகள், 89 நகராட்சிகளை கைப்பற்றி
உள்ளதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் எல்லா திசைகளிலும், எல்லா ஊர்களிலும்,
அ.தி.மு.க. பலம் பொருந்தியதாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வை
பொறுத்த வரை எந்த உதிரி கட்சிகளின் தயவும் தேவையே இல்லை. அ.தி.மு.க.வின்
வாக்கு வங்கி, தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவதை உள்ளாட்சி தேர்தல்
முடிவுகள் சுட்டிக்காட்டி உள்ளன. பா.ம..க ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற
கட்சிகளுக்கு இவ்வளவு நாளும் உயிர் மூச்சு கொடுத்து வந்ததே அ.தி.மு.க.தானோ
என்று நினைக்கும் அளவுக்கு மக்கள் அ.தி.மு.க. பக்கம் அணி திரண்டுள்ளனர்.
எனவே இனி எதிர்காலத்தில் நடக்க உள்ள தேர்தல்களின்போது சில கட்சிகள் “பேரம்”
பேச முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த
வகையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சில கட்சிகளுக்கு பாடம் புகட்டி
உள்ளன. சில கட்சிகள் தங்கள் உயரம் என்ன என்பது தெரியாமலேயே இஷ்டத்துக்கு
துள்ளிக் குதித்தன. அவர்களுக்கு சம்மட்டி அடி விழுந்துள்ளது. .
அ.தி.மு.க.வுக்கு அடுத்தப் படியாக உள்ளாட்சி அமைப்புகளில் அதிகபட்ச இடங்களை
தி.மு.க. கைப்பற்றி உள்ளது. தி.மு.க.வுக்கு உள்ள வாக்கு வங்கிகளில் எந்த
சேதாரமும் ஏற்படவில்லை. இதன்மூலம் தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க.,
தி.மு.க. ஆகிய இரண்டு திராவிட இயக்கங்களுக்கே மக்கள் முன்னுரிமை
கொடுத்துள்ளனர்.
இந்த இரு கட்சிகளுக்கும்
நாங்கள்தான் மாற்று சக்தியாக உள்ளோம் என்று தே.மு.தி.க. கட்சி தலைவர்
விஜயகாந்த் கூறி வந்தார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அதை ஏற்கவில்லை என்பதை
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தே.மு.தி.க.வுக்கு இந்த
தேர்தலில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த தோல்வி, தமிழ்நாட்டில்
அடிமட்ட மக்களிடம் தே.மு.தி.க.வுக்கு அமைப்பு ரீதியாக எந்த பலமும் இல்லை
என்பதை காட்டுகிறது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த
சட்டசபை தேர்தலுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது உண்மை என்று தெரியும். கடந்த
மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தபோது அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க.
கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29
இடங்களில் வென்றது. அதோடு எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்று தி.மு.க.வை
பின்னுக்குத் தள்ளியது. இதைப் பார்த்த மக்களுக்கு தே.மு.தி.க.வும் பெரிய
கட்சிதான் என்ற மன உணர்வு உருவானது.
ஆனால் அந்த
உணர்வு ஐந்தே மாதங்களில் நொறுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க.வும் மற்ற சிறு
கட்சிகளை போல போடு கருப்பட்டி கட்சிதான் என்ற யதார்த்த நிலை இந்த தேர்தலில்
தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சற்று ஆழமாக சிந்தித்தால் கடந்த
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற தே.மு.தி.க.தான் ஏணிப்படியாக
இருந்தது என்ற வாதம் அடிபட்டு போய் உள்ளது. அதற்கு மாறாக அ.தி. மு.க.வுடன்
கூட்டணி வைக்காவிட்டால் விஜயகாந்த் கட்சிக்கு 29 இடங்களில் வெற்றி
கிடைத்திருக்குமா என்ற கேள்விதான் பிரதானமாக எழுந்துள்ளது. அந்த அளவுக்கு
இந்த தேர்தலில் தே.மு.தி.க. சாயம் வெளுத்து விட்டது.
கடந்த
2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது தே.மு.தி.க. வுக்கு 72
நகரசபை கவுன்சிலர்கள், 229 நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள், 250 ஊராட்சி
ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் கிடைத்தனர். இந்த தடவை மாநகராட்சிகளில்
தே.மு.தி.க. மிகப்பெரும் வெற்றியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தே.மு.தி.க.வுக்கு படு தோல்வியே மிஞ்சியுள்ளது. 10 மாநகராட்சிகளில்
தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, அந்த கட்சித் தொண்டர்களால்
ஜீரணிக்க முடியாதபடி உள்ளது.
சென்னை, மதுரை,
திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 8
மாநகராட்சிகளில் தே.மு.தி.க. போட்டியிட்டது. கோவை, வேலூர், ஆகிய இரண்டு
மாநகராட்சியையும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு விட்டுக்
கொடுத்திருந்தது. தே.மு.தி.க. போட்டியிட்ட 8 மாநகராட்சிகளில் சென்னை,
மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் மட்டுமே, அந்த
கட்சியால் 3-வது இடத்தை பிடிக்க முடிந்தது. நெல்லை, திருச்சி, தூத்துக்குடி
ஆகிய மூன்று மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க.வுக்கு
பிறகு 4-வது இடத்தைத்தான் தே.மு.தி.க. வால் பெற முடிந்தது.
மாநகராட்சி
மேயர் பதவி போட்டியில் சென்னையில் மட்டும்தான் தே.மு.தி.க.வுக்கு ஒரு
லட்சத்துக்கும் கூடுதலான ஓட்டு கிடைத்துள்ளது. மற்ற மாநகராட்சிகளில் சில
ஆயிரம் ஓட்டுக்களைத்தான் தே.மு.தி.க.வால் பெற முடிந்தது. மாநகராட்சி
கவுன்சிலர்களும் தே.மு.தி.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை.
10 மாநகராட்சிகளிலும் சேர்த்து தே.மு.தி.க.வுக்கு வெறும் எட்டே எட்டு
கவுன்சிலர்கள்தான் கிடைத்துள்ளனர். கடந்த 2006 தேர்தலில் தே.மு.தி.க. 10
மாநகராட்சி கவுன்சிலர்களை வைத்திருந்தது.
சென்னை
மாநகராட்சியில் 200 கவுன்சிலர்களில் ஒரு இடம், திருச்சி மாநகராட்சியில் 65
இடங்களில் ஒரு இடம் கோவை மாநகராட்சியில் 100 இடங்களில் ஒரு இடம், நெல்லை
மாநகராட்சியில் 55 இடங்களில் ஒரு இடம், திருப்பூர் மாநகராட்சியில் 60
இடங்களில் இரண்டு இடம், வேலூர் மாநகராட்சியில் 60 இடங்களில் இரண்டு இடம்
கிடைத்துள்ளன. அதுவும் திருப்பூர், கோவை, வேலூர், மாநகராட்சிகளில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு கிடைத்ததால்தான் அந்த இடங்கள் தே.மு.
தி.க.வுக்கு கிடைத்தன என்று தெரிய வந்துள்ளது.
100
வார்டுகள் கொண்ட மதுரை மாநகராட்சியில் தே.மு.தி.க.வால் ஒரு கவுன்சிலர்
இடத்தை கூட பெற முடியவில்லை. இத்தனைக்கும் மதுரை மாநகராட்சி விஜயகாந்தின்
பூர்வீக ஊராகும். சொந்த ஊரிலேயே விஜயகாந்த் கட்சிக்கு படு தோல்வி
கிடைத்துள்ளது. கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சியில் 9
கவுன்சிலர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேலம், ஈரோடு,
தூத்துக்குடி மாநகராட்சிகளிலும் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் கூட
கிடைக்கவில்லை.
இதே சோகம் நகர சபைகளிலும்
தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 125 நகரசபைகளில் கூடலூர்,
பல்லடம் ஆகிய 2 நகர சபைகளில் மட்டுமே தே.மு. தி.க. வெற்றி பெற்றுள்ளது.
இந்த இரு நகரசபைகளிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உதவியால்தான் தே.மு.தி.க.
வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் ஒட்டு மொத்த
முடிவுகளை அலசி ஆய்வு செய்ததில் அ.தி.மு.க. முதல் இடத்தில் உள்ளது.
தி.மு.க. இரண்டாவது இடத்தில் உள்ளது. சுயேச்சைகள் அதிக இடங்களில் நின்று
3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
காங்கிரசுக்கு 4-வது
இடம் கிடைத்துள்ளது. தே.மு.தி.க. 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
நகரசபை கவுன்சிலர்கள், டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி இடங்களில்
நாங்கள் 2006-ம் ஆண்டை விட இப்போது அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்
என்று தே.மு.தி.க. தலைவர்கள் சொல்கிறார்கள். இது அவர்களுக்கு அவர்களே
சொல்லிக் கொள்ளும் ஆறுதல் வார்த்தைகளாகத்தான் இருக்கும். மொத்தத்தில்
தே.மு.தி.க. மீது இருந்த மாயை விலகி உள்ளது.
உள்ளாட்சித்
தேர்தலில் இந்த தடவை விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் ஊர், ஊராக
சென்று தீவிர பிரசாரம் செய்தனர்.இருவரும் அ.தி.மு.க., தி.மு.க.வை கடுமையாக
சாடினார்கள். தே.மு.தி.க. மட்டுமே சொன்னதை செய்யும். ஒரு தடவை வாய்ப்பு
தாருங்கள் என்று கேட்டனர். ஆனால் தமிழக மக்கள் தே.மு.தி.க.வை கண்டு
கொள்ளவில்லை. கேப்டன் பொறுப்பை கொடுக்க வாக்காளர்கள் தயங்குகிறார்கள் என்ற
உண்மை தே.மு.தி.க.வுக்கு தற்போது உறுதி பட உணர்த்தப்பட்டுள்ளது.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 5-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தே.மு.தி.க.
ஹி ஹி வடிவேலுவின் வயிற்றெரிச்சல் :!.: :!.:அப்துல்லாஹ் wrote:ஹி ஹி ஹி காமெடிக் கேப்டன்...
இவரு இம்புட்டுதேன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 5-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தே.மு.தி.க.
ஆளுங்கட்சி ,தகிடு திட்டத்தோடு திமுக பெற்ற வெற்றி ,எப்போதும் அதுக்கு உள்ள பலம் குறைவில்லை என்பதை காட்டினாலும் ,
திமுக இன்னும் உழைக்க வேண்டும் .வரும் தேர்தலுக்கு இது வாய்ப்பு .காங்கிரசு மற்ற உதிர் கட்சிகள் ,தங்கள் உண்மை நிலையை உணர்ந்தால் நலமே .
திமுக இன்னும் உழைக்க வேண்டும் .வரும் தேர்தலுக்கு இது வாய்ப்பு .காங்கிரசு மற்ற உதிர் கட்சிகள் ,தங்கள் உண்மை நிலையை உணர்ந்தால் நலமே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 5-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தே.மு.தி.க.
@. @.kalainilaa wrote:ஆளுங்கட்சி ,தகிடு திட்டத்தோடு திமுக பெற்ற வெற்றி ,எப்போதும் அதுக்கு உள்ள பலம் குறைவில்லை என்பதை காட்டினாலும் ,
திமுக இன்னும் உழைக்க வேண்டும் .வரும் தேர்தலுக்கு இது வாய்ப்பு .காங்கிரசு மற்ற உதிர் கட்சிகள் ,தங்கள் உண்மை நிலையை உணர்ந்தால் நலமே .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 5-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தே.மு.தி.க.
எப்போதுமே உள்ளாட்சி தேர்தலில் மக்கள் மாற்றி வாக்களிக்க மாட்டார்கள் ஏனென்றால் மாற்றி வாக்களித்தால் இருவருக்கும் சண்டை நடக்குமேயன்றி வேலை ஒன்றும் நடக்காது ..அந்த வகையில் அ தி மு க வெற்றீ பெற்றது ஒன்றும் ஆச்சர்யம் அல்ல ..ஆனால் இதில் கருப்பு சாயம் வெளுத்து இருப்பது நல்ல அறிகுறி ..குடிகார தலைவன் விஜயகாந்து இதோடு அரசியலில் இருந்து விலகினால் நல்லது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» ஜைலுக்குல் தள்ளப்பட்ட வக்கீல்
» ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: டோனி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
» முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்: மூன்றாவது இடத்துக்கு இறங்கிய சென்னை!
» அன்னா ஹசாரே சுதந்திரமாக விரும்பும் இடத்துக்கு செல்லலாம்: உள்துறை செயலாளர் பேட்டி
» பள்ளி வாசலை வேறு இடத்துக்கு மாற்றச்சொல்ல பிரதமருக்கு எந்த தகுதியும் இல்லை எஸ்.எல்.முனாஸ்
» ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: டோனி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
» முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்: மூன்றாவது இடத்துக்கு இறங்கிய சென்னை!
» அன்னா ஹசாரே சுதந்திரமாக விரும்பும் இடத்துக்கு செல்லலாம்: உள்துறை செயலாளர் பேட்டி
» பள்ளி வாசலை வேறு இடத்துக்கு மாற்றச்சொல்ல பிரதமருக்கு எந்த தகுதியும் இல்லை எஸ்.எல்.முனாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|