Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
2013: கல்வி முறையில் புதிய மாற்றம்:
Page 1 of 1
2013: கல்வி முறையில் புதிய மாற்றம்:
உயர் தரத்தில் கற்கும் துறையை 9ம் வகுப்பில் தெரிவு செய்யமுடியும்
ஆசிரியர்களுக்கு 7 மொழிகளில் பயிற்சி
க. பொ. த. உயர்தரத்தில் தாம் கற்க விரும்பும் பாடப் பிரிவில் உள்ளடங்கும் பாடநெறிகளை மாணவர்கள் தரம் ஒன்பதில் இருந்தே தெரிவு செய்து கற்றல் அவசியம் என தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, மாணவர்கள் க. பொ. த. சாதாரணதர பரீடசையின் போது தாம் உயர் தரத்தில் பயிலவுள்ள பாடப் பிரிவில் உள்ளடங்கும் மூன்று பாடங்களுக்கும் தோற்றுதல் அவசியம் எனவும் தெரிவித்தார். க. பொ. த. சாதாரண தரத்தில் ஆறு பாடங்கள் கட்டாய பாடங்களாக்கப்பட்டு ள்ளன. இக் கட்டாய பாடங்களுடன் இணைந்ததாக தாம் பயிலவுள்ள உயர்தர பிரிவில் அடங்கும் மூன்று பாடங்களையும் சேர்த்து மொத்தமாக ஒன்பது பாடங்களுக்கு மாணவர்கள் தோற்றுதல் அவசியம்.
இதன் அடிப்படையில் கட்டாய பாட ங்களான தாய்மொழி (தமிழ், அல்லது சிங்களம்), இரண்டாம் மொழி யான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சமூக வியல், சமயம் என்பவற்றுடன் மாணவர்கள் தாம் உயர் தரத்தில் பயில விரும்பும் பாடப் பிரிவில் உள்ளடங்கும் மூன்று பிரதான பாடநெறிகளுக்கும் தமது சாதாரண தரப் பரீட்சையின் போது தோற்றுதல் அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உதாரணமாக விஞ்ஞானப் பிரிவை க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு தெரிவு செய்ய விரும்பும் மாணவன், உயிரியல், இரசாயனவியல் மற்றும் பெளதீகவியல் ஆகிய மூன்று பாடங்களையும் தரம் 09 முதலே கற்பதன் மூலம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அடிப்படை ஆறு பாடங்களுடன் குறித்து மூன்று பாடங்களுமாக மொத்தமாக ஒன்பது பாடங்களில் பரீட்சைக்குத் தோற்ற வேண்டுமெனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்தார்.
இக்குறித்த பாட திட்டத்தை 2013 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற ஆலோசனைக் குழு இறுதி அறிக்கையினை தயாரித்து வருவதாகவும் விரைவில் இது பாராளு மன்றத்தில் சட்ட மூலமாக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
தற்போது க. பொ. த. உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம், வணிகம், கலை, தொழில்நுட்பம் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் உள்ளன. இப்புதிய திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மாணவர்கள், உயர் தரத்திற்குரிய பாடங்களை கற்பதற்கு க. பொ. த. சாதாரணப் பரீட்சை முடி வடையும்வரை காத்திருக்கத் தேவையில்லை. தரம் 9 தொடக்கம் உயர்தரத்தில் தாம் விரும்பிய பாடநெறியை தெரிவு செய்து கற்க முடியும். இதன் மூலம் இவர்கள் குறித்த ஒரு பாடப் பிரிவு தொடர்பான அடிப்படையறிவை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் அமைச்சர் பந்துல சுட்டிக்காட்டினார்.
பாடசாலை முடிவடையும் நேரம் :
கொழும்பில் பாடசாலைகள் முடிவ டையும் நேரத்தை மூன்று மணி வரை அதிகரிக்கும் தீர்மானம் ஏதேனும் உள் ளதா? என கேள்வியெழுப்பியபோது, பாடசாலைகளை மாலை 5 மணி வரை நடத்துவதற்கு அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாகவும் மாணவர்களுக்கு கூடுதலான அறிவினைப் பெற்றுக் கொடு க்கும் நோக்கில் அதிபர்கள் விரும்பினால் 3 மணி வரையோ 4 மணி வரையோ அல்லது 5 மணி வரையிலோ பாடசாலை யினை நடத்த முடியும்.
தூர இடங்களைச் சேர்ந்த பல பாட சாலைகளில் மாலை வரை ஆங்கில பேச்சுப் பயிற்சி, தொழில்நுட்பம் ஆகியன கற்பிக் கப்படுகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் இதற்கு முழு மனதுடன் ஒத்துழைப்பு வழங்குவதுடன் எதிர்காலத் திலும் வழங்குவரென எதிர்பார்க்கிறேன் எனவும் அமைச்சர் கூறினார்.
வெளிநாட்டு மொழிகள்
க. பொ. த. உயர்தரத்தில் கலைப் பிரிவில் வெளிநாட்டு மொழிகள் ஒரு பாடமாக இருந்த போதிலும் போதிய வளங்கள் இல்லாமை காரணமாக அவை சரியாக கற்பிக்கப்படுவதில்லை. ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய நாட்டில் 07 மொழிகளை வளர்க்க கல்வி அமைச்சு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.
இதன்படி ஆங்கிலம், ஜப்பானிய மொழி, ஜேர்மனிய மொழி, ஹிந்தி, சைன்னிஸ், கொரியன், ரஷ்யன் ஆகிய மொழிகள் பாடசாலை மட்டத்தில் கற் பிக்கப்படவுள்ளன. இதற்கான விரிவுரை யாளர்களை அந்தந்த நாடுகளிலிருந்து வரவ ழைப்பதற்காக குறிப்பிட்ட தூதரகங்களுடன் கலந்துரையாடி வருகிறோம்.
ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க எதிர்வரும் ஜனவரி முதல் ஆசிரியர்களுக்கென விசேட மொழிப் பயிற்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய கல்வி நிறுவனத்தில் வார இறுதி நாட்களில் இலவசமாக சீன மொழி, கொரிய மொழி, ரஷ்ய மொழி, ஜப்பானிய மொழி ஆகியன கற்பிக்கப் படவுள்ளன. 35 வயதிற்கு குறைந்த ஆசிரியர்கள் இதற்காக தமது பெயர்களை பதிவு செய்து கொள்ள முடியும். இது ஒரு வருடத்திற்கான பயிற்சி நெறி யெனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
ஆசிரியர்களுக்கு 7 மொழிகளில் பயிற்சி
க. பொ. த. உயர்தரத்தில் தாம் கற்க விரும்பும் பாடப் பிரிவில் உள்ளடங்கும் பாடநெறிகளை மாணவர்கள் தரம் ஒன்பதில் இருந்தே தெரிவு செய்து கற்றல் அவசியம் என தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, மாணவர்கள் க. பொ. த. சாதாரணதர பரீடசையின் போது தாம் உயர் தரத்தில் பயிலவுள்ள பாடப் பிரிவில் உள்ளடங்கும் மூன்று பாடங்களுக்கும் தோற்றுதல் அவசியம் எனவும் தெரிவித்தார். க. பொ. த. சாதாரண தரத்தில் ஆறு பாடங்கள் கட்டாய பாடங்களாக்கப்பட்டு ள்ளன. இக் கட்டாய பாடங்களுடன் இணைந்ததாக தாம் பயிலவுள்ள உயர்தர பிரிவில் அடங்கும் மூன்று பாடங்களையும் சேர்த்து மொத்தமாக ஒன்பது பாடங்களுக்கு மாணவர்கள் தோற்றுதல் அவசியம்.
இதன் அடிப்படையில் கட்டாய பாட ங்களான தாய்மொழி (தமிழ், அல்லது சிங்களம்), இரண்டாம் மொழி யான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சமூக வியல், சமயம் என்பவற்றுடன் மாணவர்கள் தாம் உயர் தரத்தில் பயில விரும்பும் பாடப் பிரிவில் உள்ளடங்கும் மூன்று பிரதான பாடநெறிகளுக்கும் தமது சாதாரண தரப் பரீட்சையின் போது தோற்றுதல் அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உதாரணமாக விஞ்ஞானப் பிரிவை க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு தெரிவு செய்ய விரும்பும் மாணவன், உயிரியல், இரசாயனவியல் மற்றும் பெளதீகவியல் ஆகிய மூன்று பாடங்களையும் தரம் 09 முதலே கற்பதன் மூலம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அடிப்படை ஆறு பாடங்களுடன் குறித்து மூன்று பாடங்களுமாக மொத்தமாக ஒன்பது பாடங்களில் பரீட்சைக்குத் தோற்ற வேண்டுமெனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்தார்.
இக்குறித்த பாட திட்டத்தை 2013 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற ஆலோசனைக் குழு இறுதி அறிக்கையினை தயாரித்து வருவதாகவும் விரைவில் இது பாராளு மன்றத்தில் சட்ட மூலமாக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
தற்போது க. பொ. த. உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம், வணிகம், கலை, தொழில்நுட்பம் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் உள்ளன. இப்புதிய திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மாணவர்கள், உயர் தரத்திற்குரிய பாடங்களை கற்பதற்கு க. பொ. த. சாதாரணப் பரீட்சை முடி வடையும்வரை காத்திருக்கத் தேவையில்லை. தரம் 9 தொடக்கம் உயர்தரத்தில் தாம் விரும்பிய பாடநெறியை தெரிவு செய்து கற்க முடியும். இதன் மூலம் இவர்கள் குறித்த ஒரு பாடப் பிரிவு தொடர்பான அடிப்படையறிவை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் அமைச்சர் பந்துல சுட்டிக்காட்டினார்.
பாடசாலை முடிவடையும் நேரம் :
கொழும்பில் பாடசாலைகள் முடிவ டையும் நேரத்தை மூன்று மணி வரை அதிகரிக்கும் தீர்மானம் ஏதேனும் உள் ளதா? என கேள்வியெழுப்பியபோது, பாடசாலைகளை மாலை 5 மணி வரை நடத்துவதற்கு அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாகவும் மாணவர்களுக்கு கூடுதலான அறிவினைப் பெற்றுக் கொடு க்கும் நோக்கில் அதிபர்கள் விரும்பினால் 3 மணி வரையோ 4 மணி வரையோ அல்லது 5 மணி வரையிலோ பாடசாலை யினை நடத்த முடியும்.
தூர இடங்களைச் சேர்ந்த பல பாட சாலைகளில் மாலை வரை ஆங்கில பேச்சுப் பயிற்சி, தொழில்நுட்பம் ஆகியன கற்பிக் கப்படுகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் இதற்கு முழு மனதுடன் ஒத்துழைப்பு வழங்குவதுடன் எதிர்காலத் திலும் வழங்குவரென எதிர்பார்க்கிறேன் எனவும் அமைச்சர் கூறினார்.
வெளிநாட்டு மொழிகள்
க. பொ. த. உயர்தரத்தில் கலைப் பிரிவில் வெளிநாட்டு மொழிகள் ஒரு பாடமாக இருந்த போதிலும் போதிய வளங்கள் இல்லாமை காரணமாக அவை சரியாக கற்பிக்கப்படுவதில்லை. ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய நாட்டில் 07 மொழிகளை வளர்க்க கல்வி அமைச்சு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.
இதன்படி ஆங்கிலம், ஜப்பானிய மொழி, ஜேர்மனிய மொழி, ஹிந்தி, சைன்னிஸ், கொரியன், ரஷ்யன் ஆகிய மொழிகள் பாடசாலை மட்டத்தில் கற் பிக்கப்படவுள்ளன. இதற்கான விரிவுரை யாளர்களை அந்தந்த நாடுகளிலிருந்து வரவ ழைப்பதற்காக குறிப்பிட்ட தூதரகங்களுடன் கலந்துரையாடி வருகிறோம்.
ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க எதிர்வரும் ஜனவரி முதல் ஆசிரியர்களுக்கென விசேட மொழிப் பயிற்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய கல்வி நிறுவனத்தில் வார இறுதி நாட்களில் இலவசமாக சீன மொழி, கொரிய மொழி, ரஷ்ய மொழி, ஜப்பானிய மொழி ஆகியன கற்பிக்கப் படவுள்ளன. 35 வயதிற்கு குறைந்த ஆசிரியர்கள் இதற்காக தமது பெயர்களை பதிவு செய்து கொள்ள முடியும். இது ஒரு வருடத்திற்கான பயிற்சி நெறி யெனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
Similar topics
» விஏஓ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் ; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
» 3 தேர்வு மதிப்பெண் கூட்டப்படும்: புத்தக சுமையை குறைக்க பள்ளி தேர்வு முறையில் மாற்றம்; சட்டசபையில் ஜெ
» புதிய முறையில் மின்சாரம்: அமெரிக்காவில் தமிழக இன்ஜினீயர் சாதனை!
» காலநிலை மாற்றம் தொடர்பில் புதிய தீர்வு
» மரணத்தின் பின்னர் உடலை தகனம் செய்யும் முறையில் புதிய பரிணாமம்!
» 3 தேர்வு மதிப்பெண் கூட்டப்படும்: புத்தக சுமையை குறைக்க பள்ளி தேர்வு முறையில் மாற்றம்; சட்டசபையில் ஜெ
» புதிய முறையில் மின்சாரம்: அமெரிக்காவில் தமிழக இன்ஜினீயர் சாதனை!
» காலநிலை மாற்றம் தொடர்பில் புதிய தீர்வு
» மரணத்தின் பின்னர் உடலை தகனம் செய்யும் முறையில் புதிய பரிணாமம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|