Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
அரபு லீக்கில் இருந்து சிரியா இடைநீக்கம்;; தூதரக உறவுகள் நிறுத்தம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அரபு லீக்கில் இருந்து சிரியா இடைநீக்கம்;; தூதரக உறவுகள் நிறுத்தம்
அரபு லீக்கில் இருந்து சிரியா இடைநீக்கம்;; தூதரக உறவுகள் நிறுத்தம்
சிரியாவில் தொடர்ந்தும் வன்முறை நீடித்துவரும் நிலையில் அரபு லீக் அமைப்பில் இருந்து சிரிய அரசு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் அரபு லீக்கில் உள்ள பெரும்பான்மை நாடுகள் சிரியாவுக்கு எதிராக வாக்களித்தன.
சிரியாவில் தொடரும் வன்முறைகளை கட்டுப்படுத்த அரபு லீக் முன்வைத்த தீர்வுத் திட்டத்தை சிரிய அரசு புறக்கணித்ததைத் தொடர்ந்தே அரபு லீக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி தமது அங்கத்துவ நாடுகள் சிரியா மீதான தூதரக உறவை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அரபு லீக் சிரியா உடனடியாக வன்முறைய முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளது.
எனினும் அரபு லீக் எடுத்துள்ள இந்த முடிவுக்கு சிரிய அரசு கடும் கண்டத்தை வெளியிட்டுள்ளது. மேற்கத்தேய அமெரிக்க திட்டத்திற்கமைய அரபு லீக் செயற்படுவதாக சிரியாவுக்கான அரபு லீக் தூதுவர் யூசுப் அஹமட் அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் குறிப்பிட்டார்.
அரபு லீக்கின் இந்த முடிவுக்கு எதிராக சிரிய தலை நகர் டமஸ்கஸில் அரச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் போது சிரியாவுக்கான சவூதி அரேபிய தூதுவராலயமும் தாக்கப்பட்டுள்ளது. சிரியாவுக்கு எதிராக சவூதி அரேபியாவும் அரபு லீக்கில் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிரியாவுக்கு எதிரான அரபு லீக் தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. மற்றும் பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹக் வரவேற்றுள்ளனர்.
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக பல மாதங்க ளாக மக்கள் ஆர்ப்பா ட்டம் நடத்தி வருகின் றனர். இந்த ஆர்ப்பா ட்டங்கள் மீது சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட வன்முறை களில் 3,500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அண்மைய ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர அரபு லீக்கு அண்மையில் முன்வைத்த தீர்வுத்திட் டத்தில் பொதுமக்கள் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சிரிய அரசுக்கு கோரப்பட்டது. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கைதானோரை விடுவிக்க வேண்டும். மற்றும் வெளிநாட்டு ஊடகவியலா ளர்களுக்கு சிரியாவில் அனுமதி அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த தீர்வுத்திட்டங்களை ஏற்றுக்கொண்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத், அதனை நடைமுறைப்படுத்த தவறியுள்ளார். நேற்று முன்தினம் ஹோம்ஸ் நகரில் நடந்த வன்முறையில் 12 பேர் கொல்லப்பட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே சிரியாவை இடைநீக்கம் செய்ய அரபு லீக் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பில் 18 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட அரபு லீக் அமைப்பில் 14 வாக்குகள் ஆதரவாக பதிவாயின. யெமன், லெபனான் ஆகிய நாடுகள் மாத்திரமே இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. ஈராக் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டது. இதற்கமைய சிரியா மீதான இடைநீக்க தீர்மானம் வரும் புதன்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக கட்டார் பிரதமர் ஷெய்க் ஹமத் பின் ஐஸ்ஸிம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிரியாவில் ஆட்சி மாற்றம் குறித்து அரபு லீக் அந்நாட்டு எதிர்த்தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் கட்டார் பிரதமர் குறிப்பிட்டார்.
அதேபோன்று சிரியாவில் வன்முறைகள் தொடரும் பட்சத்தில் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புடன் அரபு லீக் தொடர்பு கொண்டு வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் சிரிய பிரதமர் குறிப்பிட்டார்.
சிரியாவில் தொடர்ந்தும் வன்முறை நீடித்துவரும் நிலையில் அரபு லீக் அமைப்பில் இருந்து சிரிய அரசு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் அரபு லீக்கில் உள்ள பெரும்பான்மை நாடுகள் சிரியாவுக்கு எதிராக வாக்களித்தன.
சிரியாவில் தொடரும் வன்முறைகளை கட்டுப்படுத்த அரபு லீக் முன்வைத்த தீர்வுத் திட்டத்தை சிரிய அரசு புறக்கணித்ததைத் தொடர்ந்தே அரபு லீக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி தமது அங்கத்துவ நாடுகள் சிரியா மீதான தூதரக உறவை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அரபு லீக் சிரியா உடனடியாக வன்முறைய முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளது.
எனினும் அரபு லீக் எடுத்துள்ள இந்த முடிவுக்கு சிரிய அரசு கடும் கண்டத்தை வெளியிட்டுள்ளது. மேற்கத்தேய அமெரிக்க திட்டத்திற்கமைய அரபு லீக் செயற்படுவதாக சிரியாவுக்கான அரபு லீக் தூதுவர் யூசுப் அஹமட் அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் குறிப்பிட்டார்.
அரபு லீக்கின் இந்த முடிவுக்கு எதிராக சிரிய தலை நகர் டமஸ்கஸில் அரச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் போது சிரியாவுக்கான சவூதி அரேபிய தூதுவராலயமும் தாக்கப்பட்டுள்ளது. சிரியாவுக்கு எதிராக சவூதி அரேபியாவும் அரபு லீக்கில் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிரியாவுக்கு எதிரான அரபு லீக் தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. மற்றும் பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹக் வரவேற்றுள்ளனர்.
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக பல மாதங்க ளாக மக்கள் ஆர்ப்பா ட்டம் நடத்தி வருகின் றனர். இந்த ஆர்ப்பா ட்டங்கள் மீது சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட வன்முறை களில் 3,500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அண்மைய ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர அரபு லீக்கு அண்மையில் முன்வைத்த தீர்வுத்திட் டத்தில் பொதுமக்கள் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சிரிய அரசுக்கு கோரப்பட்டது. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கைதானோரை விடுவிக்க வேண்டும். மற்றும் வெளிநாட்டு ஊடகவியலா ளர்களுக்கு சிரியாவில் அனுமதி அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த தீர்வுத்திட்டங்களை ஏற்றுக்கொண்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத், அதனை நடைமுறைப்படுத்த தவறியுள்ளார். நேற்று முன்தினம் ஹோம்ஸ் நகரில் நடந்த வன்முறையில் 12 பேர் கொல்லப்பட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே சிரியாவை இடைநீக்கம் செய்ய அரபு லீக் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பில் 18 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட அரபு லீக் அமைப்பில் 14 வாக்குகள் ஆதரவாக பதிவாயின. யெமன், லெபனான் ஆகிய நாடுகள் மாத்திரமே இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. ஈராக் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டது. இதற்கமைய சிரியா மீதான இடைநீக்க தீர்மானம் வரும் புதன்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக கட்டார் பிரதமர் ஷெய்க் ஹமத் பின் ஐஸ்ஸிம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிரியாவில் ஆட்சி மாற்றம் குறித்து அரபு லீக் அந்நாட்டு எதிர்த்தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் கட்டார் பிரதமர் குறிப்பிட்டார்.
அதேபோன்று சிரியாவில் வன்முறைகள் தொடரும் பட்சத்தில் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புடன் அரபு லீக் தொடர்பு கொண்டு வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் சிரிய பிரதமர் குறிப்பிட்டார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அரபு லீக்கில் இருந்து சிரியா இடைநீக்கம்;; தூதரக உறவுகள் நிறுத்தம்
அடுத்த வீழ்த்தலுக்கு அடித்தளம்
Similar topics
» சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை
» அரபு லீக் பார்வையாளர்களை அனுமதிக்க சிரியா இணக்கம்
» சிரியா அரபு லீக் திட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்
» தடைகளை விலக்கினால் அரபு லீக் திட்டத்தை ஏற்பதாக சிரியா அறிவிப்பு
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» அரபு லீக் பார்வையாளர்களை அனுமதிக்க சிரியா இணக்கம்
» சிரியா அரபு லீக் திட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்
» தடைகளை விலக்கினால் அரபு லீக் திட்டத்தை ஏற்பதாக சிரியா அறிவிப்பு
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|