Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 3 தகவல் கமிஷனர்கள் நியமனம் செல்லாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
2 posters
Page 1 of 1
தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 3 தகவல் கமிஷனர்கள் நியமனம் செல்லாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு மாநில தகவல் கமிஷனர்களாக ஏ.ராமையா, சி.மனோகரன்,
ஏ.ஆறுமுகநயினார் ஆகியோரை நியமித்து 1.3.11 அன்று தி.மு.க. அரசு
உத்தரவிட்டது. பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை பிறப்பித்த
அந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆட்சியின்போது வக்கீல்
எஸ்.விஜயலட்சுமி மனு தாக்கல் செய்தார்.
மாநில
பொதுத் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில் இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது என்றும் இவர்கள் நியமனத்தில் எதிர்க்கட்சித் தலைவரின்
(ஜெயலலிதா) கருத்து பெறப்படாமல், சட்ட விதிகளை பின்பற்றாமல், வெளிப்படையாக
இல்லாமல் ஒளிவு மறைவோடு இந்த நியமனம் நடைபெற்றுள்ளது என்றும் அதில்
கூறியிருந்தார்.
எனவே 3 பேரின் நியமனத்தை ரத்து
செய்ய வேண்டும் என்று கோரினார். இந்த வழக்கை தலைமை நீதிபதி
எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். 3
பேரையும் பதவி வகிக்க தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் தி.மு.க.
அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவர்கள்
3 பேரையும் பதவி ஏற்க உத்தரவிடலாமா? வேண்டாமா? என்று தேர்தல் கமிஷனுக்கு
கடிதம் எழுதப்பட்டது என்றும் ஜெயலலிதாவுக்கு முறையாக அழைப்புக் கடிதம்
அனுப்பப்பட்டும் அவர் கலந்து கொள்ளாததால்தான் முதல்-அமைச்சரும்
(கருணாநிதி), நிதி அமைச்சரும் (க.அன்பழகன்) சேர்ந்து இந்த 3 பேரையும் தகவல்
கமிஷனர்களாக தேர்வு செய்தனர் என்றும் பதில் மனுவில் கூறப்பட்டது. இந்த
வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த
வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. தகவல் கமிஷனர்
தேர்வு நடவடிக்கைகள் 21.2.11 அன்று தொடங்கின. இதற்கான கோப்பு அன்று ஒரு
நாளிலேயே பிரிவு அலுவலர் தொடங்கி முதல்-அமைச்சர் வரை சென்றுள்ளது. கமிஷனர்
தேர்வுக்கான கூட்டம் நடத்தப்படும் தேதியை 1.3.11 என்று முதல்- அமைச்சர்
உறுதி செய்தார். இதற்காக அவர் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட யாருடைய
ஆலோசனையையும் பெறவில்லை.
கூட்டத் தேதி முடிவு
செய்யப்பட்ட பிறகு, அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய மற்றொரு
அமைச்சர் யார்? என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. நிதியமைச்சரை நியமிக்க
முடிவெடுக்கப்பட்டது. அதுபற்றி நிதி அமைச்சருக்கு 24.2.11 அன்று தகவல்
கூறப்பட்டது. கமிஷனர் தேர்வுக்கான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருக்கு (ஜெயலலிதா) அழைப்புக் கடிதம்
அனுப்பப்பட்டது.
அந்தக் கூட்டத்தை 1.3.11 அன்று
நடத்தாமல் வேறு தேதிக்கு தள்ளிவைக்கும்படி சில காரணங்களை ஜெயலலிதா
தெரிவித்திருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் உள்ளதாலும்,
இந்திய கண்காணிப்பு கமிஷனர் நியமனம் குறித்த வழக்கு விசாரணை சுப்ரீம்
கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாலும் 1.3.11 அன்று கூட்டம் நடத்தாமல் வேறு
தேதிக்கு தள்ளி வைக்கும்படி அவர் தெரிவித்துள்ளார்.
1.3.11
அன்று இந்த 3 தகவல் கமிஷனர்களை நியமனம் செய்து அன்றே அதற்கான ஆணையை
வெளியிட்டு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை கருத்தில் கொள்ளாமல் அன்றே
கவர்னரின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர். 21.2.11 அன்று தயாரிக்கப்பட்ட
சுற்றறிக்கைக் குறிப்பில், தகவல் கமிஷனர் பதவிக்கு 33 பேர் விண்ணப்பித்து
இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் 1.3.11 அன்று நடைபெற்ற கூட்டத்தில்
மேலும் 2 விண்ணப்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இது
அதிர்ச்சி அளிக்கிறது. அவை மனோகரன் மற்றும் ஆறுமுகநயினார் ஆகியோருடையவை.
இறுதியில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இது பற்றி எதிர்க்கட்சித்
தலைவர்களுக்கு தகவல் அளிக்கப்படவில்லை. இந்தப் பதவிக்கு விண்ணப்பம்
செய்யும் போது ராமையா அரசுப் பதவியில் இருந்தார் என்றும் 1.3.11 அன்றுதான்
அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்றும் மனுதாரர் கூறினார்.
இது
சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற பல அம்சங்களைப்
பார்க்கும்போது, 3 பேர் நியமனத்திலும் வெளிப்படைத் தன்மை
கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த 3 பேரின் நியமன உத்தரவு சட்ட
விரோதமாகவும், நடைமுறைக்கு முரணாகவும் உள்ளது. எனவே ராமையா, மனோகரன்,
ஆறுமுகநயினார் ஆகியோரை தகவல் கமிஷனராக நியமனம் செய்து கடந்த அரசு
பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு தலைமை தகவல் கமிஷனராக கே.எஸ்.ஸ்ரீபதி
நியமிக்கப்பட்டார். ஆர்.பெருமாள்சாமி, டி.சீனிவாசன், சாரதா நம்பி ஆரூரன்
ஆகியோர் 17.4.08 அன்று தகவல் கமிஷனர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களின்
நியமனத்தை ரத்து செய்யும்படி வி.மாதவன், சிவ இளங்கோ ஆகியோர் வழக்கு தாக்கல்
செய்தனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி
டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
3 தகவல் கமிஷனர்கள் கடந்த 2008-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணி
நியமனத்தை எதிர்த்து 2011-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது
மிகவும் காலம் தாழ்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. மேலும், அவர்களில்
ஒருவர் 23.7.11 அன்று ஓய்வு பெற்றுவிட்டார். ஸ்ரீபதியை தலைமை தகவல்
கமிஷனராக நியமித்ததில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படவில்லை. சட்ட
விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது.
தலைமை
தகவல் கமிஷனர் தேர்வுக்காக முதல்- அமைச்சர் (கருணாநிதி), அமைச்சர்,
எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் சட்ட
விதிகள் பின்பற்றப்பட்டன. தேர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு 3.8.10
அன்று எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சில
காரணங்களைக் கூறி அவர் கலந்துகொள்ளவில்லை. எனவே அவர் இல்லாமல் எடுத்த
முடிவு சட்ட விரோதம் என்று குற்றம்சாட்ட முடியாது.
இந்த
வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அப்போது மற்றொரு பதில்மனுவை புதிய அரசு தாக்கல் செய்தது.
ஸ்ரீபதி
நியமனத்தில் விதிகள் மீறப்பட்டதாக கடந்த அரசின் பதில் மனுவுக்கு முரணாக
புதிய அரசு கூறியது. ஆட்சி மாறினாலும் அரசின் கொள்கை நிலை மாற்றப்படக்
கூடாது. தலைமை தகவல் கமிஷனர் நியமனம் சரிதான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலை மலர்
ஏ.ஆறுமுகநயினார் ஆகியோரை நியமித்து 1.3.11 அன்று தி.மு.க. அரசு
உத்தரவிட்டது. பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை பிறப்பித்த
அந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆட்சியின்போது வக்கீல்
எஸ்.விஜயலட்சுமி மனு தாக்கல் செய்தார்.
மாநில
பொதுத் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில் இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது என்றும் இவர்கள் நியமனத்தில் எதிர்க்கட்சித் தலைவரின்
(ஜெயலலிதா) கருத்து பெறப்படாமல், சட்ட விதிகளை பின்பற்றாமல், வெளிப்படையாக
இல்லாமல் ஒளிவு மறைவோடு இந்த நியமனம் நடைபெற்றுள்ளது என்றும் அதில்
கூறியிருந்தார்.
எனவே 3 பேரின் நியமனத்தை ரத்து
செய்ய வேண்டும் என்று கோரினார். இந்த வழக்கை தலைமை நீதிபதி
எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். 3
பேரையும் பதவி வகிக்க தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் தி.மு.க.
அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவர்கள்
3 பேரையும் பதவி ஏற்க உத்தரவிடலாமா? வேண்டாமா? என்று தேர்தல் கமிஷனுக்கு
கடிதம் எழுதப்பட்டது என்றும் ஜெயலலிதாவுக்கு முறையாக அழைப்புக் கடிதம்
அனுப்பப்பட்டும் அவர் கலந்து கொள்ளாததால்தான் முதல்-அமைச்சரும்
(கருணாநிதி), நிதி அமைச்சரும் (க.அன்பழகன்) சேர்ந்து இந்த 3 பேரையும் தகவல்
கமிஷனர்களாக தேர்வு செய்தனர் என்றும் பதில் மனுவில் கூறப்பட்டது. இந்த
வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த
வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. தகவல் கமிஷனர்
தேர்வு நடவடிக்கைகள் 21.2.11 அன்று தொடங்கின. இதற்கான கோப்பு அன்று ஒரு
நாளிலேயே பிரிவு அலுவலர் தொடங்கி முதல்-அமைச்சர் வரை சென்றுள்ளது. கமிஷனர்
தேர்வுக்கான கூட்டம் நடத்தப்படும் தேதியை 1.3.11 என்று முதல்- அமைச்சர்
உறுதி செய்தார். இதற்காக அவர் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட யாருடைய
ஆலோசனையையும் பெறவில்லை.
கூட்டத் தேதி முடிவு
செய்யப்பட்ட பிறகு, அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய மற்றொரு
அமைச்சர் யார்? என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. நிதியமைச்சரை நியமிக்க
முடிவெடுக்கப்பட்டது. அதுபற்றி நிதி அமைச்சருக்கு 24.2.11 அன்று தகவல்
கூறப்பட்டது. கமிஷனர் தேர்வுக்கான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருக்கு (ஜெயலலிதா) அழைப்புக் கடிதம்
அனுப்பப்பட்டது.
அந்தக் கூட்டத்தை 1.3.11 அன்று
நடத்தாமல் வேறு தேதிக்கு தள்ளிவைக்கும்படி சில காரணங்களை ஜெயலலிதா
தெரிவித்திருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் உள்ளதாலும்,
இந்திய கண்காணிப்பு கமிஷனர் நியமனம் குறித்த வழக்கு விசாரணை சுப்ரீம்
கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாலும் 1.3.11 அன்று கூட்டம் நடத்தாமல் வேறு
தேதிக்கு தள்ளி வைக்கும்படி அவர் தெரிவித்துள்ளார்.
1.3.11
அன்று இந்த 3 தகவல் கமிஷனர்களை நியமனம் செய்து அன்றே அதற்கான ஆணையை
வெளியிட்டு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை கருத்தில் கொள்ளாமல் அன்றே
கவர்னரின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர். 21.2.11 அன்று தயாரிக்கப்பட்ட
சுற்றறிக்கைக் குறிப்பில், தகவல் கமிஷனர் பதவிக்கு 33 பேர் விண்ணப்பித்து
இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் 1.3.11 அன்று நடைபெற்ற கூட்டத்தில்
மேலும் 2 விண்ணப்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இது
அதிர்ச்சி அளிக்கிறது. அவை மனோகரன் மற்றும் ஆறுமுகநயினார் ஆகியோருடையவை.
இறுதியில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இது பற்றி எதிர்க்கட்சித்
தலைவர்களுக்கு தகவல் அளிக்கப்படவில்லை. இந்தப் பதவிக்கு விண்ணப்பம்
செய்யும் போது ராமையா அரசுப் பதவியில் இருந்தார் என்றும் 1.3.11 அன்றுதான்
அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்றும் மனுதாரர் கூறினார்.
இது
சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற பல அம்சங்களைப்
பார்க்கும்போது, 3 பேர் நியமனத்திலும் வெளிப்படைத் தன்மை
கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த 3 பேரின் நியமன உத்தரவு சட்ட
விரோதமாகவும், நடைமுறைக்கு முரணாகவும் உள்ளது. எனவே ராமையா, மனோகரன்,
ஆறுமுகநயினார் ஆகியோரை தகவல் கமிஷனராக நியமனம் செய்து கடந்த அரசு
பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு தலைமை தகவல் கமிஷனராக கே.எஸ்.ஸ்ரீபதி
நியமிக்கப்பட்டார். ஆர்.பெருமாள்சாமி, டி.சீனிவாசன், சாரதா நம்பி ஆரூரன்
ஆகியோர் 17.4.08 அன்று தகவல் கமிஷனர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களின்
நியமனத்தை ரத்து செய்யும்படி வி.மாதவன், சிவ இளங்கோ ஆகியோர் வழக்கு தாக்கல்
செய்தனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி
டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
3 தகவல் கமிஷனர்கள் கடந்த 2008-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணி
நியமனத்தை எதிர்த்து 2011-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது
மிகவும் காலம் தாழ்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. மேலும், அவர்களில்
ஒருவர் 23.7.11 அன்று ஓய்வு பெற்றுவிட்டார். ஸ்ரீபதியை தலைமை தகவல்
கமிஷனராக நியமித்ததில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படவில்லை. சட்ட
விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது.
தலைமை
தகவல் கமிஷனர் தேர்வுக்காக முதல்- அமைச்சர் (கருணாநிதி), அமைச்சர்,
எதிர்க்கட்சித் தலைவர் (ஜெயலலிதா) கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் சட்ட
விதிகள் பின்பற்றப்பட்டன. தேர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு 3.8.10
அன்று எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சில
காரணங்களைக் கூறி அவர் கலந்துகொள்ளவில்லை. எனவே அவர் இல்லாமல் எடுத்த
முடிவு சட்ட விரோதம் என்று குற்றம்சாட்ட முடியாது.
இந்த
வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அப்போது மற்றொரு பதில்மனுவை புதிய அரசு தாக்கல் செய்தது.
ஸ்ரீபதி
நியமனத்தில் விதிகள் மீறப்பட்டதாக கடந்த அரசின் பதில் மனுவுக்கு முரணாக
புதிய அரசு கூறியது. ஆட்சி மாறினாலும் அரசின் கொள்கை நிலை மாற்றப்படக்
கூடாது. தலைமை தகவல் கமிஷனர் நியமனம் சரிதான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 3 தகவல் கமிஷனர்கள் நியமனம் செல்லாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சட்டப்படி பார்த்து செல்லாது என்றால் அரிவித்து விட வேண்டியதுதான் ஆமா இவர்கள் இதுவரை வாங்கிய சம்பளம் திருப்பி தந்து விடுவார்களா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு
» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
» சக்சேனா மீதான மேலும் 4 மோசடி வழக்குகள் ரத்து; ஐகோர்ட்டு உத்தரவு
» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
» சக்சேனா மீதான மேலும் 4 மோசடி வழக்குகள் ரத்து; ஐகோர்ட்டு உத்தரவு
» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
» சக்சேனா மீதான மேலும் 4 மோசடி வழக்குகள் ரத்து; ஐகோர்ட்டு உத்தரவு
» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
» சக்சேனா மீதான மேலும் 4 மோசடி வழக்குகள் ரத்து; ஐகோர்ட்டு உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|